Skip to main content

Posts

Showing posts from April, 2013

திணற வைக்கும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...!

திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் பிரச்சினைன்னு நியூஸ்  பார்த்தேன். ஆமாம் பங்காளிகளுக்குள்ள சண்டை வரத்தானே செய்யும். ஊர அடிச்சு திங்கிற பக்கீஸ்கள் வருமானம் வர்ற இடத்துல அடிச்சுக்கிறது நியாயம்தானே? ரொம்ப தொலைவுல இருந்து  வர்ற ஆளுகளுக்குத்தான் கருவறைக்குள்ள இருக்க செந்தில் நாதன் டெர்ரரா இருப்பாரு அங்கனக்குள்ளயே பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்க இந்த மாறி ஆளுகளுக்கு அவரு கல்லு சிலை கூடக் கிடையாது  ச்ச்சும்மா சின்னப் புள்ளைங்க வச்சு வெளையாடுற டெடி பேர், மரப்பாச்சி பொம்ம மாதிரிதான். பின்னே பயம் இருந்தா நெஞ்ச நிமித்திக்கிட்டு பேசுவாய்ங்களா என்ன? அதுவும் அக்கிரமத்தை.. சூரபத்மன சூப்பர் ஹீரோவா நின்னு தமிழ்க் கடவுள் துவம்சம் பண்ணின இடமாச்சேன்னு எனக்கு திருச்செந்தூர் மேல எப்பவுமே ஒரு கிரேஸ் இருந்தது என்னவோ வாஸ்தவம்தான். கடல் வழியா வந்த அசுரன கடற்கரைய விட்டு  ஊருக்குள்ள வர விடாம போட்டுத் தள்ளிட்டு ஸ்டைலா அவர் வேலை (வேலைன்னா ஜாப் இல்லை....வேல்...வேல்...வெற்றி வேல்!!!!) தூக்கி எறிஞ்ச இடத்துல இயற்கையா உருவான சுனையில (நாழிக் கிணறு) குளிக்க எக்ஸ்ட்ட்ரா 5 ரூபா கொடுத்தா மூணு வ

ருத்ர தாண்டவம்...!

சிவம் என்பது உள்ளமை. எப்போதும் உள்ளுக்குள் இருக்கும் அசையாத தன்மை. அது கருவுக்குள் இருக்கும் போதும் ஆடாமல் அசையாமல் இருந்தது. கருவில் இருப்பதற்கு முன்னான அதிர்வு நிலையையே கருவிலிருக்கும் அது கைக்கொண்டிருக்கிறது. அது ஒரு தவ நிலை. தவம் என்பது சலனமற்று இருப்பது. சலனமற்று இருக்க எண்ணங்கள் அற்று இருக்க வேண்டும். எண்ணங்களற்று இருப்பதற்கு முன் அனுமானங்களும், கருத்துப் படிமங்களும் மூளையில் குடியேறி இருக்கவே கூடாது. அர்த்தங்கள் எடுத்துக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளும் கற்பிதங்களை எல்லாம் கழித்து நிற்கும் பேறு நிலை... முழுமை.  புத்திக்குள் கருத்துக்கள் ஏற ஏற அதன் விஸ்தரிப்புகள் மனம் என்னும் இல்லாத ஒரு வஸ்துவை உருவாக்கிக் கொள்கின்றன.  நிகழ்வுகளின் கூட்டு அல்லது செயலின் கூட்டு  மனமாகிறது. தனித்து இதுதான் மனமென்று யாராலும் சுட்டிக் காட்ட இயலாது.  அனுபவங்களின் தொகுப்பு எண்ணமாகிறது. எண்ணங்களின் தொகுப்பு மனம். நாம் நம்மை மனம் என்றே நினைத்துக் கொள்கிறோம். கருவில் இருக்கும் போது என்ன அனுபவம் இருக்க முடியும்? என்ன தேவை இருக்க முடியும்..? எதுவுமற்ற இயற்கையின் போக்கில் மிதந்து கிடக்கும் நிலை. யாரோ உ

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்....!

பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க நேரமின்மையும், நமது கலாச்சாரம் என்பதே செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் மூலம்தான் நமது பிள்ளைகளுக்கு சென்றடைய முடியும் என்ற நிர்ப்பந்தமும் நமக்கு ஏற்பட்டுப் போனால் அது எவ்வளவு பெரிய சாபம். எவ்வளவு பெரிய கொடுமை. ஆமாம்..பெரும்பாலும் வெளிநாட்டில் வாழும் அத்தனை பேருக்கும் இந்த கொடுமையும் சாபமும் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் நமது கலாச்சாரத்தை எடுத்துச் சொல்லும் பண்டிகைகளுக்கும்,  திருமணங்களுக்கும் எப்போதாவதுதான் தாய் நாட்டில் செல்லும் வாய்ப்பு நமது குழந்தைகளுக்கு இருக்கிறது. வாழும் சூழல் நமது தாய் மொழியோடு பந்தப்பட்டு இருக்காவிடில் அவர்கள் எப்படி தங்களைத் தமிழ்ப் பிள்ளைகளாக உணர்வார்கள்? தமிழ் என்னும் மொழியின் வளத்தையும் தமிழர்களுக்கென்று இருக்கும் பாரம்பரிய கலாச்சாரத்தையும், நமது முத்தமிழின் சுவையையும் அறிவார்கள்...? எட்டு வருடமாக என் மகளுக்கு அப்படியான ஒரு சூழலை எங்களால் அமைத்துக் கொடுக்க முடியாமல் ஒரு குற்ற உணர்ச்சியுடன் தான் எங்களின் அமீரக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. தமிழ்த்துளி பற்றி என்னுடைய கல்லூரி சீனியர்  சங்கர் அண்ணன் கூறி

கரையை தேடும் ஓடங்கள்..!

ஏதேதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது தன்னிச்சையாய். ஒரு வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க ஓடிய சிறுவன் திரும்ப வழி  மறந்து எங்கேயோ நிற்கும் ஒரு திடுக்கிடலாய் எனக்கு சமகாலம் இருக்கிறது. என் தாத்தா இறந்து போன போது எண்ணெய் தொட்டு வைக்க வேண்டும் என்று இறந்த உடலின் தலையை முதன் முதலாக தொட்ட போது இடுப்பில் கோமணத்தோடு குளியலுக்கு தயாராயிருந்த அந்த உடலை நான் ஆச்சர்யமாய் பார்த்தேன் ஒரு பயத்தோடு. காலத்தின் திசைகள் இதுதானென்று அறுதியிட்டு யாராலும் சொல்ல முடியாது. என் தாத்தாவும் என்னைப் போல வண்ணத்துப் பூச்சி பிடிக்கச் சென்றவர்தான். வண்ணத்துப் பூச்சி என்ற ஒன்றே இல்லை என்று அறிந்த பின் அவர் மரணித்தாரா இல்லை. அறியாமலேயே வண்ணத்துப் பூச்சியை பிடிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் மறைந்தாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை வேறு ஏதோ ஒன்றை பிடித்து விட்டு வண்ணத்து பூச்சியை பிடித்து விட்டேன் என்ற இறுமாப்பில் கூட இறந்திருக்க கூடும். ரங்கூனிலிருந்து அவர் என் அப்பத்தாவிற்கு எழுதி இருந்த கடிதங்களில் குடும்பத்தின் நிகழ்வுகளைப் பற்றி கேட்டும் கொடுத்து விட்ட பணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்துமே நிறைய எழுதி இ

அமுத கீதம் பாடுங்கள்.... ஆடுங்கள்!

போன வியாழக்கிழமை மத்தியானம் வீட்டுக்கு போன போது....டாடி ஒரு சர்ப்ரைஸ்ன்னு என் கை பிடிச்சு வீட்டுக்குள்ள ரொம்ப பவ்யமா கூட்டிட்டுப் போன என் மகள் 8 வயசு ஆகியும் ஏன் இன்னும் டாடின்னு கூப்பிடுறா அப்பான்னு தமிழ்ல கூப்டா என்னனு உங்களுக்குத் தோணி இருக்கும். இரண்டு மூணு வயசு வரைக்கும் ஆர்வமில்லாம அவ டாடின்னு கூப்டறத ஏத்துக்கிட்ட வாழ்க்கைச் சூழல், நாம தப்பு பண்ணிட்டோம் நம்ம புள்ளை நம்மள அப்பான்னுதான் கூப்பிடணும்னு யோசிச்சு அவள மாத்த முயற்சிப் பண்றப்ப அவளால மாற முடியாம போயிடுச்சு. ஒவ்வொரு தடவை டாடின்னு சொல்லிட்டு சாரி சாரி அப்பான்னு குற்ற உணர்ச்சியோட அவ பாக்குறத சகிச்சுக்க முடியாம சரி போகுது கழுத எப்டி வருதோ அப்டி கூப்டுமான்னு சொல்லிட்டேன். டாடின்னு கூப்டுறாளே தவிர.. தூய தமிழ்ல தொடர்ச்சியா பேசுற அவ பயன் படுத்துற சில தமிழ் வார்த்தைகள் என் நண்பர்களுக்கே தெரியாதுன்னா பார்த்துக்கோங்களேன். தமிழ் படிக்க பள்ளிக்கூடத்துல சூழல் இல்லை. சொல்லிக் கொடுக்க நமக்கு நேரம் இல்லை. இப்படியே எட்டு வருசம் ஓடிப் போக தமிழ் நல்லா பேசுறவ எழுதவும் படிக்கவும் செய்யணுமேன்னு நூலகம்.காம்ல இருந்து செய்முறைத் தாள்களை கொ

துன்பம் நேர்கையில்...யாழெடுத்து..நீ..!

யாம் எமது தமிழையே எல்லா சூழ்நிலைகளுக்கும் துணைப்படுத்திக் கொண்டு நகர்ந்திருக்கிறோம். எமது வலிகளை எல்லாம் வார்த்தைகளாக்க முயலும் தருணங்களில் தாய்த்தமிழே எமது சிந்தையிலிருந்து தாயாய் தாலாட்டுப்பாடல்கள் பாடவும் செய்திருக்கிறது, குழந்தையாய் வரிகளில் தவழ்ந்தோடி எமக்கு இன்பம் சேர்த்துமிருக்கிறது. எமது காதலைச் சொல்ல யாம் கவிதைகள் புனைவதுண்டு. எமது வீர செருக்கினை சீறிப்பாயும் வரிகளில் பரவ விட்டதுமுண்டு. கேளிக்கை குதூ கலங்களை வார்த்தைகளுக்குள் சொருகி துள்ளிக் குதித்ததுமுண்டு. எமது மொழியே எமது யாக்கைகளின் வெளிப்பாடாகிப் போக சுவாசிக்கும் உயிர்க்காற்றாய் எம்முள் நிறைந்தே  அது  எப்போதும் கிடக்கிறது. ஞானத்தைப் பேசவும், போகத்தைப் பேசவும், பக்தியைப் பேசவும், பகுத்தறிவைப் பேசவும் எம்மிடம் இருக்கும் வளமையான எம் மொழி எப்போதும் சோடை போனதில்லை. ஏதோ ஒன்றை யாம் பகிரவிரும்பும் முன்னரே வில்லில் தானே ஏறி நின்று நாணேற்றிக் கொண்டு விறைத்து நிற்கும் அம்பாய் எம் வார்த்தைகள் எய்யப்போகும் இலக்கினை துடிப்பாய் எதிர் நோக்கி நிற்கும். இப்படியாய் எம் மொழியினைக் கொண்டு எமது உணர்வுகளை வடிக்கும் யாம்....துன்பம் நேர