Skip to main content

Posts

Showing posts from September, 2010

நடை...!

நான் அந்த நதிக்கரையின் ஓரமாய் நடந்து கொண்டிருந்த மாலைப் பொழுதில்....காற்றில் பறந்து வந்த சருகு ஒன்று தோள் தொட்டு தொடர்ந்து கொண்டிருந்தது அதன் பயணத்தை....! வளைந்து சாய்ந்திருந்த நாணல்களின் தொடலில் சிணுங்கிக் கொண்டே ஒடிக் கொண்டிருந்தது நதி. நதியோரத்தில் வரிசையாயிருந்த மரங்களின் அழகில் வசீகரமாய் இருந்த அந்த மாலையின் ரம்யத்தை கூட்டவே ஒரு ஊதல் காற்று ஊடுருவி பரவிக் கொண்டே இருந்தது. பொதுவாக மாலை வேளையில் அந்த நதிக்கரை ஓரம் மனிதர்கள் வருவதில்லை..என்பது எனக்கு மிக சாதகமாய் போய்விட்டது. என்னை மறந்து சில மணிகள் நான் நடக்கும் நேரங்களில் கலர்கலாய் கனவுகள் பூக்கும். சிலாகித்து சிலாகித்து ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து நடக்கும் தருணத்தில் ஏதோ ஒன்று உற்சாகமாய் உடல் விட்டு வெளியே பறந்து இன்னிசையாய் ஒரு கீதமிசைக்கும். என்னோடு நானே இருக்கும் அற்புத கணங்கள் அடிக்கடி கிடைப்பது இல்லை ஆனால் அப்படிப்பட்ட தருணங்களுக்காக சில சமயம் மாதக்கணக்கில் கூட காத்திருந்து இருக்கிறேன். இப்போது நானும் நானும்... என்னுடைய என்னை நோக்கிய உற்று நோக்கல் நிகழ்ந்து கொண்டிருந்தது. எப்படிப்பட்ட ஒரு படைப்பு மனிதன்... யார் படைத்தார

வேர்.....!

நேற்றின் ஞாபகங்கள் எப்போதுமொரு சுகமான ஒத்தடங்களை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. அடித்து செல்லும் காலவெள்ளத்தில் மிதக்கும் ஒரு சருகாய் நானும் மிதந்து கொண்டிருக்கிறேன். அது ஒரு சராசரியான இரவு பத்து மணி நான் மட்டும் வாசலில் அமர்ந்திருக்கிறேன். தெருமுனையிலிருக்கும் அரசமரம் அதன் கீழிருக்கும் பிள்ளையார்.... இருட்ட்டாய் இருந்ததால் அந்த நாள் அமாவசையாய்தானிருக்கும் என்று நானே நினைத்துக் கொள்கிறேன் ஆனால் அது பெளர்ணமிக்கு முந்தைய நாள். தூரத்தில் ஒரு நாய் குலைக்கும் சப்தம் தெளிவாய் கேட்டதில் இரவின் அடர்த்தி என்ன என்று மனதுக்கு பட்டது. கிராமங்கள் பெரும்பாலும் இரவு 9 மணிக்கு எல்லாம் அடங்கி விடுகின்றன......! ஆள் அரவமற்ற தன்மையின் வீரியத்தை பிள்ளையார் கோவில் அரசமரத்தின் சருகுகள் கீழே விழும் காட்சி கூர்மை உணர்த்தியது. மனிதர்கள் இருந்தால் நாம் எப்போதும் அவர்களைப் பற்றியே சிந்திப்போம். யாருமற்றுப் போனால் சிறிய சிறிய ஈ, எறும்பு, இலை, மரம், என்று நம்மைச் சுற்றி உயிர்ப்போடு ஓராயிரம் விசயங்களை கவனிக்க ஆரம்பிப்போம். வெற்றுடம்புடன் ஒற்றை துண்டோடு அமர்ந்திருந்த என்னுள் ஒரு இறுக்கம் பரவ காரணம் இருந்தது. ஆமாம்...

ஏக்கம்...!

மாமிசமும் இரத்தமுமில்லா ஒரு இடம் தேடிய எனது ஓட்டத்தில் எப்போதும் தூக்கிச் செல்லும்... தோல்பை கொடுக்கும் கனத்தில்...தடைப்பட்டுப் போகிறது எனது நகர்தல்...! என்னுள் இருந்து ஏதேதோ சிந்திக்கும் குழைவான திடப்பொருள்தான் நானென்று சொல்லும் சித்தாந்தங்களை எல்லாம்.. செதுக்கி எறிந்துவிட்டு... கூடு விட்டு பறக்கத் துடிக்கிறது என் ஆத்மா...! எல்லாம் கடந்து..... எங்கேயோ நான் இருந்து...... காற்றைப் போல பரவி கட்டில்லாமல் சிதறி ஓசைகள் தாண்டிய.. சப்த இறக்கங்களில் நான் சரிந்து கொண்டே போய்.... நிசப்த பள்ளத்தாக்கில் நிரந்தரமாய் வசிக்கும்.... ஆசையெல்லாம்...பெருமூச்சுகளில்... வெளிப்படுகிறது எப்போதும்... ஏக்கங்களின் வெளிப்பாடாய்....! தேவா. S

காதல்...!

NOTHING.....BUT JUST THE NEXT ISSUE....! பெரிதும் சிறிதுமாய் அவ்வப்போது வந்து ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கற்பனைகளின் ஓட்டத்தில் என்னின் சுயம் தொடும் முயற்சிகளின் ஓட்டத்துக்கு நடுவே அவ்வப்போது வந்து ஆக்கிரமித்துக் கொள்கிறது காதலென்னும் உணர்வு. உருவமாய் பயிற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தவறாமல் என் இதயம் துளைக்கும் தோட்டாவாய் எண்ணங்களை கிளர்ந்தெளச் செய்யும் கிரியா ஊக்கியாய் இருக்கும் வீரியமான அந்த விசையின் ஆதி முடிச்சு எங்கே போடப்பட்டது அல்லது எப்போது போடப்பட்டது? ஏதோ ஒரு கணத்தில் என் இதயத்தின் முதல் துடிப்பு ஆரம்பித்த அந்த நொடியில் துளிர்த்திருக்கும் என்ற நம்பிக்கையில்லை...ஏனென்றால்.. என் இதயத்தின் கடைசி துடிப்பில் அது மரித்து விடும் என்ற வாதத்தில் செத்துவிடும் காதல் என்ற உணர்வு..ஆனால் அப்படி அல்ல.. அது எப்போதும் சாகாது...! வெளிச்சத்தில் இருந்தாலும் ஓடி ஒளிந்து இருட்டு தேடும்....ஒளி காணா மனிதன் போல எப்போதும் மறைந்து நின்று விளையாடுவதே பழக்கமாய்ப் போன இந்த காதல் படுத்தும் பாடுகளை...என்னவென்று சொல்வது..? யாருமற்ற தனிமை என்றால் காதலுக்கு கொள்ளைப் பிரியம்...! ஆமாம் அந்த கணங்களில

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ

ஆன்மாவின்....பயணம்! பதிவுத் தொடர் பாகம் III

PREVIEW சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த மூன்றாவது பாகத்திலும் தொடர்கிறது... திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது. உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....! பாகம் I பாகம் II இனி... உலுக்கி எழுப்பியவர்...யாரென்று திரும்பி பார்த்தேன்...." எங்கேயா போகணும்...? பஸ்ல ஏறினா தூங்கிட வேண்டியது.... டிக்கட் எடுய்யா என்று கேட்டவரை அமைதியாய் பார்த்தேன்...! யோவ் டிக்கட் எடுய்யா உறுமிய கண்டக்டரை உற்று நோக்கினேன்....எங்க போகணும் சொல்லு? அவர் என்னை கேள்வி கேட்டார்.....? எங்க போறீங்க நீங்க.. நான் திருப்பி கேட்டேன்...? யாருய்யா நீ ? கால

சிறகு....!

இட வலம்....மேல் கீழ் கோணல் நேர்.. கிறுக்கல் இஷ்டங்களின் படி... விசிறியடிக்கும் தூரிகைகளின் வீச்சில்...வந்து விழும்... வகை வகையான...ஓவியங்களின் கலைந்த காட்சிகள் எல்லாம் எப்போதும் எள்ளி நகைக்கின்றன ஒழுங்குகளின் இறுக்கதிலிருக்கும் அறியாமை முடிச்சுகளை பார்த்து...! கலைத்து போடலின் ... உச்சத்தில்..வெளிப்பட்ட என் ஒவியத்தின் அழகில் வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய் மனதில் இருந்த கட்டுப்பாட்டு அழுக்குகள்...! கலைந்து கிடக்கும் ஓவியத்தின் தடங்களில் உயிர்ப்பாய் நிறைந்திருக்கும் வரைமுரையற்ற வர்ணங்களின் கூடல்களின் நிறைவுகளில் மெலிதாய் வெளிப்பட்டுக் கிடக்கிறது ஒரு எல்லைகளற்ற....ஆனந்தம்! கலைந்ததின் ஆட்சியில் செத்துப் போன விதிமுறைகளை புறம்தள்ளி நகர்ந்து விட்டு... சலனமின்றி கடக்கிறேன்... இரைச்சலின் எல்லைகளை ஒழுங்கற்றதுகளின் சிறகுகளோடு...!...! தேவா. S

பிரம்மா...!

நித்தம் நடக்கும் நாடகத்தில்... நானும் ஒரு நடிகன்......! அரிதார பூச்சுக்களில் அழுந்தியிருக்கும் என் முகம்...சுயம் தேடும் ஓட்டத்தில், வேசமெல்லாம் கலைத்தெறிந்து மொத்தமாய் தொலைந்து போக.....யாக்கைகள் கொண்டு.... சுடலையில் பொடி பூசி..... பாதங்களின் அதிர்வுகளில் அண்ட சராசரம் கிடு கிடுங்க... அகிலமெல்லாம் நடு நடுங்க... என் உடலின் நரம்புகள் கிழித்தறுத்து மாலைகளாக்கி.... என்னை தொலைக்கும் வேகத்தில் நான் நடத்தும் தாண்டவங்களில்... ஆடி, ஆடி,,,,ஆட்டதிலமிழ்ந்து.. ஆடுபவன் தொலைந்து..... எச்சமிருக்கும் ஆட்டத்தின் அதிர்வுகளாய்... நான் காணாமால் போகும்... முயற்சிகளுக்காய் நித்தம் தொடர்கிறது.... என் ருத்ர தாண்டவம்....! என் பயணம்...அடைதலை நோக்கியதானதல்ல....ஆனால் அது கடந்து செல்வதை நோக்கியது....! படைப்பினை நடத்தும் மூல சக்தியின் கிளைகளையும் தழைகளையும் பற்றி, பற்றாமல் படர்ந்து தெரிந்து கொள்ள எனக்குள் என்னை செலுத்திய பயணத்தில் கிளைத்த எண்ணங்களை...எழுத்துக்களாய் கோர்த்து முடித்து இதோ எதார்த்த உலகிற்கு கொண்டு வருகிறேன்.... என் கதையின் எல்லா மாந்தர்களும் போலியான அரிதாரப்பூச்சுக்களில் எதார்த்த உலகம் அறியாத பொய்மையை ப

காவியம்...!

புழுதி கிளப்பும் புரவிகளின் குளம்படிச் சப்தங்களின் பின்னணியில் ஒளிந்திருக்கும் யுத்தத்தில் லயித்திருக்கும் மனதில் அவ்வப்போது வந்து செல்லும் நினைவுகளில் ஒட்டியிருக்கும் ஒரு புன்னகை என் உடலின் இரணங்களையும் கடந்து கிளர்த்தெழச் செய்கிறது விவரிக்க முடியாத உணர்வுகளை! தலைகள் உருளும் களத்தில் கையில் வாளும் நெஞ்சில் காதலும் கொண்டு முன்னேறிச் செல்லும் என் புரவியின் பிடரியில் அடர்ந்திருக்கும் ரோமங்களின் கலைதலோடு சேர்ந்தே என் மனசு கலைக்கிறது உன்னோடு கூடியிருந்த.. போருக்கு முந்தைய அந்த கெட்டியான இரவு...! வீசும் வாள்களில் தாழ விழும் தலைகளில் வெல்லப்போவது நானென்று அறிந்த வீரம் என் உயிர் சேமிக்கும் வேகத்துடன் தீரம் காட்டும் போர்களின் பிரமாண்ட வெற்றிகளுக்குப் பின் சப்தமின்றி ஒளிந்திருக்கிறது... ஒரு காவியக் காதல்...! தேவா. S

விவரிப்பு...!

விவரித்தல்களில் தோற்றுப்போன வார்த்தைகளின் தற்கொலைகளில் பூக்கும் மெளனங்களின் எச்சத்தில் விளையும் சொல்ல முடியா உணர்வுகளின் பிளம்புகளில் பற்றும் தீயின் பரவுதலில் தகிக்கிறது என் உடம்பு...! ஒரு நெரிசலில் இருந்து விடுபட்ட புறப்பாடுகளில் தேங்கிகிடக்கும் அனுபவங்கள் கொடுக்கும் விஸ்தாரிப்புகள் மீண்டும் மீண்டும் என்னை கீழே இழுக்கும் முயற்சிகளுடனான போராட்டங்களுக்கு நடுவே பூக்கும் கனவுகளின் நிஜத்தில் முளைக்கும் சிறகுகள்.. தூக்கிச் செல்கின்றன... எட்டப்படாத உயரங்களுக்கு! எங்கிருந்தோ வேகமாய் வந்த ஒரு காற்று... வேகவேகமாய் கலைத்துப்போடும் மணல்கள் வரையும் ஓவியங்கள் விதவிதாமாய் கலைதலில் மறைந்திருக்கு காற்றின் சந்தோசமும்....ஓவியங்களின் உயிர்ப்பும் மறக்காமல் கொடுக்கும் உணர்வுகளில் பற்ற ஏதுமில்லா கொடிபோல பரவிக் கிடக்கும் எண்ணங்களில் ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன ஓராயிரம் விவரித்தல்கள்...! தேவா. S

சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 4

வேறு ஏதாவது எழுதலாம் என்று நினைக்கிறேன்.. மீண்டும் மீண்டும் நீயே வந்து இடைமறித்து என் எழுத்துக்களை தகர்க்கிறாய்...! இது நேற்று உன்னிடம் சண்டையிட்டதின் நீட்சியா? இல்லை உன்னை மறக்க நினைக்கும் என்னின் தோல்வியா…? விடையறியாமல் விட்டத்தை நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுதில் சிம்மாசனமிட்டே என்னுள் அமர்ந்து விட்டாய்...! உன்னை மறக்க விரும்புகிறேன் என்று உன்னிடம் சொல்லிய அந்த கணத்தில் நான் அப்படி சொல்ல விரும்பாமல் சொல்கிறேன் என்பதை என் கண்கள் உன்னிடம் காட்டியிருக்க வேண்டும்...! என்னை உற்று நோக்கி கண்ணீருடன் சேர்த்து காதலையும் வெளிப்படுத்திவிட்டு... நீ நகர்ந்து விட்டாய்...! உன்னை ஸ்தம்பிக்கச் செய்திருந்த காதல் இப்போது நீ இல்லாத வேளையில் உன் நினைவுகளை அள்ளிக் கொட்டி என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறது! மீண்டும் கடைசியாய் உன்னை சந்தித்த அந்த கல்லூரி மாலையில்...உன் மீதான என் அக்கறை குறைவதை நீ வார்த்தை மத்தாப்புகளாய் மாற்றி கோப அக்னியாய் வெடித்து சிதறிய அந்த தருவித்தல்களில் உண்மையில்லை என்று நான் உரைத்து உரைத்து.... என் உரைத்தல் உன் செவி சேராமால் உறைந்து... விழிகளாலும் வார்தைகளாலும் நீ என்னை விளாசிய அந்த

மறதி...!

என் மரித்தலுக்குப் பின்னான உங்களின் வருகையில் என்னிடமிருந்து உதிரப் போகும் ஆழ்ந்த மெளனத்தில்... இதுவரை நான்... சொன்னது எல்லாம்... பொருளிழந்து போகும்...! உறவுகளின் ஒப்பாரிகளுக்கு மத்தியில் கிடத்தப்பட்டிருக்கும் நானென்று கருதியதின்... மீதிருந்து வீசும் தாய்ப்பாலின் வீச்சத்தில் நினைவுக்கு வருகிறது இப்பிறப்பின் துவக்கம்...! கனவுகளாய் எழுதி வைத்த... எழுத்துக்கள் ஊர்வலமாய் என்னைச் சுற்றி வந்து.. என்னின் உயிருதெழுதலுக்கான பேச்சுவார்த்தைகளின் தோல்வியில் வாசிப்பாளனின் மனதிலேயே.. போய் முடங்குகின்றன மீண்டும்...! மீண்டும் என் தாயின் கருவறை தேடிய பயணம் கொடுக்கப் போகும் மண்ணறையில் நானில்லா நான் தனித்திருந்து மட்கும் நேரத்தில் நானாகிய நான் பயணிக்கும் உருவமில்லா பயணித்தில்... உமது கண்ணீர்கள் குறுக்கிட்டு வெளிப்படுத்தும் காதலுக்காய்... அன்புக்காய் மீண்டுமொருமுறை.. பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில் வந்து விழும் வெளிச்சம்.. மரித்தலே சிறத்தல் என்று சொல்லாமல் சொல்லி....... பால் வீதிகளுக்குள் பறக்கவைத்த பரவசத்தில்....மறந்துவிட்டது.... எனக்கு எல்லாமே...! தேவா. S

ஹாய்.....!

ஒவ்வொரு முறை கட்டுரைகளை எழுதிவிட்டு கட்டுரைக்குள்ளேயே நின்று ஏதோ கருத்துக்களை சொல்லிவிட்டு போவது வழக்காமான நிகழ்வாகிவிட்டது. கட்டுரைகளின் கருத்துக்களுக்கு நன்றி சொல்வதும் சொல்லும் கருத்துக்களைப் பற்றி சிந்திப்பதும் ஒரு தனி நிகழ்வாகவே பெரும்பாலும் அமைந்து விடுகிறது. பெரும்பாலும் வாசகர்களிடம் பேசுவது என்பது இல்லாமையால் ஏதோ ஒரு நெருக்கம் விடுபட்டுப் போவதாக உணர்ந்தேன். அதனால் அடிக்கடி கருத்துக்களை தாண்டி நாம் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்று எண்ணியதின் விளைவு,,,இதோ உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். கருத்துக்கள் கட்டுரைகள், கவிதைகள், உணர்ச்சி பூர்வமான விவாதங்கள் இதற்கு பின்னால் மனிதம் மனிதத்தோடு கைகோர்க்கும் உன்னதமான விஷயம் மறைமுகமாகவே நடந்து கொண்டிருக்கிறது. ஆன் லைனில் சந்துக் கொள்வதும், வலைப்பூக்களில் எழுதுவதும் தாண்டி உறவுகள் ஆரோக்கியமாக கைகோர்க்கப்பட்டு எதார்த்த வாழ்கையின் தூண்களாக மாறவேண்டும். சிக்கல் இல்லாத உறவுகளாக அமைவதில் நல்ல சமுதாயம் அமையும். எழுதிக் கொண்டே இருப்பதற்கு நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வாசிப்பது எல்லாம் நமக்குள் விழுந்து கிரக்கிக்கப்பட்

சாரல்...!

விருப்பம் உனக்கு காபி பிடிக்கும் எனக்கு டீ பிடிக்கும் நான் காபி; நீ டீ....! *** முரண் இருக்கவா போகவா என்றாய்... வாழவா சாகவா என்றால் என்ன நான் சொல்வது? *** விடை ஒரு ஓவியம் வரையச் சொன்னாய் உன் பெயர் எழுதினேன்.... ஒரு கவிதை கேட்டாய் உன் ஒவியம் வரைந்தேன்... ச்சோ ஏன் இப்படி ...என்று உதடு சுழித்தாய்... பதிலே கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்ல? *** நிஜம் இன்னொரு முறை ... என் பெயர் சொல்லி அழை... என் உயிர்ப்பை... உறுதி செய்து கொள்கிறேன்...! *** ஆச்சர்யம்! விலகிப் போகிறாய்... என்றுதான் நினைக்கிறேன்... விலகி நிற்கும் தூரங்களிலும் காக்க வைத்திருக்கும் காலங்களிலும் விசுவரூபமாய் வியாபித்து ... நிற்கிறாயே எப்படி? *** கவிதையா அப்டீன்னா? ஆச்சர்யமாய்.. நீ கேட்டு... ஒரு நொடியில் பட படவென இமைத்து....லட்சம் கவிதைகள் சொல்கிறாயே அது எப்படி? *** புதிர் உன் விழிகள்.... எல்லோரையும் பார்ப்பதற்கும்... என்னை மட்டும் தவணை முறையில் கொல்வதற்குமா? *** கவிதை ...ஷ்..ஷ்.ஷ்...சத்தம் போடாதீர்கள்.. அவள் வருகிறாள்... நான் தொலையப் போகிறேன்...! *** காதல் என்பது ஒரு உணர்வு காற்று மாதிரி பரவி விரவியிருக்கும் .... மனதை திறந்து வ

முகவரி...!

விலாசங்கள் தொலைத்த வழிப் போக்கனாய் தேடல்களில் மிகைத்திருக்கும் அறியாமையில் கிளர்ந்தெழும் எண்ணங்களை மேய்ப்பதிலேயே முடங்கிக்... போகிறது பொழுதுகள்....! மரிக்கும் மனிதர்களில் மறைவாய் ஒளிந்திருக்கும் தொலைந்து போன முகவரிகளை தேடி எடுக்கும் முன்பே... கலைத்துப் போடும் ... கனவு வாழ்க்கையின் வண்ணங்களில் மெய் சிலிர்ப்பதில்... மீண்டும் மீண்டும் தொலைகின்றன... தேடிப் பிடிக்கும் முகவரிகள்...! காலத்தின் போக்கில் கைக்கொள்ளப் போகும் முகவரியைக் வாசித்து... அடையப் போகும் இலக்குகளின் இல்லாமையில்...தேடிய முகவரிகள் விலாசம் இழக்கும் பொழுதுகளில்.... உயிர்தெழும் உண்மைகள் எழுதும் ஓராயிரம் முகவரிகள்... மீண்டும் தயாரகும் தொலைதலுக்காய்...! தேவா. S

சினேகம்...!

எப்போதாவது...வந்து செல்கிறது... உன் நினைவுகள்...! கடந்தகால விதைத்தலின் விசுவாசமாய்....! மெலிதாய் கிளர்ந்தெழும்.. நினைவுகளூடே.... மெளனமான பார்வையால்.. நம் கடந்த கால...சந்தோசங்களை அவ்வப்போது வாரித்தெழிக்கிறாய்....! எதிர்பார்ப்பே இல்லாமல் .... நேசித்ததின் அடையாளமாய்... இன்னமும்....ஒரு எதார்த்த பிம்பமாய்... என்னை வலம் வரும் உன் நினைவுகளோடு... உன் பெயர் சொல்லி... அழைத்து வாஞ்சையோடு... என்னருகே இருத்தி... என் பேத்தியின் தலை தடவும் பொழுதுகளில்..கோர்க்கும்... கண்ணீரில் ஒளிந்திருக்கிறது... இத்தனை காலம் உன்னிடம் சொல்லாத என்....வயதான காதல்! காதல் என்பது பல நேரங்களில் ஒரு தயக்கத்திலேயே சொல்ல முடியாமல் போகும் அளவிற்கு காலத்தின் கணக்குகள் இருக்கும். சொல்லாத காதல்கள் சொல்லாததால் இல்லை என்றாகிவிடுமா? வாழ்வின் பல நேரங்களில் கடந்து வந்த நேசங்களின் நினைவுகள் மரிக்கும் வரை மனதை விட்டு அது அகலாது, பொய்யாய் ஓராயிர மறைத்தல்களை கைக்கொண்டு வாழ்க்கையின் படிகளை கடந்து கொண்டுதானிருப்போம்...கடக்கும் பொழுதுகளில் ஏதோ ஒரு கணங்களில் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் சில நினைவுகள் நினைவுகளை வலுக்கட்டாயமாக கொண்டு வராமலேய

ஓட்டு....!

வரப்போகிறது தேர்தல்... தயாரா மக்களே....? யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற உமது முடிவுகள் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுவது அரசியல்வாதிகளின் கடைசி நேர அணுகுமுறைகளில்...? யாரைத் தேர்ந்தெடுப்பது என்று நீங்கள் தீர்மானிக்க முடியாத அளவிற்கு குழப்பத்தில் உங்களை இருத்தி வைத்திருக்கும் மீடியாக்களும், அரசியல்வாதிகளும் அப்படி செய்ததின் பலனை அனுபவிப்பதில் காட்டும் போட்டிகளில் மதி மயங்கி நீங்கள் செய்யப் போவது அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உங்களை காக்குமா? இல்லை புலம்பிக் கொண்டே ரோடுகளில் பித்தர்களாக அலைய வைக்குமா? யாருக்கு தெரியும் உங்களுக்கு மட்டுமே.... கடை பரப்பி கலர் கலராய் காட்சி செய்து எம்மக்களை முட்டாள்களாக்கும் அந்த ஒரு நாளில் முட்டாள் ஆவதில் ஆர்வம் கொண்டு சில நூறு ரூபாய்களை பெற்றுக்கொண்டு அன்றைய தின சந்தோசத்தில் தன்னை தொலைத்து ஜன நாயகத்துக்கு சவுக்கடி கொடுக்கப்போவது யார்? வேற்று கிரகவாசிகளா? இல்லை குறை சொல்லி புலம்பித் திரியும் மகா பொதுஜனமாகிய நாம்தான்... தீர்மானிக்க முடியாத அளவிற்கு நிரப்பப்பட்டு இருக்கும் பசியும், வேலை வாய்பின்மையும் இன்ன பிற பிரிவினைகளும் மக்களை சிந்திக்க விடாமல் மைண்ட் இலுயூசன் என்

அவள்....!

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது. +2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை. அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை. மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என

பாபு....!

விடிந்து விட்டது....என்பதை உணர்ந்த பாபு ஏன் விடிந்தது என்று கவலையாய் எண்ணத் தொடங்கியிருந்த மனோ நிலைக்கு காரணம் இருக்கிறது. கல்லூரி படிப்பு முடித்து விட்டு ...அடுத்து என்ன? என்ற கேள்விக்குறிக்கு பின்னால் என்ன என்று தெரியாமல்....வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு யோசனையை சொல்லி... வேதியல் பட்டதாரியான அவனை கொத்தி.. குதறிக் கொண்டிருந்தார்கள்......! சந்தோசமாய் கழிந்த கல்லூரி நாட்கள் போய்விட்டதே என்ற மிரட்சியில் இருந்து மீண்டு வரமுடியாத பாபுவின் முன்னால் பக்கது வீட்டுக்காரர்களும், எதிர் வீட்டுக்காரர்களும் கூடிக் கலந்து இருக்கும் இந்த சமுதாயம் ரொம்பவே பயமுறுத்தியது...பற்றாக்குறைக்கு ஒரு ஓரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கல்லூரி காதல் வேறு ரொம்பவே அவனை தொந்திரவு படுத்தியது. துரை… என்ன இன்னும் தூக்கமா...காலையில எழுந்து ஏதாச்சும் உருப்படியா செய்றானா பாரு... நேரத்திலேயே எழுந்து செய்ய வேண்டிய வேலைகளை செய்யணும் வேலை இருக்கோ இல்லையோ.....காலையில எழுந்துடனும்...அலுவலம் செல்ல தயாரகிக்கொண்டிருந்த அப்பாவின் வசவுகள்...பழகிப் போன ஒன்றுதான்...! படுக்கையில் காபி கொண்டு வந்து கொடுத்த அம்மா சொன்னாள்… எழுந்து

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா?.....பதிவுத் தொடர் முடிவு!

ரஜினி படம் ரிலீஸ் மாதிரிதான் ரஜினி பற்றிய தொடரும்....ரொம்ப இடைவெளி விட்டு காத்திருக்க வேண்டியிருக்கிறது. அனேகமாய் இந்த பதிவோட இந்த தொடர் முடிவடையும்னு நினைக்கிறேன்...எழுத விசயங்கள் இருக்கின்றன என்பதை விட நமது யாக்கை எந்த தளத்தில் இருக்கிறது என்பதே முக்கியம்... நான்...பற்றில்லாமல் படர விரும்புவதே காரணம்.... சரி வாங்க தொடருக்குள் போவோம்... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV பாகம் V இனி.... சடாரென்று கதவைத் திறந்து வந்து பார்த்தால் கேட்டுக்கு வெளியே அப்பா வந்து கொண்டிருந்தார்.....கதவைத் திறந்து வீட்டுக்குள் பாய்ந்தேன்... டேப் ரெக்கார்டர் அணைக்கப்பட்டு...எல்லோரு கையிலும் கணக்கு நோட்டும் புத்தகமும் இருந்தது. அப்பா உள்ளே நுழையும் போது ஒரு குரூப் ஸ்டடிக்கான எல்லா தகுதியோடும் அந்த சூழல் இருந்தது. ரஜினியும் தளபதியும் உள்ளே போய் ஒளிந்த இடம் தெரியவில்லை. தளபதி கேசட் வெளியீடு போலத்தான் எந்த ரஜினி படம் வந்தாலும் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொள்ளும். தளபதி ரிலீஸ் நேரத்தில் நாங்கள் +1 படித்துக் கொண்டிருந்தோம்.... காலை 9 மணிக்கு பள்ளிக்கு செல்வது போல கிளம்பி யூனிபார்மோடு நாங்கள் போய் நின்றது அண்

இரவு...!

சுருண்டு கொண்ட புலன்களில் மடிந்து போன புற இயக்கத்தின் எச்சதில் மீந்திருக்கும்.... அடர்த்தியான மெளனத்தில் புலன்கள் தீட்டிய ஓவியங்களின் வர்ணங்கள் காற்றில் மிதக்கும் கனவுகளாய் வழிந்தோட சுவாசத்தின் துணையோடு ஆக்சிஜன் சேமிக்கும்... மூளைகளுக்குள் எப்போதாவது... நான் இருப்பேன்... நிறைவேறாத ஆசைகளுடன்... இமை கவிழும் நேரத்தில் கருமையாய் எனைச் சூழும் மெய்மையை பொய்மை என்று கட்டியங்கூறும் விடியலில் புறம் பாயும் புலன்களின் கூட எழும் அகங்காரங்களில் எப்போதும் மறந்து போகிறது சவமாய் நான் கிடந்த.... முந்தைய இராத்திரி.....! ஒவ்வொரு இரவின் உறக்கத்தையும் தப்பாமல் மறந்து விடுகிறோம். உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா? அப்படி பார்க்கும் தருணத்தில் தெரியும் வெளிச்சம் என்பது பொய்.... கருமையான இருள் எனது மெய்யென்று. மாற்றி மாற்றிப் பழக்கம் கொண்டதாலேயே...... எதார்த்தமான உண்மைகளை எப்போதும் ஒதுக்கியே வைத்து வேண்டுமென்று மறக்கிறோம். உறக்கம்...என்பது ஓய்வு மட்டுமல்ல... நிலையான ஒன்றை உணரவைக்க தினம் எடுக்கும் ஒரு பயிற்சி...! தேவா. S

" இரு....! "

கடவுளே...வினாயகா, முருகா, பெரமையா, ஏழுமலையானே, சரஸ்வதியே, லட்சுமி தாயே, பார்வதி தாயே, அய்யனாரே, வெட்டுடையாள் காளியே, கோட்டை மாரியம்மா, ஆதி பராசக்தி அம்மா, காத்தழிக்கும் என் சிவனே, அல்லா, இயேசு, புத்தா, என் குலம் காக்கும் மாரநாடு கருப்பு........என்னையும் என் குலத்தையும், என் சுற்றத்தையும், எல்லா மக்களையும் சந்தோசமாக இருக்கச் செய் ஆண்டவனே.......................................! ஓங்கி ஓங்கி வேண்டி, எத்தனை கோவில்கள் போனாலும் முட்டி முட்டி வேண்டி, சூடமேற்றி, சுற்றி வந்து, தேங்காய் உடைத்து, மொட்டை அடித்து, காது குத்தி, அங்க பிரதட்சணம் செய்து, மாலை போட்டு, சர்ச்சில் போய் பிரேயர் செய்து, வசனங்கள் சொன்னவுடன் பழக்கப்பட்ட பைபிளுக்குள் இருந்து வாசகம் எடுத்து படித்து, திரு குர் ஆனின் தாத்பரியங்கள் விளங்கி ரசூலின் தியாகத்தில் உருகி, தொழுகையை விளங்கி ஐந்து நேரத்தில் என்னை அர்பணித்து, தம்ம பதத்துக்குள் புகுந்து, சென்னுக்குள் ஊடுருவி, லவோட்சூவின் தாவோயிசமும் கன்பூசியசின் தத்துவத்துக்குள்ளும் பரவி, ஐன்ஸ்டீனையும், ஹைசன் பெர்க்கையும் இன்ன பிற அறிவியலர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு, நீல்ஸ் போரின் ஆட்டம் ம