Skip to main content

காதல் மழை.....!


ஒரு மழை நாளில் யாரோ கதவைத் தட்டினார்கள். யார் இப்படி மழை நேரத்தில் புயல் போல கதவைத் தட்டுவது என்று கோபமாய் எழுந்து கதவைத் திறந்தால் அங்கே நின்று கொண்டிருந்தது தென்றல்...

எந்தக் காலத்தில் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறது காதல் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே உள்ளே வரலாமா என்று கேட்டாள் எப்போதோ எனக்குள் வந்து விட்டவள், இந்தப்  பக்கமாய் வந்தேன் ..., மழை ஓவரா பெய்யுது அதான் அப்டியே அம்மாவைப் பாத்துட்டுப் போலாம்னு....... வீட்ல யாரும் இல்லையா...என்று வீட்டுக்குள் ஊருக்குப் போயிருந்த அம்மாவைத் தேடிய விழிகளின் வழி அடைக்காமல் நகர்ந்து நின்றபடி,

வாங்க....என்று நாகரீகத்திற்கு தாவியது எனக்குள்ளிருந்த காட்டுமிராண்டி காதல்...

தனியாவா இருக்கீங்க...?என்று கேட்டாள் எனக்குள் எப்போதும் சம்மணமிட்டு அமர்ந்திருப்பவள். ட்டு முடித்தவளிடம் எப்படி சொல்வேன் நான் எப்போதும் உன்னோடுதானே இருக்கிறேன் என்று...

யாருமில்லேன்னா நான் கிளம்பவா........என்றவளிடம்... நான் வேணும்னா காஃபி போட்டுக் கொண்டு வரவா......குடிச்சுட்டுப் போங்களேன்.. என்று ஒரு கோப்பைக்குள் என் ஆசையை நிறைத்துக் கொண்டு வர ஒரு சம்பிரதாய முயற்சி செய்தேன்....

அச்ச்சச்சோ வேண்டாமென்று மழை நேரத்தில் மேலும் உஷ்ணத்தைக் ஏற்றியவளை இருக்க சொல்லிவிட்டு....
....
....
....

மேசை மீது இரண்டு கோப்பைகளிலிருந்தும் ஆவி பறந்தது.... 


ஒவ்வொரு மிடறாய் அவள் குடித்துக் கொண்டே....ஏதேதோ கேட்டுக் கொண்டிருக்க பூக்கள் நிறைந்த வனத்தினுள் பறந்து,பறந்து தேனெடுக்கும் பட்டாம் பூச்சியின் பரவசத்தோடு மிதந்து கொண்டிருந்தேன்...நான்!

காஃபி... க்ளாஸா இருக்கு என்ன தூள்ள போட்டீங்க என்றாள்....

இது..... வந்து... காபித் தூளில் போட்டதல்ல...
வந்து.... காதல் தூளில் போட்டது....

உள்ளுக்குள் உஷ்ணமாய் இருந்த காதல் மெல்ல மெல்ல வீட்டுப் படி விட்டிறங்கி தெருவிற்குள் வரும் குழந்தையாய் தத்தித் தத்தி எட்டிப்பார்க்க....

சப்தமாய் அவள் சிரித்தாள்... வெட்கம் ஆண்களின் சொத்தும்தானென்று அப்போது புரிந்தது எனக்கு...

நல்லா பேசுறீங்க... கவிதை எழுதுவீங்கதானே...? 

கடகட வென்று ஒடிப் போய் மட மடவென்று நான் கிறுக்கி வைத்த டைரிகளை எல்லாம் அவள் முன் குவித்தேன்....

அதோ எதிரில் இருப்பதுதான் சாமியறை... அதற்குப் பக்கத்தில் இருப்பதுதான் தேவதையின் அறை என்று... என் கவிதைத் தொகுப்புகளை சேகரித்து வைத்திருக்கும் என்னுடைய அறையை அவளிடம் காட்டினேன்....

அடிக்கடி என் வீட்டுக்கு 
வந்து செல்லும் பக்கத்து தெரு
தேவதையொன்று என் 
டைரிகளில்தான் குடியிருக்கிறது...!

***

ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் 
பேசிக் கொண்டதில்லைதான்...
ப்ரியத்தை பகிர்ந்து கொண்டதில்லைதான்...
நான் காதலிக்கிறேனா என்பது கூட...
அவளுக்குத் தெரியாதுதான்...
ஆனாலும்....
நான் எழுதும் எல்லாக் கவிதைகளும் 
அவளுக்கானதுதான்...!

பேய் மழை பெய்து கொண்டிருக்கையில் என்னைக் முழுதாய் விழுங்கிக் கொண்ட பிசாசோடு உட்கார்ந்து அவளுக்காக எழுதிய கவிதைகளை காட்டுவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை....

யாருக்காக எழுதியது இவை எல்லாம் என்று 
கேட்டவளிடம்...
யாருக்காக நீ பிறந்தாயென்றேன்...?

காதல் மட்டுமே வாழ்க்கையில்லைதானே கேட்டு விட்டு விழிகளால் சிரித்தவளிடம் காதல்தான் வாழ்க்கையே என்றேன்...

என்னை பிடிக்குமென்கிறாயா? என்கிறாயா என்றவளிடம்...

உன்னை மட்டும்தான்....பிடிக்குமென்றேன்...!

நான் எதற்காகவோ வந்தேன்.... என்றாள்...
நீ எனக்காகவே வந்தாய் என்று நினைத்து கொள்கிறேன் என்றேன்....

மழை விட்டு விட்டது நான் வரட்டுமா என்றவளை ஏக்கமாய் பார்த்தபடி  ச.....ரி... வாங்க....என்றேன்...

ஆனால்... 

காதல் பிடித்துக் கொண்டது என்றவள்....  வெட்கச் சிரிப்போடு ஓடி மறைந்து விட்டாள்....

படாரென்று அடைத்துக் கொண்டது கதவு....

எனக்குள்ளும் அடித்துப் பெய்தது காதல்.....!




தேவா சுப்பையா...









Comments

எல்லோரின் மனதுக்குள்ளும் மழை பெய்ய செய்து விட்டீர்கள் அதுவும் காதல் அடை மழையாய்.நீல வானம் பெய்யும் போது நிறைய மனங்களில் தீ பரவும் என்பதை மெல்ல பற்றவைத்து விட்டீர்கள் .அற்புதம் .நெகிழ்ச்சியின் பிராவகமாய் வார்த்தைகள் .அற்புதம் .
Anonymous said…
Excellent !!!



இப்படிக்கு
ரசிகை

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...