Skip to main content

Posts

Showing posts from July, 2012

இசையோடு இசையாக...தொகுப்பு 7!

வாழ்க்கை எப்போதும் மிகப்பெரிய போர்க்களமாய் விரிந்து கிடக்கிறது. காதலென்னும்  வலுவான உணர்வும் எப்போதும் நெஞ்சின் ஓரத்தில் ஒரு எரிமலையாய் உள்ளுக்குள் உடன் குமுறிக் கொண்டுமிருக்கிறது. தினவெடுத்த தோள்களும், உன்மத்தம் கொண்ட புத்தியும் எப்போதும் எதிரிகளாய் சூழ்ந்து நிற்கும் சூழல்களை ஒரு கணமேனும் தாமதிக்காமல் வெட்டி விடும் வேகத்தில் வெறியேறிப் போய் கிடக்கிறது.  ஏதேனும் ஒரு எதிர் கேள்வியை வாழ்க்கை கேட்டு முடிக்கும் முன்னால் அந்தக் கேள்வியைப் பெயர்த்தெடுத்து நொறுக்கி இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விட்டு மீண்டும் மனப்புரவியிலேறி நான் விரைந்து கொண்டிருக்கிறேன். நான் தோற்றுப் போவேன் என்று மிகையானவர்கள் தீர்மானித்து முடித்து என் உடலை இறந்து போன சடமாய் எண்ணி புதைப்பதா? எரிப்பதா என்று அவர்கள் பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கும் போதே நான் விசுவரூபமெடுத்து எழுகிறேன். ஒரு இடத்தில் விழுந்து வேறொரு இடத்தில் எழுந்து நிற்கும் கோழையல்ல நான் என்பதை அக்கணமே அறுதியிட்டு நான் எங்கே விழுந்தேனோ அங்கேயே பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறேன்.... வா..... வாழ்க்கையே ...வா...! வரிசையாக சூழல்களை என்னிடம் அனுப்பு. என்னை

லீலை படம் பார்த்தாச்சு.....!

படம் ஆரம்பித்து மூணாவது சீன்லயே விளங்கிடுச்சு. இந்தப் படம் நமக்கு ரொம்ப பிடிக்கும்னு.....சப்தங்கள் அதிகமில்லாத பில்டப் சுத்தமாவே இல்லாத இந்த மாதிரி படங்கள் எனக்கு ஏன் பிடிக்குதுன்னு யோசிச்சு யோசிச்சு படத்த நான் மிஸ் பண்ண விரும்பாம ஒரு ஜம்ப் பண்ணி ஸ்கிரீன் ஓரமா ஒரு ஸ்டூல் போட்டு நான் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்... எதார்த்தத்தை எடுத்துக் காட்ற எந்தப்படமும் ஒரு சாமானியனோட வாழ்க்கையோட ஒத்துப் போகத்தான் செய்யும். லீலை படத்தோட ஹீரோவா நல்லவேளையா ஏற்கெனவே திரையில அராத்துப் படிக்கிற எந்த ஒரு ஜிப்பா ஜிம்ப்ளாகோவையும் போடாமல் கார்த்திக்கை ச்ச்சூஸ் பண்ணி இருப்பதுதான் படத்தோட ஸ்பெசாலிட்டி. அட நீங்க வேற எனக்கு அந்தப் படத்துல நடிச்ச யாரோட பேரும் தெரியாது. அதானால் ஓடிப்போய் ஏற்கனவே விமர்சனம் எழுதினவங்க பக்கத்தை ஒரு தபா கட கடன்னு படிச்சுட்டு வந்து அவுங்க பேரையெல்லாம் மனப்பாடமா அடிக்கணும்ன்ற தேவையுமே இல்லை... அவுங்க கேரக்டர் பேரையே யூஸ் பண்ணிக்கிறேன்....ப்ளீஸ்.... படம் ஆரம்பிச்சு கருணை மலர்ன்ற கேரக்டர் கார்த்திக்க லெப்ட் ரைட் வாங்கும் போதும், கார்த்திக் கருணை மலரோட தோழிகள காதலிக்கிறேன்னு சொல்லி

அவளுக்காக ஒரு கவிதை....

இந்த கவிதையை அவள் வாசித்து விடக்கூடாது என்று யோசித்தபடியேதான் எழுதத் தொடங்கியிருக்கிறேன்....! நீங்களும் இதை வாசித்து விட்டு அவளிடம் சொல்லாமலிருக்க வேண்டுமே என்ற கவலையோடும், அவளைப் பற்றிய குறிப்புக்கள் எங்கேனும் எதேச்சையாக எட்டிப்பார்த்து விடுமோ என்ற பயத்தோடும் ஒவ்வொரு எழுத்தையும் ஒரு காட்டு யானையை கட்டி இழுத்து வரும் பிரயாசயையுடன்  கவனமாய் அடுக்கிக் கொண்டிருக்கிறேன், எது எப்படி ஆனாலும்.... இந்தக் கவிதையை வாசிக்கும் யாரும் அவளிடம்  மறந்தும் கூட சொல்லி விடாதீர்கள்... நான் அவளுக்காக கவிதை ஒன்றை எழுதி இருக்கிறேன் என்று.... தேவா. S

இசையோடு இசையாக...தொகுப்பு 6!

இதோ உன் நினைவுகளை எனது வார்த்தைகள் ஒரு பட்டத்து அரசியை சுமந்து வரும் பணியாட்களைப் போல மிக கவனமாக சுமந்து வருகின்றன. விழிகளால் நீ இமைத்து, இமைத்து என்னை அணைத்துக் கொள்ளும் அன்பில், நான் உன் விழியாக இருந்து எப்போதும் நீ இமை பிரிக்காமல் ஆழ்ந்து உறங்கும் அற்புத தருணங்களில், உனக்கான கனவுகளை நான் காணும் பாக்கியத்தை பெறுவதே இந்தக் கணத்தில் எனக்குப் பேராசையாய் இருக்கிறது. நீ, உனக்கு என்று எதை நான் எழுதினாலும் அந்த வாக்கியம் முற்றுப் பெறாமல் முற்றுப் புள்ளிகளை எல்லாம் விழுங்கிக் கொண்டே ஒரு அசுரனாய் நீண்டு கொண்டிருக்கிறது. என் கேசம் கலைத்து நீ விளையாடிய போது, உனக்கு நான் சொன்ன கவிதையை நீ உன் கையெழுத்தால் எழுதி என்னிடம் காட்டிய பொழுது உன் கையெழுத்து  இருந்த அழகில் என் கவிதை பொருள் இழந்து, உப்பில்லா பண்டமாய் சுவை இழந்து காகிதத்தில் இருந்து இறங்கி தற்கொலை செய்ய முயன்ற பொழுதில் பொருளில்லா விட்டால் என்ன அழகிருக்கிறதே என்று கர்வமாய் என்னை பார்த்ததாய் நான் உன்னிடம் கூறிய போது.... நீ சப்தமாய் சிரித்தாய்..!!!! நான் கவிதையின் காட்சி வடிவத்தைப் பார்த்து விட்டேன் என்று ஆர்க்கிமிடிஸ் போல யுரேகா யுரேகா என

இது பில்லா - 2 விமர்சனமில்லை....!

நான் பில்லா படம் 2 படம் பார்த்து விட்டேன். டான், தலை, கேங்கஸ்ட்டர், கடத்தல் மன்னன் என்பதற்கான அர்த்தங்களை எல்லாம் தெரிந்து கொண்டேன். நான் வாழ எத்தனை பேரை வேண்டுமானலும் நான் கொல்வேன் என்ற உயரிய தத்துவத்தைப் புரிந்து கொண்டேன். கடத்தலும் கொலையும், அதுவும் துப்பாக்கியால் டப்பு... டப்பு என்று சுட்டுக் கொண்டே பறக்கும் ஒரு ஆக்ரோச வீரமும் என் மனதை கவர்ந்திருந்தன. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் டேவிட் பில்லா ஆயுதங்கள் இருக்கும் ஒரு கன்சைன்மெண்ட்டை எடுக்க செல்கிறேன்  என்று  போகும் போது மெல்ல கண்ணயர்ந்து விட்டேன். அதுவரையில் என்னை விழுங்கி விடக் காத்திருந்த தூக்கம் முழுதாய் என்னை நித்திரைக்குள் கட்டி இழுத்துச் சென்று விட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் எனக்கொரு கனவு வந்தது. கனவில் கடவுள் வந்தார். அவர் முகத்தைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு டேவிட் பில்லாவைப் பற்றியே நினைவு ஓடிக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய வீரன். பஞ்ச் டயலாக் என்று தமிழ் சினிமா கதாநாயகர்கள் எல்லாம் அவ்வப்போது ஏதாவது ஒரு வரியை அடித்து விடுவார்கள், ஆனால் டேவிட் பில்லா வாயைத் திறந்தாலே பஞ்ச் என்று அவரின் டயலாக் முழுவதையுமே பஞ்

கனவுகள் ததும்பட்டும்.....!

நிஜங்கள் எப்போதும் எதார்த்தப் போர்வை போர்த்திக் கொண்டு இயல்புகளை வெளிக்காட்டினாலும் கனவுகளில் எப்போதும் சிறகடித்து எங்கெங்கோ பறக்க முடியும் ஒரு வாய்ப்பினையும் சேர்த்தேதான் பிரபஞ்சம் நமக்கு கொடுத்திருக்கிறது. இயல்புகளை அவ்வப்போது மென்மையாய் மறந்து விட்டு கனவுகளுக்கு வர்ணம் தீட்டி தீரத் தீர காதலிக்க நான் எப்போதும் தயங்குவதில்லை.  ஒரு மழை, எங்கோ வேகமாய் செல்லும் வெண்மேகம், பேசாமல் பூத்துச் சிரிக்கும் ஏதோ ஒரு பூச்செடி, சல சலத்து ஓடும் ஒரு ஓடை, அடர் கானகம், யாரென்றே தெரியாமல் நம்மை வசீகரிக்கும் பேருந்தின் ஜன்னலோர ஒரு பெண்ணின் முகம், காதலிக்க விரும்பி காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பு... மதிய உறக்கத்திற்குப் பின்னான ஒரு ஆழமான அழகிய சோகம்....அந்த சோகத்தை சூழ்ந்திருக்கும்  ஒரு அடர்த்தியான மெளனம்.... என்று எப்போதும் எங்கோ இழுத்துச் செல்லும் வாழ்வின் ரகசியங்களை மனதுக்குள் இருத்திக் கொண்டு நாம் என்ன வேண்டுமானலும் செய்யலாம்.... என்ன ஒன்று அதற்காக புறத்தொடர்பினை நாம் அறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். தத்துவங்களையும் கோட்பாடுகளையும், விவாதங்களையும் விட்டொழிக்கும் அந்தக் கணத்தில் காதல் ஒ

நான் ' ஈ ' விமர்சனம்(மா?) ..!?

ரொம்ப சீரியசாவே போய்ட்டு இருக்கே லைஃப்ன்னு சொல்லிட்டு...நெட்ல ஏதாச்சும் படம் பாக்கலாம்னு எந்த சைட்லடா மாப்ள புது படமெல்லாம் பாக்க முடியும்னு நண்பன் ஒருவனுக்கு போனப் போட்டுக் கேட்டா....திருட்டு விசிடி.காம்னு ஒண்ணு இருக்கு மாப்ள, அதுலதான் உடனே உடனே புதுப் புது படமா போடுறாய்ங்கன்னு சொன்னான்...!  ஓகோ இந்த புகை பிடிக்காதீர்கள்னு போட்டுட்டு சிகரெட் விக்கிறாய்ங்களே அது  மாதிரி..., குடி குடியை கும்மி அடிக்கும்னு போர்ட்ல போட்டுட்டு கவர்மெண்ட்டே சாராயம் விக்குறாங்களே...கேட்டா காந்தியோட தேசம், புத்தனோட பூமின்னு அகராதி பேசுவாய்ங்களே......, அது மாதிரி திருட்டு விசிடி.காம்னு பேர தைரியமா வைச்சுக்கிடுட் புதுப் புது படமா இறக்குவாய்ங்க போலன்னு நெனச்சுக்கிட்டு.... சைட்ட ஓப்பன் பண்ணின அன்னிக்கு முதல் நாளு ரிலீசான " நான் ஈ..."  படம் அதுக்குள்ள அங்க அப்லோட் பண்ணி இருந்தாய்ங்க..! ப்ரிண்டும், சவுண்டும் செம ஜோரா இருந்ததால மேற்கொண்டு படத்த பார்த்தேங்க. திருட்டு விசிடி.காம்ல திருட்டுத்தனமா படம் பார்த்தது தப்பா ரைட்டன்ற வாக்குவாதத்தை எல்லாம் வேற பதிவுல வச்சுக்கலாம் பாஸ்.... இப்போ பட

ஈ(ழ)ன பிழைப்பினை நிறுத்துங்கள் அரசியல்வாதிகளே....!

அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். உரிமைகள் பறிக்கப்பட்டார்கள். தொன்று தொட்டு அந்த மண்ணை ஆண்ட ஒரு நீண்ட நெடிய பரம்பரையினர் என்றாலும் இழி பிறப்பினராய் கருதப்பட்டார்கள். இடையிலே வந்த பிறப்பிலே கோளாறு இருக்கும் பெயர் சொல்லி அழைக்க முடியாத இழி குலத்தவர்களின் அரசியல் சூழ்ச்சியில் சிக்குண்டு மிருகங்களை விட கேவலமாய் நடத்தப்பட்டார்கள். தெருமுனையில் ஆண்களையும் பெண்களையும் நிர்வாணமாய் நிற்க வைத்து அசிங்கப்படுத்தியும், பிள்ளைகளுக்கு முன்னால் தாயின் கற்பை சூறையாடியும், சொந்த சகோதரர்களின் முன்பு சகோதரிகளின் கற்பை சூறையாடிம், பச்சிளம் பிள்ளைகளை கொதிக்கும் தாரில் தூக்கிப் போட்டு கொன்றும் அவர்கள் வெறியாட்டம் ஆடினார்கள். காரணம் அவர்கள் சிங்களவர்கள். உயர்வானவர்கள். அடக்கப்பட்டு மிதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். இழி குலத்தவராய் கருதப்பட்டவர்கள். இப்படியான சூழலில் தொடங்கிய ஒரு  போராட்டம் அறவழியில் போராடி போராடி களைப்புற்று இறுதியில் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்திய போராட்டமாய் வெடித்தது. கருப்பையிலிருந்து ஜனித்து விழுந்த ஒவ்வொரு பிள்ளையும் அழுவதற்குப் பதிலாக புலிகளாய் கர்ஜனை செய்தபடியே பிறக்கவும் செய்தனர்.

இந்த கணம் இருக்கிறது உயிர்ப்போடு.....!

தகிடு தத்தம் ஆடும் வாழ்க்கையின் சுவாரஸ்யம்தான் என்ன? சடரென்று முகத்திலறைந்த கேள்விக்கு பதிலும் அதே வேகத்தில் கிடைத்தது. வாழ்க்கையின் சுவாரஸ்யமே வாழ்வதுதான்.. என்ற பதில் சுவாரஸ்யத்தை எங்கோ தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மிக சாதரணமாய் தெரிவதாலேயே பதிலை மாற்ற முடியாது பாஸ்....! வாழ்க்கையின் சுவாரஸ்யம் வாழ்வது....! இந்தக் கணத்தில் மூழ்கிக்கிடப்பது. ஒரு இசையோ, ஒரு பாடலோ, ஒரு திரைப்படமோ, ஒரு கவிதையை வாசித்தலோ அல்லது எழுதுதலோ, மனதுக்குப் பிடித்த புத்தகத்தை வாசித்து வாசித்து அதை புத்திக்குள் அதக்கிக் கொண்டு அசை போட்ட படியே புத்தகத்தை நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு பாதி உறக்கத்திற்குள் சென்று மீண்டெழுந்து மீண்டும் வாசித்தலோ, மனதுக்குப் பிடித்த பெண்ணோடு வார்த்தைகளுக்கு சிறகு பூட்டி பறக்க விட்டு பேசிக் கொண்டிருத்தலோ, பார்த்துக் கொண்டிருந்தலோ, முத்தமிடுதலோ அல்லது புணர்தலோ..... ஒரு செடியின் சிறு துளிர் பார்த்து சில்லிட்டு நிற்பதோ, பூவின் மொட்டு வெடிக்கும் தருணத்திற்காய் நிமிடங்களைக் கடத்திக் கொண்டு காத்திருத்தலோ, வானத்தில் நீந்திக் கொண்டிருக்கும் மேகங்களை விழிகளால் தடவித் தடவி அதன் வடிவங