Skip to main content

முரண்...!

















ஒரு காற்றின் வீச்சில்
கலைத்தலுக்கு
உடன்பட்டு பறக்கிறது
யாரோ இட்ட மாக்கோலம்...!

சருகாய் மாறிய பின்
சலனமின்றி மண்ணை
நோக்கிப் பாய்கிறது
முன்னாள் பசும் இலை!

வேரறுந்த பின்னால்
வெட்கம் ஏதுமின்றி
மண்ணில் சாய்ந்து
மட்கிப் போகிறது
ஒரு விருட்சம்!

இரத்தமும் சதையும்
கொடுக்கும் உன்மத்தத்தில்
ஏதோ ஒரு நினைவோடு
உடல் விட்டுப் போகின்றன
ஐந்தறிவு....உயிர்கள்...!

நிகழ்வுகளின்
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!

வகுக்கப்பட்ட
வரைமுறைகளிலிருந்து
கிளைக்கும் இறுக்கமான
கதறல்களோடு துக்கம்..
என்ற பொய்மையில்
எப்போதும் அறிவிழந்து
நிற்கின்றன ஆறறிவு ஜீவன்கள்...!


தேவா. S

Comments

அருமை தேவா
vinthaimanithan said…
நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு
//கதறல்களோடு துக்கம்..
என்ற பொய்மையில்
எப்போதும் அறிவிழந்து
நிற்கின்றன ஆறறவு ஜீவன்கள்...!//

:)
//இரத்தமும் சதையும்
கொடுக்கும் உம்மத்தத்தில்
ஏதோ ஒரு நினைவோடு
உடல் விட்டுப் போகின்றன
ஐந்தறிவு....உயிர்கள்...!//

அருமை பங்காளி!
Kousalya Raj said…
//நிகழ்வுகளின்
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!//

ஆறறிவு இருப்பதால் தானோ என்னவோ இந்த கதறலும் கண்ணீரும்.....!! இந்த பொய்மையில் அறிவிழந்து நின்றாலும் நன்றாக தானே இருக்கிறது....இருந்துவிட்டு தான் போகட்டுமே....

முரண்பட்டாலும் முரண் அருமை....!
dheva said…
பொறுமையா இருக்க என் தம்பி சிரிப்பு போலிசுக்கும்...


பங்காளிக்காக வந்து நின்ன பங்காளி வசந்துக்கும்

ம்ம்ம் கண்ணுல தண்ணி வந்துடுச்சு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
dheva said…
எல்.கே... @ நன்றி...
dheva said…
கெளசல்யா.. @ மனிதன் முரண்பட்டுப் போனது...

ஓவரான பில்டப் என்று சொல்லக்கூடிய திங்கிங்கால...ஹா..ஹா..ஹா...!

ஜனித்தலும் மடிதலும்.. இயற்கையின் இயக்கம்....!
dheva said…
ஸ்மைலிய கஷ்டப்பட்டு போட்ட மாப்ஸ் டெரர இன்னிக்கு நைட் வெட்றதா முடிவு பண்ணியிருக்கேன்...!
dheva said…
//Present sir //



சிரிப்பு போலிஸ்..@ என்ன ஸ்கூல நடத்துறேன்.... ஏன்டா தம்பி.. ! நேத்துதான் ஆயுத பூஜை முடிஞ்சு இருக்கு ஆயுதத்த எடுக்க வச்சுறாத...ஹா.. ஹா..ஹா..!
வரிகள் பேசுகின்றன
வாக்கியங்களை
வாழ்க்கயாக்கி .......

அருமையான பதிவு
//ஜனித்தலும் மடிதலும்.. இயற்கையின் இயக்கம்....//

unmai
வினோ said…
/ இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..! /

:)
Unknown said…
நல்ல பதிவு நண்பரே

http://denimmohan.blogspot.com/
Anonymous said…
//நிகழ்வுகளின்
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!//
சூப்பர் அண்ணா!
முரண் பட்டாலும் இயற்கை... இயற்கை... தான்
க ரா said…
அண்ணா நிதர்சனம் :)
கவிதை வரிகள் அருமை ..!
இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/
நல்ல கவிதை.சற்றே அடர்த்தியாய்.
உங்கள் கவிதைகள் உணர்த்தும் விசயங்கள் பல. சில சமயம் தெளிவாக புரியாவிட்டாலும் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மை. உங்கள் எழுத்துக்கு என் வணக்கங்கள்.
யாரோ இட்ட மாக்கோலம், முன்னாள் பசும் இல்லை.....

எப்படிங்க இப்படி தின்க் பண்றீங்கோ...??
இதுவும் மொட்டை மாடி, வெட்ட வெளி உபயமா...?? :-)))

முரண் முற்றிலும் அருமை...!!
எனக்கு வழக்கம்போல தான் ..!
கொஞ்சம் புரியல ..!!
இத புரிஞ்சிக்கரக்கு நான் இன்னும் வளரனுமோ ..?!?
ஆமா. மற்ற எந்த உயிருக்கும் இல்லாத உணர்வு நமக்கு மட்டுமே இருக்கா? இல்லை அதுக்கெல்லாம் இருந்து நாம் அறிவதில்லையா?

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...