Skip to main content

இசையோடு இசையாக...தொகுப்பு 5!



ஆதியிலே இருந்து அசைவற்ற சிவம், சூன்யம், சத்தியம் எப்போது இயங்கத் தொடங்கியதோ அங்கே தொடங்கியது கலை. இல்லாததை சொல்பவன் கலைஞன் ஆனால் அதுவும் முழுமையிலிருந்துதான் வரும். எல்லாமாய் தன்னுள் எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கும் இந்த பிரபஞ்சம் தேக்கி வைத்திருக்கும் ரகசியங்களும் அற்புதங்களும் கோடானு கோடி என்று சொல்வதும் ஒரு மட்டுப்பட்ட நிலைதான்..

நான் ஒரு இசைக்கலைஞன் மனிதர்களை விட ஸ்வரங்களோடு எனக்கு ஸ்னேகிதம் அதிகம். இசையும் பாடலும் எனது இரு கண்கள்....எனது குரல்வளையிலிருந்து வெளிப்படும் சப்தங்கள் எல்லாம் பிராணனிலிருந்து வெளிப்படும் காற்றின் ஏற்ற இறக்கமே...!

ஒரு ராகத்தை ஆரோகணத்திலிருந்து படிப்படியாக அவரோகணத்திற்கு கொண்டு வந்து ஸ்வர சுத்தமாக ஆரோகணத்திற்குக் கொண்டு சென்று விளையாட முழுக்க முழுக்க மூச்சுப் பயிற்சி அவசியம்...பிரணாயமத்தில் சுவாசத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சப்தத்தினை பயில, பயில குரல்வளையிலிருந்து வெளிப்படும் காற்றின் அளவுகள் தேவைக்கு ஏற்ப ஸ்வரங்களுக்குள் நின்று இராகங்களை மெருகூட்ட...எனது குரல் உங்களுக்குப் பிடித்துப் போகிறது.

முழுக்க முழுக்க பூமியோடு பந்தப்படாத ஒரு சிந்தனைக்குள் வந்து விட்ட பின்னரும் பூமியில் வாழும் ஒரு நிலை கொண்டு இருக்கும் ஆத்மார்த்த கலைஞர்களை பெரும்பாலும் எல்லோரும் சரியாக அடையாளம்  கண்டு கொள்வதில்லை. அப்படியே மிகைப்பட்ட பேர்கள் கண்டு கொண்டு விட்டாலும் அது கலைஞனின் உருவத்தையோ, பின் புலத்தையோ, அவனை ரசிப்பதால் மிகைப்பட்டபேர் தன்னை மதிப்பரென்றோ, அல்லது அவனால் தமக்கேதேனும் ஆதாயம் கிட்டாதா என்றும் ஏதோ ஒரு சுய நலப் போக்கில் அமைந்து விடுகிறது.

ஒரு சரியான கலைஞன் மேற் சொன்ன எல்லாம் அறிந்து, பெரும்பாலும் இவர்களை ஏதோ ஒரு காரணத்தை காட்டி புறம் தள்ளுகிறான், ஆனால் ஒரு படைப்பாளியின் படைப்பு ஜனித்த மூலத்தை கண்டு ரசிக்கும் ஒரு ரசிகனையோ அல்லது ரசிகையையோ....

அவன் அவ்வளவு சாதாரணமாக விட்டு விட முடியாது. ஏனென்றால் அவனிடமிருந்து வெளிப்படும் இசையை அவன் எங்கிருந்து எடுத்தானோ அந்த இடத்தை கண்டு ...இங்கே தானே??? இப்படித்தானே என்று ஆச்சர்யமாய் கண் விரிக்கும் போது இவன் தன்னின் படைப்பிற்கான முழு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் மேலும், மேலும் தன்னை தனது கலையின் மூலம் அற்புத படைப்புகளாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறான்.

இப்படிப் பட்ட இசைக்கலைஞன் நான். எனது வாழ்க்கையில் நுழைந்த சிந்து....இப்படி, அப்படி என்னை ரசித்தவள்,  என் புறச்சூழலை காரணம் காட்டி லோகாதாய மாயங்களுக்கு பயந்து என்னை விட்டுப் போய் விட்டாளென்றால்....... என் கலை எப்படி வாழும்...? என்னை உற்று நோக்கி சீராட்டும் ஒரு விமர்ச்சிக்குமொரு பொக்கிஷம் இல்லையெனில்....என்னவாகும்....?

இந்த மாதிரி பாடல்தான் ஜனிக்கும்....!!!! 

காலத்தால் அழியாத ஓவியம் செய்த பிரம்மா கே. பாலச்சந்தர் சார்......ஜேசுதாஸ் சார், இசை தெய்வம் இளையராஜா சார் மற்றும் இதில் நடித்திருக்கும் சிவகுமார் சார்....கண்களில் ஒத்திக் கொள்ள வேண்டிய ஒரு இசை படைப்பு..!!!! நான் என்ன சொல்லி விடமுடியும்...

எறும்பு வியந்தாலும்...
இமயம் இமயம்தானே...!

இனிமையான இசையால் உங்களுக்கு கிடைக்கப் போகும் அற்புத அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்.



தேவா. S


Comments

அருமையான பாடலை விளக்கி கவிதை நடையில் நீங்கள் சொன்ன விதம் அருமை.

இளையராஜா அவர்களின் பாடல்கள்தான் நான் விரும்பிக் கேட்பவை.

அருமையான பாடல் பகிர்வு.
ஹேமா said…
என்மே மறக்கமுடியாத பாடலோடு உங்கள் வர்ணனையும் களை கட்டி நிற்கிறது பதிவில் !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...