Skip to main content

தேடல் - 1


காரணமின்றி காரியமில்லை

எத்தனை எழுத்தாளர்களை கடந்து வந்த போதும் பாலகுமாரனை விட்டு நகர மறுக்கிறது மனசு. காரணம் ஆன்மீகம். இலக்கியம் என்பது மானுடவியல் சார்ந்தது. ஆன்மிகத் தேடல் இந்த வாழ்வோடு மட்டுமா தொடர்புடையது?

சென்னைக்கு வேலைதேடி பெட்டியோடு பேருந்து ஏறிய போது பெட்டிக்குள் துணிமணியோடு பாலகுமாரனின் நாவல்களும் என்னோடு வந்தன. நிறைய பெட்டிகள் இப்படித்தான் பயணித்தன என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன். கடவுள் கடவுள் என்று பேய்ப்பிடித்து அலைந்த பொழுது பாலகுமாரனின் நாவல்கள்தான் பொறுமையாய் பாடமெடுத்தன.

பாலகுமாரனை பார்க்க வேண்டுமென்றல்லாம் எனக்கு ஆசை கிடையாது. அடுத்தடுத்து வெளிவரும் அவரது பல்சுவை நாவல்களை வாங்கிப் படித்து விடவேண்டும் அவ்வளவுதான். ஒரு பிரதோஷ மாலையில் மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலின் வெளி மண்டபத்தில் தேமேவென்று உட்கார்ந்த்திருத பொழுது பாலகுமாரன் யாரோ இருவருக்கு பூம்பாவை கதை சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்தேன். ஓடிப்போய் உங்கள் வாசகன் சார் நான் என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை.

வெள்ளை வேட்டி சட்டை தாடி குடுமி சகிதமாய் அவர் உள்ளும் புறமும் உருமாறிக் கொண்டிருந்த நேரம். பிரதோஷ தரிசனம் முடித்து அவர் ஸ்கூட்டியில் போய்விட்டார். அவ்வளவுதான் பாலகுமாரனுக்கும் எனக்குமான ஸ்தூல தொடர்பு. பட்டினத்தார் கோயில், வாலிஸ்வரர் கோயில், முண்டக்கன்னி அம்மன் கோயில், காரைக்கால் அம்மையாரை  பார்க்க திருவாலங்காடு, ஒற்றீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை, கும்பகோணம் பக்கத்தில் பாடகச்சேரி, பார்த்தசாரதி கோயில், சுசீந்தரம் தாணுமலயன் கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர், நெரூர் சதாசிவ பிரம்மந்திரர் என்று சுற்றி விட்டு கோடி முறை போன தஞ்சை பெரியகோயிலுக்குள் உடையார் படித்து விட்டு நுழைந்த போது சோழப் பேரரசு……..சோழம்…சோழம்…சோழம்….என்று யாரோ காதுக்குள் கத்த வாளால் கேடயத்தை அடித்து சப்தமெழுப்புவாக எல்லாம் தோன்றியது.

உடையார் அவ்வளவு ஆழம். எனக்கு இலக்கியமெல்லாம் தெரியாது. வாழ்க்கை தெரியும். வாழ்க்கையின் முன்னும் பின்னும் என்னவாயிருக்கும் என்று தேடத் தெரியும். பாலகுமாரனின் எழுத்து ஆன்மீகத்தை எழுதத் தொடங்கிய போது அவரைக் காதலிக்கத் தொடங்கியவன் நான். இங்கே அனேகருக்கு வேறுவிதம். இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு இப்படி.

கோயிலின் நடை சாத்திவிட கோயில் முழுதும் சுற்றி வந்தேன். நாங்கொடுத்தனவும், அக்கன் கொடுத்தனவும் பெண்டு பிள்ளைகள் கொடுத்தனவும், உடையார் ராஜராஜத் தேவர் என்ற எழுத்துக்களை எல்லாம் படிக்க முடிந்தது. கல்வெட்டு வாசிப்பில் பாண்டித்திய இல்லை, பாமரத்தனம்தான்.

தஞ்சை மாறிவிட்டது. கோயில் மட்டும் பத்தாம் நூற்றாண்டின் பழமையோடு ஊருக்கு நடுவே, மனிதர் வந்தனர், வணங்கினர், சுற்றினர் சென்றனர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. இது ஒன்று போததா வாழ்க்கையை சொல்ல. யாரோ கட்ட எவர் எவரோ வந்து செல்ல, ஏதேதோ பேச, வாழ்க்கை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே மாதிரியாய் அல்ல, வெவ்வேறாய்.

கோயிலுக்கு பின் மண்டபத்தில் தலைக்கு பையை வைத்து கோபுரத்தை பார்த்தபடி தூங்கி விட்டேன். தோளைத் தொட்டு ஒருவர் எழுப்ப திடுக்கிட்டு விழித்தேன்…தாடியும் மீசையுமாய் ஒரு பெரியவர், அழுக்கு சட்டையோடு நின்று கொண்டிருந்தார்.
கோயில்ல தூங்கலாமா? என்று அதட்டல் வேறு...

எழுந்து அமர்ந்தேன்.
பக்கத்தில் அமர்ந்தார்.
சொன்னேன்.
சிவன பிடிக்குமா?
ஆமாம்.
அப்போ எல்லாம் முடிஞ்சுது, நீ கெளம்பு.
என்ன சொல்வதென்று தெரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 
பேசத் தொடங்கினார்...



-எழுதுவேன்...



தேவா சுப்பையா
15.06.2018



x

Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல