Skip to main content

Posts

Showing posts from September, 2014

பிரதோஷம்...!

எப்போது இருந்து பிரதோஷம் அன்று விரதம் இருக்கத் தொடங்கினேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. சிவபக்தன் என்று என்னை சொல்லிக் கொள்வதிலும் சிவபூஜை செய்வதிலும் எனக்கு ஏன் அதிக ஆர்வம் உண்டானது என்று இதுவரையில் எனக்குத் தெரியாது. சிவன் என்று சொன்ன உடனேயே எனக்குள் சர்வ நாடியும் ஒடுங்கிப் போகும். அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருக்கும் மனது ஒடுங்கிக் கொள்ளும், நெஞ்சு அடைக்கும் ஏதோ ஒன்று உள்ளுக்குள் மட மடவென்று உடையும். அப்படி உடைந்து எல்லாம் நொறுங்கி விழுந்த பின்பு.... என்னப்பன் அல்லவா... என் தாயுமல்லவா... பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா... என்று உள்ளுக்குள் புலம்பத் தொடங்கி விடுவேன். புலம்பல் நின்று போன பின்பு நினைக்க எதுவுமின்றி ஒரு புள்ளியில் மனம் ஸ்தம்பித்து நிற்க பீறிட்டு அழுகை வரும். அழுகையை கட்டுப்படுத்தாமல் கேவிக் கேவி அழுதிருக்கிறேன். அழுகையோடு சேர்ந்து ஏன் இப்டி எல்லாம்? ஏன்? ஏன்? ஏன் என்று ஒரு கேள்வி அடி நெஞ்சை அழுத்திக் கொண்டே இருக்கும். எதற்காக ஏன் என்று கேட்கிறேன் என்றும் எனக்குப் பிடிபடாது, ஆனால் மானசீகமாய் சிவனை ஒரு உருவாய் நினைத்து பாதங்களைப் பிடித்து ஏன்...? ஏன்

ஆஸ்கார் இசையும்.... தமிழ்நாட்டுப் பாமர ரசிகனும்..!

ரோஜா படம் வந்தப்பவேன்னு நான் எழுத ஆரம்பிக்கும் போதே 'ஜா'வுக்கு பதிலா 'சா' போட்டு ரோசான்னு எழுதலையே இது தப்பு இல்லையான்னு எனக்குள்ள ஒரு கவுலி கத்துது பாருங்க அந்த கவுலிக்குப் பேருதான் தமிழ்ப்பற்று. தூய தமிழ்ல தூபம் போடுறேன்னு சொல்லிக்கிட்டு  வீ ட்ல பிள்ளைங்க கிட்ட அமெரிக்கன் ஸ்டைல்ல பேசி ட்ரெயினிங்க் கொடுக்குற அப்பாடக்கர் எல்லாம் இல்லைங்க... நா ன்.  அதுக்காக கொஞ்சம் கூட அப்டி இப்டி பாக்காம ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆ பீ சரா (அச்சச்சோ... மறுபடி ஆங்கிலம்) இருக்கறதுலயும் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த ரெண்டாவது பாரா ஆரம்பிக்கும் போதே என் பிரச்சினை என்னன்னு கேட்டீங்கன்னான்னு சிம்பு மாதிரி ஒரு சொம்பு டைப்ல ஆரம்பிக்கலாம்னு நினைச்சு அப்புறம் அதை கைவிட்டத உங்ககிட்ட எல்லாம் நான் சொல்லியே ஆகணும். சொல்லியே ஆகணும்னு சொல்லும் போது சொல்லுக்கு 'சொ' போடாம ஜொ போட்டா எப்டி இருக்கும்? ரொம்ப கேவலமா இருக்கும்ல...? இப்போ என் பிரச்சினை என்னன்னானு சரியா ஆரம்பிச்சு நான் ஸொல்ல வந்ததை ஸொல்லிடுறேன். ரகுமான் சார பத்திப் பேச வந்துட்டு நீ ஏண்டா தமிழ்ல எழுதறதப் பத்தி பேசிட்டு இருக்கேன்னு கேக்

பாரதியின் கண்ணம்மா...

கண்ணம்மா போல ஒரு பெண் கிடைப்பது மிகக் கடினம்தான். அதுவும் பாரதி போன்ற ஒருவன் கண்ணம்மா என்ற பெண் நிஜத்தில் உடன் இல்லாமல் எவ்வளவு துன்பப் பட்டிருப்பான் என்பதை எண்ணிப் பார்க்கும் போதே பெரும் வலியாய் இருக்கிறது. கண்ணம்மாவைப் பற்றிய கற்பனையோடுதான் பாரதி செல்லம்மாவின் பிடித்திருந்திருக்க வேண்டும். பாவம் செல்லம்மா நொடிக்கொரு முறை திசை திரும்பும் ஏகாந்தக் கனவுகள் கொண்டப் பாரதியோடு அவள் எப்படித்தான் சகித்துக் கொண்டு வாழ்ந்தாளோ...? பாரதி ஒரு முரட்டு மதம் கொண்ட யானை.  திபுதிபுவென்று அவனைச் சூழ்ந்து கொள்ளும் உணர்வுக் குவியல்களுக்கு நடுவே அவன் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கையில் வீட்டில் அரிசி இருக்கிறதா.. இல்லையா? மிளகாய் எப்போது தீர்ந்து போனது...? வீட்டு வாடகை கொடுத்தோமா, இல்லையா என்பதெல்லாம் அற்ப விசயங்களாய்த்தானே தோன்றும்...? செல்லம்மாவால் பாரதியை எதிர்கொள்ளவே முடியவில்லை.   பாரதி போன்ற மனிதன் இப்போது இருந்திருந்தால் சராசரி பெண்ணொருத்தி குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுக் கொண்டு சகித்துக் கிடந்திருப்பாள் என்றா நினைக்கிறீர்கள்? பாரதி போன்ற ஒருவனை மணம் முடித்த மூன்றாம் நாளே விவாகாரத்து ச

கடவுளை....எங்கே தேடுவேன்...?!

அறிதல் என்பது அறிவு. அத்தோடு நின்று போயிருக்க வேண்டிய வாழ்க்கையில் எத்தனை விவரித்துப் பார்த்து அபத்தங்களுக்குள் போய் விழுந்திருக்கிறேன் என்று யோசிக்கிற போது எனக்கு சிரிப்புதான் வருகிறது.. சாக்கடைக்குள் போய் விழுந்து புரண்டு  கொண்டே இது சரி அது தவறு என்று பேசிக் கொண்டிருந்க கடந்த காலப் பொழுதுகளை இப்போது நினைவுகூரும் போது கொஞ்சம் கூச்சமாய்த்தான் இருக்கிறது. கடவுள் தேடல் என்ற ஒன்று எனக்குள் ஆரம்பித்த போது நிச்சயமாய் என்னைப் போலவும் உங்களைப் போலவும் சித்தரிக்கப்பட்டிருந்த கடவுளர்களில் யாரையேனும் ஒருவரை எப்படியாவது கண்டுவிடலாம் என்றுதான் நான் நம்பினேன். கோயில்களுக்குச் செல்வதும் உற்று, உற்று கருவறைக்குள் இருக்கும் சிலைகளைப் பார்ப்பதும் கண்களை மூடிக் கொண்டு பிள்ளையாரப்பா காப்பாத்து, முருகா காப்பாத்து, சிவனே காப்பாத்து, காளியாத்தா காப்பாத்து என்று சும்மா இருக்கும் போதே காப்பாத்து காப்பாத்து என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன். பத்து வயசு பையனுக்கு ஏன் காப்பாத்துப்பான்னு கடவுள வேண்டிக்கன்னு சொல்லிக் கொடுக்குறோம்ன்ற யோசனை இல்லாம, என்னை சுத்தி இருந்த சமூகம் கடவுள் முன்னால நின்னு தன்ன