Skip to main content

Posts

Showing posts from October, 2010

முடிச்சு....!

ஒரு தார்ச்சாலையும், கொளுத்தும் உச்சிவெயிலும், இறுகக் கட்டிய கழுத்து டையும் வெறுமையான எதிர்காலமும் எப்போதும் வெறுப்பாய் பார்க்கும் மனிதர்களும்...டார்கெட் நோக்கி துரத்தும் படியளக்கும் முதலாளிகளும் எப்போதும் அறிந்ததில்லை திருமணத்திற்காக காத்திருக்கும் என் அக்காவையும் கடந்த மாதம் ரிட்டயர்ட் ஆன என் அப்பாவையும், எட்டாம் வகுப்பு படிக்கும் என் தம்பியையும்..... கல்லூரிக்கு அனுப்பியதே மிகப்பெரிய சாதனையாகவும் பெற்ற பி.காம்., பட்டமே மிகப்பெரிய அங்கீகாரமாகவும் நினைத்த என் குடும்பத்தினரின் ஒரே நம்பிக்கை நான். நான் பெற்ற பட்டம் முன் அனுபவம் இல்லை என்பதால் நிராகரித்த மிகைப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களும் சரி....இன்னும் அடி மாட்டு விலைக்கு வேலைக்கு கூப்பிட்டு ஓரிரு மாதங்கள் சென்று சம்பளம் கொடுக்காமால் ஏமாற்றிய உள்நாட்டு முதலாளிகளும் சரி.... என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள்....அவர்களின் வேலை கொடுப்பதற்கான அளவீடு என்ன என்பதும் அறிந்து கொள்ள நான் முயலவில்லை காரணம் என் வீட்டின் பசி. ரிட்டயர்மெண்ட் ஆன அப்பாவின் பணம் வீடுகட்ட வாங்கிய கடனுக்கு போதுமானதாக இருந்தது. நான் கூட கேட்டேன்.. கடன் வாங்கி அப்பட

பதிப்பு...!

மறத்தலுக்கு சாத்தியமற்ற முதலாய் அழுந்தப் பெற்ற ஈரமேறிய அந்த முத்த பதிப்பின் கிளர்ச்சி நிமிடங்களை வடிக்க ஏதேனும் மொழியிருக்கிறதா? மெத்தென பற்றி உயிர் பறித்த அந்த கலப்பு நிமிடங்களில் உந்தப் பட்ட காமத்தின் வெம்மையில் ஜென்மங்களாய் கற்க மறந்த பாடத்தின் பக்கங்கள் மீண்டும் திறக்க... பற்றுதலுக்காய் துவளும்... கொடி போல.. கிறங்கிக் கிடந்த நிமிடங்களின் சாயலில்தான் சொர்க்கம் என்ற சூத்திரத்தின் மூலம் பிறந்திருக்குமோ...! வசீகர பரிமாற்றத்தின் அழுத்தமான பற்றியிழுப்பு முன் பின்னாய்...கலைத்துப் போட்ட அந்த முதல் நாளின்... தனித்த இரவில் பிறழ்ந்து போன உறக்கத்தில் ஏக்கமாய் என்னுள் நிறைந்த சூட்சும காதல் இட்ட முடிச்சுகள் கடத்திசெல்கின்றன .. மீண்டும் மீண்டும் அந்த முத்த நிமிடங்களுக்கு...! தேவா. S

நான்......!

விண்ணப்பம்: இந்த ஒரு கட்டுரையை எல்லோரும் வாசித்து விட்டு ஏன் இப்படி எழுதியிருக்கிறீர்கள்? இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்க விரும்பினால்....கட்டுரைக்கான விளக்கம் அளிக்கிறேன். ஏன் எழுதினாய்? என்று கேட்டால் பதில் இல்லை. ஆதாரம் கேட்டால் இல்லவே இல்லை. படிக்கும் போது இதில் ஏதாவது ஒன்று ஆமாம் சரி என்று உள்ளுக்குள் சொன்னால் சரி எனக் கொள்ளுங்கள். இல்லை என்றால் இல்லை என்று கொள்ளுங்கள். வலியுறுத்தலுக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லை. எனது யாக்கைகளை கட்டுரையாக்கும் மனோ நிலையில் அதை சந்தைப்படுத்துதலை விட.... விரும்பியவர் படிக்கட்டுமென்ற நோக்கிலும் மேலும் கிளர்ந்து எழுந்த நிலையில் எனக்குள் தோன்றியதை எழுதி வைப்பதின் மூலம் யாராவது வாசித்து விட்டு இதை இப்படி எழுதியது தவறு என்று சொல்லி கற்றுக் கொடுப்பதின் மூலம் தெரிந்து கொள்ளும் விதமாக, கற்றுக் கொள்ள ஒரு கருவியாக இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதுகிறேன். வாசித்துதான் ஆகவேண்டும் என்றோ நிர்பந்தங்கள் எப்போதும் வைத்தது இல்லை..ஆனால் என்னுள் தோன்றிக் கிளைத்த எண்ணங்களை எழுதி பார்க்கும் ஒரு சிறுவனாய் எழுதுகிறேன். புரியவில்லை என்றால் மன்னித்து விடுங்கள். திர

ஹார்மோன் செய்யும் கலகம் தானடா......பதிவு தொடர் II !

கொஞ்சம் பிரேக் வேணும்னுதான் விட்டேன்.. இந்த தொடருக்கு...ஏன்ன்னு கேக்குறீங்களா? ஏன் எதுக்குன்னு தெரிஞ்சா நாம ஏன் இப்படி இருக்கோம்...தோணிச்சு அவ்ளோதான்...! ஆனா ரொம்ப ஷார்ப்பாவும் இதுல ஒரு விசயம் கண்டிப்பா போய் சேரணும்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கு. சரி அது என்ன விசயம்...? யாருக்கு தெரியும் திட்டம் போட்டா பாஸ் எல்லாம் நடக்குது ஹா.. ஹா..ஹா...போற போக்குல எங்கயாச்சும் அதுவா கிடைக்கும்... ! அத அப்போ பாக்கலாம்.. ! இப்போ....ஹார்மோன் செய்யும் கலகத்தை பாருங்க..... கடந்த பதிவின் முடிவில்.... " ப்ளீஸ் டோண்ட் கீப் த போன் டவுன்...ப்ளீஸ்....டோண்ட் டிஸ்கனெக்ட் த லைன்....ஸ்பீக் வித் மீ.... ப்ளீஸ்…. ப்ளீஸ் … ப்ளீஸ்" என்று அழுகையும் கெஞ்சலுமாய் என்னிடம் பேசிய குரல்.....தன்னுடைய பெயர் கவிதா என்று அறிமுகப்படுத்திக் கொண்டது.......... திடுக்கிடலோடு....அவள் சொல்வதை கேட்க ஆரம்பித்த எனக்கு தலை சுற்றியது.....! இனி..(ச்சே மெகா சீரியல் பாக்குறது எப்படி உதவுது பாருங்க...) யெஸ்.. சொல்லுங்க.. என்ன வேணும் உங்களுக்கு? நான் போனை வைக்கலை சொல்லுங்க என்று கேட்டேன்....(இந்த இடத்துல அசலா எம்.ஜி.ஆர் படத்துல கதாநாயகிக

தில்...!

நீ என்னவாக விரும்புகிறாய்...? சிவ்கேரா ஒரு செமினாரில் எழுப்பி கேட்ட கேள்வி இது. நான் திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருந்தேன்.....என்னை விட்டு விட்டு பக்கத்தில் இருப்பவரை எழுப்பி கேட்டார்.....வாட் டூ யூ வாண்ட் டூ பிக்கேம் அ? அவர் சொன்னார்.... நான் ஒரு தொழிலதிபர் ஆக விரும்புகிறேன்.......! விடவில்லை சிவ்கேரா....இப்போது நீங்கள் அதற்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...? இப்போது இருவருமே திரு திருவென்று முழித்தோம்..... தொழிலதிபர் ஆக விரும்பியவரிடம் அதற்கான திட்டமிடல் இல்லை....என்னிடமோ குறிக்கோளே இல்லை...? இருவருமே எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள்....? மெளனமாய் நின்றிருந்தோம்....... குறிக்கோள் இல்லாமல் எங்கே பயணிக்கிறீர்கள்? புரிதலோடு வாழ்க்கையின் நிலையாமையை விளங்கிக் கொண்டிருக்கும் நாம் வாழும் வரை வாழ்ந்துதான் ஆக வேண்டும்......அதில் மாற்றமில்லை. இடைப்பட்ட இந்த நேரத்தில் எங்கு பயணிக்கிறோம்...என்று தெரியாமலேயே செல்வதை விட.... இன்னவாக ஆவேன்....என்ற எண்ணத்தோடு....அதற்கான செயல் திட்டத்தை அன்றாடத்தில் எப்படி கடைபிடிக்கிறோம் என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டாமா? முகத்தில் அறைந்தார் யூ

இதோ...!

வார்த்தைகளுக்குள் அர்த்தம் தேடித் தேடி வார்த்தைகள் கொடுக்கும் உணர்வுகள் இழந்து எப்போதும் ஒரு கதை அல்லது கட்டுரை அல்லது ஒரு நிகழ்வு அல்லது ஒரு ஆரம்பம் அல்லது ஒரு முடிவு .. தேடி சுவையான எழுத்துப் பட்சணங்களின் மீது ஆசை கொண்டு இந்த கட்டுரைக்குள் நுழைபவர்களுக்கு .....முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.... எச்சரிக்கை...!!!! ஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமாயிருந்தால் ... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம். எனக்குள் பற்றி பரவியிருக்கும் இந்த இறுக்கத்தின் மூலம் என்ன? அவ்வப்போது வந்து தொண்டை அடைத்து கண்களில் கண்ணீர் நிறைத்து கலக்கமாய் நெஞ்சை பிசைந்து ஏதோ ஒன்று செய்கிறதே அது என்ன? கருவினில் இருந்த பொழுதுகள் முற்றிலுமாய் மறந்து போனாலும் எப்போதாவது இருளின் ஆளுமைக்குள் நிற்கும் போது சட்டென்று ஏதோ ஒரு அனுபவம் சாட்டையை சரெலென்று சொடுக்கிவிட்டது போல உடம்பு அதிர்கிறதே அது என்ன? கேள்விகள்...கேள்விகள்...கேள்விகள்...என்று கேள்விகளில் இருந்து ஜனித்த பதில்களின் நுனியில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அறியாமையின் கொடூர முகம் கண்டு பட்டுப்போன கேள்விகளெல்லாம் என்னை கேலிப்பொருளாய் பார்க்கும் தருணத்த

ஹாய்....24.10.2010!

எப்பவுமே... ஏதோ ஒண்ண சொல்ல வந்துட்டு மேடையில நின்னு பேசுற அரசியல்வாதி மாதிரி ஆ.. ஊ..ன்னு கருத்துக்களை தொண்டை கிழிய கத்தி கர்ஜித்து, அடித்து உக்கிரமாக பேசி...ஹா.. ஹா. ஹா. ரொம்ப காமெடி லைஃபா இருக்குள்ள....சரி எல்லாத்தையும் தூக்கி ஓரமா போடுங்க... வாங்க.. உக்காருங்க.. ! நல்லாயிருக்கீங்களா? வீட்டுல எல்லாம் நல்லா இருக்காங்களா...? என்ன சாப்பிடுறீங்க? டீயா? இல்லை காஃபியா? அட.. டீயா... சரி சரி.... நானும் டீதான் குடிக்கிறது. கம்மியா ஒண்ணும் இல்ல நிறைய...என்ன ஒரு மாதிரியா டையர்டா இருக்கீங்க.. இந்தாங்க.. இந்த தண்ணில முகத்தை கழுவிட்டு கொஞ்ச சில்லுன்னு இந்த தண்ணியவும் குடிங்க....! செம காத்து அடிக்குதுல்ல...ஆமாம்....ஏகாந்தமா நாம் இப்படி ஒரு மாலைப் பொழுதுல கயித்து கட்டில எடுத்து போட்டு வாசல்ல உக்காந்து பேசிக்கிட்டு இருக்கறத பாத்துதான் சுத்தி இருக்கிற இந்த மரமெல்லாம் சந்தோசத்துல இந்த ஆட்டம் ஆடுது.... ஆமாங்க கொஞ்சம் போரடிச்சுதான் போச்சு.. வலைப்பூக்களில் நடக்கும் சில அத்துமீறல்களையும் இன்னும் சில அநாகரீகமான செயல்களையும் பாத்து....! அதான் எதுக்கு இந்த ஓட்டம் ஓடி...எந்த ரேஸ்ல மெடல் வாங்க போறோம்னு கூட சில ந

பேச்சு....!

தினம் தினம் நிறைய மனிதர்களை சந்தித்துக் கொண்டே இருப்போம்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாய் ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை பரப்புபவராக இருக்கிறார்கள். சாந்தமாய் கருணையாய்,எல்லா திறன்களையும் உள்ளடக்கி அமைதியாய் பதிலளிக்க கூடியவராய் ஆழ்ந்த அமைதிக்கு சொந்தக்காரராய் அன்பை பகிர்பவராய் சிலர் இருந்து விடுகிறார்கள். பல நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் பொழுது என் மீது எனக்கு ரொம்பவே வெறுப்பு வருகிறது. முயற்சிகள் செய்பவனாகவும், அகங்காராம் அழியாதவனாகவும், அதிர்ந்த பேச்சுக்கு சொந்தக்காரனாகவும், எல்லாம் எனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்பதில் முனைப்பு உள்ளவனாகவும் அப்படிக் காட்டிக் கொள்வதற்காகவே நிறைய பேசுபவனாகவும் பல நேரங்களில் இருந்து விடுகிறேன். எப்படி மாறுவது என்று சிந்திப்பதில் கூட வந்து அமர்ந்து விடும் கர்வத்தை நான் எங்கே போய் கரைப்பது? சிலரை ரோட்டில் சந்தித்து அவசர வேலைகளுக்கு நடுவே பேசிக் கொண்டே இருப்போம். அந்த மனிதர் நிறைய அன்பினையும் அமைதியையும், சந்தோசத்தையும் நமக்கு பரப்பிக் கொண்டே இருப்பார். நேரம் போவதே தெரியாமல் இன்னும் ஒரு 5 நிமிடம் பேசலாம் என்று எண்ணி எண்ணி நேரத்தை நாம் ந

இருப்பு...!

தூசுகளாய் மாறி நான் கரைந்து போய் எங்கேயோ பிறந்திருந்த பொழுதற்ற பொழுதுகளில் முழுதாய் நான் அடர்ந்து போயிருந்தேன் வெளிச்சமும் இருட்டும் எனது இயல்பாய் போன தேசமற்ற ஒரு தேசத்தில் நான் கரைந்து போயிருந்தேன். ஆகா.. காதலற்ற காதலாய்... நான் நிறைந்து போயிருந்தேன்! பஞ்சுப் பொதி ஒத்த.. மேகக் கூட்டத்தினுள் அடர்ந்த நீர்த்திவலைகளாய் நான் நிறைந்து போயிருந்தேன்... பற்றிப் பரவும் காற்றின் வீச்சில் அலைகளாய் நான் கலைந்து போயிருந்தேன்..! ஒரு முட்டை ஓட்டுக்குள் சூடான ஒரு கருவாய் நான் இறைந்து போயிருந்தேன்... எங்கேயோ ஊறும் ஒரு ஆட்டு மந்தையின் நெருக்கத்தின் இடைவெளிகளில் நான் கலந்து போயிருந்தேன்...! சுவாசம் தப்பவிட்டு சுவாசிக்கும் ஒரு ஜீவனாய் நான் விரிந்து போயிருந்தேன்.. பெய்யும் மழையை .... வாங்கும் ஒரு நிலமாய் நான் குழைந்து போயிருந்தேன்...! இல்லாமல் எங்கும் இருக்கும் சுகத்தில் நான் கிறங்கிப் போயிருந்தேன்... அந்த நித்திய இருப்பில் நான்.. எங்கும் எப்போதும் இல்லாமல் இருந்து போயிருந்தேன்...! அப்போது நான் சுகமாய் இறந்து போயிருந்தேன்! தேவா. S

சுடலை...இறுதி பாகம்!

இதுவரை இனி... நல்ல வேல வெரசா வந்த ரெண்டு ஆளுக பிடிச்சு கொண்டு போய்ட்டாக... அந்த ரெண்டு பிசாசுகளையும். வீட்டு திண்ணையிலதேன் நின்னாக சுப்பையாவும் அவுக அப்புவும் ...! செவ செவன்னு வந்தாருப்பா கருப்பையா பிள்ளை.. ! ஆத்தேய்..........எம்புட்டு உசரம், பவுனு கலரு, கொண்டையா மாறி தோல்ல கிடக்குற முடில இடை இடையே கொஞ்சம் நரை...வெத்தலை பாக்கு போட்டு செவந்து போயிருந்த உதடு.. முரட்டு மீசை, மிரட்ற கண்ணு... வெள்ள வேட்டி.. மேல ஒரு துண்டு...இம்புட்டு பெரிய செயினு எல்லாமா தங்கத்துல போடுவாக....!!!!சுப்பையா இன்னும் ஆச்சர்யத்தில் இருந்து வெளியே வரவில்லை. "ஏப்பே.. என்ன அங்கனாதான நின்னுகிட்டு...உள்ள வாம்ல...." அவரு கொடுத்த சத்ததுல பேசாம உள்ளே போனாக சுப்பையவும் அவுக அப்புவும்." வீட்ல வேலைக்கின்னே பத்து ஆளுக, அடி புடி சன்டைக்கின்னே பத்து ஆளுக இருப்பாக தம்பி...! அண்ணனுக்கு கண்டில (இலங்கை) கடை இருக்கு நல்ல யாவாரம். அடிக்கடி மலேசியா போய்ட்டு வருவாக.....! நாம சாப்பிடும் போது சோறு போனிச்சில்ல உன்னைய தண்டி டிப்பன் கேரியர்ல சுப்பையாவின் உயரத்தை காட்டி பேசிக் கொண்டிருந்தார்....அவுக அப்பு...! அந்த டிப்பன் கேர

சுடலை...!

எல்லோரும் போய் விட்டார்கள் சுப்பையாவை தவிர. அந்த கார்கால 7 மணியில் கிராமத்து இருட்டு கருமையை எனக்கென்ன என்று பரவவிட்டு இருந்தது. சுப்பையாவை கவனிக்கமால இருந்த மாசனாம் தன்னுடைய வேலையில் மும்முரமாயிருந்தார். கட்டுக்களை எல்லாம் பிரித்துக் மேலே சமமாக சாணி ராட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். குய்யோ முறையோ என்று உறவுக் கூட்டம் கதறுவதும் பின் கடைசியில் மாசானத்தின் பொறுப்பில் விட்டு விட்டு வீடு போய்ச் சேருவதும் இன்னிக்கு நேத்தா பார்க்கிறார் மாசானம். எத்தனையோ உடல்கள் வருகின்றன எரித்து... எரித்து அந்த எரித்தலில் ஒரு புரிதல் ஏற்பட்டு வாழ்க்கையில் ஒரு நிதானத்துக்கு வந்த மாசானம் இருட்டில் தகர கொட்டகை ஓரமாய் அமர்ந்திருந்த 15 வயது சுப்பையாவை அப்போதுதான் கவனித்தார்....! அட..சுப்பையா.. என்னப்பு.. நீ போகலியா? கேள்வியில் ஆச்சர்யத்தை திணித்து சுப்பையாவை உற்றுப் பார்த்தவராய் கேட்டார் மாசானம். இல்லண்ணே என்ன செய்வீகன்னு பாக்க ஆசையா இருந்துச்சு.. அதாண்ணே... சுப்பையாவின் பதில் கேட்டு மாசானம் சிரித்த சிரிப்பில் பக்கத்து மரத்தில் இருந்த பறவைகள் பயந்து போய் கத்த தொடங்கின. ஏய் தம்பி கிறுக்கு புடிச்சு போச்சா..சுடுகா

இயமம்....!

சப்தமின்றி அடங்கிப் போ...! சரித்திரங்கள் படித்து மடங்கிப் போ! வாசித்து வாசித்து தொலைந்து போ! அகந்தை அடக்கி அழிந்து போ...! மனதோடு பேசிக் கொண்டிருந்தேன் நான். மமதை கொள்ளாதே மனமே... தும்பிலும் சிறிய செயல்களை முன்னிலைப்படுத்தாதே மனமே...! வரலாற்றில் பெரும் பங்கு ஆற்றியவர் யாரும் இன்று இல்லை. விசுவ ரூபங்கள் என்று மனிதர்கள் நினைத்து எடுத்த அவதாரங்கள் எல்லாம் அழிந்து போய்விட்டன. வாழ்வின் அத்தியாயங்களில் இடம் பிடிக்க நினைத்து அவர்கள் செய்த பிரமாண்டங்கள் எல்லாம் கட்டிடங்களாகவும், வழிபாட்டுத்தலங்களாகவும்,குளங்களாகவும், ஆறுகளாகவும் இருந்தாலும்...அவையும் புவியின் ஓட்டத்தில் திசைகள் மாறி ஒரு நாள் சுக்கு நூறாகலாம். கவிதைகள் செய்தவர் கலைந்து போயினர்;போரில் வெற்றி வாகைகள் சூடியவர்கள் மாய்ந்து போயினர்; அழகாய் நின்ற பேதைகள் எல்லாம் நெருப்பின்,மண்ணின் அகோரப்பசியில் செரித்துப் போயினர். காலங்கள் தோறும் மானுடர்கள் சாரை சாரையா வந்து ஜகதல பிரதாபங்கள் செய்து, செய்ததாய் நினைத்து....வாரிசுகளாய்,வாழ்க்கையாய் எழுதி வைத்த, சேர்த்து வைத்த எல்லாமே எடுத்துச் செல்ல முடியாமல் போய்ச் சேர்ந்து விட்டனர். இருக்கும் வரை ஆடிப்

முரண்...!

ஒரு காற்றின் வீச்சில் கலைத்தலுக்கு உடன்பட்டு பறக்கிறது யாரோ இட்ட மாக்கோலம்...! சருகாய் மாறிய பின் சலனமின்றி மண்ணை நோக்கிப் பாய்கிறது முன்னாள் பசும் இலை! வேரறுந்த பின்னால் வெட்கம் ஏதுமின்றி மண்ணில் சாய்ந்து மட்கிப் போகிறது ஒரு விருட்சம்! இரத்தமும் சதையும் கொடுக்கும் உன்மத்தத்தில் ஏதோ ஒரு நினைவோடு உடல் விட்டுப் போகின்றன ஐந்தறிவு....உயிர்கள்...! நிகழ்வுகளின் தொடர்ச்சியில் அற்றுப்போகும் இறுதிகளில் எப்போதும் இருப்பதில்லை கண்ணீரும் கதறல்களும்..! வகுக்கப்பட்ட வரைமுறைகளிலிருந்து கிளைக்கும் இறுக்கமான கதறல்களோடு துக்கம்.. என்ற பொய்மையில் எப்போதும் அறிவிழந்து நிற்கின்றன ஆறறிவு ஜீவன்கள்...! தேவா. S

விதை....!

எனக்குள் திறன் இருக்கிறது! எனக்குள் திறன் இருக்கிறது..! எனக்குள் திறன் இருக்கிறது...! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்...! என்னிடம் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கின்றன.....! என் பார்வையின் மிகுதியில் சிக்குவது எல்லாம் பாஸிட்டிவான விசயங்கள்..மட்டுமே...! எல்லா சூழ்நிலைகளுக்கும் தீர்வினை எட்டும் தீர்க்க முடிவுகள் மட்டுமே நான் எடுக்கிறேன் கூறுகிறேன்! மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் விசயங்களையும் சிக்கலை கொடுக்கும் விசயங்களையும் எப்போதும் சொல்வதை தவிர்க்கிறேன். என்னிடமிருந்து வாழ்த்துக்களும், பரஸ்பரம் அன்பும், விசாரிப்புகளும் அலைகளைப் போல பரவிக் கொண்டே இருக்கின்ற. ஒரு புல் பிளேட் பிரியாணி சாப்பிடும் ஆசையில் என் கண்ணெதிரில் இருக்கும் கஞ்சியையும், கருவாட்டுத் தொக்கையும் ருசிக்க மறக்கும் முட்டாள் மனிதனல்ல நான்....! ஊரின் விடியலுக்கு போராடக்கூடிய பெரிய செயல்கள் செய்ய முடியாவிட்டாலும் ஒரு மண் பானை வாங்கி நீர் ஊற்றி வீட்டுக்கு வெளியே தெருவில் வந்து செல்லக்கூடிய மனிதர்களின் தாகம் தணிக்க வைக்கும் அளவிற்கு திறனுள்ளவன்தான்......... நான்.......! என்ன மக்கா.. அப்படியே

ரஜினி...!

ராமராஜ் அண்ணன் டிக்கட் வாங்கிட்டேன்னு சொன்ன உடனேயே பி.பி ஏறிப்போச்சு...எதுக்கா? எந்திரன் பார்க்கதான்...அச்சோ.... மறுபடி ஒரு ரிவியூவான்னு தலைய சொறிய ஆரம்பிச்சுட்டீங்களா மக்கா? எச்சூஸ்மி... இது ரிவியூ இல்ல.. வழக்கமான ஒரு கண்மூடித்தனமான ரசிகனின் அனுபவம் அம்புட்டுதேன்...! வாங்க மக்கா சேந்து போவோம் அபுதாபிக்கு? அபுதாபிக்கு எதுக்கா? அட அங்க தான் படம் பார்க்க போறோம்.... வியாழக்கிழமையே விழாக்கோலம் பூண்டு இரவு 9 மணிக்கு கீயை முடுக்கியதில் சந்தோசமாக உயிரை உடம்பு பூர பரப்பியது நம்ம வாகனம்...ஏனோ தெரியவில்லை உடம்பு முழுதும் ஒரு உற்சாக தேனி உள்ளே புகுந்து கொண்டு சுற்றி சுற்றி வந்தது போல ஒரு குறுகுறுப்பு....! விடிஞ்சா கல்யாணம்.. எலேய். என்ன இப்படி மச மசன்னு நிக்குற.. சோலிய பாருலேன்னு கத்துவாங்களே கல்யாண வீட்டுல....அது மாதிரியும் அப்புறம் ஒரு படத்துல... பார்த்திபன் சொல்வாறே.. ரம்பாவ பாத்துட்டு...சார்.....ரம்ப்பா சார்.. சாப்பிடுது சார்.. சிரிக்குது சார்ன்னு ஒரே ஆச்சரியமா.. அது மாதிரிதான்.. என் நிலைமையும்... ரஜினிங்க... எங்க தலைவர்ங்க....விவரம் தெரிஞ்ச நாள் முதலா அவர்தாங்க... எனக்கு ஆதர்சன ஹீரோ.. அறிவுக

சுகம்...!

முன்பெல்லாம் நிறைய பேசிக் கொண்டிருப்பேன்,இப்போது எல்லாம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.பேச்சின் ஒலி வடிவம் இப்போது வரி வடிவமாயிருக்கிறது. சரி எதற்கு எழுத வேண்டும்? எழுத்தின் மூலம் எங்கே செல்கிறது பயணம்? எழுத்தின் மூலம் எழுத்தில்லாத இடத்திற்கு....! ஆமாம்..எழுதி எழுதி எல்லாம் மறக்கவேண்டும். அன்றாட வாழ்க்கை ஏற்றி வைக்கும் சுமைகளே டன் டன்னாக இருக்கும் அதே நேரத்தில் அறிந்து கொண்டது அதற்கு மேல் சுமையாயிருக்கிறது. லோடு வண்டியில் இருந்து ஒவ்வொன்றாய் இறக்கி வைத்து விட்டு கடைசியில் வண்டியையும் சேர்த்து அழித்து விட்டு எதுவுமற்றுப் போகவேண்டும். இதுதான் இலக்கு என்றாலும் விருப்பபடாமல் நிறைய சேர்த்து வைத்துக் கொண்டு விட்டதாக படுகிறது. நான் வாழும் வாழ்க்கை நான் விரும்பி வாழ்வதா இல்லை திணிக்கப்பட்டதா என்று பார்க்கும் போது பெரும்பாலும் திணிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வதாகவே எனக்குப் படுகிறது. சமூகம் சார்ந்த ஒரு வாழ்வியல் அமைப்பில் பெருமபாலும் அடுத்தவர்களுக்காக சந்தோசப்பட்டு அடுத்தவர்களுக்காக கோபப்பட்டு என்று பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே படுகிறது. எந்த செயல் நடந்தாலும் அல்லது நம்மிடம் சொல்லப்படும் எல்லா

உயிர்...!

ஏன் இவளின் உணர்வுகள் என்னை இப்படி புரட்டிப் போட வேண்டும் என்பது சமீபத்திய ஆச்சர்யம்...! ஆனால் ஆரம்பம் முதலே எனக்கு ஏற்பட்டிருந்த பிணைப்பு...மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருப்பதில் ஆச்சர்யமும் ஒரு வித சிலிர்ப்புடன் கூடிய பயமும் இருப்பதை மறுப்பதற்கில்லை. என் விடியலில் அவள் முகம் பார்த்துதான் எழுகிறேன்...! என் இரவுகள் அவள் இல்லையென்றால் எப்படியிருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிகப்பெரிய ஒரு கேள்விக் குறி வந்து அந்த எண்ணத்துக்கு அருகே வந்து விழுந்து விடுகிறது. ஒரு நாள் அவளை கவனியாதது போல நான் வேறு வேலையாயிருந்தேன்...என்னருகே வந்து பின்னால் என்னைக் கட்டிக்கொண்டு அந்த இரவின் குளுமைக்கு குளுமை சேர்த்த அவள்..ஏன் இன்னும் உறங்க வரவில்லை? என்று என் காதோரோம் கிசு கிசுத்தாள்....எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று அலட்சியமாகவே சொல்லிவிட்டு நான் ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன்.. பின் கவனம் எல்லாம் என் எழுத்தில் மீது ஆதிக்கம் கொள்ள நேரம் அதில் காணமால் போகத் தொடங்கியது.... அயர்ச்சியில் நான் நேரத்தை நோக்கிய போது அது நள்ளிரவு 12 க்கு கால் மணி நேரமே இருப்பதாக காட்டிக் கொண்டிருந்து. விளக்கை அணைத

ரோ..........போ.....!

JUST....COMMERCIAL BRAKE BOZZZZZZZ........! எந்திரன் பார்த்த எபக்ட் போகல...அது பத்தி ரிவியூ எல்லோரும் அடிச்சு பிடிச்சு எழுதிகிட்டு இருக்காங்க எல்லோரும் ஆடி அடங்கட்டும் அப்புறம் ஒரு ரசிகனோட பார்வை என்னனு சொல்லலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்...ஆனா அதுக்குள்ள எந்திரன் தீம் எனக்குள்ள நுழைஞ்சு என்ன என்னமோ பண்ண ஆரம்பிச்சுடுச்சு....விளைவு.. உங்களதான் பாதிக்கும். ஆமாம் எனக்கு யாரு இருக்கா நான் எங்க போவேன் மக்கா..... அது ஒரு ஆடிட்டோரியம் எல்லா பொது மக்களும் இருக்கும் மேடையில் நான் உருவாக்கிய வாரியர் என்ற வலைப்பூவினை கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். மூத்த பத்திரிக்கையாளர்களும் சில வலைப்பக்கங்களுக்கு சொந்தக்காரர்களும் அமர்ந்திருக்கிறார்கள் என் எந்திரனை ச்சே..ச்சே.. என் வாரியரை சோதிப்பதற்காக... வாரியர் நான் உருவாக்கிய என்னுடைய பிரதிபலிப்பு ஆனால் நான் அல்ல...இவன் மிகைப்பட்ட விசயங்கள் தெரிந்தவன். மனிதர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது மட்டுமல்ல இவன் வேலை சரியான அளவில் ஆன்மீகத்தையும், காமத்தையும், காதலையும் பற்றி விளக்குவதும் இவனது வேலை. பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் அக்னியை நெஞ்சில்

தேடல்...09.10.2010!

மொட்டை மாடி.. நிலா இல்லாத வானத்துடன் கோடாணு கோடி நட்சத்திரங்கள் கண் சிமிட்ட எனக்காக காத்திருந்தது. படிகளில் ஏறி அந்த சில்லென்ற மொட்டை மாடியை நான் வெற்றுடம்போடு தொடும் நேரங்களில் நீண்ட நாள் பார்க்காத காதலியை ஆரத்தழுவுவது போல ஆனால் அதை விட பன்மடங்கு இன்பமான ஒரு அனுபவம் நேரிட்டுப் போகிறது. சுற்றியிருக்கும் அடர்த்தியான தென்னை மரங்களும், அந்த பத்து மணி இரவில் உறங்கிப் போன எல்லா பறவைகளுக்கு மத்தியில் ஒரு சில மெலிதாய் குரலெடுத்து பேசிக் கொண்டிருப்பதும்...தூரத்தில் வயல் வெளிகளுக்கு இடையே ஊர்ந்து செல்லும் ஊர் கடைசிபேருந்தின் சப்தமும் என்று....எல்லாம் மெலிதாய் அடங்கிக் கொண்டிருக்கும் வேளையில்.... எமது கச்சேரி அரங்கேற்றம் துவங்க ஆரம்பித்து இருந்தது. கருமையான வானத்தில் மிளிரும் நட்சதிரங்கள்......! யார் சொன்னது நிலவோடு இருக்கும் வானம் மட்டுமே அழகென்று...ஹா..ஹா..ஹா.. கொஞ்ச அந்த கூற்றை தூக் கி தூர போடுங்கள் தோழர்களே... ! நிலவற்ற வானம் இன்னும் அழகாய்த்தானிருக்கிறது..... ஒளியின் ஆளுமையின்றி.... கண் சிமிட்டி ஒளிரும் ஓராயிரம் நட்சத்திர கூட்டம்... அடர்தியான கருப்பு நிறத்தில் வசிகரீக்கும் வானம்.... கருமையை

நுனி....!

எல்லாம் ஒழித்து நான் ஒளிந்து கொள்ள செய்யும் முயற்சிகள் எல்லாம் தெளிவாய் காட்டிக்கொடுக்கின்றன... என் இருப்பின் அடர்த்தியை...! விரட்டும் வாழ்க்கையில் மிகைத்திருக்கும் பொய்களின் ஆட்டங்கள் சொல்லாமல் சொல்கின்றன...இருத்தலில் இருக்கும் இல்லாமை நிறங்களை! ஜனித்த நாளின் பின்னணியில் எப்போதும் ஒலிக்கும் என் தாயின் பிரசவ வேதனையில் அறுக்கப்பட்ட தொப்புள் கொடியோடு தொலைந்து போன ஆதியின்.. கதகதப்பு சூட்டை தேடி ஓடும் ஓட்டத்தின் இடையில் வயதாய் கணக்கு கொள்கிறது காலம்! இருண்ட அறையில்..... இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும் முட்டி மோத அடிக்கடி அமரும் தியானங்களில் எப்போதாவது தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு முன்னான....இருப்பின் நுனியை...! தேவா. S

ஏகாந்த வெளியில்.....!

முயற்சி சிறகுகளை பூட்டிக் கொண்டு விட்ட என் பயணத்துக்கான தொடங்குதல்களில் சுருண்டு கிடக்கின்றன தோல்விக்கு அச்சாரம் இட்ட வெற்று நினைவுகள்! வானம் தொடப்போகும் என் வாழ்வின் முழு வீச்சு தெரியாமல்...கேலியாய் கூச்சலிட்ட சுவற்று பல்லியும், தெருவோரம் நின்று எப்போதும் ஏளனமாய் பார்க்கும் ஒரு தெரு நாயும் முகங்களை திருப்பிய இடமெல்லாம்... என் உத்வேகத்தின் சக்தி பரப்பியிருந்த சந்தோச வெளிச்சத்தில் கண்கள் கூசிக் கிடந்தன...! உயர பறக்க துணைக்கு நின்ற ஒரு பறவை தன் சிறகசைப்பில் எனக்கான வாழ்த்தைக் காற்றில் எழுதுவதை கண்டு... இரு மேகங்கள் உரசி... வாழ்த்துக்களாய் அனுப்பி வைத்தன சில தூரல்களை! பட்டாம் பூச்சிகள் எல்லாம் என் தோள் தொட்டு யாரும் அறியாவண்ணம் தாம் உண்ட தேனின் சாற்றினை என் உதடுகளில் தடவி.... ஒரு இனிப்பு முத்தம் பகின்ற ஆனந்தத்தில்...உச்சி நோக்கி பறந்ததில்...உணர்ச்சிவசப்பட்ட பூக்கள் எல்லாம் காதலாய் என்னைப்பார்த்து கண்ணடித்தன....! ஒரு நதி.. செல்லும் போதே... என்னை காதலோடு... கழுத்து திருப்பி பார்த்துக்கொண்டே உற்சாகத்தில் கரை புரண்டு ஓடியதில் நீர் குடித்துக் கொண்டிருந்த “ஆ “ க்களும் ஆடுகளும் தலை நிமிர்த்தி பா