Skip to main content

அது அதுவாகவே...இருக்கிறது... !
















அது அதுவாகவே...இருக்கிறது...
அலட்டலும்...அறிமுகமுமின்றி..
தேவைகளை எல்லாம் சூன்யமாக்கி
சலமின்றி...அது இருக்கிறது.
விதிகளை எல்லாம் புறம்தள்ளி....
புலன்களுக்கு புலப்படாத...
ஒரு புன்னகையுடன்!

ஆர்ப்பாட்டமான மனதுக்குதான்....
எல்லாம் தேவையாகி இருக்கிறது...
கடவுளையும் சேர்த்து....
மெல்ல மெல்ல நிகழும்
நிகழ்வுகளோ..எல்லாவற்றையும்
உடைத்துப் போட்டு விடுகிறது...
பல நேரங்களில் கடவுளையும் கூட!

கேள்விகள் கேட்கும் மனதுக்கு
எப்போதும் புரிவதில்லை...
பதில்கள் இல்லையென்று...!
பதிலே இல்லாமல் கேள்விகளே...
பதிலாய் மாறும் விந்தைதான்...
பல நேரங்களில் புரியாமல்...
தர்க்க வாய்ப்பாட்டுக்குள்
தள்ளிவிடுகிறது மனிதனை!

ஆசைகளின் விளிம்புகள்
எல்லாம் அறியாமையிலிருந்து
எட்டிப்பார்க்க....
மரணத்தை மறுக்கும்...
மனிதனுக்கு தேவைப்படுகிறது...
ஆத்திகமும் நாத்திகமும்....!
மற்றபடி...அது அதுவாகவே...இருக்கிறது...!

எப்படி வேண்டுமானால் கற்பிதங்கள் கொள்ளுங்கள் மனிதர்களே....! உங்களின் எந்த செயலும் அல்லது சொல்லும் அதை பாதிப்பதில்லை...இன்னும் சொல்லப்போனால் உங்களின் அறியமையையும் தர்க்கங்களையும், பல விதமான நம்பிக்கைகளையும் உள்ளடக்கி அது....ஆனந்தத்தில் சலனமின்றி சந்தோசித்து இருக்கிறது.

விடைதேட முயலும் மனம்தான் நடுக்கடலில் தவிக்கும் படகு போல தத்தளிக்கிறது...கடல் என்னவோ அந்க படகையும் சேர்த்துக் கொண்டு ஒரு புரிதலோடு மெளனமாய்த்தானிருக்கிறது...! ஏனென்றால் கடலுக்குத் தெரியும்...காற்றடித்தால் கரை சேரும்...இல்லை எனில் அங்கேயே இருக்கும். கடலை பொறுத்த மட்டில் இரண்டும் ஒன்றுதான்....! எதிர்பார்க்கும் மனிதர்களுக்குத்தன் எல்லா அலைச்சல்களும்..! மனமில்லாத மிருங்கங்கள் கூட இயற்கையின் பகுதியாகி விடுகின்றன....ஆனால் மனிதனோ.... எப்போதும் சுமந்து கொண்டிருக்கிறான் கற்பனைகளையும்...கற்பிதங்களையும்...

எது எப்படி ஆனாலும் சரி....


"அது அதுவாகவே...இருக்கிறது...!"


தேவா. S

Comments

Paleo God said…
யோசிக்கத்தெரிந்தவை தவிர எல்லாமே அதுவாகவேதான் இருக்கிறது!

--

உங்க டெம்ப்ளேட் மாத்துங்கன்னு சொல்லனம்னு நினெச்சேன். இப்ப இருக்கறதும் ரொம்ப பளிச்சுனு இருக்கு வேற நல்லதா மாத்துங்க தேவா. ஃபாலோயர்ஸ் விட்ஜெட் என்னாச்சு?
Chitra said…
விடைதேட முயலும் மனம்தான் நடுக்கடலில் தவிக்கும் படகு போல தத்தளிக்கிறது...கடல் என்னவோ அந்க படகையும் சேர்த்துக் கொண்டு ஒரு புரிதலோடு மெளனமாய்த்தானிருக்கிறது...! ஏனென்றால் கடலுக்குத் தெரியும்...காற்றடித்தால் கரை சேரும்...இல்லை எனில் அங்கேயே இருக்கும். கடலை பொறுத்த மட்டில் இரண்டும் ஒன்றுதான்....! எதிர்பார்க்கும் மனிதர்களுக்குத்தன் எல்லா அலைச்சல்களும்..! மனமில்லாத மிருங்கங்கள் கூட இயற்கையின் பகுதியாகி விடுகின்றன....ஆனால் மனிதனோ.... எப்போதும் சுமந்து கொண்டிருக்கிறான் கற்பனைகளையும்...கற்பிதங்களையும்...



......எத்தனை ஆழமான அர்த்தங்கள் கொண்ட வரிகள்.................!!! மெளனமாக யோசிக்க வைக்கிறது. தேவா, அருமை. Nice meditation thoughts for the day.
dheva said…
நன்றி சங்கர் ! சீக்கிரமே...இன்னும் நல்ல டெம்பிளட் மாத்திடுறேன்! ஃபாலோயர் விட்ஜெட் இருக்குல்ல சங்கர்!
dheva said…
ஆமாம் சித்ரா......! நன்றிகள்!
###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
எப்படி வேண்டுமானால் கற்பிதங்கள் கொள்ளுங்கள் மனிதர்களே....! உங்களின் எந்த செயலும் அல்லது சொல்லும் அதை பாதிப்பதில்லை...இன்னும் சொல்லப்போனால் உங்களின் அறியமையையும் தர்க்கங்களையும், பல விதமான நம்பிக்கைகளையும் உள்ளடக்கி அது....ஆனந்தத்தில் சலனமின்றி சந்தோசித்து இருக்கிறது.உங்கள் பதிவு அணைத்து நல்ல கருத்து உள்ளது

அருமையா வரிகள்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...