Skip to main content

தோற்கவிடு காலமே...!


























அடிக்கடி என்னை தோற்கவிடு காலமே
அப்போதுதான் துரோகிகளின் கோரமுகங்களையும்....
நட்புகளின் ஆதரவுக்கரங்களையும்
என்னால் சரியாக பற்றிக் கொள்ள முடிகிறது...
எனக்கு வலிக்கும் இரணங்களைக் கொடு.....
அப்போதாவது என்னை நேசிக்கிறவர்களை
நான் நேசிக்கிறேனா என்று பார்க்கிறேன்...?

என்னை முகத்தில் அறைந்து காயப்படுத்து காலமே...
எனக்காக எத்தனை கண்கள் கண்ணீரை சுமந்திருக்கின்றன
என்று பார்த்தாவது அறிவு வரட்டும் எனக்கு...
என்னை அடித்து துவம்சம் செய்; தோல்விகளால் குளிப்பாட்டு;
அப்போதாவது வெற்றிகளின் போது...
என்ன செய்யவேண்டும் என்று எனக்கு புரியட்டும்!

நெருப்பில் எரிந்து கொள்கிறேன்
இரணத்தில் வெந்து கொள்கிறேன்
எரிச்சலில் நொந்து கொள்கிறேன்
எனக்கு தோல்விகளைப் புகட்டு காலமே....
அப்போதாவது என் வெற்றிகளில்...
நான் மனிதர்களை சரியாய் கணிக்கிறேனா என்று பார்க்கிறேன்...!

வலிகளை வலிமையாக்கும் வித்தையோடுதான்
என்னை நீ படைத்தளித்தாய் என்று
சில சூழல்களுக்கும் மனிதர்களும் நான் பாடம் புகட்ட வேண்டும்
என் வெற்றியின் உச்சத்தில் முகஸ்துதி மனிதர்களை
என் காலுக்கு செருப்பாக்குகிறேன்...;
முன் பேசி பின் இகழ்ந்தவர்களின்
நரம்புகளை அறுத்து உனக்கு ஒரு மாலை செய்து தருகிறேன்
இடுப்பெலும்புகளை உடைத்து
முதுகெலும்புகளில் கோர்த்து உன் கால்களில் சமர்ப்பிக்கிறேன்
அதனால் என்னை தோற்கவிடு காலமே...
ஏனெனில்...
இந்த உலகமே பெருமூச்செறியும்...
பிரமாண்டமான அசுர வெற்றி கொள்ளவேண்டும் நான்..!


தேவா. சு



Comments

y this கொலைவெறி...???
////என்னை முகத்தில் அறைந்து காயப்படுத்து காலமே... ////

அப்போ இயேசு மாதிரி அறை வாங்கி பேர் வாங்கலாமுனு ரெடி ஆகிட்டே...அப்படி தானே தம்பி :)


////முன் பேசி பின் இகழ்ந்தவர்களின்
நரம்புகளை அறுத்து உனக்கு ஒரு மாலை செய்து தருகிறேன்
இடுப்பெலும்புகளை உடைத்து
முதுகெலும்புகளில் கோர்த்து உன் கால்களில் சமர்ப்பிக்கிறேன்/////

அப்படி எல்லாம் செய்தா ஜெயிலுக்கு போய் ரேசன் அரிசி சாப்பாடு தான் சாப்பிடனும் ...தம்பி Be careful :)
எதை செஞ்சாலும் அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு பண்ணு..... :)
Marc said…
தணல் தெரிக்கும் கவிதை அருமை.
rAm said…
Pudhu Bharathi....
Ungal Tholvikku En Valthukal...
ஹேமா said…
உண்மையான தமிழர்களின் எதிர்பார்ப்பின் எதிரொலி உங்கள் வடிவத்தில்.நம்பிக்கை இழந்தே வாழ்க்கை கடந்துகொண்டிருக்கிறது.ஏதாவது அதிசயம் நடந்தால் பார்ப்போம் !
ஹேமா said…
http://lulurathi.blogspot.com/2012/03/17.html
dheva said…
ஹேமா @ இணைப்புக்கு நன்றி ஹேமா!

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...