Skip to main content

இசையோடு இசையாக...தொகுப்பு 6!



இதோ உன் நினைவுகளை எனது வார்த்தைகள் ஒரு பட்டத்து அரசியை சுமந்து வரும் பணியாட்களைப் போல மிக கவனமாக சுமந்து வருகின்றன. விழிகளால் நீ இமைத்து, இமைத்து என்னை அணைத்துக் கொள்ளும் அன்பில், நான் உன் விழியாக இருந்து எப்போதும் நீ இமை பிரிக்காமல் ஆழ்ந்து உறங்கும் அற்புத தருணங்களில், உனக்கான கனவுகளை நான் காணும் பாக்கியத்தை பெறுவதே இந்தக் கணத்தில் எனக்குப் பேராசையாய் இருக்கிறது.

நீ, உனக்கு என்று எதை நான் எழுதினாலும் அந்த வாக்கியம் முற்றுப் பெறாமல் முற்றுப் புள்ளிகளை எல்லாம் விழுங்கிக் கொண்டே ஒரு அசுரனாய் நீண்டு கொண்டிருக்கிறது. என் கேசம் கலைத்து நீ விளையாடிய போது, உனக்கு நான் சொன்ன கவிதையை நீ உன் கையெழுத்தால் எழுதி என்னிடம் காட்டிய பொழுது உன் கையெழுத்து  இருந்த அழகில் என் கவிதை பொருள் இழந்து, உப்பில்லா பண்டமாய் சுவை இழந்து காகிதத்தில் இருந்து இறங்கி தற்கொலை செய்ய முயன்ற பொழுதில் பொருளில்லா விட்டால் என்ன அழகிருக்கிறதே என்று கர்வமாய் என்னை பார்த்ததாய் நான் உன்னிடம் கூறிய போது....

நீ சப்தமாய் சிரித்தாய்..!!!! நான் கவிதையின் காட்சி வடிவத்தைப் பார்த்து விட்டேன் என்று ஆர்க்கிமிடிஸ் போல யுரேகா யுரேகா என்று சந்தோசத்தில் குதித்த போது என் உற்சாகம் அங்கே ஆடையில்லாமல் கட்டுக்களை உடைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்ததை நீ வெட்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாய். நான் லெளகீக ஆடைகளைக் களைந்து முக்தியடைந்த முனிவனானேன்...!

ப்ரியங்களை, ப்ரியங்கள் என்றுதான் சொல்ல முடியும். ப்ரியங்களின் உச்சங்கள் அவற்றை விவரிக்க முடியாமல் மெளனித்து விடுகின்றது. அங்கே சொல்லவும், கேட்கவும் ஒன்றும் இல்லாமல் போய் விடுகிறது. 

உன் மீதான் ப்ரியத்தின் உச்சத்தில் நான் மெளனித்து இருந்ததைப் போலத்தான் நீயும் என் மீதான ப்ரியத்தில் மெளனித்து இருந்தாய் என்று மூர்க்கமாய் உன்னோடு நான் இயங்கிக் கொண்டிருக்கையில் நீ முச்சிறைக்க சொன்னதை என்னால் ஆமோதிக்கத்தான் முடிந்ததே அன்றி அதை வார்த்தையால் சொல்ல முடியாத நிலையில் நானிருந்ததை என் உதடு கவ்வி நீ ஏற்றுக் கொண்டாய். காதல் எங்கே தொடங்கும் என்று தெரியாது ஆனால் நல்ல காதல் எப்போதும் காமத்தை தொட்டு மீண்டும் காதலில் தான் முடியும் என்று நான் சொன்னதற்கு நீ அப்போது கெட்ட காதல் என்னவாகும் என்று கேட்டாய்...

காமத்தில் ஆரம்பித்து வெறுப்பில் முடியும் என்றேன்...! 

ஆமாம் காமம் எப்போதும் உடலின் இச்சையப் போக்கவே உதவுகிறது. காமத்தின் உச்சத்தில் அது தொலைந்து போகவும் செய்கிறது. எது தேவையோ அது முடிந்தவுடன் அது ஒரு வணிகத்தின் சாயலில் வணிகமாகவே முடிகிறது ஆனால் காதல் தொடங்கும் இடத்தில் காமத்தின் சாயல் கூட தோன்றுவதில்லை. அங்கே அன்பு என்னும் பெரு விருப்பம் ஒரு மலைப்பாம்பாய் சுற்றி வளைத்து இறுக்க இறுக்க அந்த அன்பில் திக்கித் திணறித் திணறி அதை வெளிக்காட்ட கடைசியில் மலர்ந்தே விடுகிறது காமமென்னும் வாசம் வீசும் காதல் மலர். 

இங்கே தேவைகள் எல்லாம் அன்பாய்  இருக்கிறது. காமத்தைக் கடக்க காதல் வசதியான துடுப்பாகிறது. கடந்தே முடித்தவுடன், காமம் என்னும் கடலுமில்லை, துடுப்பென்ற காதலுமில்லை, நானும் இல்லை, நீயும் இல்லை....பேரமைதி, பெரு இன்பம் என்று கூறி விட்டு நான் சப்தமாய் சிரித்தேன்...., நீ என்னை இறுக அணைத்திருந்தாய்....துடுப்புகள் அசைய துவங்கியது மீண்டுமொரு முறை நமது காதல் பயணம்....

' மங்கைக்குள் காதலெனும்.. 
கங்கைக்குள் நான் மிதக்க...
சங்கமங்களில் இடம் பெறும் 
சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன....'


என்று எங்கெங்கோ கூட்டிச் செல்லும் மயக்கும் இசைக்கு ஈடு கொடுக்கும் குரல்களும் வரிகளும் என்று 1970களின் இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் என்ற ஜாம்பவான்களின் கூட்டணி நம்மை கட்டி இழுத்துச் சென்று வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இறக்கி விட்டு விட... திரும்ப வர வழி தெரியாமல் வாலியின் வார்த்தைகளே துணை என்று நாம் அங்கேயே கிடக்க வேண்டியதுதான்....

' நெஞ்சத்தில் பேர் எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...'

தேவா. S


Photo Courtesy: Kaviyam 


Comments

//காதல் எங்கே தொடங்கும் என்று தெரியாது.ஆனால் நல்ல காதல் எப்போதும் காமத்தை தொட்டு மீண்டும் காதலில் தான் முடியும்//காதல் பற்றிய விளக்கம் அருமை தேவா.ஆனால் அதனை உணர்ந்து கொள்ளும் உண்மையான காதலர்கள் தான் குறைந்து கொண்டே வருகிறார்கள் என நினைக்கிறேன்.அதற்கான பாடலும் அருமை.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...