Skip to main content

நினைவுகள்...!






















தனிமையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடான நாட்களின் நினைவுகளை...
பக்கங்கள் எல்லாம் வார்த்தைகளை
நான் எழுத எழுத அவை ..
வார்த்தைகளை விழுங்கிவிட்டு கனவுகளை
நிரப்பிப் போட்டு சிரிக்கின்றன?

நான் நிமிர்ந்து வானம் நோக்குகிறேன்..
இருளுக்கு முந்திய அந்தி நேரத்து
ஒப்பனையில் மின்னும் ஒரு ஓற்றை நட்சத்திரம்
உன்னோடு ஒரு நாள் பேசி சிரித்ததை
பளீச் சென்று என் புத்திக்குள் பாய்ச்சி விட்டு...
எதுவுமறியாதது போலவே ஒளிர்கிறது...!

நான் மீண்டும் பேனாவினை விரட்டுகிறேன்
பளீச் சென்ற காகிதச் சாலைக்குள்
என் வார்த்தைகளை தேடி..
மீண்டும் என் மூளைக்குள் பயணிக்கிறேன்..
மூளையின் திசுக்களுக்குள்ளிருந்து...
வரும் சப்தமான விசும்பல்களில்
உன் குரலோசையே கேட்கிறது...!
வார்த்தைகளை தேடி வந்தவன்
வழி தடுமாறி நிற்கிறேன்.. என்னுள்ளேயே!!!

கவிதையை காலத்திடம் தொலைத்து விட்டு...
வார்த்தைகளுக்கு வர்ணம் அடிக்கும்
என் மடைமையின் விளிம்புகளில் எல்லாம்
உன்னோடன நாட்களை தொலைத்த
சோகங்கள் எல்லாம் ஒன்று கூடி
என்னை எள்ளி நகைக்கின்றன!

உன்னோடான வாழ்க்கையை...
மெல்ல மெல்ல நினைவுகளிலிருந்து
உருவி என்னுள் நிறைத்து
ஒற்றையாய் வாழ நினைக்கும்
ஏக்கங்கள் எல்லாம் ஒன்று கூடி...
மீண்டும் என்னை தூண்டுகின்றன...
ஏதாவது ஒரு கவிதை எழுதேன் என்று....

இதோ..

தனிமையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடான நாட்களின் நினைவுகளை...


தேவா. S


Comments

Mahan.Thamesh said…
அஹா அருமை
இதோ..

தனிமையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடான நாட்களின் நினைவுகளை...
Anonymous said…
super & fantastic
தனிமையிலே இனிமை காண முடியுமா... முடியும் உன் நினைவுகளால்... அருமையார எழுதி இருக்கிறிர்கள்.
நல்ல கவிதை தேவா.
வாழ்த்துக்கள்.
ஹேமா said…
தனிமை நிறையக் கவிதைகளைத் தரும் !
Anonymous said…
//மூளையின் திசுக்களுக்குள்ளிருந்து...
வரும் சப்தமான விசும்பல்களில்
உன் குரலோசையே கேட்கிறது...!
வார்த்தைகளை தேடி வந்தவன்
வழி தடுமாறி நிற்கிறேன்.. என்னுள்ளேயே!!!
//


அருமை..
VELU.G said…
நல்ல கவிதை தேவா
Anonymous said…
//இதோ..

தனிமையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடான நாட்களின் நினைவுகளை...//


ரசிகை

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...