Skip to main content

Posts

Showing posts from July, 2010

ஹார்மோன் செய்யும் கலகம் தானடா......!

காதல்...! "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்". என்று சொன்ன கவிஞனையும், தலைமையின்பம் இது என்று சொன்ன மீசைக்காரனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு...இந்த ஹார்மோன் கலகத்தை கொஞ்சம் பிரித்து மேயலாம் என்று நினைத்தவுடன்....சட்டென்று ஒரு தொடர் இப்போதுதானே முடிச்சோம்....சரி தைரியமா அடுத்த தொடரை தொடங்கலாம் என்று தீர்மானித்ததின் விளைவு...கலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்.... " " " ஏதேனும் ஒரு கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்த ஒரு விடுமுறை நாளில் என் அறையை விட்டு வெளியேறி...என்னுடைய ஸ்பிளண்டரை போரூர் மதானந்தபுரம் கீரீன் அப்பார்மென்ட்ஸிலிருந்து நான் சீற விட்டபோது காலை 11 மணி. எந்த கோவிலுக்குப்போவது என்று தெரியாமல் குழப்பத்தில் விக்னேஸ் அண்ணனை செல் போனுக்குள் கொண்டு வந்தேன். " அண்ணே கோவிலுக்கு போலாம்னு கிளம்பிட்டிருக்கேன்...".......என்னது நீயா? எதுக்குப் போற! என்று கேள்விக்குறிக்குப் பதிலாக ஆச்சர்யகுறி போட்ட விக்னேஷ் அண்ணன் தான் வாழ்க்கையில் எனக்குத் திருப்புமுனையாய் இருந்து சத்தியத்தையும் உண்

சாதியே...உன்னை வெறுக்கிறேன்...பதிவுத் தொடர் முடிவு....!

இதுவரை பாகம்I பாகம்II பாகம்III இனி... அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை ஆங்கோர் காட்டில் பொந்தில் வைத்தேன்... வெந்து தணிந்தது காடு; தழல் வீரத்தில் ... குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? கொட்டும் மழையில் நனைய வேண்டுமா? கொடும் தீயில் இறங்க வேண்டுமா? நெஞ்சுக்குள் கைவிட்டு..எமது துடிக்கும் இதயம் பிய்த்து... வீசி எறியவேண்டுமா....?எம்மிடம் ஆயுதம் இல்லாத போதும்.....யாம் இரு கைகள் இழந்து கால்கள் இழந்து முடமாய் தெருவோரத்தில் வெறும் பிண்டமாய் கிடந்த போதிலும்... உரக்க கத்துவோம்....அண்டம் நடு நடுங்க... அகிலமெல்லாம் கிடு கிடுங்க....ஆழி பேரலை வந்து எல்லாம் அடித்துப் போக..... " சாதியே.... நீ செத்துப் போ " உரக்க கத்தி... கத்தி ....எமது குரல்வளைகள் அறுபட்டு குருதியை மண்ணுக்கு கொடுத்து...மாண்டு போவேனும் போவோம்....! ஒரு போதும் சாதியைக் கைக்கொண்டு வாழ்வெய்தோம். எங்கே அந்த முண்டாசுக் கவிஞன்?சாதிகள் இல்லையென்று பாடிவிட்டு, பதினோரு பேரே மொத்தத்தில் வந்து உம்மை தீயிலிட்டு போனதுடன் போய்விடுவாயா நீ......எழுந்து வா...! என் இளைஞர் கூட்டத்தில் நெஞ்சினில் நிறைந்து நில்...! நீ பழகச் சொன்ன ரெளத்ரம் எதற்கு என்று

ஆன்மாவின்....பயணம்! பதிவுத் தொடர் பாகம் II

ஆன்மாவின் பயணம் கடந்த மாத இறுதியில் ஆரம்பித்தேன்..... இந்த மாத இறுதியில் இரண்டாம் பாகம்.....! இந்த இடைவெளிக்கு காரணம் எனது ஆன்மாதான்....! ஆமாம் அது பயணப்படும் போதுதான் எழுத முடிகிறது....! இன்று என்ன நினைத்ததோ தெரியாது......என்னை வார்த்தைகளால் நிரப்பி தொடரச்சொன்னது....இதொ தொடர்கிறேன்.....ஆன்மாவின் பயணத்தை.... இதுவரை பாகம் I இனி..... அதிகாலைப் பேருந்து நகர்ந்து கொண்டிருந்திருந்தது. ஜன்னலோரமாய் இருந்த என் மீது பட்ட சீலீர் காற்று என் தேகம் நிறைத்தது. மெல்ல தலை சாய்த்து காற்றின் அன்பினை என்னுள் பரவவிட்டேன். ஒரு வித மெளனம்...என்னுள் நிரம்பி வழிந்தது. காதலோடு இருக்கும் கணங்களும், காதலியோடு இருக்கும் கணங்களும் வேகமாய்த்தான் பறந்து போகின்றன. காற்றுக் காதலியோடு நான் உறாவடிக் கொண்டு இருந்தேன்.... நேரமும் பறந்துதான் போயிருக்கிறது. எப்போது பேருந்து நின்றது என்று தெரியவில்லை...என்னை கட்டிணைத்துக் கொண்டிருந்த காற்று நின்ற அந்தக்கணம் மெல்ல கண்விழித்து பேருந்தில் இருந்து இறங்கினேன். இடுப்பில் ஒற்றை நான்கு முழ வேஷ்டி, சுகமான தளர்ந்த நிலையில் ஒரு சட்டை மேனியோடு உறவாடாமல் வெளிக்காற்றோடு உறவாடும் நிலையில்,

வாய்மை...!

மேகங்கள் தொலைந்து போயிருந்த அந்த பளீர் வானத்தில் சூரியன் ஏதேச்சதிகாரம் செய்து கொண்டிருந்தபோது காலை மணி 10:30. நிழல் தேடி என்னுடைய பைக்கை நிறுத்தி விட்டு நிமிர்ந்து பார்த்த போது வழக்கமான பரபரப்போடு இருந்தது அந்த வட்டாட்சியர் அலுவலகம். வெளியே மிகைப்பட்ட கிராமத்து மக்களும் வெள்ளை வேஷ்டி சட்டை பெரியவர்களும் காம்பவுண்ட் முக்கில் இருந்த டீக்கடையின் வியாபரத்துக்கு பெரிதும் உதவிக் கொண்டிருந்தனர். மெல்ல திரும்பி நான் பார்க்க என்னை விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்யணுமா என்ற ரீதியில் தரையில் சிறு மேசை வைத்து இருந்த ஒரு மத்திம வயது மீசைக்காரர் மடக்கி விடப்பட்ட முழுக்கை சட்டையின் மடிப்பை சரி செய்து கொண்டே பார்த்தார். நான் அவரையும் மரங்களில் கூச்சலிட்டுக் கொண்டிருந்த காகங்களையும் சட்டை செய்யாமல் அலுவலத்துக்குள் நுழைந்தேன். ரேசன் கார்டில் முகவரி மாற்றம் செய்து வாங்க வேண்டி வந்திருந்த என்னை விடுங்கள் எனது பக்கதில் காத்திருந்த அந்த பெரியவரை கவனியுங்கள்....! வாழ்க்கையின் ஒட்டத்தில் எத்தனையோ முகங்களை நாம் பார்த்தாலும் ஒரு விவசாயியின் முகத்தை நாம் எளிதாக அடையாளம் காண முடியும். இயற்கையோடு பழகி பழகி ஒரு வித ம

படைப்பு.....!

வார்த்தை இல்லா வார்த்தை பேச வேண்டும்; அதில் யாரும் சொல்லாத சொற்கள் கொண்டு நான் நிரப்பவேண்டும்; இல்லாத கருத்தை நான் பகிர வேண்டும்; மொழியற்ற மொழி ஒன்றை கற்க வேண்டும் அதில் சொல்லாத மேன்மைகள் நான் சொல்லவேண்டும். படித்தன எல்லாம் சுமையாகிப் போயின; பகிர்ந்தவை எல்லாம் எண்ணமாக உருக்கொண்டு திடமாகிப்போயின; திட்டமெல்லாம் கலைந்து கொண்டே இருந்தன; மனிதரெல்லாம் மாண்டு கொண்டே இருந்தனர்; பொருளான எல்லாம் பொருளற்று போனது; பொருளற்றது எல்லாம் பொருளாகிப் போனது. விந்தை மனமோ அதற்கு ஆயிரம் கற்பிதங்கள் கொண்டது. வீசும் காற்றும், கொட்டும் மழையும், பளிச்சிடும் மின்னலும், வெக்கையான வெயிலும், மரமும், செடியும், கொடியும் ,விலங்கும், பறவையுமென பரவி விரிந்த இவ்வுலகில் பார்த்தவை எல்லாம் அழியும் என்ற விந்தை வாழ்க்கைக்கு விளக்கங்கள் கேட்டு, பெற்று பொதி சுமக்கும் மனிதராய் ஆகிப்போய் ஒரு நாள்.... அந்த ஒரு நாள்... மறு பக்கம் கிடக்கும் எலும்புத் துண்டினை கவ்வ நினைத்து சாலை கடக்கும் நாய் சட்டென வந்த ஒரு கன வாகனத்தில் அடிப்பட்டு உயிர் விடுவது போல முடிந்து போகிறதே எம் வாழ்க்கை.... மிச்சமில்லை சொச்சமில்லை மொத்தமாய் கொண்டு போய்க

எனது ஆன்மீகப் பயணம்....!

எங்கிருந்து தொடங்க...என்னுடைய ஆன்மீகப் பயணத்தை? பிறப்பிலிருந்தா? இல்லை கருவாய் ஜனித்த பொழுதா? இல்லை அதற்கு முன்பு சக்தியாய் அணுக்களாய் நான் விரவியிருந்த காலமில்லா காலத்திலிருந்தா? சரியான கட்டுரை வடிக்க சரியான மனோ நிலை வேண்டும். சரியான மனோ நிலைக்காக காத்திருந்தேன்....வானம் பார்த்த பூமியில் மழைக்காய் காத்திருக்கும் விவசாயி போல... ! ஒரு மழை அடித்துப் பெய்யும் அந்த தினம்தான் வானம் பார்த்த விவசாயி வாழ்க்கையின் தவம் முடிந்த வரம்.....! இன்று என்னுடைய வரம்..... சிவனைத் தொழும் சிவகோத்திரம்....பரம்பரை பரம்பரையா வெண்ணீறு தரித்து " தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற சப்தமான குரல்களை பிறந்தது முதல் கேட்டு வளர்ந்த ஒரு புறச்சூழல். காலையிலும் மாலையிலும் "கந்தர் சஷ்டி கவசமும் " " ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று" என்று கணக்கில்லா சாமி படங்கள் இருந்த பூஜை அறையில் ஒங்கி ஓங்கி உரக்க வழிபடுவது என....எல்லாமே வளர்ப்பிலேயே உடன் வளர்ந்ததேயன்றி இன்றுதான் ஆரம்பித்தது என்று தெளிவாக சொல்லத் தெரியவில்லை எனது ஆன்மீகப் பயணம். தோட்டத்தில் தட்டான் பிடிக்கும்

தேடல்.....13.07.2010!

உங்களைப் பார்த்தால் நாத்திகர் போலத் தெரிகிறதே? சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி இது. நான் நாத்திகனா? இல்லை என்னை நாத்திகனாக நீங்கள் நினைக்கிறீர்களா? இது நான் அவரிடம் கேட்ட கேள்வி. அவர் சொன்னார் உங்களின் எழுத்துக்களைப் பார்த்தால் நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்வது போல எனக்குத் தோன்றியது அதுதான் கேட்டேன் என்று சொன்னார். அது அவரின் தீர்மானிப்பு அல்லது நண்பரின் மூளை அவருக்கு ஏற்படுத்திய சவுகரியம் அதை என் மீது திணித்து சரி என்று உணரும் பட்சத்தில் தமது தீர்மானிப்புக்கு இரை கிடைக்க செய்யும் முயற்சிதான் இந்தக் கேள்வி. நான் எப்படி இன்னொருவரின் அனுமானத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் பதில் சொல்வது. இது ஒரு வகை என்றால்....இன்னொரு சகோதரர் என்னிடம் வேறொரு நாள் வந்து நீங்கல் கடுமையான ஆன்மீகவாதி போலத் தெரிகிறதே....சிவபுராணம் பற்றிச் சொல்கிறீர்கள், கோவில் எதற்கு என்று சொல்கிறீர்கள், சிவவாக்கியர் பற்றி பேசுகிறீர்கள் ம்ம்ம்ம் எப்படி மூட நம்பிக்கைகளுக்குள் விழுந்து இப்படி போலியை நம்புகிறீர்கள்....பகுத்தறிவு ஒன்று இருக்கிறது அதை உங்களைப் போன்றவர்களே...விட்டு விட்டால் என்ன அர்த்தம்....? என்று கேட்ட

ஆடுவோம்...பாடுவோம்...கொண்டாடுவோம்!

எல்லா ஆர்ப்பாட்டங்களும், கூச்சல்களும், சந்தோசங்களும்....ஒழிந்த பின் கிடைக்கும் வெறுமை அசாத்தியமனது. நிறைய கூடி, நிறைய கழித்து அந்த ஆர்ப்பாட்டம் அடங்கும் தருணங்களில் சுவைக்கும் நிசப்தத்தையும் அமைதியையும் சுவைத்து பார்த்து இருக்கிறீர்களா? வெறுமனே இருக்கும் பொழுதுகளை விட கொண்டாட்டங்கள் மிக முக்கியம் வாய்ந்தன. நமது கலாச்சாரத்தில்... நமது கலாச்சாரம் என்று மட்டுப்படுத்துவது கூட அறிவீனம்தான்...ஒட்டு மொத்த மனித இனத்திற்குமே கொண்டாட்டங்களும், கூத்தும் கேளிக்கைகளும் அத்யாவசியமானதின் அவசியமென்ன? விருந்தினர்களால் நிரம்பி இருக்கும் நமது வீடு அவர்கள் எல்லாம் கிளம்பிப் போனபின் எப்படியிருக்கும்.....வெறுமையாய் இருக்குமல்லவா? பல நேரங்களில் கொண்ட்டாங்கள் பற்றிய கற்பனையிலேயே அந்த வெற்றிடத்தை சுவைக்க மறந்திருப்போம்...சரியா? ஒரு விருந்து, ஒரு விழா...ஒரு கூட்டம், ஒரு கேளிக்கை, நடந்து முடிந்த கிடைக்கு அமைதிதான் முதற்பொருளாய் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த முதற் பொருளின் பொருட்டுதான் எல்லா மனித அவசியங்களும் ஏற்பட்டிருக்க வேண்டும். இங்கே மிகைப்பட்ட பேரை நட்பாயும் உறாவாயும் கொண்டவர்களுக்கு....பி

பிரபஞ்ச பேரியக்கம்...!

எங்கும் வியாபித்தும் எனைச் சுற்றியும் இருக்கும் பிரபஞ்ச பேரியக்கமே...என்னுள்ளும், எனைச் சுற்றியிருக்கும் எல்லா உயிருகளுக்கும் தங்கு தடையின்று, மாசு மருவின்றி..குறைவில்லாமால் சுவாசிக்க விரவியிருக்கும் காற்றே...கனிகளாய், காய்களாய், ஜீவன்களாயும், எம்மையும் எம்மைச் சுற்றியும் பரவியிருக்கும் இருப்பே... எங்கும் நீக்கமற நிறைந்து எல்லா பொருளிலும் பொருளற்றதிலும் இயங்கிக் கொண்டிருக்கும் அணுக் கூட்டமே...! மையத்தில் ஏதுமற்ற ஒன்றை...சுற்றி வரும் நியூட்ரானே...புரோட்டானே....எலக்ட்ரானே, அணுவாய் நீங்கள் எல்லா பொருளிலும் நீக்கமற நிறைந்து இயங்கி இயங்கி....பேரியக்கமாய் நிகழ்ந்து நிகழ்ந்து...கல்லாய், மண்ணாய், கடலாய், விண்ணாய், இயற்கையாய், சொல்ல முடிந்தன சொல்ல முடியாதன...கண்டன...காணமுடியாதன என்று எல்லம் உள்ளடக்கி எங்கே நகர்ந்து கொண்டிருக்கிறாய்...பேரியக்கமே....? உன்னை நம்புகிறார் சிலர்....அபத்தம் அபத்தம்...எப்படி நம்புவது...? நம்புவது என்ற வார்த்தை தடம் பொய்யன்றோ....? உண்டான ஒன்றை..காணாமல் அல்லது உணராமல் இருப்பவர்தானே நம்புகின்றனர். ஆமாம்... என் சுவாசிப்பை ஏன் நான் நம்பவேண்டும்...? அது இடையறாது நிகழ்வதுவன்ற

சாதியே....உன்னை வெறுக்கிறேன்....பதிவுத் தொடர் III !

போர்க்களம் போலத்தான் வாழ்க்கையும் எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, எதிர்கொண்டு அடிவாங்கி,அடி கொடுத்து, அழுது,சிரித்து எல்லா பாவங்களோடும் நகரவேண்டியதாயிருக்கிறது. எப்போதும் கடந்த காலத்தை எண்ணி சந்தோஷப்படும் மனம்.. ஏன் நிகழ்காலத்தில் நிற்க மறுகிக்கிறது...? மேலும்...ஏன் எதிர்காலத்தை எண்ணிப் பயப்படுகிறது என்று...புரியாமல் எதற்காகவோ நொந்து எதற்காகவோ சந்தொஷப்பட்டு நகர்ந்து கொண்டிருக்கிறோம்...! சாதி பற்றி எழுதவேண்டும் என்று சாந்தமான மனோ நிலையில் முடிவு செய்து எழுதலாம் என்று அமர்ந்தால்.....காதலாய் கவிதைகள் வந்து விழுகிறது....உற்று...உற்று நோக்கினால் என்னையே ஏளனம் செய்து சிரிக்கிறது என் மனோ நிலை! அதானால்தான் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது! இன்று ஒரு இறுக்கம் என்னைச் சூழ....இறுக்கத்தில் சாதிக்கு எதிரான சீற்றம் என்னை மீறி....வெளிப்பட... இதோ.... இதுவரை பாகம்I பாகம்I I இனி... மனித வரலாற்றின் மிகப்பெரிய அபத்தம் அல்லது சதி இந்த சாதி! நூற்றாண்டுகள் ஆகியும் இன்னும் ஒரு தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு தொற்று நோய் சாதி.....! ஆமாம் அந்த தொற்று நோயின் விளைவு காமாட்சி அண்ணனை சட்டையை கழற்ற வைத்திருந்தது....!

ஓவியம்...!

வர்ணங்களின் ஆதிக்கத்தில்... மறைந்தே போய்விட்டது ... நான் வரைய நினைத்த ஓவியம்.... கூட்டத்தில் தொலைந்த.... குழந்தையைப் போல.... தேடித் தேடி...அலைந்து... ஒராயிரம் திருத்தல்களுக்குப் பிறகும் வர்ணங்களில் கரைந்தே,... போய்விட்டது...அது! வார்த்தைகளின் அலங்காரத்தில்... எப்போதும் தொலைந்து போகிறது... ஆழ்மனதின்....எண்ணங்கள்.. சக்கையாய் எழுத்துக்களை துப்பிவிட்டு...சாற்றினை ஊற்ற மறுக்கிறது மனது! ஒரு சேவல் கூவிய விடியலில் தொடங்கிய என் முயற்சிகள் ... கிணற்று தவளையாய்.... பாதி ஏறி...மீண்டும்... மீண்டும்...விழுகின்றன... ஏறிய இடத்திலேயே.....! எங்கிருந்தோ வந்த.. ஒரு தாலாட்டுச் சப்தம்... என்னுள் இன்னும்... உக்கிரமாய் நெருப்பேற்ற... எண்ணியதைச் சொல்ல ... முயன்று..முயன்று...மெதுவாய்.. ஜன்னல் திறக்கிறேன்...! காத்திருந்த...காதலியாய்.... கட்டியணைக்கிறது... நிலவின்...கிரகணங்கள்...... என் நிலை புரிந்தது போல... மெல்ல சிரிக்கிறாள்... நிலா மகள்! நடுநிசி நிசப்தத்தின் அடாவடியில்... ஒரு ராட்சசனாய்..எழுந்து நின்று... சமாதி நிலைக்குள் எனைத்தள்ளி... சப்தமாய் சிரிக்கிறது... நான் பகிர நினைக்கும்... மெளனம்! கூர் மழுங்கிய ஆயுதம

வலி.....!

நல்லா தலைய கீழே குனிங்கடா...தெருமுனைச் சுவரோரம் ஒளிந்து நின்று கொண்டிருந்த நான்கு பேரையும் தலைமை தாங்கிய சந்துரு கனத்த குரலில் கரடு முரடாய் ஆணையிட்டான். 7 மணி மாலைக்கு அடிபணிந்திருந்த பகலும் குறைந்திருந்த மக்கள் நடமாட்டமும் அது ஒரு சிற்றூர்தான் என்று கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. இவ்வளவும் சொல்லிவிட்டு அவர்கள் கையில் வைத்திருக்கும் உருட்டுக்கட்டைகள் பற்றி எப்படி சொல்லாமல் விடுவது...? எல்லாமே சவுக்கு கட்டைகள் நேர்த்தியாய் கைகளில் பிடிக்கும் படி யாரோ கலைநயத்தைக் காட்டியிருந்தார்கள்..... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... சத்தம் போடாதீங்க...பார்ட்டி வருது....என்ற சந்துருவின் கிசுகிசுப்பான குரல் கேட்ட மற்ற நால்வரும் கூர்மையானார்கள்...மெல்ல தங்களைத் தயார் படுத்திக் கொண்டார்கள்...! முன்னால் நின்றிருந்த சந்துருவின் லுங்கி தொடை வரை ஏறி இருந்ததை சொல்ல மறந்து விட்டேன்...மடித்துக் கட்டிய லுங்கியை சரிபார்த்தபடி....கண்களில் ரெளத்ரத்தைக் கொண்டு வந்து கொண்டிருந்தான் சந்துரு..... வக்கா***..... தமிழகத்தின் பிரபல கெட்ட வார்தையை உதிர்த்த வாய் பற்களையும் சேர்த்து கடிக்கத் தொடங்கியது.... வந்துட்டான்டா... ச

கலையப் போகும் வேஷங்கள்....!

சுற்றி சுற்றி பார்க்கிறேன்.... மொத்தமாய் என்னிடம் வந்து மோதும் எண்ணங்களில் இருந்து வரும் வார்த்தைகளின் வீச்சு என்னை எப்போதும் மனம் என்ற பெயரில் ஆளுமை செய்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஏதோ ஒரு கட்டளை உள்ளிருந்து ஆணையிட... இது அது என்று சுற்றி சுற்றி செயல்கள் செய்யும் பொம்மையாய் இருக்கும் இவ்வுடலையும் என்னையும் பிரித்துப் போட்டு மூன்றாவதாய் ஏதோ ஒன்று ஆளுமை செய்கிறதே அது என்ன? நான் என்று கூறுவது என்னுடைய மனமாய் இருந்த போதும் அதையும் தாண்டிய வேறு ஏதோ ஒன்று பின்னிருந்து இயக்கிக்கொண்டே இருக்கிறது. பல நேரங்களில் மறுத்து மனம் அதன் போக்கில் ஓடுகிறது சில நேரங்கலில் அதன் போக்கிலேயே நிற்கிறது. அதன் போக்கில் எடுத்த முடிவுகள் ஒரு வித திருப்தியை உடனே கொடுப்பதையும் உணர முடிகிறது. தங்கு தடையில்லாமல் எல்லா நேரங்களிலும் வார்த்தைகளுக்குள் நுழைந்து எண்ணமாய் மனமாய் அது இருந்ததில்லை ஆனால் அது ஒரு குளிர் சாதன அறையின் குளிர் போல என்னுள் விரவி கிடக்கிறது. இது... அது என்று என்னால் சுட்டியுணரப்படாததாய் மனதுக்கும் அன்னியப்பட்டதாய்..விரவியிருக்கும் அதற்கு ஆட்டம் என்று எதுவுமில்லை. எப்போதும் சாந்தமாயும் சலனமற்றும்