Skip to main content

Posts

Showing posts from August, 2011

உடையாரின் அதிர்வலைகள்...31.08.2011!

அதிர்வு I உடையாரை தொட்டு வாசித்து அதில் நுழைந்ததற்கு பின் மனதினுள் சென்று உட்கார்ந்து கொண்ட சொல் " கற்றளி ". தஞ்சாவூருக்கு அடிக்கடி செல்லும் நான் காளையார்கோவிலுக்கும் செல்வேன். காளையார்கோவில் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்டது. அந்த கோவிலின் ராஜ கோபுரம் கூட மிகப்பெரியதாய்தான் இருக்கும். கோபுரத்தின் கீழ் நின்று அண்ணாந்து பார்க்கும் போது மேகங்களின் நகர்வில் கோபுரம் கீழே விழுவது போல ஒரு பிரமை தோன்றும். காளையார் கோவிலுனுள் அங்குலம் அங்குலமாக சுற்றியிருக்கிறேன். தூண் தூணாக, சுவர் சுவராக தடவித் தடவி அந்தக் கோவிலின் பழைமை நிறைந்த வாசனைகளை என்னுள் ஆழ சுவாசித்து செலுத்தியபடி மருதிருவர் சிலைகளையும் வியந்து போய் பார்த்திருக்கிறேன். அவர்களின் புஜத்தில் அணியக்கூடிய தண்டை போன்ற இரும்பாலான ஒன்றையும் பார்த்திருக்கிறேன். அதன் தடிமனும் அகலமும் பார்த்து அதை எடையை அனுமானத்தில் கொண்டு வந்து நிறுத்தி இத்தனை உறுதியான வலுவான ஒரு அணிகலனைத் தம்மின் புஜத்தில் அணிந்திருப்பார்களெனில் அவர்களின் உடல் உறுதி எப்படி இருந்திருக்கும் என்று வியந்திருக்கிறேன்.

மிச்சமென்ன....?

அலுத்துதான் போகிறது சராசரி அன்றாட.... அட்டவணைகளுக்குள் சுழலும்... இந்த இயந்திர வாழ்க்கை! நேரங்களுக்குள் ஒளிந்து கொண்டு கண்ணடித்து சிரிக்கும்.. வாழ்க்கையின் இதழோரங்களில் படிந்திருக்கும் சோகத்தில் தொலைந்து போய் கிடக்கிறது என் சுயம்....! யாருமற்ற வனமொன்றில் ஒரு பேடைக்குயிலாய் நான் கூவி கூவி காற்றோடு சல்லாபித்து தீரக்காதலோடு.. திக்குகளின்று பறக்க ஆசைகள் கொண்டிருந்தேன்..! ஆனால்.. அலார ஒலியோடு அலறலாய் விடியும் பொழுதுகள் சக்திகளை உறிஞ்சிக் கொன்டு கசங்கலாய் என்னை இரவுகளிடம் ஒப்படைக்கும் வழமையில் அது கரைந்தே போனது..! ஒரு மரத்தின் இலையாய்... ஜனித்து காற்றில் ஆடி அசைந்து விளையாடி மனமற்ற திசுவாய் மழையில் திளைத்து குதித்து, வெயிலைக் காய்ந்து அனுபவித்து தடமில்லாமல் மரமிலிருந்து ஒரு நாள் சருகாய் கழன்று மெளனமாய் மண்ணில் மட்கி மடியும் பெருங்கனவுகள் கொண்டிருந்தேன்... ஆனால்... இரைச்சலான மனிதர்களின் புத்திகளிடம் இருந்து என்னைக் காத்துக் கொள்ளும் முயற்சிகளில் விழிப்பான நிலையில்தான் ஏதேதோ எண்ணங்களோடு நகர்ந்து, அவசரம

காந்தி தேசமே! கருணை இல்லையா...?

தங்கபாலு என்ற தகர டப்பா வாய் திறந்து நேற்று தத்து பித்து என்று உளறியிருக்கிறது. பிழைப்பிற்காக ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு தனது சுகங்கள் எள் அளவேனும் குறையக் கூடாது என்று அடைக்கலம் புகுந்திருக்கும் திருவாளர் தங்கபாலு நேற்று மீடியாக்களின் முன் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று பேரையும் தூக்கிலிட்டே ஆகவேண்டுமாம். அப்படி செய்தால்தான் ஜனநாயகம் காப்பற்றப்படுமாம். என்னே அறிவு...! என்னே புலமை! மெச்சி மெச்சி பாராட்ட வேண்டுமோ இந்த முட்டாள்தனத்தை...? நீதிகள் என்பவை சாட்சிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுபவை என்பதை இந்திய தேசத்தில் பாமர மனிதனும் அறிவான். சாட்சிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதை பச்சைப் பாலகர்களும் அறிவர். ஜனநாயகத்தினைப் பற்றி பேசும் திருவாளர் தங்கபாலு...எந்த ஜனநாயகத்தின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ கைது செய்யாமல் மல்லிகையில் வைத்து பேரறிவாளனை 8 நாட்கள் சித்ரவதை செய்து அதன் பின் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்கள் என்று கூற முடியுமா? முன்னுக்கு பின் முரணாக செய்திகள் இருக்கும் ரகோத்தமனின் அதிகாரப்

பூரணம்...!

முன் பல்லை காட்டிய படி நாணிக் கோணி இழுத்துக் கொண்டு யாரிடம் கேட்கிறாய் என் மனமே நான் யாரென்று??? நான் யாரென்றறியாமல் நீயென்று சொல்வெனென்று மனப்பால் குடிக்கிறாயா? மட மனமே? நீ கொண்ட கற்பிதங்களையும் நீ ஜனித்த இடத்தின் வேர்களின் மூலங்களையையும் படைத்தவனை பார்த்து கேட்கிறாயே கேள்வி...! அகந்தையை தன்னுள் அடக்கி தன்னை மறந்த மானுடர்களின் வரிசையில் என்னை சேர்க்க நினைக்கும் உன்னை வென்று போவது மட்டுமல்ல.....நான் ....மயங்கிக் கிடப்பதும் நான்..தான்..! தோட்டத்து வேலிகளுக்குள் ஊர்ந்து செல்லும் அரவம் நானே. நிலச் சூட்டின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு தானென்ற தன்னுள் தவழ்ந்து செல்லு தவம் போன்ற வாழ்கை அது. தோட்டத்துக்குள் வேர்பிடித்து நிற்கும் செடிகளும் கொடிகளும் நானே...! எமது கால்களைப் பரப்பி நீர்க்கால்களை தேடி நிலத்துக்குள் சென்று விரிந்து பரந்து பிடிப்புக் கொண்டு நிலத்தின் குளுமையோடு உறவாடுவதோடு நில்லாமல் விடியலில் ஜனிக்கும் சூரியனின் வெம்மையை எட்டிப் பிடித்து உணவுக்கான சக்தியை வாங்கி எமக்குள் நாமே நின்று வாழ்ந்து பின்னொரு நாள் சலனமற்று காய்ந்து

தேடல்....20.08.2011!

என்னிக்கு பொறக்கறதுக்கு முன்னால எங்க இருந்தேன்னு யோசிச்சேனோ? அன்னிக்கே இறந்ததுக்கு அப்புறம் எங்க போவோம் அப்டீன்ற கேள்வியும் அட்டை மாதிரி கூடவே ஒட்டிக்கிடுச்சு. பொறந்து ஒரு மூணு வயசு அல்லது நாலு வயசு வரைக்கும் இந்த பூமில தான் இருந்தோம். அது எல்லாம் அம்மா நம்ம கிட்ட சொல்லும் போதுதான் தெரிய வருது. அதாவது, உயிர் இருந்துச்சு, உடல் இருந்துச்சு, சுவாசிச்சோம், எல்லா வேலைகளையும் செய்தோம் ஆனா அது நமக்குத் தெரியாது. உணர்ந்து கூட சொல்ல முடியாது. இப்டி நமக்குத் தெரியல அல்லது உணரமுடியல அப்டீன்றதால நாம இல்லனு சொல்ல முடியுமா? முடியாது. நாம இருந்தோம்...மூளையில எந்தவித அனுபவப் பதிவுகளும் இல்லாம கற்பிதங்களும் இல்லாம, அதன் வளர்ச்சி விகிதம் ஏதோ ஒரு நிலையில இருக்க, நாம இருந்தோம்...! காலப்போக்குல நமக்குள்ள பலவிதமான கற்பிதங்களை கிரகிச்சுக்கிட்ட மூளை மனம் அப்டீன்ற ஒரு மாயமான ஒரு ஸ்தூல வஸ்து மூலமா எல்லாத்தையும் கிரகிச்சுக் கிட்டு ஐம்புலன்கள் மூலமா கிடைச்ச அனுபவத்தை எல்லாம் மூளையில தேக்கி வச்சுக்கிட்டு அந்த அனுபவத்தின் மொத்ததையும் நமக்கு அடையாளத்துக்கு வச்ச ஒரு பேரையும்

வெட்டுடையாள்.....!

நிகழ்வுகளை எல்லாம் உணவாய் உட்கொண்டு எப்போதும் போல காலம் இயங்கிக் கொண்டிருந்த தென் தமிழகத்தின் சற்றேறக் குறைய 350 வருடங்களுக்கு முந்தைய ஒரு அந்தி நேரம்...இரவு கருமைப் போர்வையை மெல்ல போர்த்தி விட்டு பூமியை உறங்கச் செய்ய எல்லா முஸ்தீபகளோடும் இருந்தது.... சிவகங்கைச் சீமையில் காளையார்கோவில் தாண்டி நமது மேனியைக் கிழிக்கும் கருவேலங் காட்டு முட்களையும், கரடு முரடான முட்புதர்களையும், செம்மண் சரளைக் கற்களையும் தாண்டினால் அரியக்குறிச்சியை அடைந்து விடலாம்...! மாலை சற்று தாண்டி இரவினை அடைந்த உடனேயே இரவு உணவு முடித்து சிறார்கள் எல்லாம் தத்தம் வீட்டுக்கு முன்னிருக்கும் பொட்டலில் காண்டா விளக்கு வெளிச்சத்தில் விளையாட, காண்டா விளக்குகளைச் சுற்றி சிறு சிறு பூச்சிகளும், வண்டுகளும் விளையாட, பெருசுகளும், சிறுசுகளும், பெண்டுகளும், எல்லாம் சேர்ந்து ஊர்க்கதையை பேசிக் கொண்டிருக்கையில்.... தனியாக அமர்ந்திருந்த படி வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு ஊர்ப் பெருசுகள் கூறிக் கொண்டிருந்த கதையை கேட்டுக் கொண்டிருந்தாள் 14 வயதான உடையாள்..... " யப்பே.....ராசாவ கொன்னு

ஆனந்த சுதந்திரம்....!

எப்படி பார்த்தாலும் சுதந்திர தினத்தோட ஏற்பட்டிருந்த பிணைப்பு சம காலத்தில் கொஞ்சம் நீர்த்து போயிருக்கோன்னு எனக்கு ஒரு டவுட்....! சரி... சரி சமீப காலமா ஒரு 10 வருசமா சுதந்திர தினம் அன்னிக்கு எக்ஸாட்டா ஊர்ல இருந்தது இல்ல அப்டீன்றதால இதை எப்டீ நீ சொல்லலாம்னு கேக்குறீங்களா...? நாம டெய்லி ஊரோட டச் பேஸ்ல இருக்கோம்ல பாஸ் அந்த ஒரு புரிதல்ல சொல்றேன்....! சரி அதை விடுங்க... சின்ன வயசுல ஸ்கூல்ல கொடியேத்தி மிட்டாய் கொடுப்பாங்க...அன்னிக்கு ஸ்கூல் லீவு இந்த ரேஞ்ச்ல அறிமுகப்படுத்திகிட்ட நம்ம தேசத்தின் சுதந்திர தினம், வசீகரிக்கும் நம்ம நாட்டு தேசியக் கொடிய பாக்குறப்ப இன்னும் கொஞ்சம் த்ரில்ல அதிகமாக்கி கொடுக்கும். எனக்கு எப்போ ரொம்ப சந்தோசமா இருக்கும்னு கேட்டீங்கன்னா... கொடியை முடிச்சு போட்டுக் கட்டி அது உள்ள பூ (எங்க ஸ்கூல்ல காகிதப் பூ போடுவாங்கனு வச்சுக்கோங்களேன்...) எல்லாம் போட்டு ஹெட் மாஸ்டர் கயித்த மெல்ல மெல்ல இழுக்கும் போது அந்த கொடி மேல ரீச் ஆகி பூ எல்லாம் கீழ கொட்டும் பாருங்க....ச்சும்மா எல்லோரும் சேந்து கை தட்டி.. ஆரவாரமா இருக்கும்... தேசிய கீதத்தை த

அற்புத நடனம்..!

நிறைய நிறைய கனவுகளோடு கலர்க் கலரான ஆசைகளோடு ஒரு பட்டாம் பூச்சி மாதிரி இந்த பூமியில் பட படன்னு சிறகடிச்சு பறந்துட்டே போய்ட்டே இருக்கணும்னு இப்போ எல்லாம் தோணுது. வாழ்க்கையில் நமக்கு நிறைய சந்தோசமான நிகழ்வுகள் நடக்கிறது, சந்தோசமான நிகழ்வுகளை எல்லாம் நாம தள்ளி வச்சுட்டு அழுத்தி பிடிச்சு கஷ்டங்களையே நினைச்சுகிட்டு ஒரு வித சலிப்போடு வாழ்க்கைய நகர்த்திட்டு போய்கிட்டு இருக்கோம். கொஞ்சம் மாத்தி போட்டு கஷ்டங்களை எல்லாம் ஓரமா வச்சிக்கிட்டு ஒரு யூஸ் அண்ட் த்ரோ பொருளா நினைச்சு அனுபவிச்சுட்டு அப்புறமா தூக்கி கடாசிட்டு போய்கிட்டே இருக்கணும். வாழ்க்கையோட ஒவ்வொரு கணமும் மிக அற்புதமானது. வெயில் அடிக்குது, மழை பெய்யுது, இரவும் பகலும் சேர்ந்து ஒரு வித தாள கதியில எல்லாத்தையும் நகர்த்திக்கிட்டு போய்கிட்டே இருக்கு. இதுல நான் நானா வாழறதுக்காக ரொம்ப சந்தோசப்படாம வேறு எதை எதையோ எல்லாம் எதுக்கு நினைச்சுகிட்டு ஒரு ஏக்கத்தோடயே, அது இல்லையே இது இல்லையேன்னு குற்ற உணர்ச்சியோட வாழணும்? எனக்கு எது கிடைக்கணும் அப்டீன்னு முடிவு பண்றது நானாவே இருக்கணும். புறச் சூழலும் வேறு

தெரு...!

வாழ்க்கையின் அற்புதமான தருணங்களை எல்லாம் வாழ்வின் ஓட்டத்தில் இழந்து போய் விட்டோமோ..? என்று யோசித்த படி வாசலில் நான் அமர்ந்திருந்த போது மாலை மணி 6 இருக்கும். வார இறுதி நாள், நாளை ஞாயிறு எல்லோருக்கும் விடுமுறை நாள். எனக்கு ஒரு பழக்கமிருக்கிறது அதாவது வாசல் படியில் உட்கார்ந்து தெருவினை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தேநீர் அருந்துவது என்பது எனக்கு பிடித்தமான விடயம். சூடான தேநீரை உதடுகளால் மெல்ல உறிஞ்சி கோப்பையிலிருந்து வாய்க்கு இடமாற்றம் செய்யும் அந்த தருணத்தில் தேநீரின் மணத்தை உள் வாங்கிக் கொண்டு சூடான தேநீரின் மெல்லிய சூடு முகத்தில் மெலிதாக பரவ வாய்க்குள் சென்ற தேநீர் உள்நாக்கு தாண்டி வெப்பமாய் தொண்டையை கடக்கும் பொழுது கிடைக்கும் திருப்திதான் தேநீர் அருந்துவதின் குறிக்கோள் என்பது மாதிரி மிக சிரத்தையாக தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தேன். வெறிச்சோடிக் கிடந்த என் தெருவினை சூரசம்ஹாரம் செய்து சப்தமில்லாமல் கிட என கட்டளை பிறப்பித்து விட்டு வீடுகளுக்குள் சர்வாதிகார ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்தன இரண்டு மிக முக்கிய சாதனங்கள். ஒன்று செயற்கைகோள் தொலைக்காட்சி, மற்றொன்று கணிணிக்குள் உலகை ஏலம் விட்டு மன

எழுத்து....!

" அ " என்று கைப்பிடித்து எழுத என்று என் அன்னை பயிற்றுவித்தாளோ அன்றிலிருந்து இன்றுவரை எழுத்தினை நேசிக்கிறேன். ஏதோ ஒன்றைக் கிறுக்கும் மனோபாவம் இன்று தொடங்கியது அல்ல. காலத்தின் போக்கில் அவை கரும் பலகையாகவும், நோட்டுப் புத்தகங்களாகவும், இன்று இணையத்தில் தட்டச்சாகவும் பரிணமித்திருக்கிறது. சிலேட்டில் எழுதிப் பழகிய காலங்களில் சிலேட் குச்சிதான் எனது நண்பன். சாக்பீசை எப்போதும் நான் நேசித்தது கிடையாது. ஏனென்றால் அது எப்போதும் ஆசானின் கையிலிருந்து மிரட்டும் ஒரு வஸ்தாகவே எனது மூளையில் இன்னமும் பதிந்து போயிருக்கிறது. அதுமட்டுமில்லாது அதன் தடிமனான அச்சு வெளியாக்கத்தை விட மெலிதான சிலேட்டுக் குச்சியின் அச்சு விரும்பத் தக்க வகையில் இருக்கும். ஆசிரியருக்குத் தெரியாமல் சாக்பீஸ் எடுத்து சிலேட்டில் அவர்கள் இடும் மதிப்பெண்ணை திருத்தி 100க்கு 79 எடுத்த மார்க்கினை 99 என்று மாற்றம் செய்து வீட்டில் காண்பிக்கையில் பால பருவத்தின் கையெழுத்து அதிர்வினை விளங்கிக் கொண்டு அடி வாங்கிய நாளும் சரி.... பள்ளியில் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் இங்க் ரீமூவர் வைத்து ஆசிரியர் கொடுத்த மார்க்கை மாற்றி கூடுதல் மார்க் இட்டு அ

கழுகு என்னும் போர்வாள்....!

ஒரு கணம் நின்று நிதானித்த நினைவுகளின் ஆழங்கள் சமப்பட்டுப் போய்க்கிடந்த ஒரு விடியலில், மிகைப்பட்ட மனித முரண்களின் இருப்பிடம் எது? என்று ஆராயத்தொடங்கியிருந்தது என் மூளை. தீரா தாகத்தில் தேகம் தகிக்க இரு குவளை குளிர் தண்ணீரால் தற்காலிக உடல் சூடு தணிந்தது ஆனால் உள்ளச் சூடு? வழி தவறிப் போயிருந்தால் வழிகாட்ட முடியும் ஆனால் நானும் என்னைப் போன்ற என் நண்பர்களும் வாழ்க்கை மாறிப் போனதற்கு யார் காரணம்? வகுப்பறையில் ஆசிரியரின் மிரட்டலுக்கு பயந்து படிக்கச் சொல்லிக் கொடுத்த சமூக சூழ்நிலை வீட்டில் பொருளாதாரம் வேண்டி படிக்க பயின்று கொடுத்தது. என் தகப்பனுக்கும் எனக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியருக்கும் ஏற்கனவே அவர்கள் வாழ்ந்து வளர்ந்த சூழலும், பழக்கப்பட்டுப் போயிருந்த பொது புத்தியும் சாட்டைகளாய் தங்களின் கையிலிருக்க அதை வீசி, வீசி, ஓடு... ஓடு.... என்று துரத்த அடிக்குப் பயந்து ஓடி வந்து சேர்ந்த இலக்கில் இருந்த எல்லாமே என்னின் குணாதிசயத்துக்கு முரண்பட்டு இருந்தது. நான் நானாக வளர்வதில் இந்த சமுதாயத்திற்கு எந்த ஒரு சம்மதமும் இல்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன? என்று யோசிக்க புரிதலின்மை மேலும் சமுதாய நிர்ப்பந்தம்