Skip to main content

இசையோடு இசையாக...தொகுப்பு 5!



ஆதியிலே இருந்து அசைவற்ற சிவம், சூன்யம், சத்தியம் எப்போது இயங்கத் தொடங்கியதோ அங்கே தொடங்கியது கலை. இல்லாததை சொல்பவன் கலைஞன் ஆனால் அதுவும் முழுமையிலிருந்துதான் வரும். எல்லாமாய் தன்னுள் எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கும் இந்த பிரபஞ்சம் தேக்கி வைத்திருக்கும் ரகசியங்களும் அற்புதங்களும் கோடானு கோடி என்று சொல்வதும் ஒரு மட்டுப்பட்ட நிலைதான்..

நான் ஒரு இசைக்கலைஞன் மனிதர்களை விட ஸ்வரங்களோடு எனக்கு ஸ்னேகிதம் அதிகம். இசையும் பாடலும் எனது இரு கண்கள்....எனது குரல்வளையிலிருந்து வெளிப்படும் சப்தங்கள் எல்லாம் பிராணனிலிருந்து வெளிப்படும் காற்றின் ஏற்ற இறக்கமே...!

ஒரு ராகத்தை ஆரோகணத்திலிருந்து படிப்படியாக அவரோகணத்திற்கு கொண்டு வந்து ஸ்வர சுத்தமாக ஆரோகணத்திற்குக் கொண்டு சென்று விளையாட முழுக்க முழுக்க மூச்சுப் பயிற்சி அவசியம்...பிரணாயமத்தில் சுவாசத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சப்தத்தினை பயில, பயில குரல்வளையிலிருந்து வெளிப்படும் காற்றின் அளவுகள் தேவைக்கு ஏற்ப ஸ்வரங்களுக்குள் நின்று இராகங்களை மெருகூட்ட...எனது குரல் உங்களுக்குப் பிடித்துப் போகிறது.

முழுக்க முழுக்க பூமியோடு பந்தப்படாத ஒரு சிந்தனைக்குள் வந்து விட்ட பின்னரும் பூமியில் வாழும் ஒரு நிலை கொண்டு இருக்கும் ஆத்மார்த்த கலைஞர்களை பெரும்பாலும் எல்லோரும் சரியாக அடையாளம்  கண்டு கொள்வதில்லை. அப்படியே மிகைப்பட்ட பேர்கள் கண்டு கொண்டு விட்டாலும் அது கலைஞனின் உருவத்தையோ, பின் புலத்தையோ, அவனை ரசிப்பதால் மிகைப்பட்டபேர் தன்னை மதிப்பரென்றோ, அல்லது அவனால் தமக்கேதேனும் ஆதாயம் கிட்டாதா என்றும் ஏதோ ஒரு சுய நலப் போக்கில் அமைந்து விடுகிறது.

ஒரு சரியான கலைஞன் மேற் சொன்ன எல்லாம் அறிந்து, பெரும்பாலும் இவர்களை ஏதோ ஒரு காரணத்தை காட்டி புறம் தள்ளுகிறான், ஆனால் ஒரு படைப்பாளியின் படைப்பு ஜனித்த மூலத்தை கண்டு ரசிக்கும் ஒரு ரசிகனையோ அல்லது ரசிகையையோ....

அவன் அவ்வளவு சாதாரணமாக விட்டு விட முடியாது. ஏனென்றால் அவனிடமிருந்து வெளிப்படும் இசையை அவன் எங்கிருந்து எடுத்தானோ அந்த இடத்தை கண்டு ...இங்கே தானே??? இப்படித்தானே என்று ஆச்சர்யமாய் கண் விரிக்கும் போது இவன் தன்னின் படைப்பிற்கான முழு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் மேலும், மேலும் தன்னை தனது கலையின் மூலம் அற்புத படைப்புகளாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறான்.

இப்படிப் பட்ட இசைக்கலைஞன் நான். எனது வாழ்க்கையில் நுழைந்த சிந்து....இப்படி, அப்படி என்னை ரசித்தவள்,  என் புறச்சூழலை காரணம் காட்டி லோகாதாய மாயங்களுக்கு பயந்து என்னை விட்டுப் போய் விட்டாளென்றால்....... என் கலை எப்படி வாழும்...? என்னை உற்று நோக்கி சீராட்டும் ஒரு விமர்ச்சிக்குமொரு பொக்கிஷம் இல்லையெனில்....என்னவாகும்....?

இந்த மாதிரி பாடல்தான் ஜனிக்கும்....!!!! 

காலத்தால் அழியாத ஓவியம் செய்த பிரம்மா கே. பாலச்சந்தர் சார்......ஜேசுதாஸ் சார், இசை தெய்வம் இளையராஜா சார் மற்றும் இதில் நடித்திருக்கும் சிவகுமார் சார்....கண்களில் ஒத்திக் கொள்ள வேண்டிய ஒரு இசை படைப்பு..!!!! நான் என்ன சொல்லி விடமுடியும்...

எறும்பு வியந்தாலும்...
இமயம் இமயம்தானே...!

இனிமையான இசையால் உங்களுக்கு கிடைக்கப் போகும் அற்புத அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்.



தேவா. S


Comments

அருமையான பாடலை விளக்கி கவிதை நடையில் நீங்கள் சொன்ன விதம் அருமை.

இளையராஜா அவர்களின் பாடல்கள்தான் நான் விரும்பிக் கேட்பவை.

அருமையான பாடல் பகிர்வு.
ஹேமா said…
என்மே மறக்கமுடியாத பாடலோடு உங்கள் வர்ணனையும் களை கட்டி நிற்கிறது பதிவில் !

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...