Skip to main content

Posts

Showing posts from May, 2010

அறைவீடு - பதிவுத் தொடர் முடிவு!

ஒவ்வொரு பதிவிட்ட பின்பும் தோன்றும்..... அட ஜெய்லானியும் ஜெயந்தியும் நமக்கு விருது கொடுத்தார்களே (ஜெ.ஜெ), சக பதிவர்கள் எல்லாம் இதுக்கு விழாவே எடுக்குறாங்களே நாம ஒரு நன்றி கூட சொல்லவில்லையே என்று....விருது கொடுத்து ஊக்குவித்த... நல்ல இதயங்களுக்கு என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்! சரி....அறைவீட்டுக்குள் நுழைவோமா...... இதுவரை - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_28.html இனி.... தூசு வாசனையும், காற்றுபுக வசதியில்லா அந்த அறையில் நிரம்பி வழிந்த ஒரு நூற்றாண்டு வாசனையும் எனக்குள் ஒரு வித...பயம் கலந்த ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க இருட்டில் தட்டுத் தடுமாறி....அறையின் சுவிட்ச் போர்டை தேடி...அந்த 60 வால்ட் மஞ்சள் குண்டு பல்புக்கு உயிர் கொடுக்கிறேன்...அது திக்கி திணறி ஒரு மஞ்சள் நிறத்தை சிறிய அறை எங்கும் பரப்ப...அறையின் வலது புற மூளையில் ஒரு மண்ணால் ஆன குதிர் என்று சொல்லக்கூடிய நெல் கொட்டி வைக்கும் பாத்திரம் அதை ஒட்டி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும் மண்பானைகள்....இடது புற மூளையில் வரிசையாய் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட ரங்கு பெட்டிகள்....கதவு திறந்தவுடன் அதன் பின்புறத்தி

நட்ப கூட கற்பு போல எண்ணுவேன்!

நட்பு பற்றி எதுவும் எழுதுவதில்லை என்பது... சிங்கப்பூரில் இருந்து என் நண்பன் சிறுகுடி ராமு அவ்வப்போது என் மீது வைக்கும் குற்றச்சாட்டு. ஓராயிரம் நண்பர்கள் நம்மைச்சுற்றி இருந்தாலும் மிகைப்பட்ட பேர்கள் நம்மால் நேசிக்கப்படுபவர்களாக இருப்பார்கள் ஆனால்... நம்மை நேசிப்பவர் என்பவர்கள் அதிக பட்சமாக ஒருவர் அல்லது இருவராயிருக்க முடியும். இது அடையாளம் காண்பதற்கரிய ஒரு கடினமான விசயம்தான் என்றாலும் காலத்தின் ஓட்டத்தில் எல்லாம் கற்பூரமாய் கரைந்து விட ஏதோ ஒரு சுடர் மட்டும் ஒளி விட்டு வீசிக் கொண்டிருக்கும். அந்க ஒளி மழையிலும், காற்றிலும், புயலிலும் நம்மைச் சுற்றி வெளிச்சம் வீசிக் கொண்டிருப்பதை சட்டென்று ஏதோ ஒரு கணத்தில் உணர முடியும் அப்படிப்பட்ட என்னைச் சுற்றிய வெளிச்சம்தான்.......... சலீம் இப்போது கூட இப்படி நான் எழுதுவதை அவன் மிகைப்படுத்தி கூறுவதாக கூறி நிராகரித்து விட்டு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சாதாரணமாய் சொல்லக் கூடிய அளவிற்கு நட்புக்கரசன் அவன். நல்ல நண்பனுக்கான அளவீடு என்ன...? நான் சொல்கிறேன்.... 1) ஒட்டு மொத்த உலகமும் என்னை மீது களங்கம் கற்பித்து அதற்கான ஆதரங்களைத் திரட்டிக் கொடுத்தாலும

அறைவீடு.....!

. எப்போது எது வேண்டுமானாலும் எங்க தாத்த கிட்டதான் கேக்கணும்..அரிசி வேணும்னாலும் சரி...பருப்பு வேணும்னாலும் சரி... எண்ணை வேணும்னாலும் சரி..அறவீடு என்று சொல்லக் கூடிய அந்த பிரத்தியோகமான சிறிய அறையின் சாவி தாத்த கையிலதான். 75 வயசனாலும் அவரது பேச்சில் நிதானம் குறையவில்லை! நெடு நெடு உயரம் செக்க செக்க சிவந்த மேனி..... முன் நெற்றியில் ஏறிய வழுக்கை வெள்ளை வெளெர் முடி கழுத்தில் ஒற்றை ருத்ராட்சம்...முன் நெற்றி முழுதும் பட்டையய் பூசிய திரு நீறு. தலை மட்டும் லேசாய் ஆடத்தொடங்கியிருந்தது. சின்ன வயதில் விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்கு போன உடனேயே அவர் கிட்டதான் எல்லோரும் போவோம்... ! என்னுடைய கையை அழுந்த பிடித்து நல்லாயிருக்கியா அப்புன்னு அவர் கேட்பதிலும் கையின் அழுத்தத்திலும் அவரின் அன்பு தெரியும். 6 பெண் பிள்ளைகளும் அதற்கப்புறம் எங்க அப்பாவும் பிறந்ததனால் அவருக்கு ஆண் பிள்ளைகள் என்றால் பிரியம் என்று அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். அதுவும் மகன் வயித்து பேரன் என்பதால் தாத்தவின் பிரத்தியோக அன்பு எனக்கு கிடைக்கும். அதிகாலையில எழுந்துடுவாரு எத்தன மணின்னு சொல்ல முடியல எனது அரைத்தூக்கத்தில்...."தென்னாடுடைய

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் IV

இடைவிடாத தொடர் நிகழ்வுகளும் எண்ணங்களும் ஏதேதோ திசையில் எப்போதும் இழுத்துச் செல்லும் அப்படித்தான் இந்த தொடரையும் தொடரவிடாமல் எங்கெங்கேயோ சென்று விட்டேன்...சரி..மீண்டும் ஒரு யூ டர்ன் அடித்து தொடருக்குள் நுழைவோம். பிளேடுடன் நான் வேறு ரொம்ப நேரம் ஸ்டில் பொசிசனில் எவ்வளவு நேரம் நிற்பது.... இது வரை பாகம் I - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_02.html பாகம் II -http://maruthupaandi.blogspot.com/2010/05/ii.html பாகம் III- http://maruthupaandi.blogspot.com/2010/05/iii_07.html இனி.... அறைக் கதவை தாளிட்டுக் கொண்டு பிளேடையே பார்த்துக்கொண்டிருந்த நன் வலது கை ஆட்காட்டி விரலுக்கு அருகே பலமுறை பிளேடை கொண்டுபோனாலும் கையை வெட்டிக்கொள்ள முடியாமல் ஏதோ ஒன்று பின் இழுத்தது அதற்கு பெயர் பயமா அல்லது ஆழ்மனது எனக்கு அறியாமல் தடுத்ததா?என்று எனக்குத் தெரியவில்லை. பிளேடால் கையை வெட்டினால் வலிக்கும் என்று நன்கு அறிந்திருந்த மனதை ரஜினி ரசிகன் என்னு ஒரு கவர்ச்சி மெல்ல மெல்ல பின்னுக்குத் தள்ளியது. மெல்ல கைகளால் வலிக்காதவாறு பிளேடால் வலது கை ஆட்காட்டி விரலால் சுரண்டினேன் (வெட்ட வில்லை...) ஏன்னா வலிக்கு

தேடல்.....!

விவரிக்க முடியாத ஒரு மனோ நிலையில் ஏதோ ஒரு நிகழ்வு மனசை காயப்படுத்திய அந்த வேளையில் வரும் கண்ணீரை எழுத்துக்களாக்கிப் பார்த்த போது தடுக்கி விழுந்த வேகத்தில் ஒரு எதார்த்த பதிவராகிப் போனேன். எத்தனை எழுத்தாளர்களை கடந்து சென்ற போதும் பாலகுமாரானை இதுவரை விடாத மனசைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இயல்பான எழுத்தா, காதலைச் சொல்லும் பாங்கா, காமத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் சரியாக புரிந்து கொள்ளச் செய்த விதமா? கடவுளைப் பற்றி கற்றுக் கொடுத்த கற்பிதமா? எதில் லயித்துப் போனேன் என்று தெரியாத அளவிற்கு இன்று வரை இந்த பாலகுமாரன் மீதான காதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஒரு கூட்டமில்லாத மாலை வேளையில் அவரை பார்த்த போது நேரே போய் பேச முடியவில்லை. யாரோ இருவருக்கு திருஞான சம்பந்தர் பற்றி அவர் விவரித்து பூம்பாவை என்ற பெண்ணின் சாம்பலைக் கொண்டு தேவார பதிகம் பாடி உயிர்ப்பித்தது பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். நான் அவர்களுடன் சம்பந்தப்படமால் அந்த விளக்கத்தை தூர நின்று கேட்டுக் கொண்டிருந்தேன். அவருக்கு அறியாமலேயே அவரின் அருகாமையை நன்றாக அனுபவித்தேன். கோவில் விட்டு போக

இராவணன்...!

காலங்கள் தோறும் வஞ்சிக்கப்பட்ட ஒரு இனமாய் திராவிட இனம் இருந்து வந்திருக்கிறது. செய்தி பரிமாற்றங்களாய் இருக்கட்டும் நாட்டில் செயல் படுத்தப்படும் நல திட்டங்களாய் இருக்கட்டும்....ஏன் பிரதமர் பதவியாய் இருக்கட்டும் இவை எல்லாம் நமக்கு நேரடியாக மறுக்கப்படாவிட்டாலும் தேர்ந்த காய் நகர்த்தல்கள் மூலம் மாற்றிவைக்கப்பட்டுள்ளன. புராணங்கள் என்று நமக்கு போதிக்கப்படும் எல்லாவற்றிலும் திராவிடனைப்பற்றிய வெளிப்பாடு கொஞ்சமும் நாம் எதிர் பாராத வகையில் இருந்தாலும் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு மூளைச்சலைவியினால் நாமும் அதை சரியென எடுத்துக் கொண்டு அறிவுக்கு எட்டாத விசயங்களை கூட ஒத்துக் கொள்கிறோம். சர்ச்சைக்குரிய ஒரு களம்தான் இது என்பதில் மாற்றமில்லை, என்னுடைய கண்ணோட்டம் தவறாக இருக்கலாம் உங்களின் பின்னூட்டங்களின் மூலம் தெளிவான ஒரு நிலை கிடைக்கலாம் என்ற ஆவலில்தான் இப்போது நான் நமது சூப்பர் கதா நாயகனான....இரவணேஸ்வரன் எனப்படும் சக்கரவர்த்தி இராவணனை மீண்டும்......உயிர்ப்பிக்கிறேன்........ திருநெல்வேலியிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற தமிழ் நாட்டின் சைவ குலம் சேர்ந்த இராவணேஸ்வரன் அடிப்படையில் தமிழன் திராவிடன். கடுமையான சிவ

அது அதுவாகவே...இருக்கிறது... !

அது அதுவாகவே...இருக்கிறது... அலட்டலும்...அறிமுகமுமின்றி.. தேவைகளை எல்லாம் சூன்யமாக்கி சலமின்றி...அது இருக்கிறது. விதிகளை எல்லாம் புறம்தள்ளி.... புலன்களுக்கு புலப்படாத... ஒரு புன்னகையுடன்! ஆர்ப்பாட்டமான மனதுக்குதான்.... எல்லாம் தேவையாகி இருக்கிறது... கடவுளையும் சேர்த்து.... மெல்ல மெல்ல நிகழும் நிகழ்வுகளோ..எல்லாவற்றையும் உடைத்துப் போட்டு விடுகிறது... பல நேரங்களில் கடவுளையும் கூட! கேள்விகள் கேட்கும் மனதுக்கு எப்போதும் புரிவதில்லை... பதில்கள் இல்லையென்று...! பதிலே இல்லாமல் கேள்விகளே... பதிலாய் மாறும் விந்தைதான்... பல நேரங்களில் புரியாமல்... தர்க்க வாய்ப்பாட்டுக்குள் தள்ளிவிடுகிறது மனிதனை! ஆசைகளின் விளிம்புகள் எல்லாம் அறியாமையிலிருந்து எட்டிப்பார்க்க.... மரணத்தை மறுக்கும்... மனிதனுக்கு தேவைப்படுகிறது... ஆத்திகமும் நாத்திகமும்....! மற்றபடி...அது அதுவாகவே...இருக்கிறது...! எப்படி வேண்டுமானால் கற்பிதங்கள் கொள்ளுங்கள் மனிதர்களே....! உங்களின் எந்த செயலும் அல்லது சொல்லும் அதை பாதிப்பதில்லை...இன்னும் சொல்லப்போனால் உங்களின் அறியமையையும் தர்க்கங்களையும், பல விதமான நம்பிக்கைகளையும் உள்ளடக்கி அது....ஆன

இலக்கில்லாத பயணம்...!

கட்டாய நகர்த்தலாய்.... நகர்ந்து கொண்டிருக்கிறது....காலம் இந்தக் கணத்திலேயே.... இழுத்து பிடித்து நிறுத்திவிட... ஓராயிரம் முறை முயன்று..... தோல்வியின் வெட்கத்தில்... துவண்டு போய் கிடக்கிறது மனது! கடந்ததெல்லாம்... மரத்தில் அடித்த ஆணியாய்... பிடிங்கிய பின்னும் வடுக்களை... சுமந்து கொண்டு நினைவுகளாய்.. ஏதேதோ நினைத்தும் .... மறக்காமல் வேறு எங்கேயோ கொண்டுபோய்... நிறுத்தி விடுகிறது எதிர்காலம்! இரவும் பகலும்..போட்டி போட்டு நாட்களை பின் தள்ளிவிட... கடலில் மிதக்கும் கட்டை போல இலக்கில்லாத பயணமாய்.... நித்தம் காற்றடிக்கும் திசையின் நகர்தலைத்தான்.. வாழ்க்கை என்று கற்பிக்கிறது....மானுடம்! எந்த ஒரு அர்த்தமும் இல்லாவிட்டாலும் கற்பனைகளில் மனிதனுக்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. ஆத்மார்த்த கேள்விகளும் பதில்களும் தனக்குள்ளேயே இருக்கும் போது புறத்தில் கடவுள் என்று விசயம் தேவைப்படுகிறது. டண் கணக்கில் காதல் அவனுக்குள்ளேயே இருக்கிறது இருந்தாலும் புறத்தில் ஒரு சக்தி ஆண் என்றும் பெண் என்றும் ஒரு தூண்டுதலுக்காய் தேவைப்படுகிறது. வினையூக்கிகளே இப்போது மொத்

உன்னை மறுக்கிறோம்...காலமே...!

வல்லூறுகள்...வகுத்தளிக்க.... எமக்கு ஒரு வாழ்க்கையா? குள்ள நரிகள் தலைமை தாங்க.... வேங்கைகள் பணிந்து செல்வதா... பிழைத்துப் போன வரலாற்றுக்கு எம் தமிழனம் பழியாவதா? உன்னை மறுக்கிறோம்...காலமே... எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே! எமக்கான மண்ணில்... யாரடா... நீ ஆட்சி செய்ய....? எம் மக்கள் கண் பார்க்க... உம் பார்வை எமக்கெதற்கு..... கற்பு நெறி கொண்ட...எம் பெண்டிர்க்கு கறுப்பு ஆடுகள்...காவலெதற்கு...! உன்னை மறுக்கிறோம்...காலமே... எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே! மார்பகம் உறிஞ்சி...உறிஞ்சி.... மரித்த தாயென்றரியாது.. தவித்த எம் குழந்தைகள்...எல்லாம்... மரத்துப் போய்விடும்...அல்லது நீதி மரித்துப் போய்விடும் என்றா நினைத்தாய்? வெற்று மோகத்திலில்லாது. தமிழ் ஈழ தாகத்தில்....இனி... தழைக்கும் என் சந்ததி...! உன்னை மறுக்கிறோம்...காலமே... எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே! போர் முடிந்த்து போனதனால்... எம் வடு மறைந்து போகுமா.... கல்லறையான எமது....உறவுகள்.. கண் முன் இனி தோன்றுமா...? நீவீர் வென்று விட்டோம் .. என்று சொன்னால் - அது வெற்றியென்றாகுமா? உன்னை மறுக்கிறோம்...காலமே... எம் எதிரிகள்..கருவறுக்கிறோ

தமிழீழம் வென்றெடுப்போம்....!

என்னமோ...விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்து விட்டோம்...வெற்றி கண்டு விட்டோம் என்று கொக்கரிக்கிறாயே...ராஜ பக்ஸே உன் கூட சேர்ந்து உன் ராணுவமும் கொக்கரிக்கிறதே...உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா? உள் நாட்டுக்குள் விடுதலை கேட்டு தார்மீக அடிப்படையில் உங்களின் அராஜகம் தாங்காமல் போராடிய ஒரு இளைஞர் கூட்டதை அழிக்க.....உலக நாடுகள் எல்லாம் வரவேண்டும் என்றால்....மறவர் படையின்...மரத் தமிழனின் வீரம் எத்தகையது என்று நாம் உணர முடியும். வல்லரசுக் கனவோடு....இன்னும் ஊழல் நிறைந்த சாக்கடை அரசியல் நடத்தி கொண்டு....மகாத்மாவின் பெயரை சொல்லிக் கொண்டு.......பழிவாங்கும் உணர்வையும் மென்று வெற்றிலை போட்டு தன் மேலேயே...உமிழ்ந்து கொண்ட....பாரதமே.... நீங்கள் எதையும் சாதித்து விட வில்லை....என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்....மேலே...சீனாகாரன் வருவான் உங்களை கேள்வி கேட்க....அப்போது முடிந்தால் பதில் சொல்லுங்கள்...! இலங்கையில் நீங்கள் செய்திருப்பது....முரசு கொட்டிய வெற்றியில்லை....கேவலமான.....அசிங்கம்.....தரும புத்திரர்களே.....ஏன் சகுனியைப் போல் நடந்து கொண்டீர்கள்....வாழ்விழந்த மக்களின் சாபம்..என்னவெல்லாம் உங்களை செய்யுமோ? இ

மறந்தால் நாம் தமிழரில்லை...!

ஒரு வருட காலம் ஆகிவிட்டது....இன்றோடு.. கடந்த மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமை ஜென்ம ஜென்மமாக தமிழனின் கண் முன் நின்று ஆடிக் கொண்டே இருக்கும், ஆண்களையும் பெண்களையும் கொன்று குவித்து உலக நாடுகளுடன் சேர்ந்து ஒரு வெறியாட்டம் ஆடி..போர் மரபுகளை எல்லாம் உடைத்து....தமிழனின் ரத்தம் குடிக்கப்பட்ட நாள். கேணல் சூசையின் கடைசி பேச்சினை நான் யூ ட்யூப் வழியாகக் கேட்டேன்.....காட்சிகள் இப்போதும் கண் முன் விரிந்து நிற்கிறது..... " எங்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்....எங்கு நோக்கிலும் விமானங்கள் குண்டுகளை இட்டு தமிழர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது...எங்கு பார்த்தாலும் பிணங்கள் ...இரத்தம்... பச்சிளம் குழந்தைகள் தாய்மாரை இழந்தும்...பெண்கள் குழந்தைகளை இழந்தும்....கைகால்கள் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும்....ஆண்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் பெரிய பிழையை இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது....." சர்வதேச சமுதாயமே சரணடைகிறோம் என்று அழைப்பு விடுத்தார் கேணல் சூசை, மன்னிப்பும் மனிதனேயமும் தமிழன் உலகிற்கு கற்றுக் கொடுத்த பாடங்கள்....! அதை சரியா

" இரண்டு இட்லி கொடுப்பா...."

வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் காலமே நாம் வாழும் காலத்திலேயே பதில் சொல்லி விடுகிறது. நம்முடைய அன்றாட நெரிசலில் சிக்கி கொண்டு அந்த இரைச்சலில் காலத்தின் பதிலை கேட்காமலும் கவனிகாமலும்தான் விட்டு விடுகிறோமே தவிர.....காலம் பதில் சொல்லாமல் எப்போது இருந்ததில்லை. சின்ன வயதில் எப்போதும் ஏதாவது கேட்டு பெற்றோர்களை நச்சரிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது....எல்லா நேரங்களிலும் நாம் கேட்டது கிடைப்பதில்லை... மிகைப்பட்ட நேரங்களில் மறுக்கப்பட்டிருக்கிறது... அதனால் நிறைய கோபம் அப்பா அம்மா மேல வரும். எனக்கு அப்படித்தான்.....அப்ப செய்யும் எந்த செயலும் அர்த்தம் விளங்காமல்... கோபம் வரும். எதுக்கு 10 ஃபேன் போட்டுகிட்டு படுக்கணும்... பெட்ரூம்ல ஒரு பேன் ஹால்ல ஒரு ஃபேன்னு ஏன் இப்படி....? அந்த ஃபேன ஆஃப் பண்ணு...இந்த லைட்ட ஆஃப் பண்ணுனு ஏன் இப்படி தொல்ல பண்றாரு...? மனுசனுக்கு வாழ்க்கைய வாழவே தெரியல.. எப்போ பாத்தாலும் கஞ்சத்தனம்தான்... ! அம்மாகிட்ட கூட...ஏன் இவ்வளவு பழைய சாதம் மிஞ்சுது? கொஞ்சமா சாதம் செய்யக்கூடாதா என்று நாங்கள் எல்லாம் இட்லி சாப்பிடும் போது..... அவர் அந்த பழைய சாதத்தை சாப்பிடும் போது பத்த

கலைக்கப்படும் கனவுகள்...!

அத்து மீறி அடுத்தவர் வாழ்க்கையிலும் விருப்பு வெறுப்பிலும் மூக்கு நுழைத்து கருத்துக்களை திணிப்பது நமது கலாச்சாரமாய் ஆகிவிட்டது என்று கூட சொல்லலாம்...! பக்கத்து வீட்டுக்காரன் என்ன சம்பாதிக்கிறான்...அவன் பையன் +2 வில் எத்தனை மார்க்? அவரது மகள் யாரையும் காதலிக்கிறாள் என்று எத்தனை எத்தனை அத்துமீறல்கள் நடக்கின்றன நமது சமுதாயத்தில்...! தன்னைப்பற்றி சிந்திக்க திரணியில்லாமல் தான் தோன்றித்தனமாக அடுத்தவரை பற்றி சிந்திக்கவும் விமர்சனம் செய்யவும் ரொம்ப வசதியாய் பழகிக் கொண்ட ஒரு வக்கிரபுத்திதான் அடுத்தவன் கதை பேசுவது..... அது அலுவலகம் ஆகட்டும் டீக்கடை ஆகட்டும்... வீட்டு வாசலில் அமர்ந்கு பேசும் பெண்களாகட்டும், குழாயடியில் தண்ணீர் பிடிக்கும் அந்த நேரத்தில் பத்து வீட்டு சமாச்சாரத்தை பலகாரம் செய்யாவிட்டால் இவர்களுக்கு தூக்கம் வராமல் போனது வியாதியா? இல்லை சமுதாயத்தை பிடித்துள்ள பிணியா? நண்பர்கள் கூட்டத்தோடு பேசிக் கொண்டிருந்த ஒரு கல்லூரி விடுமுறை தினத்தில் ஒரு பெண் அவளுக்குப் பிடித்த ஆடையை...ஒரு ஸ்கர்ட்டும் டி சர்ட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய கணவனுடன் ரோட்டில் செல்கிறாள்.. கையிலும் இடுப்பிலுமாக இரண்டு

சந்தியா குட்டியின் பிறந்த நாளும்... நம்ம ஊர் நினைவுகளும்...!

துபாயிலிருந்து அபுதாபிக்கு சென்று கொண்டிருக்கிறேன்....பாலைவனத்துக்கு நடுவே.... எப்படி இந்த சாலைகளை தரமானதாக உருவாக்கிஅதை பராமரிக்கிறார்கள் என்று வியந்து கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.....உச்சி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் வழியில் நமது ஊர் உணவுகள் கிடைக்காது என்பதால் துபாயில் இருந்தே...சரவண பவனில் தயிர் சாதமும், சாம்பார் சாதமும் வாங்கிக் கொண்டு சென்றோம். நல்ல உச்சி வெயில் எங்காவது வண்டியை நிறுத்திவிட்டு மதிய உணவை முடிக்கலாம்.....என்று நிறுத்த நிழல் கூட இல்லையே என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போது சரலென்று...மனம் ஊரை நோக்கி பறந்ததது... நம்ம ஊரில் எல்லாம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்லும் வழி நெடுகிலும் எத்தனை மரங்கள் இருக்கும்....சாலையே தெரியாத அளவிற்கு....எவ்வளவு நிழல் இருக்கும்.....சாலை அப்படி இப்படி இருந்தாலும்.....ஒரு உயிர்ப்பை நமது ஊரில் பார்க்க முடியும்.... ஊர் என்றால் ஒரு கண்மாய்க்கரை ஓர மரமாக வண்டியை நிறுத்திவிட்டு....உணவை முடித்துவிட்டு.....கண்மாய் தண்ணீரில் பாத்திரம் கை எல்லாம் கழுவி விட்டு...எவ்வளவு வெயிலாய் இருந்தாலும் குளு குளு காற்று வீசும் மரத்தினடியில் கொ

காலத்தின் சாட்சி....!

நண்பர் ஜீவன் (தமிழ் அமுதன்) சொல்லித்தான் என்னுடைய " பணம் தேவையில்லை மனமே போதும்" என்ற கட்டுரை விகடன் குட் பிளாக்ஸ் வரிசையில் வந்திருகிறது என்று தெரியும். எழுத்தின் வீச்சில் என்னுடைய வலைப்பூ தீப்பிடித்து எரிவததோடு வலைப்பூவினை விட்டு விட்டு வெளியேறும் போது ஒரு சிறு பொறியை கொண்டு செல்லுமானால் அது எழுத்தின் நோக்கதிற்கு கிடைத்த வெற்றி. என்னைப்பற்றி அறிவதைவிட....என் எழுத்துக்களின் பின் புலத்தில் இருக்கும் வீச்சு முழுதாய் ஒருவரிடம் சென்றடைந்தால் அதுவே நிம்மதி....! ஆதங்கங்களை.... மனித அவலங்களை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு ஒப்பற்ற வேலையை இன்று நமக்கு ஊடகங்கள் செய்கின்றன. நல்ல எழுத்துக்களை விரும்பிப்படிக்கு வாசகர்களின் வட்டம் அதிகரிக்க வேண்டும் ஆனால் அதற்கு எதிர்மறையாக ....உணர்ச்சி சார்ந்த விசயங்களுக்கும், மதம் சார்ந்த விசயங்களுக்கும், சினிமா சார்ந்த விசயங்களும் மக்கள் அதீத ஆர்வம் காட்டுவதற்கு காரணம்.... அறிவின் விரிவாக்கத்திற்கு என்று சொல்ல முடியாது.. .மிகைப்ப்ட்ட நேரங்களில் இவை எல்லாம் உணர்ச்சியினை தூண்டி விட்டு.... மனிதர்களை செயல் படச் செய்வதாகவே எனக்குப் படுகிறது. சில நண்பர்கள்

அந்த ஒருவர்... யாராய் வேண்டுமானாலும் இருக்கலாம்......

வானவில் போலத்தான் வாழ்க்கையின் நிகழ்வுகளும் கண நேரத்தில் கண் முன் தோன்றி மறைவது போல எத்தனை எத்தனை நிகழ்வுகள் நம் கண் முன்னே தொன்றி மறைந்து விடுகின்றன சில நிகழ்வுகள் எத்தனை காலம் ஆனாலும் ஆறாத வடுவாய் நம் நெஞ்சில் சில ஞாபங்ககளை விட்டுச் செல்கின்றன. அவற்றின் படிப்பினைகளும் எப்போதும் சேர்ந்தே நம்முடன் பயணிக்கின்றன.... சென்னையில் ஒரு நான்கு நட்சத்திர ஓட்டலின் ரிசப்ஷனிஸ்டாக நான் வேலை செய்து கொண்டிருந்தேன்....! பலதரப் பட்ட மனிதர்கள் ....ஆடம்பரமான உலகம் "கெஸ்ட்ஸ் ஆர் ஆல்வேய்ஸ் ரைட் " என்ற மனதில் பதிவு செய்யப்பட்ட வாசங்களுடன் பணியாற்ற வேண்டியது எமது கடமை. அறையில் ஹாட் வாட்டர் (hot water) vaரவில்லையென்றாலும் சரி, ரூம் சர்வீஸின் காஃபியில் சர்கரை அளவு குறைந்தாலும் சரி...அறையில் ஏசி க்காற்றின் குளுமை குறைஞ்சாலும் சரி.... முதலில் பந்தாடப்படும் இடம் ப்ரண்ட் ஆபீஸ் (FRONT OFFICE). கோபமாய், குளுமையாய், எரிச்சலாய், சோகமாய், பதட்டமாய், ஆடம்பரமாய், பகட்டாய், சந்ஷோசமாய் என்று எல்லா தரப்பினருடனும்.. .புன்னகை புரிந்து நடந்து கொள்ளும் ஒரு இடம். பார் க்கு ரெகுலராய் வரும் ஒருவர் வெளியில் சென்று இரவு பத

கடவுள் ஏன் இருக்க கூடாது?

வாழ்வின் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு இலக்கு நோக்கிப் பயணிப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருந்தாலும் சுழற்சியின் வேகத்தில் ஓடி கொண்டிருக்கும் மனதுக்கு நின்று நிதானிக்க மிகைப்பட்ட நேரங்களில் தெரிவதில்லை. ஏதோ ஒரு இறப்பு, ஒரு தோல்வி, அல்லது இழப்பு என்று மனிதனுக்கு வரும் கணங்களில் மட்டும் இந்த மனசுழற்சி மெதுவாய் நின்று ....என்ன இது வாழ்க்கை என்ற எண்ணமும் ஏன் இப்படி எல்லாம் நகர வேண்டும்? மேலும் எதை நோக்கி நகர்கிறோம் என்ற கேள்வியும் நெஞ்சை கவ்விப்பிடிக்கின்றன. மீண்டும் ஏதேனும் ஒரு மாய நிகழ்வின் மூலம் வெளியே வந்தவுடன் இந்தக் கேள்விகள் அறுபட்டுப் போய் வழக்கமான ஓட்டத்தில் ஓடிக் கொன்டிருகிறோம். இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் ஆயிரம் முறை நிகழ்ந்தாலும்...எதை நோக்கிப் போகிறோம் என்ற கேள்வி மறந்து மட்டும் போகிறது....ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் வெளியே ஓராயிரம் இரைச்சல்கள் இருந்தாலும் ஆழ்மனதில் எதை நோக்கிப் போகிறோம் என்றும் ஏன் போகிறோம் என்ற கேள்வி கரைதொடும் அலைகள் போல மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டுதானிருக்கிறது. கடவுள் என்ற விசயத்தைப் பொறுத்த வரைக்கும் இன்று வரை மனிதர்கள் ஒரு குழப்பத்தில் தானிருக்கிறார்க

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் III

ரொம்ப நாளா விசிலோடு காத்திருக்கும் புலவன் புலிகேசிக்கும்.....என் நண்பன் சிறு குடி ராமுவிற்கும் நன்றி கார்டு போட்டபடி....சீனுக்குள் போவோமா..... இது வரை பாகம் I - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_02.html பாகம் II -http://maruthupaandi.blogspot.com/2010/05/ii.html இனி..... அப்பா உள்ளே வந்து விட்டார்.... நான் நிமிர்ந்து அவர் முகத்தை பாரத்து....தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் ரஜினியை நினைத்துக் கொண்டு....வாயைத் திறந்து ரஜினிய உங்களுக்கு ஏன் பிடிக்காது என்று .................கேட்க நினைத்து வாயைத் திறந்தால்.....சத்தம் தொண்டையை விட்டு வெளியே வருவதற்குள் மீண்டும் உள்ளேயே சென்று விட்டது....ரேவதி தேவர் மகனில் சொல்வது போல வெறூம் காத்து தான் வருது....! உலக அப்பாக்களுக்கு ஒரு விசயம் நான் சொல்ல விரும்புகிறேன், தயவு செய்து மீசையை பெரிதாக வைக்காதீர்கள்...! அப்பா கிட்ட வந்து...என்னடா....என்ன ஒழுங்கா படிக்கிறியான்னு அதட்ட...படிக்கிறேன்பா என்று நான் சொன்னது கூட கீச்சுக் குரலில் தான் வந்தது....ச்சே.....எங்கே போச்சு என் வீரம் எல்லாம் என்று நான் குனிந்த படி யோசிக்கும் போது..... கிச்சனிலிர

பணம் தேவையில்லை மனம் போதும்.....!

காட்சி 1 இடம்: துபாய் International Airport நேரம்: இரவு 20:30 நிகழ்வு 1 கொழும்பு வழியாக திருச்சி செல்லும் ஏர் லங்கா.. விமானத்துக்காக லக்கேஜ் ஸ்கேனிங் வரிசையில் நான் குடும்பத்துடன்... ஹேண்ட் பேக் தோளிலும் கையிலும் என்னிடம் என் மனைவியிடம் ஒரு கையில் பேக் மறு கையில் குழந்தை... ஓடோடி வருகிறார் அந்த பிலிப்பினோ....பணியாளர்....வெயித் மேதம் ..ஐ கெல்ப் யூ.... (wait madam, i help you) என்று சொல்லிக் கொண்டே...என்னிடம் இருந்தும் என் மனைவியிடம் இருந்தும் பேக்கை வாங்கி ஸ்கேன் மெஷினுள் வைத்து மீதியுள்ள லக்கேஜ் எல்லாம் எடுத்து வைக்க உதவி செய்கிறார்... நான் நன்றி சொல்ல முயல்வதற்குள்....அவர் சொல்கிறார்...தேக்யூ சார்...தேக்யூ மேடம்! நிகழ்வு 2 போர்டிங் போடுவதற்காக நிற்கிறோம்....வெயிட் எல்லாம் சரியாக இருக்கிறது....ஒரு லக்கேஜ் மட்டும் 30 கிலோவிற்கு அதிகமாக இருக்கிறது...விமான விதிமுறைகள் படி.... நான் கொண்டு செல்ல முடியாது.... அதனால் அந்த பேக்கிங் செய்யப்பட்ட லக்கேஜை பிரித்து வேறு ஒரு சிறிய பேக்கில் மாற்றிக் கொள்ள வேண்டும் அப்போது நேரம் 21:20 எனது விமான நேரம் 23:00....கைக்குழந்தையோடு மனைவி....ஒரு ஓரமாய் என்ன

எரிமலைகள் வெடிக்கட்டும்...! பதிவுத் தொடர் முடிவு

இதுவரை பாகம் I பாகம் II இனி... ஈழப்போரட்டம்.....என்பது ஒரு தனி நாடு கோரும் மக்களின் போராட்டம் என்பதைக் காட்டிலும் அது அண்டை நாடுகளின் உதவியுடன் முறியடிக்க முயன்ற நயவஞ்சக செயல் என்பதுதான் இப்போது உள்ள பிரச்சனை... நீ என்னை அடி... ஆனால் நேர்மையாக அடி.....ஆனால் முதுகில் குத்தாதே....100 பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது எமக்கு தர்மம் இல்லை....!! எல்லாவற்றிலும் ஒரு மரபை கொண்டது தான் தமிழ்ச் சமுதாயம்....எங்களுக்கு எல்லாம் யுத்த மரபு என்று ஒன்று தெரியும்...அது வெள்ளை கொடி பிடித்து வந்தவனை சுட்டுக் கொல்லாது....அது எதிரியாய் இருந்தாலும் அவனுக்கும் பசிக்குமே என்று கவலைப்படும்.... நாகரீகத்தை உலகிற்கு சொல்லிக் கொடுத்த ஒரு இனத்தை இன்று அடக்குமுறையால் நசுக்கி இருக்கிறது இந்த சர்வதேச சமுதாயம். ஆயுதங்கள் தூக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையினை உருவாக்கிய மிருகங்கள் இன்று அஹிம்சை பற்றி எல்லாம் போதனை செய்கின்றன்.....! புத்தரை வழி படும் இந்த மேதாவிகள் எங்கு பார்த்தாலும் பெளத்த கோவில்களாய் எழுப்பி வருகிறார்களாம் ...எதற்கு...வன்முறையை புத்தருக்கும் போதிக்கவா....? தயவு செய்து புத்தனை தொடர்வதாய் இனியும் சொல்லாதிருங்

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் II

கண்ணா வாழ்கையில ஒரு விசியத்த..கண்டிப்பா தெரிஞ்சுக்கணும் எப்பவுமே ஒரே ரூட்ல நாம போனா ரெடிமேடா நமக்கு ஒரு பேர வச்சி....ஓரங்கட்டிடுவாங்க...லைஃப்ப எப்பவுமே...லைவா வச்சிக்கணும்....சரி...இப்போ...ஸ்ட்ரெய்ட்டா..மேட்ட்ருக்கு வர்ர்ட்டா.... இதுவரை.... பாகம் I - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_02.html இனி... என் வீட்டுக்கு ரெண்டு வீடு முன்னாலயே...பாபுவோட வீடு இருக்கு... வந்த போஸ்ட் மேன் முதல்ல பாபுகிட்ட போய் அவனுக்கு கார்டு எல்லாம் கொடுத்துட்டு எங்க வீட்டு வாசலுக்கு வந்து என் கையில ஒரு 21 கார்டு கொடுத்தாரு....5 ரஜினி படம்...ஒரு பிள்ளையார் படம்..3 முருகன் பாக்கி எல்லம் இயற்கை காட்சிகல், பொங்கல் ..பானைன்னு...கொடுமையா...! அடப்பாவிகளா....இப்படி ஏமாத்திட்டீங்களேன்னு....மனசுல நினைச்சிகிட்டு..பாபு கிட்ட போயி மெல்ல கேட்டேன் ..உனக்கு பொங்கல் வாழ்த்து என்ன படம்டா வந்து இருக்குன்னு....அவ்ளோதான்... அவன்...டொட்டடாயியியியியியியிங்ங்ங்ங்ங்ங்ங்ன்னு மியூசிக் கோட எடுத்து ஒண்ணு ஒண்ணா என் முன்னால போடுறான் ஒண்ணு..ரெண்டு...மூணு......மொத்தமா 17 ரஜினி படம்...ஒண்ணு ஒன்ணும் ஒரு ஸ்டைலா....என்னோடா...ரஜினி

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா....

இது ஒண்ணும் சொந்தக் கதை சோகக் கதை இல்லங்க முடிக்கிறதுக்கு முன்னால கண்டிப்பா பஞ்ச் பண்ற மாதிரி மேட்டர் இருக்குன்னு..உறுதியா சொல்லிக்கிறேன்.... தைரியமா...மேலே படிங்க....! எந்த வயசுல இருந்து நான் ரஜினி ரசிகன்னு எனக்கு தெரியல இப்போ கூட நினைச்சு பாக்கும் போது சரியா ஞாபகம் இல்ல.....யாராவது விருந்தாளி வரும் சமயதுல..அம்மாவும் சரி அப்பாவும் சரி...ரஜினி மாதிரி...சிரிப்பான்னு சொல்லுவாங்க... நானும் இடுப்புல ஒரு கைய வச்சுகிட்டு ஹா...ஹா.......ஹா...ன்னு விபரம் தெரியாம சிரிச்சு வைப்பேன்.... இடுப்புல கைய வச்சுக்கிறதும்...தலை முடிய கோதி விட்டுக்கிறதும்....என்னைய கேக்காமலேயே...எனக்கு வந்துடுச்சு..... ஏதாவது ரஜினி படம் வந்துச்சுன்னா ரஜினி பேண்ட் போட்டு நடிக்கிறாரா..இல்லை...வேஷ்டி கட்டி நடிக்கிறான்னு...யாரவது பெரியவங்ககிட்ட....இல்ல சினிமா போஸ்டர்னு என்னோட முதல் ஆர்வம் அதில்தான் இருக்கும்....ஏன் தெரியுமா? வேஷ்டி கட்டி நடிச்ச....சண்டை அவ்வளவா இருக்காது அப்படீன்றது...அப்போ என்னோட எண்ணம்....அதனாலதான் அப்போ வந்த முரட்டுக்காளை எல்லாம் எனக்குப் பிடிக்காது....பாயும் புலி, தனிக்காட்டு ராஜா, துடிக்கும் கரங்கள்ன்னு ர

மே தினம்......

மே தின... விழா கொண்டாட்டம்.... நள்ளிரவு தாண்டியும்... ஆட்டம் பாட்டத்துடன்! மைக் செட் மாரியும்.... மேடை பிரிக்க... மைக்கேலும்... தெருவொராம் பசியோடு....! உழைக்கும் வர்க்கதிற்கு.....வாழ்த்துக்கள்! தேவா. S