Skip to main content

அது அதுவாகவே...இருக்கிறது... !
















அது அதுவாகவே...இருக்கிறது...
அலட்டலும்...அறிமுகமுமின்றி..
தேவைகளை எல்லாம் சூன்யமாக்கி
சலமின்றி...அது இருக்கிறது.
விதிகளை எல்லாம் புறம்தள்ளி....
புலன்களுக்கு புலப்படாத...
ஒரு புன்னகையுடன்!

ஆர்ப்பாட்டமான மனதுக்குதான்....
எல்லாம் தேவையாகி இருக்கிறது...
கடவுளையும் சேர்த்து....
மெல்ல மெல்ல நிகழும்
நிகழ்வுகளோ..எல்லாவற்றையும்
உடைத்துப் போட்டு விடுகிறது...
பல நேரங்களில் கடவுளையும் கூட!

கேள்விகள் கேட்கும் மனதுக்கு
எப்போதும் புரிவதில்லை...
பதில்கள் இல்லையென்று...!
பதிலே இல்லாமல் கேள்விகளே...
பதிலாய் மாறும் விந்தைதான்...
பல நேரங்களில் புரியாமல்...
தர்க்க வாய்ப்பாட்டுக்குள்
தள்ளிவிடுகிறது மனிதனை!

ஆசைகளின் விளிம்புகள்
எல்லாம் அறியாமையிலிருந்து
எட்டிப்பார்க்க....
மரணத்தை மறுக்கும்...
மனிதனுக்கு தேவைப்படுகிறது...
ஆத்திகமும் நாத்திகமும்....!
மற்றபடி...அது அதுவாகவே...இருக்கிறது...!

எப்படி வேண்டுமானால் கற்பிதங்கள் கொள்ளுங்கள் மனிதர்களே....! உங்களின் எந்த செயலும் அல்லது சொல்லும் அதை பாதிப்பதில்லை...இன்னும் சொல்லப்போனால் உங்களின் அறியமையையும் தர்க்கங்களையும், பல விதமான நம்பிக்கைகளையும் உள்ளடக்கி அது....ஆனந்தத்தில் சலனமின்றி சந்தோசித்து இருக்கிறது.

விடைதேட முயலும் மனம்தான் நடுக்கடலில் தவிக்கும் படகு போல தத்தளிக்கிறது...கடல் என்னவோ அந்க படகையும் சேர்த்துக் கொண்டு ஒரு புரிதலோடு மெளனமாய்த்தானிருக்கிறது...! ஏனென்றால் கடலுக்குத் தெரியும்...காற்றடித்தால் கரை சேரும்...இல்லை எனில் அங்கேயே இருக்கும். கடலை பொறுத்த மட்டில் இரண்டும் ஒன்றுதான்....! எதிர்பார்க்கும் மனிதர்களுக்குத்தன் எல்லா அலைச்சல்களும்..! மனமில்லாத மிருங்கங்கள் கூட இயற்கையின் பகுதியாகி விடுகின்றன....ஆனால் மனிதனோ.... எப்போதும் சுமந்து கொண்டிருக்கிறான் கற்பனைகளையும்...கற்பிதங்களையும்...

எது எப்படி ஆனாலும் சரி....


"அது அதுவாகவே...இருக்கிறது...!"


தேவா. S

Comments

Paleo God said…
யோசிக்கத்தெரிந்தவை தவிர எல்லாமே அதுவாகவேதான் இருக்கிறது!

--

உங்க டெம்ப்ளேட் மாத்துங்கன்னு சொல்லனம்னு நினெச்சேன். இப்ப இருக்கறதும் ரொம்ப பளிச்சுனு இருக்கு வேற நல்லதா மாத்துங்க தேவா. ஃபாலோயர்ஸ் விட்ஜெட் என்னாச்சு?
Chitra said…
விடைதேட முயலும் மனம்தான் நடுக்கடலில் தவிக்கும் படகு போல தத்தளிக்கிறது...கடல் என்னவோ அந்க படகையும் சேர்த்துக் கொண்டு ஒரு புரிதலோடு மெளனமாய்த்தானிருக்கிறது...! ஏனென்றால் கடலுக்குத் தெரியும்...காற்றடித்தால் கரை சேரும்...இல்லை எனில் அங்கேயே இருக்கும். கடலை பொறுத்த மட்டில் இரண்டும் ஒன்றுதான்....! எதிர்பார்க்கும் மனிதர்களுக்குத்தன் எல்லா அலைச்சல்களும்..! மனமில்லாத மிருங்கங்கள் கூட இயற்கையின் பகுதியாகி விடுகின்றன....ஆனால் மனிதனோ.... எப்போதும் சுமந்து கொண்டிருக்கிறான் கற்பனைகளையும்...கற்பிதங்களையும்...



......எத்தனை ஆழமான அர்த்தங்கள் கொண்ட வரிகள்.................!!! மெளனமாக யோசிக்க வைக்கிறது. தேவா, அருமை. Nice meditation thoughts for the day.
dheva said…
நன்றி சங்கர் ! சீக்கிரமே...இன்னும் நல்ல டெம்பிளட் மாத்திடுறேன்! ஃபாலோயர் விட்ஜெட் இருக்குல்ல சங்கர்!
dheva said…
ஆமாம் சித்ரா......! நன்றிகள்!
###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
எப்படி வேண்டுமானால் கற்பிதங்கள் கொள்ளுங்கள் மனிதர்களே....! உங்களின் எந்த செயலும் அல்லது சொல்லும் அதை பாதிப்பதில்லை...இன்னும் சொல்லப்போனால் உங்களின் அறியமையையும் தர்க்கங்களையும், பல விதமான நம்பிக்கைகளையும் உள்ளடக்கி அது....ஆனந்தத்தில் சலனமின்றி சந்தோசித்து இருக்கிறது.உங்கள் பதிவு அணைத்து நல்ல கருத்து உள்ளது

அருமையா வரிகள்

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...