Skip to main content

Posts

தேடல் - 1

காரணமின்றி காரியமில்லை எத்தனை எழுத்தாளர்களை கடந்து வந்த போதும் பாலகுமாரனை விட்டு நகர மறுக்கிறது மனசு. காரணம் ஆன்மீகம். இலக்கியம் என்பது மானுடவியல் சார்ந்தது. ஆன்மிகத் தேடல் இந்த வாழ்வோடு மட்டுமா தொடர்புடையது? சென்னைக்கு வேலைதேடி பெட்டியோடு பேருந்து ஏறிய போது பெட்டிக்குள் துணிமணியோடு பாலகுமாரனின் நாவல்களும் என்னோடு வந்தன. நிறைய பெட்டிகள் இப்படித்தான் பயணித்தன என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன். கடவுள் கடவுள் என்று பேய்ப்பிடித்து அலைந்த பொழுது பாலகுமாரனின் நாவல்கள்தான் பொறுமையாய் பாடமெடுத்தன. பாலகுமாரனை பார்க்க வேண்டுமென்றல்லாம் எனக்கு ஆசை கிடையாது. அடுத்தடுத்து வெளிவரும் அவரது பல்சுவை நாவல்களை வாங்கிப் படித்து விடவேண்டும் அவ்வளவுதான். ஒரு பிரதோஷ மாலையில் மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலின் வெளி மண்டபத்தில் தேமேவென்று உட்கார்ந்த்திருத பொழுது பாலகுமாரன் யாரோ இருவருக்கு பூம்பாவை கதை சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்தேன். ஓடிப்போய் உங்கள் வாசகன் சார் நான் என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை. வெள்ளை வேட்டி சட்டை தாடி குடுமி சகிதமாய் அவர் உள்ளும் புறமும் உருமாறிக் கொண்டிருந்த நேர
Recent posts

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலையிலேயே பயண

ஈஸ்வரா...

எல்லோரும் போன பின்பு சடலம் மட்டும் தனியாய் கிடந்தது. மாலை பூக்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு ஐம்பது வயது இருக்கலாம். நாலு ஆட்களை ஒன்றாய் அடித்து வீழ்த்தும் திடகார்த்தர உடம்பு. சவக்கு சவக்கு என்று வெற்றிலையை மென்றுகொண்டே  தலையில் போட்டிருந்த கட்டை அவிழ்த்துக் கொண்டே நிமிர்ந்தவள் என்ன தம்பி நீங்க போல இன்னும்? இன்னுமில் அதட்டல் அதிகம் இருந்ததது. இல்லங்க போகணும், யாரு இவுக உங்களுக்கு? மாம பயனுங்க, ஒரே செட்டு  தொண்டையை அடைத்த அழுகையை விழுங்கிக்கொண்டேன். நகராட்சி மின் மைதானம், மின் மைதானமென்றால் மின்சாரம் இல்லை. கேஸ் அடுப்பு வைத்து எரிப்பார்க்ள். அதேவிறகுதான் ஆனால் எரியூட்டுவது கேஸ் அடுப்பு. பூங்காவைப் போல சுற்றிலும் சுத்தமாய் அமைதியாய் இருந்த அந்த இடத்தை மயானம் என்று சொல்லவே முடியாது. சுடலையின் பொடி பூசி எரியும் பிணங்கள் முன்பு அமர்ந்து பார்த்துக் கொண்டேயிருப்பானாம் சிவன். ரெளத்ரம் பொங்க யோசிக்கும் அந்த இரவுகளில் ருத்ரனை பார்க்கவே அகோரமாயிருக்குமாம். அந்த அகோரி விடியற்காலையில் எரிந்த பிணத்தின் கபாலம் ஏந்தி பிட்சை பெற ஊருக்குள் வருவானம். கபாலி, கபாலி என்று ஊரே  நடுங்கி ப

மெர்சல்...!

ராஜ் டிவியில் எனக்குள் ஒருவன் என்றொரு சிவாஜி படம் ஓடிக் கொண்டிருந்தது. இந்த சிவாஜி வீட்டிற்குள் அந்த சிவாஜியும் அந்த சிவாஜி வீட்டில் இந்த சிவாஜியும் நடித்துக் கொண்டிருந்தார்கள். வீடு மாறி டபுள் ஆக்சன்கள் நடிப்பது போல எவ்வளவோ படங்கள் வந்துவிட்டது என்றாலும் அவற்றை எல்லாம் திரைக்கதைகள் மறக்கடித்து விடுகின்றன. எத்தனையோ படங்களை இப்படி நாம் கொண்டாடி இருக்கிறோம். அதே வரிசையில் கொண்டாடவேண்டிய படம்தான் மெர்சல். எ ப்ளாக் பஸ்டர் கமர்ஷியல் மூவி ஃபார் காமன் ஆடியன்ஸ் & சூப்பர் டூப்பர் மெகா ஷோ ஃபார் அண்ணா ஃபேன்ஸ். பர்ஸுல காசு எல்லாம் இருக்காதுங்க வீ ஆர் ஃப்ரம் டிஜிட்டல் இந்தியா, கேஷ் லெஷ் ட்ரான்ஸாக்சன் என்று வடிவேலு பர்ஸை பிரித்துக் காட்டும்   இடத்தில் சூப்பர் ஜெட் வேகத்தில் ஆரம்பிக்கும் படம் இடைவேளை வரும் வரை அதகளமாய் நகர்கிறது. நீ பற்ற வைத்த நெருப்பொன்று…என்று கரகரகுரலில் ஆரம்பித்து ஏத்தனையோ மாடுலேஷன்களைப் பேசி அசத்தியிருக்கிறார் இளைய தளபதி….சாரி சாரி தளபதி. டாக்டர் மாறன் பேசியிருக்கும் அத்தனை அரசியல் வசனங்களுக்கும் விசில் பறக்க தியேட்டர் கைதட்டலால் அதிர்கிறது. வெஃரி போல்ட் டிசிஸன் பை

வீட்டுப் பூனை

வேகமாய் வந்து எனக்கு முன் இருந்த பார்க்கிங்கில் அந்தக் கார் நின்ற போது மணி இரவு 8 இருக்கும். அப்படியும் இப்படியுமாய் நடை பயிற்சி செய்பவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். கார் நின்று கொஞ்ச நேரம் யாரும் இறங்கவில்லை. பொதுவாய் வாக்கிங் போக வருபவர்கள் காரை நிறுத்திவிட்டு சடாரென்று இறங்கி ஓடவோ நடக்கவோ ஆரம்பித்து விடுவார்கள் அதே வேகத்தில் திரும்ப கிளம்பியும் போய்விடுவார்கள். என்னைப் போன்ற சில அவதாரங்கள்தான் இப்படி வந்து காருக்குள்ளேயே அமர்ந்து பிராக்கு பார்த்து விட்டு, பிறகு போகும் போதும் இப்படி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும்... யார் அந்த பிராந்தன் அல்லது பிராந்தி என்று நினைத்துக் கொண்டிருந்த போதே கார் கதவை மெதுவாய் திறந்து கொண்டு உயரமான அந்த மனிதர் இறங்கினார். கருப்பு டிசர்ட் போட்டிருந்தவரைப் பார்த்தால் வாக்கிங் போக வந்தவர் போலத் தெரியவில்லை. சார்ஜா யுனிவர்சிட்டி ஏரியா எல்லா நேரத்திலும் அமைதியாகத்தான் இருக்கும். ஒரு சில கார்களும் மனிதர்களையும் தவிர பெரிய நசநசப்பு அங்கு இருக்காது. அப்போதுதான் கவனித்தேன் இறங்கியவர் கையில் ஒரு கருப்பு கலர் பூனைக்குட்டி (பெரிய பூனையைக் கூட பூனைக்குட்டின்னுத

கபாலி... மாற்று சினிமாவின் குரல்!

ரஜினி படத்துக்கு என்றில்லை எந்த ஒரு படத்துக்குமே விமர்சனம் என்று நான் எழுதுவதில்லை. விமர்சன அரசியல் எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. ஒருவரின் புரிதல் இன்னொருவரோடு எப்போதுமே ஒத்துப் போகாது. அதிர்ஷ்டவசாமாய் ஒத்துப்போகும் அலைவரிசைகளே இங்கே குழுக்களாய் மாறுகின்றன. என்னுடைய பார்வை, புரிதல், அனுபவம் இந்த மூன்றையும்தான் எப்போதும் திரைப்படங்கள் பற்றிய பார்வையாக நான் எழுதுவேன். கருத்துப் பகிர்வு, கருத்துத் திணிப்பு இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தில்தான் நாகரீகம் என்ற சொல் எப்போதும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும். கபாலி தமிழ்ப்படம்தான் என்றாலும் கதையின் களம் வேறு நிலம். முழுமையாய் கபாலியை ரசிக்க கொஞ்சமல்ல நிறையவே மலேசிய தமிழர்களின் பேச்சு வழக்கு, மலேசியாவின் வரலாறு, நிலத்துண்டாடல், தோட்டத் தொழிலார்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, போராட்டங்கள், வர்க்கப் பிரிவுகள் என்று தொடங்கி இன்று வரை அந்த மண்ணில் நடக்கும் எல்லாவிதமான சமூகக் குற்றங்கள் வரை தெரிந்திருப்பதோடு ஓரளவிற்கு அவர்கள் பயன்படுத்தும் வட்டார வழக்குச் சொற்களையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். இதுவெல்லாம் அதிகம் புரியாத வேறு நிலம் ச

கபாலியும் ரஜினி எதிர்ப்பு அரசியலும்...!

ரஜினி படத்துக்கான ஓப்பனிங் என்பது இன்று நேற்று உருவான விசயம் கிடையாது. ஊடகப் பெருக்கம் நிறைந்த இக்காலத்தில் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளுமே அதன் வேர் வரை விபரமாக பல கோணங்களில் இப்போது நமது முன் கடை விரிக்கப்பட்டு விடுகிறது. சேட்டிலைட் டிவிகளைக் கடந்து சோசியல் மீடியாக்களும் விசுவரூபம் எடுத்து நிற்கும் இந்தக்காலக்கட்டத்தில் ஒரு மாஸ் ஹீரோவின் மாஸ் என்டெர்யெனிங் மூவி ரிலீஸ் என்பது கண்டிப்பாய் மிகப்பிரம்மாண்டமானதாய்தான் இருக்கும். ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த முழு வெற்றியையும் படத்தின் மொத்த டீமும் தூக்கிச் சுமக்கும் அதே வேளையில் படம் படு தோல்வியடைந்து விட்டால் அந்த தோல்வியின் சுமையை படத்தின் கதாநாயகனும் அந்தபடத்தின் தயாரிப்பாளரும் மட்டுமே தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கும். பாபாவாய் இருந்தாலும் சரி லிங்காவாய் இருந்தாலும் சரி அந்த படத்தின் வியாபார ரீதியிலான சுமையை சரி செய்ய வேண்டிய பொறுப்பு ரஜினிக்கு இருந்தது, அதை அவர் செய்தார். கபாலிக்கு இன்றைக்கு இருக்கும் இந்த கிரேட் மாஸ் ஊதிப் பெரிதாக்கப்பட்டதாய் பேசிக் கொள்கிறார்கள் ஆனால் நிஜத்தில் சமகால ஊடகப்பெருக்கமும் ர