Skip to main content

காதல் மழை.....!


ஒரு மழை நாளில் யாரோ கதவைத் தட்டினார்கள். யார் இப்படி மழை நேரத்தில் புயல் போல கதவைத் தட்டுவது என்று கோபமாய் எழுந்து கதவைத் திறந்தால் அங்கே நின்று கொண்டிருந்தது தென்றல்...

எந்தக் காலத்தில் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறது காதல் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே உள்ளே வரலாமா என்று கேட்டாள் எப்போதோ எனக்குள் வந்து விட்டவள், இந்தப்  பக்கமாய் வந்தேன் ..., மழை ஓவரா பெய்யுது அதான் அப்டியே அம்மாவைப் பாத்துட்டுப் போலாம்னு....... வீட்ல யாரும் இல்லையா...என்று வீட்டுக்குள் ஊருக்குப் போயிருந்த அம்மாவைத் தேடிய விழிகளின் வழி அடைக்காமல் நகர்ந்து நின்றபடி,

வாங்க....என்று நாகரீகத்திற்கு தாவியது எனக்குள்ளிருந்த காட்டுமிராண்டி காதல்...

தனியாவா இருக்கீங்க...?என்று கேட்டாள் எனக்குள் எப்போதும் சம்மணமிட்டு அமர்ந்திருப்பவள். ட்டு முடித்தவளிடம் எப்படி சொல்வேன் நான் எப்போதும் உன்னோடுதானே இருக்கிறேன் என்று...

யாருமில்லேன்னா நான் கிளம்பவா........என்றவளிடம்... நான் வேணும்னா காஃபி போட்டுக் கொண்டு வரவா......குடிச்சுட்டுப் போங்களேன்.. என்று ஒரு கோப்பைக்குள் என் ஆசையை நிறைத்துக் கொண்டு வர ஒரு சம்பிரதாய முயற்சி செய்தேன்....

அச்ச்சச்சோ வேண்டாமென்று மழை நேரத்தில் மேலும் உஷ்ணத்தைக் ஏற்றியவளை இருக்க சொல்லிவிட்டு....
....
....
....

மேசை மீது இரண்டு கோப்பைகளிலிருந்தும் ஆவி பறந்தது.... 


ஒவ்வொரு மிடறாய் அவள் குடித்துக் கொண்டே....ஏதேதோ கேட்டுக் கொண்டிருக்க பூக்கள் நிறைந்த வனத்தினுள் பறந்து,பறந்து தேனெடுக்கும் பட்டாம் பூச்சியின் பரவசத்தோடு மிதந்து கொண்டிருந்தேன்...நான்!

காஃபி... க்ளாஸா இருக்கு என்ன தூள்ள போட்டீங்க என்றாள்....

இது..... வந்து... காபித் தூளில் போட்டதல்ல...
வந்து.... காதல் தூளில் போட்டது....

உள்ளுக்குள் உஷ்ணமாய் இருந்த காதல் மெல்ல மெல்ல வீட்டுப் படி விட்டிறங்கி தெருவிற்குள் வரும் குழந்தையாய் தத்தித் தத்தி எட்டிப்பார்க்க....

சப்தமாய் அவள் சிரித்தாள்... வெட்கம் ஆண்களின் சொத்தும்தானென்று அப்போது புரிந்தது எனக்கு...

நல்லா பேசுறீங்க... கவிதை எழுதுவீங்கதானே...? 

கடகட வென்று ஒடிப் போய் மட மடவென்று நான் கிறுக்கி வைத்த டைரிகளை எல்லாம் அவள் முன் குவித்தேன்....

அதோ எதிரில் இருப்பதுதான் சாமியறை... அதற்குப் பக்கத்தில் இருப்பதுதான் தேவதையின் அறை என்று... என் கவிதைத் தொகுப்புகளை சேகரித்து வைத்திருக்கும் என்னுடைய அறையை அவளிடம் காட்டினேன்....

அடிக்கடி என் வீட்டுக்கு 
வந்து செல்லும் பக்கத்து தெரு
தேவதையொன்று என் 
டைரிகளில்தான் குடியிருக்கிறது...!

***

ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் 
பேசிக் கொண்டதில்லைதான்...
ப்ரியத்தை பகிர்ந்து கொண்டதில்லைதான்...
நான் காதலிக்கிறேனா என்பது கூட...
அவளுக்குத் தெரியாதுதான்...
ஆனாலும்....
நான் எழுதும் எல்லாக் கவிதைகளும் 
அவளுக்கானதுதான்...!

பேய் மழை பெய்து கொண்டிருக்கையில் என்னைக் முழுதாய் விழுங்கிக் கொண்ட பிசாசோடு உட்கார்ந்து அவளுக்காக எழுதிய கவிதைகளை காட்டுவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை....

யாருக்காக எழுதியது இவை எல்லாம் என்று 
கேட்டவளிடம்...
யாருக்காக நீ பிறந்தாயென்றேன்...?

காதல் மட்டுமே வாழ்க்கையில்லைதானே கேட்டு விட்டு விழிகளால் சிரித்தவளிடம் காதல்தான் வாழ்க்கையே என்றேன்...

என்னை பிடிக்குமென்கிறாயா? என்கிறாயா என்றவளிடம்...

உன்னை மட்டும்தான்....பிடிக்குமென்றேன்...!

நான் எதற்காகவோ வந்தேன்.... என்றாள்...
நீ எனக்காகவே வந்தாய் என்று நினைத்து கொள்கிறேன் என்றேன்....

மழை விட்டு விட்டது நான் வரட்டுமா என்றவளை ஏக்கமாய் பார்த்தபடி  ச.....ரி... வாங்க....என்றேன்...

ஆனால்... 

காதல் பிடித்துக் கொண்டது என்றவள்....  வெட்கச் சிரிப்போடு ஓடி மறைந்து விட்டாள்....

படாரென்று அடைத்துக் கொண்டது கதவு....

எனக்குள்ளும் அடித்துப் பெய்தது காதல்.....!




தேவா சுப்பையா...









Comments

எல்லோரின் மனதுக்குள்ளும் மழை பெய்ய செய்து விட்டீர்கள் அதுவும் காதல் அடை மழையாய்.நீல வானம் பெய்யும் போது நிறைய மனங்களில் தீ பரவும் என்பதை மெல்ல பற்றவைத்து விட்டீர்கள் .அற்புதம் .நெகிழ்ச்சியின் பிராவகமாய் வார்த்தைகள் .அற்புதம் .
Anonymous said…
Excellent !!!



இப்படிக்கு
ரசிகை

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...