Skip to main content

Posts

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா....

இது ஒண்ணும் சொந்தக் கதை சோகக் கதை இல்லங்க முடிக்கிறதுக்கு முன்னால கண்டிப்பா பஞ்ச் பண்ற மாதிரி மேட்டர் இருக்குன்னு..உறுதியா சொல்லிக்கிறேன்.... தைரியமா...மேலே படிங்க....! எந்த வயசுல இருந்து நான் ரஜினி ரசிகன்னு எனக்கு தெரியல இப்போ கூட நினைச்சு பாக்கும் போது சரியா ஞாபகம் இல்ல.....யாராவது விருந்தாளி வரும் சமயதுல..அம்மாவும் சரி அப்பாவும் சரி...ரஜினி மாதிரி...சிரிப்பான்னு சொல்லுவாங்க... நானும் இடுப்புல ஒரு கைய வச்சுகிட்டு ஹா...ஹா.......ஹா...ன்னு விபரம் தெரியாம சிரிச்சு வைப்பேன்.... இடுப்புல கைய வச்சுக்கிறதும்...தலை முடிய கோதி விட்டுக்கிறதும்....என்னைய கேக்காமலேயே...எனக்கு வந்துடுச்சு..... ஏதாவது ரஜினி படம் வந்துச்சுன்னா ரஜினி பேண்ட் போட்டு நடிக்கிறாரா..இல்லை...வேஷ்டி கட்டி நடிக்கிறான்னு...யாரவது பெரியவங்ககிட்ட....இல்ல சினிமா போஸ்டர்னு என்னோட முதல் ஆர்வம் அதில்தான் இருக்கும்....ஏன் தெரியுமா? வேஷ்டி கட்டி நடிச்ச....சண்டை அவ்வளவா இருக்காது அப்படீன்றது...அப்போ என்னோட எண்ணம்....அதனாலதான் அப்போ வந்த முரட்டுக்காளை எல்லாம் எனக்குப் பிடிக்காது....பாயும் புலி, தனிக்காட்டு ராஜா, துடிக்கும் கரங்கள்ன்னு ர...

மே தினம்......

மே தின... விழா கொண்டாட்டம்.... நள்ளிரவு தாண்டியும்... ஆட்டம் பாட்டத்துடன்! மைக் செட் மாரியும்.... மேடை பிரிக்க... மைக்கேலும்... தெருவொராம் பசியோடு....! உழைக்கும் வர்க்கதிற்கு.....வாழ்த்துக்கள்! தேவா. S

எச்சில் பொழுதுகள்...!

எச்சில் பொழுதுகளாய்... விடிகிறது...எமது இலவச வாழ்க்கை! வாக்களிக்கும்... பொழுதுகளிலாவது.. மூன்று வேளை உண்ண..எண்ணி.. கை நீட்டச்...சொல்கிறது மனம்! கும்பிட்டு...கும்பிட்டு... அழிந்து போனது.. எமது ரேகைகள்..... 'வாழ்க' விற்கும்... 'ஒழிக' விற்கும்... இடையில்...ஒளிந்து விளையாடிகொண்டிருக்கிறது... எமது வாழ்க்கை! கல்விக்காக...செல்லாமல்.. உணவிற்காக பள்ளி செல்லும்... எமது குழந்தைகள்! அடுப்பெரிக்க...விறகே.. இல்லாத... வீடுகளில் எல்லாம்... இலவச அரிசி... என்ன புரட்சி...செய்து விடமுடியும்! கருப்பு வெள்ளை... வாழ்க்கையின் பிரச்சினைகளை வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி எப்படி தீர்க்கும்? கறை வேஷ்டிகளால்.... கரை தட்டி...நிற்கிறது... எம் வாழ்க்கை...! எங்கே இருக்கிறாய்? மகாத்மா.... மீண்டும் வா... தொடங்கி....வை... இரண்டாவது சுதந்திர போரை! எம்மக்கள் பிரச்சினைகள் எப்போதுமே வீரியம் கொண்டு வெளி வந்ததே இல்லை! கோடை ஆரம்பம் ஆகி விட்டது....மின்சாரம் இல்லாமல் எத்தனை வீடுகளில் கைக்குழந்தைகளும், பெண்களும் ஆண்களும் சிரமத்திற்கு ஆளாகிப் போயிருக்கிறார்கள்! வெயிலின் உச்சத்தில் இருக்கும் வேலூர் போன்ற நகரங்களில் ...

சில்லுன்னு ஒரு.....காதல்.....!

அர்த்தம் இல்லாத கவிதைதான் இது.....காதலுக்கு அர்த்தம் தேடினால்.... நமக்கு சிக்குவது எல்லாம்....குழந்தைத்தனமாகத்தான்....இருக்கும்! அப்படித்தான் இந்த கவிதையும்..... காதலியை பார்த்து விட்டு....தன் வீடு நோக்கி திரும்பும் ஒரு கிராமத்து இளைஞன்...அவள் காதலிக்கிறாளா இல்லையா என்று கூட இவனுக்குத் தெரியாது....ஆனால் அவளைப் பற்றிய நினைவுகள் அழுந்தப் பதிந்துவிட்டன இவனது மனதில்....அதனால் தான் சில் வண்டு சப்தம் கூட இவனை கேலி செய்வது போல தோன்றுகிறது..... சாராலாய் அவனைச் சுற்றி ஏற்பட்ட சூழ் நிலையும் அவனது காதலை ஊக்குவிக்கும் வினையூக்கி ஆகிப் போனதுதான் அழகு.....! சூழலுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்... வசதியாய்....பிறகு படியுங்கள் கவிதையை.....அர்த்தங்கள் பிடிபடலாம்.....அழகாக.....! அது ஒரு மழை நேரத்து... மாலை நேரம்-என் ஒற்றையடிப்பாதை.... நடையோடு துணைக்கு வந்த ... நிலாவையும்...தாண்டி... பின் தொடர்ந்தன...உன் நினைவுகள்... வழி நெடுகிலும்.. நடை பயின்று.. ஒயிலாய்...வந்த... ஒரு ஊதக் காற்று... காதோரம் வந்து.... உன் பெயரை...கிசு கிசுத்து விட்டு... ஓடி மறைந்தது.....! தூரத்திலிருந்து... ஒரு நட்சத்திரம்.... உன்னைப் போலவே....

புத்தகம்

ரசனையுடன் நேசிப்பாய் தொடங்கிய அந்த நாள்... சரியாக நினைவிலில்லை.... முழுதாய் என்னை... உள்வாங்கிக் கொண்ட.. அந்த கணத்தில் தான்... என் உயிர் நகரும்... ஓசையினை உணர்ந்தேன்! நான் உன்னை... வாசிக்க....வாசிக்க... என் மூளைகளின் செல்களில்.. கிறக்கமாய்... பரவிய... போதை பரவவிடுகிறது.... ஓராயிரம்...எண்ணங்களை! உன்னுள் ஊடுருவி... என் விழிகள் உறவாடிய பின் தான்...என் இமைகள்... கவிழ்ந்து.....உறக்கம் சூழ்கிறது...! அப்போதும் கூட... என் நெஞ்சினில்..தலை சாய்த்து... நீ உறங்கும் அழகினை ... கலைக்க விரும்பாமல்.. அணைத்துக் கொண்டே..... கடத்தியிருக்கிறேன்.. என் இரவுகளை! விலையில்லா உனக்கு..... விலைகொடுத்து உன்னோடு கூடும்... கணங்களில் ...எல்லாம்... நான் கற்றது எல்லாம் என்னைச் சலனமின்றி மெளனமாக்கும் இன்று வரை...புது புது... வடிவங்கொண்டு... நித்தம் ...எனை... வசிகரித்து... நித்தம் ஒரு பெயரோடு...தொடர்கிறது நம் உறவாடல்... - தேவா. S

எரிமலைகள் வெடிக்கட்டும் பதிவுத் தொடர் II

(நான் இணைத்திருக்கும் இந்த புகைப்படம் பற்றி நான் எதுவும் எழுதவில்லை.....! உங்களின் மனசாட்சிகள் ஒரு கட்டுரை எழுதும் தனித்தனியே...இது பற்றி உங்களுக்குள்) இதுவரை பாகம் I இனி.... ரத்தம் கொதிக்கத்தான் செய்கிறது நண்பர்களே.... நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தாலே! ஒவ்வொரு பதிவிட்ட பிறகும்... நான் சர்வ நிச்சயமாய் வாக்குகளின் எண்ணிக்கையினை நோக்குவதில்லை...ஆனால் எத்தனை பின்னூட்டங்கள் இட்டுள்ளார்கள் என்பதுதான் எனது முழு கவனத்திலிருக்கும்..ஏன் தெரியுமா? கட்டுரையின் போக்கு...சரியா அல்லது தவறா அல்லது கட்டுரையில் இல்லாத வெளிப்படுத்த வேண்டிய கருத்துக்கள் இருக்கின்றனவா என்றுணர சரியான பின்னூட்டங்கள் உதவும்....! ஒரு லட்சம் பேர் என்னுடைய வலைப்பூவினுக்குள் நுழைந்து சென்றிருக்கிறார்கள் என்பதை விட...5 பேர் சிந்திக்க வைக்கும் வகையில் பின்னூட்டமிட்டுள்ளார்கள் என்பது ஆரோக்கியமான விசயம்...! நமது கருத்துக்களை தெளிவாக மக்களின் முன் நமது தமிழ்ச்சமுதாயத்தின் முன் வைக்க வேண்டும்...வலுவான இரண்டு கருத்துக்கள்....ஒரு லட்சம் ஓட்டுக்களுக்கு சமம்....என்பது எனது...பார்வை நோக்கு! உலகத்தில் எந்த மனிதனுக்கு ப...

எரிமலைகள் வெடிக்கட்டும்.....!

ஈழம் நமது சிந்தனையில் இருந்து நகர்ந்து போய் விட்டதா தமிழினச் சகோதரர்களே....! தனி நாட்டினை பெற்றெடுப்போம் என்ற சிந்தனையை விட....அந்த மண்ணில் தமிழினத்துக்கு நடந்த அநீதி எல்லாம்...உலகக்தமிழர்களின் உள்ளத்தை விட்டு பெயர்ந்து போய் விட்டதா? தமிழ் நாட்டில் இருக்கும் எம் மக்கள் தினசரி செய்த்தித்தாள் செய்திகளின் பின் செல்லும் ஆட்டு மந்தையாய் மாறி விட்டனரா? எம்மக்களின் இன உணர்வுகளுக்கெல்லாம் அரசியல் சாயங்கள் பூசி ஓட்டுக்காய் கூவி விற்கும் கைப்பாவை ஆகி விட்டனரா? கொதித்தெழுந்திருக்க வேண்டிய ஒரு சமுதாயம்...இன்று எதுவுமே நடவாதது போல...சாமியார்களின் செய்தியிலும்...ஆயிரம் ஊழலோடு நடந்தேறிய விளையாட்டுப் போட்டிகளிலும்... கவனங்கள் திரும்பி விட்ட காரணத்தால்... நடந்து விட்ட அநீதி அழிந்து விடுமா? எழுத்துலக நண்பர்களும் மற்ற கட்சிசார் ஊடகங்கள் போல வசதியாய் எல்லாவற்றையும் மறந்து விட்டு....ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நமது எழுத்தில் இருந்து வெளிவரும் அக்னி உலகைச் சூழ வேண்டாமா?. நம் தாய் தமிழின் வளத்தில் வார்தைகள் வந்து தெறிக்க வேண்டாமா? ஒவ்வொரு தமிழனும் தன் சக தமிழனுக்கு அநீதிகளை எடுத்துக் கூற வேண்டாமா? ஒரு...