Skip to main content

காலத்தின் சாட்சி....!

நண்பர் ஜீவன் (தமிழ் அமுதன்) சொல்லித்தான் என்னுடைய " பணம் தேவையில்லை மனமே போதும்" என்ற கட்டுரை விகடன் குட் பிளாக்ஸ் வரிசையில் வந்திருகிறது என்று தெரியும். எழுத்தின் வீச்சில் என்னுடைய வலைப்பூ தீப்பிடித்து எரிவததோடு வலைப்பூவினை விட்டு விட்டு வெளியேறும் போது ஒரு சிறு பொறியை கொண்டு செல்லுமானால் அது எழுத்தின் நோக்கதிற்கு கிடைத்த வெற்றி.

என்னைப்பற்றி அறிவதைவிட....என் எழுத்துக்களின் பின் புலத்தில் இருக்கும் வீச்சு முழுதாய் ஒருவரிடம் சென்றடைந்தால் அதுவே நிம்மதி....! ஆதங்கங்களை.... மனித அவலங்களை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு ஒப்பற்ற வேலையை இன்று நமக்கு ஊடகங்கள் செய்கின்றன. நல்ல எழுத்துக்களை விரும்பிப்படிக்கு வாசகர்களின் வட்டம் அதிகரிக்க வேண்டும் ஆனால் அதற்கு எதிர்மறையாக ....உணர்ச்சி சார்ந்த விசயங்களுக்கும், மதம் சார்ந்த விசயங்களுக்கும், சினிமா சார்ந்த விசயங்களும் மக்கள் அதீத ஆர்வம் காட்டுவதற்கு காரணம்.... அறிவின் விரிவாக்கத்திற்கு என்று சொல்ல முடியாது.. .மிகைப்ப்ட்ட நேரங்களில் இவை எல்லாம் உணர்ச்சியினை தூண்டி விட்டு.... மனிதர்களை செயல் படச் செய்வதாகவே எனக்குப் படுகிறது.

சில நண்பர்கள் விரும்பிப்படிக்கிறார்கள் என்னை கேட்காமலேயே பதிவுகளுக்கு வாக்குகளும் பின்னூட்டங்களும் இடுகிறார்கள் .... வாக்குகளை எதிர்பார்த்து வாசகருக்கு எது தேவை என்று பார்த்து பார்த்து யோசித்து அலங்காரங்கள் கூட்டி எப்போதும் பதிவு எழுதுவதில்லை..! பெரும்பாலும் ஆதங்கங்கள் ஏற்படும் போது எல்லாம்.....அதை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதிவிடுபவன் மற்றபடி வாசகரை அபகரிக்க வேண்டும் என்ற.... நோக்கில் எழுதும் எழுத்து வியாபரியும் அல்ல...ஓட்டுக்காய் வாக்காளனிடம் கையேந்தும் அரசியல்வாதியுமல்ல!

நம்மைச் சுற்றி நடக்கும் ஓராயிரம் அநீதிகளை பார்த்துக் கொண்டு சும்மா செல்லாமல் எழுதியாவது வைப்போமே என்ற எண்ணத்தில் நான் கிழிக்கும் சிறு சிறு தீக்குச்சிகள் தான் வலைப்பதிவுகள் .....! பதிவுகளை பாராட்டும் சிலரை விட..... என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை என்று கேட்டவர்கள் தான் அதிகம். என்னுடைய ஒரு பதிவுத் தொடருக்கு (சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா) ஒருத்தர் கமெண்ட் போட்டிருந்தார்... அதை பதிவில்தான் போட வேண்டும் கமெண்டில் போடக்கூடாது என்று அப்போதே முடிவெடுத்தென்....அது....

" டேய் பன்னாட....எப்படா திருந்தப் போறீங்க"ன்னு

ஒரு பெயரில்லாமால் கருத்து தெரிவித்திருந்தார் அவர் தான் உண்மையான வாசகர்....ஒன்றிப் போய்விட்டார் கட்டுரையோடு சேர்ந்து அதில் லயித்து அதில் ஏற்பட்ட ஆதங்கம்...சரி....இது போல ஒவ்வொருவரும் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் கட்டுரையே ஆரம்பித்தேன்.... ! அவரின் கமெண்ட் என் கட்டுரையின் அபார வெற்றி! அவருக்கு எனது நமஸ்காரங்கள்!

கடந்த பதிவினை படித்து விட்டு நண்பர் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து ஆன்லைனில் தொடர்பு கொண்டு....கட்டுரையை பார்த்தேன்....தமிழிசில் ஓட்டுப் போட்டு விட்டேன் என்றார்... ! எனக்குள் சந்தோசமில்லை...ஒட்டு என்பது கட்டுரையில் திளைத்து அதற்கான நன்றி நவிழல் மேலும் மிகைப்பட்ட பேருக்கு கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி...அவ்வளவே...! அது எந்த அளவிலும் எழுத்தாளனை பாதிக்க கூடாது.....பாதித்தால்.. நல்ல எழுத்துக்களை வெளிக்கொணர முடியாது....என்பது எனது கருத்து....மீண்டும் ஒரு தீக்குச்சி கிழிப்பது போல இந்தப்பதிவும்....! தீ பரவலாம் அல்லது ...என்னோடனே அணையாலாம்... ஆனால் ஒரு விசயம் ....எனக்குள் ஏற்படும் எண்ணங்களை பதிவாக்கும் காலத்தின் சாட்சிகளில் நானும் ஒருவன்!

தேவா. S

Comments

dheva said…
இந்த பதிவினை எதிலும் பிரசுரிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.. நண்பர் ராய்.... வலுக்கட்டாயமாய் தமிழிசில் பிரசுரித்து விட்டார்....! அவரின் அன்பிற்கும்....வாசிக்கும் ஆர்வத்திற்கும் எனது நன்றிகள்!
AltF9 Admin said…
Valthukkal unkalin vtri payanam thodara...
Chitra said…
ல எழுத்துக்களை வெளிக்கொணர முடியாது....என்பது எனது கருத்து....மீண்டும் ஒரு தீக்குச்சி கிழிப்பது போல இந்தப்பதிவும்....! தீ பரவலாம் அல்லது ...என்னோடனே அணையாலாம்... ஆனால் ஒரு விசயம் ....எனக்குள் ஏற்படும் எண்ணங்களை பதிவாக்கும் காலத்தின் சாட்சிகளில் நானும் ஒருவன்!



.....தேவா, நன் முதன் முறையாக எதேச்சையாக உங்கள் பதிவுகளை வாசிக்க நேரிட்டபோது, உங்கள் எழுத்தில் இருந்த அனலும் கருத்தில் இருந்த சிறப்பும், என்னை மீண்டும் மீண்டும் உங்கள் இடுகைகளை தவறாமல் வாசிக்க வைத்தது. உங்கள் எழுத்துக்கள் தான் உங்களை, எங்களுக்கு அறிமுகப் படுத்துகின்றன. தொடர்ந்து எழுதுங்கள். பரிந்துரையும் ஓட்டும், நம்மை உற்சாகப் படுத்தும் டானிக் தான். உணவு அல்ல. சரிதானே? :-)
dheva said…
மிக்க நன்றி சித்ரா....! உங்களின் உத்வேகமும் வாசிக்கும் ஆர்வமும் தான் எனக்கு உத்வேகத்தினை கொடுத்தது. எனது பதிவுகள் தமிழிஸில் பாப்புலர் ஆகிறது என்பதைக் கண்டு என்னை விட அதிக சந்தோசம் கொண்ட தாயுள்ளமும்.....என்னுள் எப்போதும்...வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத நன்றியுணர்ச்சியினை எப்போதும் கொண்டிருக்கும்.....என்பதில் மாற்றமில்ல....!

நெகிழ்ச்சியுடன் கூடிய எனது சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
சில நண்பர்கள் விரும்பிப்படிக்கிறார்கள் என்னை கேட்காமலேயே பதிவுகளுக்கு வாக்குகளும் பின்னூட்டங்களும் இடுகிறார்கள் .... வாக்குகளை எதிர்பார்த்து வாசகருக்கு எது தேவை என்று பார்த்து பார்த்து யோசித்து அலங்காரங்கள் கூட்டி எப்போதும் பதிவு எழுதுவதில்லை..! பெரும்பாலும் ஆதங்கங்கள் ஏற்படும் போது எல்லாம்.....அதை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதிவிடுபவன் மற்றபடி வாசகரை அபகரிக்க வேண்டும் என்ற.... நோக்கில் எழுதும் எழுத்து வியாபரியும் அல்ல...ஓட்டுக்காய் வாக்காளனிடம் கையேந்தும் அரசியல்வாதியுமல்ல!

இது இது இது தான் தம்பி உண்மையில் எனக்கு பிடித்த விஷயம்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...