Skip to main content

Posts

Showing posts from April, 2011

தேடல்...30.04.2011

ஒரு மழை அடித்துப் பெய்து முடித்த பின் பளீச் சென்று கழுவி விட்ட தார்ச் சாலைகள் போலவும், கரும் மேகங்கள் கலைந்த வானம் போலவும் இருக்கிறது மனது. கடந்த மூன்று மாதங்களாக இந்த ஒரு மனோநிலைக்கு நான் வரமுடியாமல் போனதற்கு காரணம் புறச்சூழல், உணவு மற்றும் ஒரு அலட்சியம். எப்போது எல்லாம் அகங்காரம் அற்றுப் போய் நான் நிற்கிறேனோ அப்போது எல்லாம் இப்படி ஒரு நிலை எய்துவதும் பல நாட்கள் இப்படியே நீடிப்பதும், எப்போது மாறியது என்று தெரியாமல் ஒரு வித இறுக்கம் உள்ளே பரவிப் போவதும், ஐந்து கால் (அது என்ன ஐந்து கால்? மனதுக்கு ஆயிரம் கால் கூட இருக்கும்) பாய்ச்சலில் மனம் புறம் நோக்கி ஓடுவதும் நடந்தேறிப் போகிறது. மனித மூளை வற்றாத ஜீவ நதி, சரியான விகிதத்தில் ஆக்ஸிஜன் செல்லும் போது சரியான நினைவலைகளை அது கிளறி விடுகிறது. சரியான அளவில் ஆக்ஸிஜன் செல்ல சரியான அளவில் சுவாசிக்க வேண்டும். சரியான அளவில் சுவாசிக்க புறச்சூழலின் தாக்கம் சரியாக இருக்க வேண்டும். மனம் சம நிலையில் இருக்க வேண்டும். எல்லோரும் சுவாசித்துக் கொண்டுதான் இருப்போம் ஆனால் சுவாசிக்கும் வேகம் சீராயிருக்காது. அகங்காரம் உள்ள மனம் கொண்டவர்களின் உடலில் எப்போதும் உ

நினைவுகள்...!

தனிமையில் எழுதிக் கொண்டிருக்கிறேன் உன்னோடான நாட்களின் நினைவுகளை... பக்கங்கள் எல்லாம் வார்த்தைகளை நான் எழுத எழுத அவை .. வார்த்தைகளை விழுங்கிவிட்டு கனவுகளை நிரப்பிப் போட்டு சிரிக்கின்றன? நான் நிமிர்ந்து வானம் நோக்குகிறேன்.. இருளுக்கு முந்திய அந்தி நேரத்து ஒப்பனையில் மின்னும் ஒரு ஓற்றை நட்சத்திரம் உன்னோடு ஒரு நாள் பேசி சிரித்ததை பளீச் சென்று என் புத்திக்குள் பாய்ச்சி விட்டு... எதுவுமறியாதது போலவே ஒளிர்கிறது...! நான் மீண்டும் பேனாவினை விரட்டுகிறேன் பளீச் சென்ற காகிதச் சாலைக்குள் என் வார்த்தைகளை தேடி.. மீண்டும் என் மூளைக்குள் பயணிக்கிறேன்.. மூளையின் திசுக்களுக்குள்ளிருந்து... வரும் சப்தமான விசும்பல்களில் உன் குரலோசையே கேட்கிறது...! வார்த்தைகளை தேடி வந்தவன் வழி தடுமாறி நிற்கிறேன்.. என்னுள்ளேயே!!! கவிதையை காலத்திடம் தொலைத்து விட்டு... வார்த்தைகளுக்கு வர்ணம் அடிக்கும் என் மடைமையின் விளிம்புகளில் எல்லாம் உன்னோடன நாட்களை தொலைத்த சோகங்கள் எல்லாம் ஒன்று கூடி என்னை எள்ளி நகைக்கின்றன! உன்னோடான வாழ்க்கையை... மெல்ல மெல்ல நினைவுகளிலிருந்து உருவி என்னுள் நிறைத்து ஒற்றையாய் வாழ நினைக்கும் ஏக்கங்கள் எல்ல

ஹாய்...25.04.2011!

ஹாய்...! எப்டி இருக்கீங்க? நலமாக இருக்கீங்களா? கட்டுரைகளுக்கும், கவிதைகளுக்கும் இடையே நின்று பேசும் போது வரைமுறைகள் இருப்பதாலேயே ஹாய் என்ற தனி தொகுப்பினை வெளியிட நேர்ந்தது என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். இதில் என்ன வசதி என்றால் நாம் ஒரு சில நிர்ப்பந்தங்களை தவிர்த்து விட்டு .. மேடைப்பேச்சு போன்று...."நான் என்ன கூறுகிறேன் என்றால் " என்ற ரீதியில் வசனப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இப்படியே போய்க் கொண்டிருக்கும் ஹாய் பகுதியின் அடுத்த பரிமாணமாக ஹாய் பகுதில் எழுதுவதோடு மட்டுமில்லாமல் அதை ஆடியோ போட்காஸ்ட்டாக (Podcast) போடலாமே என்று நிறைய நண்பர்கள் வலியுறுத்தினார்கள். சோ.. சீக்கிரமே ஹாய் ஆடியோ வடிவத்தில் வருவதற்கான ஏற்பாடுகளை நண்பர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். சரி...சரி..எவ்வளவோ பண்றோம் இதைப் பண்ணமாட்டமா? அப்டீன்னு ஒரு தைரியம்தான்.. ஏன் கேக்க ஆளு இல்லானு நினைச்சிட்டியா அப்டீன்னு தானே கேக்குறீங்க? அதான் நீங்க இருக்கீங்களே...ஹா ஹா ஹா.... சரி இப்போ ஸ்ட்ரெய்ட்டா.....மேட்டருக்கு வருவோம்... கண்ணால் காண்பது, காதால் கேட்பது, உடலால் உணர்வது என்று முழுக்க முழுக்க புலன் வயப்பட்ட வாழ்க்கைத

இமைகளைக் கடக்கும் கனவுகள்...!

தொல்லை உனக்காக ஒரு கவிதைக்காக வார்த்தைகளை நான் தேடும்... பொழுதிலாவது கொஞ்சம் குறுக்கும் நெடுக்குமாய் நினைவுகளில் நடந்து... என்னை கலைக்காமலிரேன்! *** சபதம் இரு இரு... உன் மெளனத்தை.. என் மெளனத்தாலேயே உடைக்கிறேன்! *** கோபம் எல்லோரையும் நேராகவும் என்னை மட்டும் கடை கண்ணாலும் நோக்கும் உன் விழிகளுக்கு ஏனிந்த ஓர வஞ்சனை? *** சந்தோசம் எல்லோரிடமும் பேசி என்னோடு பேசாமல் போனால் பேசாமல் போய் விடுமா நம் காதல்? நீ உதடுகளுக்கு காவல் போட்டாய் கண்களின் வழியே கள்ளத்தனமாய் அது எட்டிப் பார்க்கிறதே என்னடி செய்வாய்? *** தூரம் நீயும் நானும் அருகருகே... நம் காதலைப் பற்றிய அதீத கற்பனையில் நம்முள் நிறைந்த காதல் உனக்கும் எனக்குமான இடைவெளிகளில் நிரம்பி ததும்ப நெருக்கத்தில் தொலையும் காதலை தூரங்களில் தானே ரசிக்கிறோம்? *** சோர்வு உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லத் தெரியாமல் எத்தனை கவிதைகளைதான் நானும் எழுதுவது? எல்லா கவிதைகளும் காதல் மாதிரி ஒன்றை சொல்லிவிட்டு கவனமாய் காதலை சொல்லாமல் விட்டு விடுகிறது! தேவா. S

என்னதான் செய்வாய் நீ...?

இரு இதய துடிப்புகளுக்கு இடையே நிசப்தமாய் பரவிக் கிடக்கிறது உன் நினைவுகள்..! ஒரு பேய் மழை மனதுக்குள் இடியாய் பெய்து வார்த்தைகளில் சாரலாய் அள்ளித் தெறிக்கும் கவிதைகளை நான் உன் மீதான காதல் என்கிறேன்!!!! சாலையோரப் பேருந்தில் ஜன்னலோரம் உன்னைக் கண்டு சட்டென்று கூப்பிடத் தோன்றிய ஆசையை அடக்கிக் கொண்டு தூரமாய் உன்னை ரசித்து நகர்கிறது என் சுவாரஸ்ய புத்தி! அடிக்கடி மணி பார்க்க நீ உன் மணிக்கட்டை பார்க்கும் பொழுதில் மட்டும் நேருக்கு நேராய் உன் முகம் பார்த்து நெற்றியிலிருக்கும் வியர்வையை என் நினைவுகளால் துடைக்கிறேன்! தொட்டு விடும் தூரத்தில் இருக்கும் உன்னை எட்ட நின்று காணும் பொழுதுகளில் இரு சிறகுகள் முளைத்து மேக வானில் பறக்கிறேன்..! ஒரு புல்லாங்குழலின் இசையின் மீதமர்ந்து எட்ட முடியாத் திசைகளையும் கடந்தே விடுகிறேன்..! எதிர் பாராமல் உன்னைக் காணும் அந்த தினத்தின் வினாடிகளில் என்னதான் செய்வாய் நீ என்றென்ணும் கனவுகளில் கடக்கிற நிகழ் கால நிமிடங்களுக்குத் தெரியுமா நம் கண்களில் துளிர்க்கும் கண்ணீரில் படிந்திருக்கும் ஒரு களங்கமற்ற காதலைப் பற்றி? தேவா. S

பேயி இருக்கா இல்லியா...?!

இருட்ட ஆரம்பிச்சுருச்சு மழைக் காலம்னாலே இப்படித்தேன் 7 மணிக்கே கரும் கும்ம்னு ஆயிடும். எல்லா கருமாந்திரமும் பேசுறாய்ங்க நம்ம ஊருக்கு இன்னும் பஸ்ஸு ஒண்ணு விட ஒரு நாதி இல்ல. ஒய்யவந்தான் போற காரு ஒண்ணு இருக்கு அதான்ப்பு டவுனு பஸ்ஸு, அந்த வண்டிக்காரவுகளா பாத்து மனசு வச்சி பெரிய கருவ மரம் ஒண்ணு இருக்கும் ரோட்டோரமா நம்ம ஊருக்குப் போற பாதையில அதையே இஸ்டாப்பிங்கா நினைச்சு இறக்கி விடுவாய்ங்க...நாம அந்த கருவைக்கு பின்னால இருக்குற ஒத்தயடிப்பாதைய புடிச்சி ஒரு 3 மைல் நடக்கணும்.... மேலத்தெரு மாணிக்க மாமா நல்லாத்தான் நடவுடையா இருந்தாப்ல...! நேத்து கம்மாயில குளிச்சுபுட்டு வீட்டுக்கு வந்த மனுசன் நெஞ்சு வலிக்கிதுத்தா... கொஞ்சம் வென்னிரு கொடுன்னு அவரு மக சின்னது கிட்ட கேட்டுருக்காரு..அம்புட்டுதேன்! தூக்கியாந்து சிவங்ஙே (சிவகங்கை)... ஆஸ்பத்திரில போட்டுட்டாக! மாரடைப்பு வந்துருக்குன்னு சொல்லி பொறவு காப்பாத்தி புட்டாங்கே...! என்ன ஒண்ணு அந்த கிறுக்குப் பய நடராசு மக கல்யாணம் சாரிக்க (விசாரிக்க) வந்த ஆட்டோக்காரப் பய ஊருக்குள்ள நின்னுகிட்டு இருந்தான்...! வெரசா தூக்கியாந்து பொழைக்க வச்சாச்சு... இல்லேன்னா மனுசன்

பொய்களே....பொய்களே....!

ஆர்ப்பரிக்கும் அலைகளும் பெயர்த்தெடுத்து தூக்கிச் செல்லும் காற்றும் சேர்ந்த ஆள் அரவமற்ற கடற்கரை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்த நீல வானம் 4 மணி சூரியனின் உபாயத்தில் பளிச்சென்று இல்லாத நீல நிறத்தை இருப்பதைப் போலவே காட்டிக் கொண்டு இருந்தது. இடை இடையே தவழ்ந்து செல்லும் வெள்ளை வெளேர் மேகங்கள் குறிக்கோளற்று நகர்ந்து கொண்டிருந்தன. மனிதர்களற்ற ஒரு வெளியைத் தேடி தேடி காத்திருந்து வார இறுதிகளில் இப்படி என்னை தனித்திருத்திக் கொள்ளும் நேரங்கள் எல்லாம் நேரமற்றுதான் நகரும். வெறுமனே லயித்துப் போய் அலைகளை வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குள் இருந்த ஒரே பயம் யாரும் மனிதர்கள் வந்துவிடக் கூடாது. என்பதுதான். பரந்த கடல்வெளியில் என்னை தொலைத்து நான் கிடக்கும் பொழுதில் எண்ணத்தோடு மனிதர்கள் வந்து விடுவார்கள். அதிகப்பிரசங்கித் தனமாக ஏதாவது பேசுவார்கள்... வேண்டாம்.வேண்டாம்.....வேண்டவே வேண்டாம்! உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் உலகின் கலப்பெனக்கு வேண்டாம். உத்தமொருவரும் வேண்டாம், தீயவரொருவரும் வேண்டாம்.. இன்னும் சொல்லப் போனால் யாரும் எனக்கு வேண்டாம். சம்மணமிட்டு அமர்ந்தேன். அப்படி அமர என் உடை எனக

என் வானமும் நானும்....!

வெகுதூரம் வெளியே வந்துவிட்டேன். சப்தங்களில்லா மையத்தில் என் ஏகாந்த கனவுகளோடு நானே என்னில் இருந்த திசைகளும், காலமுமற்ற என் சுயத்தை விட்டு நகர்ந்துதான் வந்துவிட்டேன். தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு முறையும் என்னை ஏமாற்றி கொண்டு இந்த இரைச்சலோடு கூடிய சராசரி வாழ்க்கைக்கு நடுவே விட்டு விட்டு பல்லிளித்து பரிகாசிக்கிறது மனப்பேய். வாசிப்பும் வாசிப்புகளின் ஆழமும் சேர்ந்து கருக்கொண்ட்ட எண்னங்களை எல்லாம் மெல்ல துடைத்தழித்துவிட்டு அதன் சாரத்தோடு சாறாக ஊறிக் கிடந்தவனை, புத்தகத்தில் படித்த தத்துவங்களை எல்லாம் வாழ்க்கை வீதிகளில் கொண்டு வந்து வைத்து மனித வாழ்க்கைக்கு தீர்வுகளைச் சொல்லும் மேதாவிகளின் உலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியே விட்டது காலம். இப்போது சுதாரிக்க விடில் நான் எப்போதும் இந்தக்கூட்டத்தில் ஒருவானாய் ஆகிப்போய்விடுவேன். இருட்டில் பொருளை தொலைத்து விட்டு வெளிச்சத்தில் தேடும் மனிதர்களும் அவர்களின் சித்தாந்தகளும், அதை நிறுவ இவர்கள் கொடுக்கும் தேற்றங்களும், மறுதலைகளும் விளக்கங்களும் என்னைச் சூழ்ந்து கொண்டு மரணம் தாண்டியும் என்னை தொடரும் அவலம் எனக்கெதற்கு? இந்த புத்திமான்களின் கத்தி வீசும் தத்துவ

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.....!

வெயிலு கொளுத்த ஆரம்பிச்சுருச்சு இல்ல...! எது சரியா நடக்குதோ இல்லையோ பூமி சுழற்சியும் இயற்கையும் அதன் அளவில் சரியான செயல்களை செஞ்சுகிட்டுதான் இருக்கு. யார் சொன்னாலும் கேக்குமா இயற்கை...? கேக்காது அதுக்கு தன்னுடைய செயல் செய்வதற்கான கூட்டு சூழல்தான் முக்கியம். அது எப்டி இருக்கோ அதை கேட்டு செஞ்சுகிட்டு போய்கிட்டே இருக்கும்...! ஜப்பான்ல வந்த சுனாமிய பிரிச்சு எடுத்து வச்சு தனித் தனியா பாத்தா அது கொடுமை அது வலி. இயற்கையின் முன்னால் அது ஒரு செயல் அவ்வளவே! பூமியின் அடி ஆழத்தில் இருக்கும் அடுக்குகள் நகர உள்ளுக்குள் இருக்கும் கடல் கொஞ்சம் வெளில எட்டிப்பாத்து ஹாய் சொல்லிட்டு போகுது....அந்த மாற்றம் மனிதர்களின் செயலுக்கு எதிர்மறையா போய்டுது அதனால திட்டி தீத்துடுறோம் ....ஏய் கடவுளே, ஏ இயற்கையே அப்டின்னு கண்டமேனிக்கு கூச்சல் போடுறோம். அது நம்ம ஆதங்கம ஆனா இயற்கைக்கு அது பத்தி எல்லாம் கவலை இல்லை இந்த ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்துக்கு இது தேவையா இருக்கு. இப்படி இயற்கையோட ஒரு நிகழ்வுக்கு நாம ஆடிப் போயிடுறோம், ஆனா பல சமயத்துல சரியான மழையா, நல்ல விளைச்சலா, மனித மூளைகளில் சிந்திக்கும் திசுக்களாய் இருந்து ப

பரமசிவம் தாத்தா....என் ஹீரோ!

கற்றை முடியை கையால்... கலைத்து சற்றே நிமிர்கையில்... கண்ணாடிக்குள்ளிருந்து கண்ணடித்து வெளுப்பாய் பார்த்து சிரித்தன சில வெள்ளை முடிகள்! கறுப்பு ராஜ்யத்துக்குள்... காலம் அனுப்பி வைத்த... பளீச்சிடும் படை வீரர்களாய் தம்மை மறைத்து மெலிதாய் சிரித்து சூட்சுமமாய் வாள் சுழற்றி சொல்லாமல் சொல்லின... காலத்தின் கணக்கினை.....! எதிர் வீட்டு சம்பசிவம் தாத்தா.... என் அப்பா, என் மாமா என்று... வாங்கிய வெளுமையினை சாயங்களால் ஏமாற்றி கருப்பாய் வெளுப்பை அவ்வப்போது தோற்கடித்திருந்தாலும் முழுதும் வெளுத்த தலையுடன் எப்போதும் நடக்கும் பக்கத்து வீட்டு பரமசிவம் தாத்தாதான் என் ஆதர்சன ஹீரோ! சொடக்கு போட்டு.... காலம் அழைத்து கொடுக்கும் பரிசினை மறைத்து வைக்கும் மடைமையில் எப்படி விடியும் மீண்டும் இளமை? என் நரைத்த தலையை முழுதாய் காணும் ஏக்கத்தில் மீண்டும் மீண்டும் கனவுகளில் பறக்கிறேன்... கேசத்தினை....கலைத்து கலைத்து... கணக்குகள் கூட்டி காதலாய்... காத்திருக்கிறேன் கருப்பினை கடக்கும் என் வெள்ளை நாட்களுக்காக! மிச்சமும் எப்போது வெளுக்குமென்ற என் கனவுகளின் பின்னால்... காலம் கடக்கும் ஆசையொன்றுளதை யார்தான் அறிவார்? தேவா. S

மகளே.. என் செல்வ மகளே..!

கல்யாணம் பண்ணிக்கிற அத்தனை ஆம்பளைகளும் ஒரு வித ஈகோவோடதான் பண்ணிக்கிறாங்கனு நான் சொல்ற வார்த்தையில் ஈ.கோன்னு சொல்ற வார்த்தை ரொம்ப பேர சங்கடப்படுத்தலாம் ஆனால், ஈகோன்னு நான் சொல்றது ஒரு வித ஆணுக்கே உரிய ஹீரோத்தனத்தை... காலம் காலமா சினிமாவுல ஆண்களளை ஹீரோவா பாத்துட்டு, எப்பவும் ஒரு கூட்டத்தையே அடிச்சு துவம்சம் பண்ணி, வயதான அம்மா, அப்பா, அப்புறம் தங்கை, காதலின்னு எல்லோரையும் காப்பாத்தி கை புடிச்சு கூட்டிட்டு ஜம்பமா வரத பாத்து பாத்து...ரத்ததுல ஊறிப்போயி இருக்கற விசயம். ஆண் அப்டின்னு சொன்னா.. எல்லாத்தையும் பாத்துக்குவான் எல்லா பிரச்சினையும் தீத்துடுவான் அப்டீன்னு ஒரு பொது புத்தியோட சேர்ந்த சூழல் நமக்குள்ள ஆழமா பதிஞ்சு போயிடுச்சு. அதுவும் நாம ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் பின்பற்றிக் கொண்டிருக்கும் ஒரு போலியான கலாச்சாரத்துல பெண் என்பவள் குடும்பத்தலைவியா இருக்குறதுதான் சரி அப்டீன்னு ஒரு முடிவு பண்ணி....இந்த இடத்துல ஒரு சின்ன விளக்கம் கொடுக்க விரும்புறேன்....அதாவது குடும்பத்தலைவின்னா வீட்டு வேலைகள் செய்து, சமைத்து, கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்து, வேறு ஆண்களுடன் பேசுவது தவறென்

சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 9

அது ஒரு நெடிய இரவு ஆனால் கணத்தில் கழிந்துதான் போய் விட்டது. நினைவுகளில் தான் அதன் நீட்சியும் நிகழ்வுகளும் வானில் மிதக்கும் மேகமாய், நீரில் நீந்தும் மீன்களாய் என்னுள் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கடத்தலிலும் மீண்டும் மீண்டும் இழுத்து பிடித்து நிறுத்தி மீண்டும் மீண்டும் காண்கிறேன் உன்னோடு கழிந்த அந்த கனவு இராத்திரியை...!!!! நீயும் நானும் தொட்டு விடும் தூரத்தில் இருந்தும் தொடுதலை புறம்தள்ளி மெல்லிய வெளிச்சத்தில் வார்த்தைளாலேயே தழுவிக் கொண்ட அற்புத கணம்..! உனக்கு பிடித்த இசை அறை எங்கும் பரவியிருக்க எனக்குப் பிடித்த வானத்தை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டு உன்னோடு பேசிக் கொண்டிருந்த ஒரு நீண்ட இரவு அது..! எதற்கோ சிரித்தாய், எதற்கோ அழுதாய், எதற்கோ ஆச்சர்யப்பட்டாய், எதற்கோ கோபப்பட்டாய், எதற்கோ அமைதியானாய் ரசிப்பின் உச்சத்தில் லயித்துக் கிடந்த என் அற்புத உணர்வுகளின் சங்கமத்தில் எனக்குள் கிளர்ந்த உணர்வுகளை நான் காதலென்றேன் இல்லை இல்லை கடவுளென்றாய் நீ! நீண்டுக் கொண்டிருந்த அந்த இரவினை அலட்சியமாய் ஆக்கிரமித்த உன் அழகினை வார்த்தைகளுக்குள் கொண்டுவர முடியாமல் தடுமாற்றமாய் ஏதேதோ உளறி கடைசியில் என்