
விலக்கப்பட்ட கனியை
புசித்து முடித்திருக்கையில்
வக்கிர புன்னகையை
மெலிதாய் துடைத்துக் கொண்டான்
சாத்தானுக்குள் இருந்த கடவுள்..!
மறுக்கப்பட்டதின் விதிகளை
படைப்புகள் எப்போதும்
அத்துமீறும் என்பதாலேயே
மீறலுக்காய் மறுத்து வைத்த
பாவ பரிமாற்றமாய் மாறிப் போனது
பிரபஞ்சத்தின் மைய முடிச்சு...!
எட்டாவது படிக்கையில்
எதிர் வீட்டு ஜெயஷ்ஸ்ரீ அக்காவுக்கு
முத்தம் கொடுத்த
பக்கத்து வீட்டு அண்ணனுக்குள்
ஒளிந்திருந்து...
அது எட்டிப் பார்த்தது;
கீதா டீச்சரிடம் சேட்டைகள்
செய்த முருகேசன் வாத்தியாரின்
மூளைக்குள் பிடிவாதமாய்
சம்மணக் காலிட்டு..
அமர்ந்திருந்தது;
நெரிசலான பேருந்தில்
ஒரு பெரியம்மாவை
இடித்துப் பார்த்த தடியனுக்குள்
கம்பீரமாய் நின்று கொண்டும்;
நாடார் கடையில் சாமான் வாங்கையில்
செல்வி அத்தையின் இடுப்பை
முறைத்துப் பார்த்த
பொட்டணம் போடும் கணேசனின்
விழிகளில் கள்ளத்தனமாய்...
எட்டிப் பார்த்தும்...
ஆதியில் விலக்கப்பட்டதாய்
கற்பிதம் கொண்ட ஒன்று
எப்போதும் பல் இளித்து
இருப்பினைக்காட்டி விட்டு ....
இல்லை....இல்லை...இல்லை
என்று பொய்யாய் கை விரித்து
கட்டுப்பாட்டு விதிகளுக்குள்
கபடமாய் ஒளிந்தே கொள்கிறது!
திருமண பந்தமென்ற
ஒப்பந்தங்களின் போது
கடவுள் முகமூடியை...
சைத்தான்கள் அணிந்து கொண்டு
விலக்கப்பட்டதை விழுங்குவதற்கு
நியாய பதாகைகளையும்
தூக்குவதுமுண்டு...!..!
என்னதான்...
ஒழுக்கத் துணிகளை
இறுக்க இறுக்க கட்டிக் கொண்டாலும்
புத்திக்குள் வந்து
ஆடை விலக்கிப் பார்க்கும்
ஆதி உணர்வினை காதலென்று
மார்க்கெட்டிங்க் செய்து விட்டான்
இல்லாத ஒரு கடவுள்...!
நிஜ உணர்வுகளை மடக்கிப் போட்டு
வண்ண வண்ண வர்ணம் தீட்டி
புனிதம் என்ற போர்வை போர்த்தி
நாளும் நடக்கும்
நல்லொழுக்க நாடகங்களின்
ஓரங்களில் ஒட்டிக் கிடக்கும்
காமமே பிரதானாமாய்...
சுற்றிக் கொண்டிருக்கிறது
எப்போதோ இல்லாமல் இருந்த
இந்த முரட்டு பூமி....!
தேவா. S
செல்வி அத்தையின் இடுப்பை
முறைத்துப் பார்த்த
பொட்டணம் போடும் கணேசனின்
விழிகளில் கள்ளத்தனமாய்...
எட்டிப் பார்த்தும்...
ஆதியில் விலக்கப்பட்டதாய்
கற்பிதம் கொண்ட ஒன்று
எப்போதும் பல் இளித்து
இருப்பினைக்காட்டி விட்டு ....
இல்லை....இல்லை...இல்லை
என்று பொய்யாய் கை விரித்து
கட்டுப்பாட்டு விதிகளுக்குள்
கபடமாய் ஒளிந்தே கொள்கிறது!
திருமண பந்தமென்ற
ஒப்பந்தங்களின் போது
கடவுள் முகமூடியை...
சைத்தான்கள் அணிந்து கொண்டு
விலக்கப்பட்டதை விழுங்குவதற்கு
நியாய பதாகைகளையும்
தூக்குவதுமுண்டு...!..!
என்னதான்...
ஒழுக்கத் துணிகளை
இறுக்க இறுக்க கட்டிக் கொண்டாலும்
புத்திக்குள் வந்து
ஆடை விலக்கிப் பார்க்கும்
ஆதி உணர்வினை காதலென்று
மார்க்கெட்டிங்க் செய்து விட்டான்
இல்லாத ஒரு கடவுள்...!
நிஜ உணர்வுகளை மடக்கிப் போட்டு
வண்ண வண்ண வர்ணம் தீட்டி
புனிதம் என்ற போர்வை போர்த்தி
நாளும் நடக்கும்
நல்லொழுக்க நாடகங்களின்
ஓரங்களில் ஒட்டிக் கிடக்கும்
காமமே பிரதானாமாய்...
சுற்றிக் கொண்டிருக்கிறது
எப்போதோ இல்லாமல் இருந்த
இந்த முரட்டு பூமி....!
தேவா. S
Comments