Skip to main content

சிலிர்ப்பு
















ஏதோ இரையைக்
கவ்விச் செல்கின்றன
எறும்புகள் சாரை சாரையாக
ஏதேதோ கனவுகளுடன்;
கனவுகளோ,கற்பனைகளோ
நிதர்சனமென்பது
யாராலும் மிதிபடாதவரை...


***

முடிவுகளில்
பெரும்பாலும் ஒன்றுமில்லை
என்பதே விதியாகிறது...,
இருந்தாலும்
எல்லாவற்றிலும்
முடிவையே தேடியே...
இடைப்பட்டதின்
லயிப்பு சுகக்தை
தொலைப்பதே
வாடிக்கையாகிவிட்டது
இவர்களுக்கு!

***

பெருங்கனவொன்றில்
நான் அந்த
நதியாய் நடித்துக்
கொண்டிருந்தேன்
நதி நானாய்
இயல்பிலிருந்தது!

***

வண்ணத்துப் பூச்சிகள்
எவ்வளவு உற்சாகமாய்
சிறகடிக்கின்றன...,
கடந்த காலங்கள்
எல்லாம் அவற்றை
ஒன்றும் செய்வதே இல்லை!

***

சட சடவென்று
வீசிய காற்றில்
மட மட வென்று
முறிந்தது
நெடு நெடுவென்றிருந்த
கனத்த மரம்.

***

தூண்டில் போட்டு
காத்திருக்கிறான்
வெகுநேரமாய்....
ஏதாவது கிடைக்கலாம்
இல்லாமலும் போகலாம்!
காத்திருந்த
நினைவுகள் மட்டுமே...
மிச்சம்!


தேவா. S



Comments

அட..
சிலிர்த்துத்தான் போனேன்
உங்கள் கவி கண்டு.....

//சட சடவென்று
வீசிய காற்றில்
மட மட வென்று
முறிந்தது
நெடு நெடுவென்றிருந்த
கனத்த மரம்.//

இரட்டைக்கிளவி கொண்டு நீங்கள்
கவியமைத்த விதம் இனிமை.
இனிமை...
இனிமை...

கவி இனிமை.
Kousalya Raj said…
//கனவுகளோ,கற்பனைகளோ
நிதர்சனமென்பது
யாராலும் மிதிபடாதவரை..//

சத்தியமான ஒன்றை மிக அழகாக கவி வரியாகி விட்டீர்கள்.

//காத்திருந்த
நினைவுகள் மட்டுமே...
மிச்சம்!//

யதார்த்தத்தில் அனைத்திற்கும் இந்த வரி மிக கச்சிதமாக பொருந்தி போகிறது !!

மீண்டும் மீண்டும் படித்து மனதில் தக்க வைத்து கொள்ள சொல்கிறது கவிதைகள் !

வாழ்த்துக்கள்
அட! ம்ம்ம்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...