Skip to main content

முரண்...!

















ஒரு காற்றின் வீச்சில்
கலைத்தலுக்கு
உடன்பட்டு பறக்கிறது
யாரோ இட்ட மாக்கோலம்...!

சருகாய் மாறிய பின்
சலனமின்றி மண்ணை
நோக்கிப் பாய்கிறது
முன்னாள் பசும் இலை!

வேரறுந்த பின்னால்
வெட்கம் ஏதுமின்றி
மண்ணில் சாய்ந்து
மட்கிப் போகிறது
ஒரு விருட்சம்!

இரத்தமும் சதையும்
கொடுக்கும் உன்மத்தத்தில்
ஏதோ ஒரு நினைவோடு
உடல் விட்டுப் போகின்றன
ஐந்தறிவு....உயிர்கள்...!

நிகழ்வுகளின்
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!

வகுக்கப்பட்ட
வரைமுறைகளிலிருந்து
கிளைக்கும் இறுக்கமான
கதறல்களோடு துக்கம்..
என்ற பொய்மையில்
எப்போதும் அறிவிழந்து
நிற்கின்றன ஆறறிவு ஜீவன்கள்...!


தேவா. S

Comments

அருமை தேவா
vinthaimanithan said…
நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு
//கதறல்களோடு துக்கம்..
என்ற பொய்மையில்
எப்போதும் அறிவிழந்து
நிற்கின்றன ஆறறவு ஜீவன்கள்...!//

:)
//இரத்தமும் சதையும்
கொடுக்கும் உம்மத்தத்தில்
ஏதோ ஒரு நினைவோடு
உடல் விட்டுப் போகின்றன
ஐந்தறிவு....உயிர்கள்...!//

அருமை பங்காளி!
Kousalya Raj said…
//நிகழ்வுகளின்
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!//

ஆறறிவு இருப்பதால் தானோ என்னவோ இந்த கதறலும் கண்ணீரும்.....!! இந்த பொய்மையில் அறிவிழந்து நின்றாலும் நன்றாக தானே இருக்கிறது....இருந்துவிட்டு தான் போகட்டுமே....

முரண்பட்டாலும் முரண் அருமை....!
dheva said…
பொறுமையா இருக்க என் தம்பி சிரிப்பு போலிசுக்கும்...


பங்காளிக்காக வந்து நின்ன பங்காளி வசந்துக்கும்

ம்ம்ம் கண்ணுல தண்ணி வந்துடுச்சு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
dheva said…
எல்.கே... @ நன்றி...
dheva said…
கெளசல்யா.. @ மனிதன் முரண்பட்டுப் போனது...

ஓவரான பில்டப் என்று சொல்லக்கூடிய திங்கிங்கால...ஹா..ஹா..ஹா...!

ஜனித்தலும் மடிதலும்.. இயற்கையின் இயக்கம்....!
dheva said…
ஸ்மைலிய கஷ்டப்பட்டு போட்ட மாப்ஸ் டெரர இன்னிக்கு நைட் வெட்றதா முடிவு பண்ணியிருக்கேன்...!
dheva said…
//Present sir //



சிரிப்பு போலிஸ்..@ என்ன ஸ்கூல நடத்துறேன்.... ஏன்டா தம்பி.. ! நேத்துதான் ஆயுத பூஜை முடிஞ்சு இருக்கு ஆயுதத்த எடுக்க வச்சுறாத...ஹா.. ஹா..ஹா..!
வரிகள் பேசுகின்றன
வாக்கியங்களை
வாழ்க்கயாக்கி .......

அருமையான பதிவு
//ஜனித்தலும் மடிதலும்.. இயற்கையின் இயக்கம்....//

unmai
வினோ said…
/ இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..! /

:)
Unknown said…
நல்ல பதிவு நண்பரே

http://denimmohan.blogspot.com/
Anonymous said…
//நிகழ்வுகளின்
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!//
சூப்பர் அண்ணா!
முரண் பட்டாலும் இயற்கை... இயற்கை... தான்
க ரா said…
அண்ணா நிதர்சனம் :)
கவிதை வரிகள் அருமை ..!
இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/
நல்ல கவிதை.சற்றே அடர்த்தியாய்.
உங்கள் கவிதைகள் உணர்த்தும் விசயங்கள் பல. சில சமயம் தெளிவாக புரியாவிட்டாலும் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மை. உங்கள் எழுத்துக்கு என் வணக்கங்கள்.
யாரோ இட்ட மாக்கோலம், முன்னாள் பசும் இல்லை.....

எப்படிங்க இப்படி தின்க் பண்றீங்கோ...??
இதுவும் மொட்டை மாடி, வெட்ட வெளி உபயமா...?? :-)))

முரண் முற்றிலும் அருமை...!!
எனக்கு வழக்கம்போல தான் ..!
கொஞ்சம் புரியல ..!!
இத புரிஞ்சிக்கரக்கு நான் இன்னும் வளரனுமோ ..?!?
ஆமா. மற்ற எந்த உயிருக்கும் இல்லாத உணர்வு நமக்கு மட்டுமே இருக்கா? இல்லை அதுக்கெல்லாம் இருந்து நாம் அறிவதில்லையா?

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...