
இதுவரை
பாகம் I
பாகம் II
இனி...
ஈழப்போரட்டம்.....என்பது ஒரு தனி நாடு கோரும் மக்களின் போராட்டம் என்பதைக் காட்டிலும் அது அண்டை நாடுகளின் உதவியுடன் முறியடிக்க முயன்ற நயவஞ்சக செயல் என்பதுதான் இப்போது உள்ள பிரச்சனை...
நீ என்னை அடி... ஆனால் நேர்மையாக அடி.....ஆனால் முதுகில் குத்தாதே....100 பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது எமக்கு தர்மம் இல்லை....!! எல்லாவற்றிலும் ஒரு மரபை கொண்டது தான் தமிழ்ச் சமுதாயம்....எங்களுக்கு எல்லாம் யுத்த மரபு என்று ஒன்று தெரியும்...அது வெள்ளை கொடி பிடித்து வந்தவனை சுட்டுக் கொல்லாது....அது எதிரியாய் இருந்தாலும் அவனுக்கும் பசிக்குமே என்று கவலைப்படும்.... நாகரீகத்தை உலகிற்கு சொல்லிக் கொடுத்த ஒரு இனத்தை இன்று அடக்குமுறையால் நசுக்கி இருக்கிறது இந்த சர்வதேச சமுதாயம்.
ஆயுதங்கள் தூக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையினை உருவாக்கிய மிருகங்கள் இன்று அஹிம்சை பற்றி எல்லாம் போதனை செய்கின்றன்.....! புத்தரை வழி படும் இந்த மேதாவிகள் எங்கு பார்த்தாலும் பெளத்த கோவில்களாய் எழுப்பி வருகிறார்களாம் ...எதற்கு...வன்முறையை புத்தருக்கும் போதிக்கவா....? தயவு செய்து புத்தனை தொடர்வதாய் இனியும் சொல்லாதிருங்கள் அது புத்தருக்கு நீங்கள் செய்யும் அவமானம்....!
மெளனமாய் அறவழியில் போராடி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தானே...தீலீபன் அப்போது தெரியவில்லையா....காந்தீய வழியையும் இவர்கள் காலில் இட்டு மிதித்துக் கொன்றது....! வன்முறை எந்த விசயத்துக்கும் தீர்வாகாது என்பது சொல்ல வேண்டுமானால் நல்ல வாக்கியமாக இருக்கலாம்...ஒரு மிகப் பெரிய வன்முறையை அழிக்க....கண்டிப்பாய்.... நாமும் வன்முறை செய்தே ஆக வேண்டும்...இதையே....பரமாத்மா...கீதையில் சொன்னால் வேத வாக்கியமாய்... எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்வீர்கள்...பிரபாகரன் ஆயுதமேந்தினால்...அது வன்முறை....? எத்தனை கயமைத்தனம்....?
வன்முறை உலகெங்கும் உள்ளது நண்பர்களே.... அது அரசாங்கங்களின் கீழ்.... இராணுவமாக..காவல்துறையாக எப்போது எல்லாம் அந்த அந்த நாடுகளின் பாதுகாப்புக்கும், இறையண்மைக்கும் ஊறு ஏற்படும் போது எல்லாம்....இந்த வலிய சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வன்முறைகளை ஏவி விட்டு அடக்குமுறையை கையாளுகிறார்கள்...! அதே போலத்தான்....தமிழர்களின், தன்னோடு வாழும் சக மனிதர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் ஊறு வந்த போது, கண்ணெதிரே...தனது சகோதரிகளின் கற்பு சூறையாடப் பட்ட போது ....வேகத்தில் ...ஆத்திரத்தில்.....போராட ஆரம்பித்தவன் தான் ஈழத்தமிழன்.
நீங்கள் யாரும் அவனுக்கு உதவாவிட்டால் கூட பரவாயில்லை....., போரில் நசுக்கப்பட்டு....மனிர்களாய் வாழ்வதற்கேயுரிய மனோ நிலையில் இருக்கும் மக்களைப் பார்த்து உங்களுக்கு பச்சாதாபம் கூட வரத்தேவையில்லை...., இனத்துக்காக போராடிப் போராடி நசுங்கி ஒடுங்கிப் போன ஒரு வயதான மூதாட்டியை நாட்டினுள் நுழைய அனுமதிக்காத உங்களின் இறையாண்மைப் பற்றி கூட கவலை இல்லை....ஆனால்....
தயவு செய்து.......
" அவன் போராட்டத்தின் நோக்கு தவறென்று சொல்லாதீர்கள் "
சூழ்ந்த கடல் என் கடல் - அதைச்
சூழ்ந்த நிலம் என் நிலம் - இதைச்
சேர்ந்த புலம் என் குலம் - நினைச்
சார்ந்த ஈழம் தமிழ் ஈழம் - என
விண்ணைக் கவர்ந்த குரல்வளை நெரிக்கப்பட
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்.!
( நன்றி: மயோ மனோ)
கதறிக் கொண்டு இருக்கிறது...தமிழினம்....உலகெங்கும்....! தெரியாமல்....தலை அரிக்கிறது என்று...கொள்ளிக்கட்டையை எடுத்து தலை சொறிந்து விட்டார்..திருவாளர் ராஜ பக்ஸே.....! இது ஒரு இனத்துரோகம்....முள்ளிவாய்காலில் மறித்த உயிர்களை எத்தனை எத்தனை அதை வேன்டுமானால்....வல்லரசுகளின் உதவியோடு மறைக்கலாம்....
ஆனால் எரிமலைகள் தொடர்ந்து வெடிக்கும்...அதில் அநீதிகள் எல்லாம் பொசுங்கும்..வல்லரசுகள் மெல்லரசுககளாகும்.....தமிழனின் கொடி...அகிலம் எல்லாம் பறக்கும்....வரலாறே...உனது செங்கோலை உயர்த்திப் பிடித்து காத்திரு...எமது வெற்றிச் செய்தியை உலகிற்கு அறிவிக்க...!
" தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ......தர்மம் மறுபடியும் வெல்லும்....!"
(அத்தியாங்கள் ....முற்றும்.....ஆனால்...வரலாறு தொடரும்...)
தேவா. S
Comments
.... well-said! பாராட்டுக்கள்!