Skip to main content

Posts

Showing posts from December, 2015

சிம்ம சொப்பனமான பாடலும், சிம்புவும்...!

எவ்வளவோ திறமைகள் தன்னிடம் இருந்தும், திடமான குடும்பப் பின்னணி இருந்தும் விளையாட்டுத்தனத்தால் சரியான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் சிம்புவைப் பார்த்தால் பாவமாய்த்தானிருக்கிறது. தெருவில் நடந்து சென்றால் வீதிக்கு நாலு பேரின் வாயிலிருந்தாவது சிம்பு பிரயோகம் செய்த வார்த்தை வந்து வெளியே விழும்தான்,, என்னதான் மேல் தட்டு வர்க்கமென்றும், நடுத்தர வர்க்கமென்றும் எக்ஸ்ட்ரா டீசண்ட்டாய் பொதுவெளியில் வெள்ளைச் சட்டை போட்டு திரியும் மனிதர்களும் கூட கோபம் கொப்பளித்தால் உடனே உச்சரிக்க கூடிய வார்த்தைதான் என்றாலும்... ஒரு திரைப்படக் கலைஞராய் பொதுவெளியில் எல்லோரும் அறிந்தவராய் இருக்கும் சிம்பு விளையாட்டாய் பாடி வீட்டுக்குள் பத்திரமாய் வைத்திருந்த பாடலை காக்கா தூக்கிக் கொண்டு வந்து இணையத்தில் போட்டு விட்டது என்று சொல்லும் கதை கேட்பதற்கு நன்றாய்த்தானிருக்கிறது.  விளையாட்டுத்தனமாய் பாடியது வீட்டுக்குள்ளேயே இருந்திருந்தால் இந்த விபரீத வினை அவருக்கு வந்திருக்கவே வந்திருக்காதுதான் என்பதோடு மட்டுமில்லாமல் அவர் வீட்டுக்குல்ளேயே அந்தப் பாடல் இருந்திருந்தால் அதைப்பற்றி பேச என்ன இருக்கிறது மக்களுக்கு...?

அது அங்கேதானிருக்கிறது...!

எழுதுவதென்பது எதுவுமில்லை. அது தன்னைத் தானே வெறுமையாக்கிக் கொள்ளல். கருத்துக்களை விட்டு வெளியே வரும் ஒரு யுத்தி. யாருமற்ற பெருவெளியில் தன் காலடி ஓசையை மட்டும் கேட்டபடி நடக்கும் பிரக்ஞை நிலை. கோட்பாடுகளில்லா ஒரு தவம். இதுதான் இன்னதுதானென்று ஒரு நாளும் வரையறுத்துக் கொள்ள முடியாத வரையறுத்து சொல்ல முடியாத சூன்யம். இருத்தல் மட்டுமே சத்தியமென்பதை உணர்ந்தபடி ஒன்றுமில்லாததை எழுதிக் கொண்டிருக்கிறேனே இப்போது, அதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களே, இல்லாமல் இருக்கும் காலத்தைப் போன்று அசைவற்றுப் போய் அதை தான் எழுத்து அதிகபட்சமாய் செய்ய முயலும் அல்லது முடியும். ஏதோ ஒன்றை சொல்ல முயலும் எல்லா முயற்சிகளையும் அறுத்தெறிந்து விட்டு ஒரு முற்று புள்ளியோடு முடிந்து போகும் எழுத்துக்கள் எல்லாம் நிஜத்தில் அதோடு முடிந்து போய்விட்டதென்றுதானா நீங்கள் கருதுகிறீர்கள்...? எங்கிருந்ததோ அது... அது அங்கேதான் இருக்கிறது இன்னும் எப்போதுமிருந்தது போலவே அது இங்கும்தானிருக்கிறது என்றறியும் போது பிறக்கும் தெளிவினைத்தான் காலம் காலமாக சித்தார்த்தர்களுக்கு எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன போதிமரங்கள்..., போதும்

மெலுகா - சிவா த வாரியர் 0.1

காட்டெருமைகளின் எலும்பில் பக்குவமான சிறு குழல்களை எடுத்துதான் இந்த புகைக்கும் குழல்களை உருவாக்குகிறார்கள். புகையிலை நிரப்பப்பட்ட குழலை எடுத்து மெல்ல உறிஞ்சினேன். ஆழமாக நுரையீரலைத் தொட்டுப் பரவி இரத்த் திசுக்களில் பரவிய அந்த சிறு போதை மூளைக்குள் சென்று மனதை மெல்ல மெல்ல அடக்கியது. இதமான காற்றில்  நடனமாடிக் கொண்டிருந்த மானசோரவர் ஏரியை பார்த்துக் கொண்டிருந்தேன். கவலைகள் ஏதுமின்றி பிராயத்தில் நடக்க ஆரம்பித்திருந்த சிறு பிள்ளை நீரைக் கண்டவுடன் கால் பதித்து ஆடும் நர்த்தனத்தைப் போல அது மிதந்து ஆடிக் கொண்டிருந்தது. இன்னதுதானென்று தெரியாத ஒரு சோர்வும் கவலையும் என்னை ஆட்கொள்ளும் போதெல்லாம் இப்போது நினைவுக்கு கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறேனே என் பால்யப் பிராயம் அதைத்தான் மீட்டெடுத்துக் கொண்டு வந்து மீண்டும் உற்சாகத்தை எனக்குள் உயிர்ப்பித்துக் கொள்வேன்.... மாலைச் சூரியன் வேறொரு திசையில் உந்தி எழுவதற்காக மெல்ல மெல்ல என் தேசத்தின் பனிப்பிரதேசத்து மலைகளுக்குள் விழுந்து கொண்டிருந்தான். செஞ்சிவப்பான வானம் மானசோரவரில் விழுந்து கிடந்ததைப் பார்த்த பொழுது யாரோ தாம்பூலத்தை மென்று துப்பியிருந்தது