Skip to main content

Posts

Showing posts from February, 2013

மொழியற்றவனின் வார்த்தைகள்....!

நவீனத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு நான் ஆன்மீகம் பேசுவது கொஞ்சம் பிற்போக்காகத்தான் இருக்கும். அறிவியலை அடையாளமாக்கிக் கொண்டு, இருப்பதை இல்லை என்று மறுப்பவர்களுக்கு கடவுள் என்ற பதமும், ஆன்மா என்ற சொல்லும் மிகுந்த கேலிக்குரியதாய் கூடத் தெரியலாம். எந்த இடத்தில் ஆன்மீகம் பாமரனைச் சென்றடைய யுத்திகள் செய்ததோ அந்த யுத்திகளைக் கொண்டு மேலேறி வராமல் அந்த யுத்திகளுக்கு யுத்திகள் செய்து மூடநம்பிக்கைகளை தங்களின் பைத்தியக்காரத்தனத்தில் இருந்து மேலேற்றிக் கொண்டு வந்து விட்டார்கள் மிகைப்பட்ட மனிதர்கள். மூடநம்பிக்கைகளும், பகட்டு பக்திகள் மட்டுமே புறத்தில் தெரிய.... ஆன்மீகம் என்ற சொல் பகுத்தறிவுக்கு வெகுதூரமாய் போய்விட்டது...! கடவுளை மறுப்பது பகுத்தறிவு என்று சிந்தனையின் உச்சத்தில் மனிதனின் மனமொரு செய்தியைப் பகிர அதையே அறிவின் உச்சம் என்று நம்பி விட்டான் ஆனால் கடவுள் என்றால் என்ன என்று கூடுதல் கேள்வியொன்றை எழுப்பி மறுப்பதற்கு என்ன இருக்கிறது என்று ஆராய இருப்பதெல்லாம் இருப்பதாகிப் போக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயத்தை  நாம் எட்டிப்பிடிக்க முடியும். இந்த எட்டிப்பிடித்தலை நான் ஆன்

ஈழப்படுகொலைகளும்....இந்தியாவின் கூட்டு மனசாட்சியும்...!

எதையும் இங்கே நிறுவி பேசுவது கடினமாக இருக்கிறது. எல்லா செய்திகளையுமே மேம்போக்காக பார்ப்பவர்களாகவும், பொழுது போக்குக்காய் பேசுபவர்களாகவுமே மிகையான பேர்கள் இருப்பதால் ஆழமான உட்விசயங்களில் இருக்கும் சத்தியங்கள் ஆழத்திலேயே செத்துப் போய்விடுகின்றன. நம்மைச் சுற்றி நிகழும் செயல்களின் சரி தவறுகளை ஆராய எதையும் சாராத மனோநிலையில் இருக்கவேண்டும். தூக்கு தண்டனைகள் தொடர்ச்சியாக நிறைவேறிக் கொண்டிருக்கும் ஒரு காலச்சூழலில் தூக்கு தண்டனைகள் கூடாது என்று சொல்லும் இடம் மிகப்பெரிய புரிதலோடு கூடிய தெளிவு நிலை. தண்டனையே வேண்டாம் என்பதுதான் தவறு. அதுவும் நமது தேசத்தில் விதிக்கப்படும் தூக்கு தண்டனைகள் வேடிக்கையானவை. பெரும்பாலும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அஜ்மல் கசாப்பை தூக்கிலேற்றி விட்டதோடு தீவிரவாதத்தின் அடிவேரினை இந்திய தேசம் வேரறுத்து விட்டது என்று நீங்களும் நானும் நம்பிக்கொண்டு ஒரு சூப்பர் ஹீரோவாக இந்தச் செயலை செய்தவர்களை நாம் பார்க்கிறோம் அல்லவா? அஜ்மல் கசாப் இந்த தேசத்துக்குள் வந்து அத்தனை கொலைபாதகச் செயல்களையும் செய்ய காரணமாயிருந்தவர்கள் யார்? அந்த சம்பவத்தின் ஆணிவேர் என்ன என்று எல்லாம் இ

சாத்திரம் பேசுகிறாய்....கண்ணம்மா...!

எல்லாக் கதைகளும் மழையில் அழிந்த அலங்காரக் கோலங்கள் போல காணாமல் போய்விடுகின்றன. வாசம் வீசும் மல்லிகையின் நறுமணத்தை காற்று எப்போதும் களவாடிச் சென்று விடுகிறது. தெருக்களில் ஊர்ந்து செல்லும் எறும்புகளின் வாழ்க்கையிலும் காமமுண்டு, பசி உண்டு, இருப்பிடமுண்டு.... கோபமுண்டு... என்று அறிந்த பொழுதில் இங்கே நமக்கென்று விதிக்கப்பட்டதை விஸ்தரித்துப் பார்த்து அர்த்தம் கொள்வது அறியாமைதானே...? யோசித்தபடியே... பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்.  இருவரின் உடலுக்குள்ளும் காமம் கிளர்ந்தெழுந்து உஷ்ணமாய் இருந்த அந்தச் சூழலில் இருவருக்குமே இந்த உலகத்தைப் பற்றிய கவலை ஏதுமில்லாமல் இருந்தது. கட்டுப்பாடுகளை எங்களுக்குள் பரவி இருந்த தீ எரித்துக் கொண்டிருக்க..காதலை இங்கே வகைப்படுத்தத் தெரியாத ஒரு நிதானம் எங்கள் நிர்வாணத்தில் ஒளிந்து கொண்டிருந்தது. பனியனைக் கழட்டுடா...என்று "ட்டுடா" விற்கு அவள் கொடுத்த அழுத்ததிற்கு பின்னால் ஒரு நாவல் எழுதுமளவிற்கு காமம் மிகுந்து கிடந்தது. அவள் சிணுங்கிக் கொண்டே பனியனைப் பிடித்து இழுத்தாள்..... முழு நிர்வாணம் என்பது கருத்துக்கள் அற்ற நிலை. நிறமற்ற வர

நீ காத்திருக்கலாம்..!

நீ காத்திருக்கலாம்.. கடைசி பேருந்துக்காய்.. பின்னிரவில் காத்திருக்கும்.... ஒரு பயணியைப் போல இதுவரையில் நான் எழுதாத உனக்கான கவிதைக்காக...; நானும் உனக்காக ஒரு கவிதையை எழுதி அனுப்பிவிட்டு என் காதலை உறுதிப்படுத்தவும் கூட... செய்யலாம்..., ஆனால்... எதுவமற்று இருக்கையில் எதிர்ப்பார்ப்புகளோடு நகரும் இந்த கனத்த நிமிடங்களை... யார்தான் மீட்டெடுத்துக் கொடுக்க முடியும்..? தேவா. S

ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!

காதலிக்கும் அத்தனை பேரும் ஒரு ஆணின் வடிவிலும் பெண்ணின் வடிவிலும் அந்த அற்புத சக்தியை உணர்ந்திருக்கும் போது காதலர் தினம் கொண்டாடி விட்டுததான் போகட்டுமே... என்று நான் சொல்லி முடித்த மூன்றாவது விநாடியில் உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் அவர்களை காதலிக்க விடுவீர்களா? அவர்களின் காதலை ஆதரிப்பீர்களா என்று முன்னூறு உதடுகள் என்னைச் சுற்றி  முணு முணுப்பதின் பின்னணியில்... ஐயம் அக்மார்க் க்ளியர் பெர்சனாலிட்டி என்று விளம்பரம் செய்து கொள்ள முனையும் மனோபாவம் இருப்பது எனக்கு தெரியாமலில்லை.. காதலை ஏதாவது செய்து தடுத்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? தடுத்து நின்று விட்டால் அது எப்படி சார் காதல் ஆகும்..? இப்போது யாரும் காதலிப்பதில்லை அது வெறும் காமத்திற்கான முன்னேற்பாடுதான் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே... உங்களின் எனதின்  காதல் புகைவண்டிகள் காம ஊருக்குள் செல்லாமல் தான் பயணித்தது என்பதை உறுதி செய்து கொள்ளவும் வேண்டியிருக்கிறது. முத்தமிடுதலை ரகசியமாய், கலவரத்தோடு நாம் செய்யும் போது சாதாரண முத்தமிடுதல் கூட காமத்தின் உச்சமாய் பார்க்கப்படுகிறது நம்மால்... காமமே பொதுப்படையாக சொல்லி

ஒரு கலை படைப்பும் கமலஹாசனும்....!

இதுவரை பேசப்பட்ட, பேசப்படும், பேசப்பட போகும் எல்லா விமர்சனங்களையும் விசயத்தை உள்வாங்கிக் கொள்ளும்  பாத்திரத்தின் தன்மையாய் கருதி அதன் முரண்களை என் நினைவுகளுக்குள் இருந்து அழித்துக் கொள்கிறேன். இப்போதுதான் பூத்த ஒரு முல்லைப் பூவைப் போல பளிச்சென்ற.. தன் வெண்ணிறம் காட்டி வாசனையாய் எனக்குள் பரவிக்கிடக்கிறது ஒரு அற்புத கலைஞனின் கலைப் பொக்கிஷம். ஒட்டு மொத்த கலைப்படைப்பின் தாக்கத்தையும் எழுத்தாக்கும் பாக்கியம் ஒன்று எனக்கும் அருளப்பட்டிருக்கிறது. ஒரு தலை சிறந்த புத்தகத்தை சட்டென்று வாசித்து முடித்து விட்டால் அது சீக்கிரம் முடிந்து போகுமே என்று பக்கம், பக்கமாய் வாசித்து ஒவ்வொரு பக்கத்திலும் லயித்து, அது கொடுக்கும் பிரம்மாண்ட பிரளயத்தை ஒத்த அனுபவத்தில் திளைத்து, திளைத்து ஊறிக் கிடந்து மெல்ல கண் விழித்து கிறக்கமாய்  உலகோடு இருக்கும் பொருளாதாய நினைவுகளை விட்டு நகர்ந்து..... தக தக தக தின தின தின நக நக நக திகிட தான தான தான திகிட திகிட தாக்கின தான தாக்குட தான திக்கிட்டு தாக்கத்தா தி தி தி தான தானகின் தடானு தான தானகின் தலானு தான தானகின் தலானு என்பது போன்ற அருவிய

ராஜ மிருகம்....!

பிடறி சிலிர்க்க ஓடி வரும் புரவிகளின் மீது ஏனோ எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஓரிரு முறை கேளிக்கைக்காக குதிரைகளின் மீதேறியதோடு சரி. அதற்குப் பிறகு எனக்கும் குதிரைகளுக்கும் யாதொரு பிணைப்பும் இல்லை, ஆனால் எனது கனவுகளில் எல்லாம் பெரும்பாலும்  குதிரையேறிச் செல்வது போலவும் அதுவும் திமிரான குதிரையின் மீதேறி அது துள்ளிக்குதித்து என்னை தள்ளிவிட முயலுவது போலவும் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். முரட்டுக் குதிரைகள் என்றால் எனக்கு ஏனோ ஒரு பிரியம். குதிரையேற்றம் என்பது வெறுமனே ஏதோ ஒரு பிராணியின் மீது பயணித்தல் மட்டுமல்ல அதை ஒரு மிகப் பெரிய கம்பீரமாய்த்தான் நான் கருதியிருக்கிறேன். பத்து வயதிலோ  அல்லது பனிரெண்டு வயதிலோ வந்த ஒரு கனவு எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. ஒரு புரவியின் மீதேறி மிகவும் மேடாய் இருக்கும் ஒரு கண்மாய்க் கரையில் ஏறி இறங்குகிறேன். அது கனவைப் போல இல்லாமல் நிஜத்தைப் போலவே இன்னமும் மனதில் பசுமையாய் இருக்கிறது. சரிவில் இறங்கும் புரவி தாவிக்குதித்து என்னை கீழே தள்ளிவிட்டு விட்டு வேகமாய் ஓடியே போய்விட்டது. தூக்கத்திலேயே எனக்கு அன்று வந்த கோபமும் ஆத்திரமும் இன்று வரை தீ

மதம் என்னும் மாயை.....!

சுதந்திரம் என்பது கட்டுகளற்ற பெருவெளி.  யாதொரு கருத்துப் பரவலும் நம்மை கலைத்துப் போட்டு விடாமல் எல்லா செய்திகளின் சாரங்களையும் உற்று நோக்கி பின் முடிவுகளை நோக்கிய ஒரு புலிப் பாய்ச்சல் அது. ஒரு படைப்பாளிக்கு கட்டுகளற்ற சுதந்திரம் இருந்தால் மட்டுமே அவனுக்குள் எண்ணங்கள் தங்கு தடையின்றி ஊற்றெடுக்க முடியும். இந்த சமூகத்தை தத்துவங்களே ஆண்டு கொண்டிருக்கின்றன. தத்துவங்கள் யாரோ ஒருவனுக்குள் தன்னிச்சையாய் கட்டுக்களின்றி ஸ்பூரித்தெழுந்தவை. தான் வாழும் சமூகத்தின் செயற்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு சரி தவறுகளை தனக்குத் தெரிந்த மொழியில் பேசுபவனே தலை சிறந்த படைப்பாளியாய் இருக்க முடியும். அவனுக்கு சமூக பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும்  என்று ஒரு நிபந்தனையினைக் கொடுத்து விட்டால் அவன் நினைவுகளின் நீட்சிகள் மழுங்கிப் போய்விடும். படைக்கும் ஒருவனின் சிந்தனைகள் சமூக பொறுப்பினை முன்னிறுத்தியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. எதை வேண்டுமானாலும் ஒரு படைப்பாளி பேசலாம். சரிகளை மட்டுமே, சமூகத்திற்கு  நன்மை பயக்கும் விடயங்களை மட்டுமே அவன் பகிரவேண்டும் என்பது ஆதாய நோக்கு கொண்ட மிர