Skip to main content

Posts

Showing posts from July, 2014

செல்லம்..ப்ரியம்....இம்சை...!

உங்களுக்கு எல்லாம் ஒன்று தெரியுமா? அவளை நான் இதுவரையில் சந்தித்ததே இல்லை. பேசி இருக்கிறோம் நிறைய நிறைய...! கவிதைகள் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். அவை யாவும் ஒன்று யாரோ யாருக்கோ எழுதியனவாய் இருக்கும்  அல்லது நான் யாருக்கோ எழுதியதாய் இருக்கும் அதுவும் இல்லையென்றால் அவள் யாருக்கோ எழுதியதாய் இருக்கும். நிறைய காதல் கவிதைகள், ருஷ்ய புரட்சி பற்றிய பார்வைகள், ஹிரோஷிமா நாகசாகி இன்றளவும் ஏற்படுத்தி சென்றிருக்கும் அதிர்வலைகள், சோழர்கள் காலத்தில் தழைத்தோங்கி இருந்த தமிழர் பெரும் நாகரீகம், ராஜராஜ சோழனின் மனைவிகள், நிசும்ப சூதனி எப்படி சோழர்களின் காவல் தெய்வமானாள், கற்றளிகள் எழுப்ப வேண்டுமென்ற எண்ணம் எந்தச் சோழனின் மனதில் முதலில் உதித்தது, சிறு குழுவினராய் இன்று இருக்கும் யூதர்கள் ஏன் உலகம் முழுதும் பேசப்படுகிறார்கள்...? என்பதில் ஆரம்பித்து, காரல்மார்க்ஸ், சே, பிரபாகரன், சாலமன் ருஷ்டி, தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்தியா... என்று நமீதாவின் குத்தாட்டம் வரை எல்லாம் பேசுவோம்..... எங்களுக்குள் என்ன உறவு இருந்தது, அவள் என்னவாக என்னை நினைத்திருப்பாள் என்று கூட நான் இதுவரைய

எப்பவும் நான் ராஜா - II

எப்பவும் நான் ராஜா - I என்கிட்ட கதை ஒண்ணு இருக்கு அதுக்கு ஒரு மெட்டுப்போடு பார்க்கலாம் என்று பஞ்சு அருணச்சலம் அந்த இளைஞனிடம் கூறியதுதான் தாமதம். மெட்டோடு சில வார்த்தைகளையும் சேர்த்து அவன் பாடவே தொடங்கி இருந்தான். தன்னத் தனனா... தனானானே......தன்னனானேனனனா... அன்னக்கிளியே உன்னைதேடுதே......என்று அவன் உச்சரித்த பின்புதான் நாம் இன்று கட்டுண்டு கிடக்கும் இசைபெருவெளி மெல்ல விரியத்தொடங்கியது. அவன் உச்சரித்த வார்த்தையே அந்தப் படத்தின் பெயரும் ஆனது.  எவ்வளவு தேடல் நிறைந்தது தனது பயணம் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளுமொரு வாய்ப்பாய் ராஜா சாருக்கு அமைந்து போனது அந்தப் பாடல். ஏக்கம் என்பது ஒரு உணர்வு அதை எப்படி இவ்வளவு சரியாய் ஒரு இசைக்குள் பதியம் போட முடியும் என்ற பிரமிப்பிலிருந்து அந்தப்பாடலைக் கேட்கும் யாராலும் மீள முடியாது. ஒரு மாதிரியான சந்தோசமான பாடல்தான் அது என்றாலும் அதற்குள் நிறைந்து கிடக்குமொரு வெறுமையும், நிலையாமையும்  அலாதியானது. நீ யாரென்று எனக்குத் தெரியாது,  நீ எவ்வடிவமாய் இருப்பதையும் நானறியேன், ஆனால் நீதான் எனக்கு வேண்டும்... என்ற இலக்கற்ற ஆசையை ஒரு பெண் வெளிப்படுத்து

எப்பவும் நான் ராஜா - I

ஏதோ ஒரு தளத்தில் நின்றபடி கிடைக்கும் நேரத்தில் அந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்தேன் நான். இடை இடையே மனதுக்குள் மென்று கொண்டிருக்கும் ஒரு காதல் கட்டுரை, பார்க்க வேண்டிய படங்கள் என்று மெதுவாய் நான் நகர்ந்து கொண்டிருக்கையில்தான் வசந்த் டிவியில் ராஜா சாரின் பாடல்களைப் பற்றிய மனுஷ்ய புத்திரனின் நிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது. தலையை சிலுப்பிக் கொண்டு அவர் அரசியல் பேசும் கொடுமையை எல்லாம் சகித்துக் கொள்ள முடிந்த என்னால்.... வசீகரமான ராஜா சார் பாடல்களைப் பற்றி அவர் சிலாகித்து ஆடிக் கொண்டிருந்த டான்ஸ் கடுப்பைக் கிளப்பியது. கவிஞன், இலக்கியவாதி என்ற அடைப்புக்குள் நின்று கொண்டு மனுஷ்யபுத்திரர்கள் இந்த சமூகத்திற்குள் செய்யும் அட்ராசிட்டி மிகக் கொடுமையானது. எது பற்றி வேண்டுமானலும் பேசுவேன், எனக்கு எல்லாம் தெரியும் என்பது அதிகபிரசங்கித்தனம். மனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். பனிவிழும் மலர்வனம்.... உன் பார்வை ஒருவரம்... இரும்புக் குதிரைகள் நாவலை வாசித்தவர்களுக்குத் தெரியும் இடை இடையே கதோயோடு சேர்த்து பாடல் வரிகளைப் பற்றி அருமையாய் சிலாகித்திருப்பார் பா

பார்த்த ஞாபகம் இல்லையோ....!

அந்தப் பெரியவரை அப்போதுதான் பார்த்தேன். 75 வயதுக்கு மேல் இருக்கும் என்று தோன்றியது. தொள தொள பேண்ட்டுக்குள் இன்சர்ட் செய்திருந்தார். தலை மெல்ல ஆடிக் கொண்டிருந்ததைப் போலவே கைகளும் நடுங்கிக் கொண்டிர்ந்தன. வயிற்றுக்குM மேல் பேண்ட்டை தூக்கிப் போட்டிருந்தார். சூ, பேண்ட் ஷர்ட் என்று ஒரு ஒழுங்கு இருந்தது அவர் உடையில்.  சீக்கிரம் காசு கொடுங்க சார்....அடுத்து கஸ்டமர் நிக்கிறாங்கல்ல....ஆங்கிலம் கலந்து அந்த கவுண்ட்டரில் இருந்தவன் அந்த தாத்தாவை கொஞ்சம் அதட்டலாகவே சொன்னான். நான் மணியைப் பார்த்தேன்....நள்ளிரவு பன்னென்டு மணிக்கு அழைத்து வாழ்த்துச் சொல்லவில்லை என்ற  மஞ்சுவின் கோபத்தை சரிக்கட்ட பொக்கேயோடு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். நேற்று பிறந்த நாள் கொண்டாடியவளுக்கு இன்று வாழ்த்துச் சொல்வது அதுவும் ஒரு காதலன் வாழ்த்துச் சொல்வது எவ்வளவு அவஸ்தையா இருந்திருக்கும் அவளுக்கு...!  நாட்கள்ள என்ன இருக்கு மஞ்சு என்று கேட்டதற்கு ஷேம் ஆன் யூ மேன்....லவ்வரோட பிறந்த நாள் கூட தெரியாம இருக்க நீ எல்லாம்...என்றுஅவள் போட்ட சண்டை முடித்த போது விடியற்காலை 3 மணி. இப்படி இப்படி இருக்க வேண்டுமென்று எவ்வளவ

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்...!

தமிழ் இணைய வெளிக்குள் உலாவும் அத்தனை பேருக்கும் கேபிள் சங்கரைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை அதுவும் வலைப்பதிவர்களுக்கு எல்லாம் கிட்டத்தட்ட அவர் பீஷ்மர் மாதிரி. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தொடர்ச்சியாய் தனது உணர்வுகளை சமூகம் பற்றிய பார்வைகளை அவர் பதிவு செய்யாமல் இருந்ததே இல்லை. ஒரு திரைப்படத்தை இயக்குவது என்பது சாதாரணமான வேலை இல்லை என்றாலும் அதற்கு இடையிலும் அவர் வலைப்பக்கத்தில் எழுதிக் கொண்டுதான் இருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...! கே.ஆர்.பி செந்தில் மூலம்தான் கேபிள் அண்ணா எனக்கு அறிமுகமானார். கேபிளின் கடுமையான உழைப்பையும், திட்டமிடலையும், சினிமா பற்றிய அறிவையும் பற்றி அடிக்கடி அவர் சிலாகித்துப் பேசுவார். இணைய உலகில் கேபிளின்  சினிமா விமர்சனங்கள் வெகு பிரலபமானது. ஒரு திரைப்படம் சரியாய் இல்லை என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கிழித்து தொங்க விட்டு விடுவார். சினிமா விமர்சனம் எழுதியவர், கதைகள் கவிதைகள், கட்டுரைகள், என்று எழுதியவர் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறாரே.... அதெல்லாம் அவருக்கு சரியாய் வருமா என்ற நிறைய பேர்களின் நினைப்பை... புட்பாலாக்கி ஸ்ட்ரெய்ட்டாக

அது அந்தக் காலம்....!

1985 களின் டபுள் ஸ்பீக்கர் நேசனல் பானோசானிக் டேப்ரிக்கார்டர் காலம் அது. மலேசியாவிலிருக்கும் மாமா கொண்டு வந்து அதைக் கொடுத்திருந்தார் எங்களுக்கு. ஓட்டை ரேடியோவுக்கு ஏரியல் கட்டி ஆல் இந்திய ரேடியோவின் விவித பாரதிக்குள்ளும், சிலோன் வானொலிக்குள்ளும் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த எங்களுக்கு அந்தப் புது விருந்தாளி பல வகையில் ஆச்சர்யமான விசயம்தான். ரேடியோ பெட்டியை ஒரு நாள் கரண்ட் இல்லை என்று  அம்மா கீழே இறக்கி வைத்து பேட்டரி கட்டையில் பாட விட்டிருந்த போது நான் அந்த ரேடியோப் பெட்டியையே சுற்றி வந்த அந்த ஐந்து வயது எனக்கு நன்றாக இன்னமும் பசுமையாய் நினைவிருக்கிறது...? இதற்குள் இருந்து கொண்டு எப்படிப் பாடுகிறார்கள்? எப்படி இதற்குள் வாழ்கிறார்கள்? இதன் உள்ளே வசிப்பவர்களுக்கு பசிக்குமா பசிக்காதா என்றெல்லாம் என்னை யோசிக்க வைத்த அந்தக் காலத்தின் அறிவு விஸ்தாரம் அவ்வளவுதான். அது ஒரு போதும் இப்போதைய ஐந்து வயது பிள்ளையுடைய அறிவாய் இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் ஒன்றும் கிடையாது என்று சிந்தித்து வாழ்ந்து கொண்டிருந்த சமூக ஒழுங்குக்குள் வேறென்ன யோசித்து விட முடியும். 12 கிலோ மீட்டருக்க

தக்க்ஷின் குட் ஈவினிங் - 3

இதுவரை ஒன்று இரண்டு இனி... 12 வருடம் என்பது ஒரு சிறு காலச் சுழற்சி. அந்த சுழற்சிக்குள் எதுவுமே நடந்து விடாதது மாதிரி தோன்றினாலும் காலம் மிகையானவற்றை விழுங்கியபடியே வேகமாய் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கற்பனைகளும் கனவுகளும் நிறைந்த இந்த வாழ்க்கையில் இன்பம் துய்க்க வேண்டிய ஆசையில் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மறுக்காமல் காலம் கொடுக்கும் பரிசுதான் மரணம். ஆனந்த்குமார் சார் இறந்து போய்விட்டார் என்பதை கேட்ட நான் நிஜமாய் ஸ்தம்பித்துப் போனேன். இதே போலத்தான் என்னுடைய அப்பா எப்போதும் துணி தைக்க என்னை அழைத்துச் செல்லும் பியூட்டி டெய்லர்ஸ்க்கு நான் கடந்த முறை சென்ற போது எப்போதும் அப்பாவுக்கு அளவெடுக்கும் சிவதாசன் சார் போட்டோவிற்கு மாலையிடப்பட்டிருந்தது. அவரின் மகன்கள் இப்போது அந்த தொழிலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னை கடைக்கு சிறுவயதில் அழைத்துச் சென்று ஒரு அறிமுகத்தைக் கொடுத்த என் அப்பாவும் இன்று இல்லை அப்பாவுக்கு துணி தைத்த சிவதாசன் சாரும் இல்லை. எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. மாறாமல் ஒரு பேரியக்கம் மட்டும் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்ன தேவ்...