Skip to main content

இசையோடு இசையாக...தொகுப்பு 6!



இதோ உன் நினைவுகளை எனது வார்த்தைகள் ஒரு பட்டத்து அரசியை சுமந்து வரும் பணியாட்களைப் போல மிக கவனமாக சுமந்து வருகின்றன. விழிகளால் நீ இமைத்து, இமைத்து என்னை அணைத்துக் கொள்ளும் அன்பில், நான் உன் விழியாக இருந்து எப்போதும் நீ இமை பிரிக்காமல் ஆழ்ந்து உறங்கும் அற்புத தருணங்களில், உனக்கான கனவுகளை நான் காணும் பாக்கியத்தை பெறுவதே இந்தக் கணத்தில் எனக்குப் பேராசையாய் இருக்கிறது.

நீ, உனக்கு என்று எதை நான் எழுதினாலும் அந்த வாக்கியம் முற்றுப் பெறாமல் முற்றுப் புள்ளிகளை எல்லாம் விழுங்கிக் கொண்டே ஒரு அசுரனாய் நீண்டு கொண்டிருக்கிறது. என் கேசம் கலைத்து நீ விளையாடிய போது, உனக்கு நான் சொன்ன கவிதையை நீ உன் கையெழுத்தால் எழுதி என்னிடம் காட்டிய பொழுது உன் கையெழுத்து  இருந்த அழகில் என் கவிதை பொருள் இழந்து, உப்பில்லா பண்டமாய் சுவை இழந்து காகிதத்தில் இருந்து இறங்கி தற்கொலை செய்ய முயன்ற பொழுதில் பொருளில்லா விட்டால் என்ன அழகிருக்கிறதே என்று கர்வமாய் என்னை பார்த்ததாய் நான் உன்னிடம் கூறிய போது....

நீ சப்தமாய் சிரித்தாய்..!!!! நான் கவிதையின் காட்சி வடிவத்தைப் பார்த்து விட்டேன் என்று ஆர்க்கிமிடிஸ் போல யுரேகா யுரேகா என்று சந்தோசத்தில் குதித்த போது என் உற்சாகம் அங்கே ஆடையில்லாமல் கட்டுக்களை உடைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்ததை நீ வெட்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாய். நான் லெளகீக ஆடைகளைக் களைந்து முக்தியடைந்த முனிவனானேன்...!

ப்ரியங்களை, ப்ரியங்கள் என்றுதான் சொல்ல முடியும். ப்ரியங்களின் உச்சங்கள் அவற்றை விவரிக்க முடியாமல் மெளனித்து விடுகின்றது. அங்கே சொல்லவும், கேட்கவும் ஒன்றும் இல்லாமல் போய் விடுகிறது. 

உன் மீதான் ப்ரியத்தின் உச்சத்தில் நான் மெளனித்து இருந்ததைப் போலத்தான் நீயும் என் மீதான ப்ரியத்தில் மெளனித்து இருந்தாய் என்று மூர்க்கமாய் உன்னோடு நான் இயங்கிக் கொண்டிருக்கையில் நீ முச்சிறைக்க சொன்னதை என்னால் ஆமோதிக்கத்தான் முடிந்ததே அன்றி அதை வார்த்தையால் சொல்ல முடியாத நிலையில் நானிருந்ததை என் உதடு கவ்வி நீ ஏற்றுக் கொண்டாய். காதல் எங்கே தொடங்கும் என்று தெரியாது ஆனால் நல்ல காதல் எப்போதும் காமத்தை தொட்டு மீண்டும் காதலில் தான் முடியும் என்று நான் சொன்னதற்கு நீ அப்போது கெட்ட காதல் என்னவாகும் என்று கேட்டாய்...

காமத்தில் ஆரம்பித்து வெறுப்பில் முடியும் என்றேன்...! 

ஆமாம் காமம் எப்போதும் உடலின் இச்சையப் போக்கவே உதவுகிறது. காமத்தின் உச்சத்தில் அது தொலைந்து போகவும் செய்கிறது. எது தேவையோ அது முடிந்தவுடன் அது ஒரு வணிகத்தின் சாயலில் வணிகமாகவே முடிகிறது ஆனால் காதல் தொடங்கும் இடத்தில் காமத்தின் சாயல் கூட தோன்றுவதில்லை. அங்கே அன்பு என்னும் பெரு விருப்பம் ஒரு மலைப்பாம்பாய் சுற்றி வளைத்து இறுக்க இறுக்க அந்த அன்பில் திக்கித் திணறித் திணறி அதை வெளிக்காட்ட கடைசியில் மலர்ந்தே விடுகிறது காமமென்னும் வாசம் வீசும் காதல் மலர். 

இங்கே தேவைகள் எல்லாம் அன்பாய்  இருக்கிறது. காமத்தைக் கடக்க காதல் வசதியான துடுப்பாகிறது. கடந்தே முடித்தவுடன், காமம் என்னும் கடலுமில்லை, துடுப்பென்ற காதலுமில்லை, நானும் இல்லை, நீயும் இல்லை....பேரமைதி, பெரு இன்பம் என்று கூறி விட்டு நான் சப்தமாய் சிரித்தேன்...., நீ என்னை இறுக அணைத்திருந்தாய்....துடுப்புகள் அசைய துவங்கியது மீண்டுமொரு முறை நமது காதல் பயணம்....

' மங்கைக்குள் காதலெனும்.. 
கங்கைக்குள் நான் மிதக்க...
சங்கமங்களில் இடம் பெறும் 
சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன....'


என்று எங்கெங்கோ கூட்டிச் செல்லும் மயக்கும் இசைக்கு ஈடு கொடுக்கும் குரல்களும் வரிகளும் என்று 1970களின் இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் என்ற ஜாம்பவான்களின் கூட்டணி நம்மை கட்டி இழுத்துச் சென்று வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இறக்கி விட்டு விட... திரும்ப வர வழி தெரியாமல் வாலியின் வார்த்தைகளே துணை என்று நாம் அங்கேயே கிடக்க வேண்டியதுதான்....

' நெஞ்சத்தில் பேர் எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...'

தேவா. S


Photo Courtesy: Kaviyam 


Comments

//காதல் எங்கே தொடங்கும் என்று தெரியாது.ஆனால் நல்ல காதல் எப்போதும் காமத்தை தொட்டு மீண்டும் காதலில் தான் முடியும்//காதல் பற்றிய விளக்கம் அருமை தேவா.ஆனால் அதனை உணர்ந்து கொள்ளும் உண்மையான காதலர்கள் தான் குறைந்து கொண்டே வருகிறார்கள் என நினைக்கிறேன்.அதற்கான பாடலும் அருமை.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...