Skip to main content

Posts

Showing posts from March, 2013

தேவனே.....என்னைப் பாருங்கள்...!

புனித வெள்ளி அதிர்வுகள் நிறைந்த ஒரு நாள். சத்தியத்தை உலகம் நிராகரித்ததும், அந்த நிராகரித்தலை உயரிய புரிதலுடன் சத்தியம் ஏற்றுக் கொண்டதும் நிகழ்ந்தேறிய ஒரு அற்புத நாள். பைத்தியக்கார உலகிற்குள் வந்த தேவனின் புனிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனித மிருகங்கள் அவரைச் சிலுவையில் ஏற்றி மகிழ்ந்த நாள். தேவன் ஒரு போதும் அவர்களை விரோதமாக பார்த்தவரில்லை. அவர் தேவன். தேவாதி தேவன். உள்ளவருக்கும், இல்லாதவருக்கும், நல்லவருக்கும் கெட்டவருக்கும் அவர் தேவன். அவரின் பிறப்பே ஒரு அதிசயம். மிகப்பெரிய அறிவிப்புகளை இந்த பிரபஞ்சம் தாங்கிப் பிடித்து உலகத்துக்கு அவரது வருகையினை தெளிவாக்கிய பின் தான் அந்த பாலகனை இந்த உலகிற்கு தருவித்தது. அந்த புனிதனைப் பெற்ற பின்பு அவள் கன்னி மேரி ஆனாள். கன்னித் தன்மை என்பது உடலோடு சம்பந்தப்பட்டது அல்ல அது உணர்வோடு தொடர்புகள் கொண்டது. மரியாள் புனிதமான உணர்வுகளோடு என்றும் ஜீவித்திருக்கும் கண்ணியத்தை ஏந்திக் கொண்டு புனிதமானவளானாள். பிறக்கும் போதே தனது தாய்க்கு புனிதத்தைக் கொடுத்து யுகங்களாய் காலம் எல்லா நினைவுகளையும் செரித்துக் கொண்டு முரட்டுத்தனமாய் நகர்கையில் தன்னோடு சேர்த்

பரதேசி....!

தடித்த தோல் எனக்கில்லை. உலக இலக்கியங்களையும், திரைப்படங்களையும் அவ்வப்போது கடந்து சென்றாலும் புத்தியின் தடிமன் கூடிப் போவதுமில்லை. விசால அறிவுகள் எவ்வளவு அபத்தமானது அது எப்படி வாழ்வின் அழகியலைச் சிதைக்கின்றன என்பதை பரதேசி திரைப்படத்தைப் பற்றிய ஜாம்பவான்களின் பார்வைகளில் இருந்து புரிந்து கொண்டேன். வானவில்லுக்கு இன்னமும் ஆச்சர்யமாய் வாய் பிளந்து அதன் வர்ண ஜாலத்தில் நான் திணறிப் போய் நிற்கிறேன்... தினசரி சூர்ய உதயத்தின் போது வானம் நடத்தும் ஜாலங்களில் மயங்கிக் கிடக்கிறேன். மொட்டுக்கள் எல்லாம் பூவாகும் தருணம் எதுவாயிருக்கும் என்று மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறேன்....புற்களின் மீது அழுந்தக் கால் பதிந்து கடந்து செல்லும் பூனையொன்றை வம்புக்கிழுத்து....ஏய் புற்களை மிதிக்காதே என்று பொய்யாய் அதட்டி சிரிக்கிறேன், அந்தப் பூனையின் ப்ரியத்தை விழிவழியே பெற்றுக் கொண்டு நன்றியை விழி வழியே நானும் கொடுக்கிறேன்...இப்போது சொல்லுங்கள் பரதேசி என்னும் திரைப்படம் என்னை என்ன செய்து இருக்கும் என்று..? எதிர்பார்ப்பு என்பது கடந்த கால நிகழ்வுகளின் திணிப்பு.  அதுவும் பாலா என்னும் மனிதர் தனது திரைப்படங்களின் ம

ருத்ராட்சம்....!

எந்தப் பரதேசியைப் பற்றி எழுத? என்று யோசித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் சடாரென்று கடந்து போன அந்த அதிர்வுகள் நிரம்பிய மஹாசிவராத்திரிக்குள் விழுந்து விட்டேன். சனிப் பிரதோஷமும், அதனையடுத்த மகா சிவராத்திரியும் எங்கிருந்தோ என்னைத் தேடி வந்த ஒரு முக ருத்ராட்சமும், அதை அணிய ஷீரடியில் இருந்து யார் மூலமாகவோ வந்த கருப்பு கயிறும் என்னோடு ஒட்டிக்கொள்ள....முழுமையான அதிர்வுகளில் நான் நிரம்பி வெறுமையில் பரதேசியாக நின்றிருந்தேன். சிறுவயதில் இருந்தே சிவனைப் பிடிக்கும்.  சிவனைப் பிடித்ததால் ருத்ராட்சமும் பிடிக்கும். ருத்ரனின் நெற்றிகண்ணில் இருந்து வந்த நெருப்பு பொறிதான் ருத்ராட்சம் என்று புராணங்கள் மூலமாக ஒரு நெருப்பினை எனக்குள் செல்வமணி மாமா ஏற்றி வைக்க, ரஜினியும் ருத்ராட்சம்  அணிகிறார் என்ற ஈர்ப்பு என்னை இழுத்து வைக்க....20 வயதில் ஐந்து முக ருத்ராட்சத்தை ஒரு காது குத்துக்காக அழகர்கோவில் போன போது வாங்கி அணிய ஆரம்பித்தேன். ருத்ராட்சத்திற்கு என்ன சக்தி இருக்கிறது என்றெல்லாம் ஆராய முற்படாத ஒரு மனது அப்போது. ருத்ராட்சத்தை நல் ஒழுக்கத்தின் அடையாளமாக மட்டும் அறிந்து அதை நான் அணிகிறேன் என்று என் வய

திராவிடக் கட்சிகளும்... திக்குத் தெரியாத தமிழர்களும்!

டோரன்ட்டில் எல்லா படத்தையும் உடனே உடனே ரிலீஸ் செய்து விடுகிறார்கள். சமீபத்தில் தொடர்ச்சியாக மூன்று படங்கள் பார்த்தேன். ஹாட்ரிக் ஃப்ளாப் மூவீஸ். முதல் முப்பது நிமிடத்துக்குப் பிறகு எனக்கு படம் பார்க்கும் பொறுமை  சுத்தமாய் இல்லாமல் போய் விட்டது. எழுந்து போய் பால்கனியில் வெறுமனே உட்கார்ந்து வானம் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு என்ன இது அபத்தம் என்று மிச்ச படத்தை சக தர்மினியிடமும், மகளிடமும் விட்டு, விட்டு எழுந்து வந்து விட்டேன். ஆதி பகவான், சந்தமாமா, ஒன்பதுல குரு என்ற மூன்று படங்களையும் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு  படைத்தளித்த படைப்பாளிகளுக்கு எனது வந்தனங்கள். மெனக்கெட்டு அதைப் பற்றி உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால் பிறகு எனக்கு ' 7 அப்' போ அல்லது ஸ்பைரைட்டோ வாங்கி, கிளாஸில் ஊற்றி லெமனும், சால்ட்டும் போட்டு நீங்கள் கொடுத்து என் வயிற்றுக் குமட்டலை சரி செய்ய வேண்டி இருக்கும் என்பதால்.. மூன்று படங்களையும் நான் உங்களை சாட்சியாக வைத்து இப்போதே மறந்து விடுகிறேன். நிறைய எழுதுவதற்கு போதும், போதுமென்று சுற்றிலும் ஓராயிரம் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தாலும் எல்லாமே செ

அடக்க நினைத்த அரசு.....கொதித்து எழுந்த மாணவர்கள்! தொடரும் போராட்டம்...

இதே வேலையை கருணாநிதி செய்திருந்தால், தமிழினத் துரோகி என்று மூலைக்கு மூலை நின்று முன்னூறு முச்சந்திப்  போராளிகள் கொக்கரித்து இருப்பார்கள்.  இப்போது ஜெயலலிதா செய்ததால்  சட்டம் ஒழுங்கை சீராக பார்த்துக் கொள்ள சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று ஒரு சாராரும்,  இல்லை.. இல்லை மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தினால் மட்டுமே அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்று இன்னொரு சாராரும்....கருத்துச் சொல்வதைப் பார்த்தால்.. தமிழனின் சூடு சொரணை எல்லாம் இளிச்சவாயர்களைப் பார்த்துதான் புலிப்பாய்ச்சல் பாயுமோ என்ற ஐயம் கூட எனக்குத் தோன்றுகிறது. கருத்துப் போராளிகள் பொதுவெளியிலும், இணையத்திலும் இப்படி பம்முகிறார்கள் என்றால் ஊடகங்கள் கூட தங்களின் கண்டனக்குரலை வலுவாக எழுப்பாமல்...கள்ள மெளனம் சாதிக்கின்றன. என்ன அநியாயம் இது...? ஈழத்தில் அநீதி நடந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளும் முதல்வர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கச் சொல்கிறார். அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அவரது கட்சி எம்பிக்கள் பாரளுமன்றத்தில் போர்க்கொடி உயர்த்துகின்றனர். தமிழகத்துக்கு இலங

ஒரு கோப்பை தேநீர்.....!

தேநீரைப் பருகும் இடைவெளிகளில் முதல் மிடறுக்கும் அடுத்த மிடறுக்குமிடையில் காதுக்குள் ஏதேதோ கிசு கிசுக்கிறார்... நீங்கள் எப்போதும் தேடும் கடவுள்...! *** எப்போதும்... தேநீர் தீர்ந்தவுடன் கோப்பைக்குள் வந்து படுத்துக் கொள்கிறது எங்கும் நிறைந்த ஏகாந்தப் பெருவெளி...! *** தேநீர் கோப்பை காலியாகி விட்டது... எனக்குள் மெளனமாய் நிறைந்திருக்கிறது தேநீர்....! *** என் கவனமெல்லாம் தேநீரில் இல்லை ஆனால்.. கோப்பையை எப்படி ஏந்துவது ஒவ்வொரு பருகுதலின் இடைவெளிகளில்... எங்கே லயித்துக் கிடப்பது என்பதில்தான்...! *** தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்... நானுமில்லை... தேநீருமில்லை...! *** கோப்பையில் தேநீரை எடுத்து தேநீரை மட்டும் பருகிக் கொண்டிருக்கிறேன்... வெளியே போய்விட்ட எண்ணங்களுக்கு எப்படித் தெரியும் எனது ஏகாந்தம்...! தேவா. S

சந்திரமுகி.....!

விவரிக்க முடியாத ஒரு உணர்வுதான் இந்த பூர்வ ஜென்மம் என்பது. ஆதாரத்துடன் நிரூபிக்க எந்த உணர்வுப் பூர்வ நிகழ்வுகளும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை. ஆதாரப்படுத்தி விட்டால் அது உணர்வு நிலை என்னும் உயரிய நிலையிலிருந்து இழிந்ததாகி விடுகிறது. அமானுஷ்ய விசயங்கள் எனப்படும் மனித உணர்வுகளுக்குப் புலப்படாத பல நிகழ்வுகளை இயல்பிலேயே தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்திருக்கிறது. வாழ்க்கைக்கு முன்னும் பின்னும் அடர்த்தியாய் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். எனது உணர்வு எனது மனதின் கற்பனை என்று பகுத்தறிவு சொன்னாலும், கற்பனையும் உணர்வுதானே என்று பகுத்தறிவையும் ஆளும் ஒரு சக்தி எனக்குச் சொல்லி இருக்கிறது. பூர்வ ஜென்மம் என்னும் அடிப்படையை எனக்கு உறுதியாய் நம்ப வைத்தது கீதை என்னும் ஞானக் கடல்தான். கீதை சொல்லப்பட்ட சூழலை மறுத்துப் பேசும் யாரும் கீதையிலிருக்கும் கருத்துக்களை மறுத்துப் பேச முடியாது. யார், யாருக்கு எங்கே சொன்னது என்ற விரிவாக்கத்தை விமர்சிக்கலாம் ஆனால் கீதையின் சாராம்சத்தை, அதன் அடிப்படையை அது சொல்லி இருக்கும் சூட்சும உணர்வுகளை மறுக்கவே முடியாது. பகுத