Skip to main content

Posts

Showing posts from October, 2013

தீராக் காதல்...!

கரடு முரடான காய்ந்த நிலமாய் நான் கிடந்த பொழுதொன்றில் சிறு மழையாய் வந்து என்னை மிருதுவாய் நனைத்துச் சென்றவள் நீ... உயிர் பறிக்கும் வாழ்க்கையினூடே நான் களமாடிக் கொண்டிருந்த மிருக பொழுதுகளில் எனக்காய் எங்கிருந்தோ நீ வாசித்த கவிதை வரிகளை சுவாசித்து சுவாசித்து என் இரவுகளை உன் கனவுகளால் மட்டுமே நான் நிரப்பிக் கொண்டு என் இரணங்களுக்கு உன் காதலால்தான் மருந்திட்டுக் கொண்டேன்..! உன் நினைவுகள் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் இந்த மயான இரவில் என் கர்ஜனைகளால் உனக்காக எழுதிக் கொண்டிருக்கும் வார்த்தைகளுக்குள் மண்டியிட்டுக் கிடக்கும் என் வீரத்தை.... தீராக்காதலென்று அறிக பெண்ணே...! தேவா சுப்பையா...

சாமி....!

ஒரு மிகப்பெரிய இழப்பிற்கு பின் நான் சிவன் கோயிலுக்கு வந்திருந்தேன். படைத்தவன் இல்லாத போது படைப்புகளே படைத்தவன் இருந்தான் என்பதற்கு  சாட்சியாக எஞ்சி நிற்கின்றன. என்னை படைத்தவன் அன்று கோயிலுக்கு நான் சென்ற போது இல்லை. நான் என்னைப் படைத்தவனையும் படைத்தவனை பார்த்துக் கொண்டிருந்தேன். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை. சிவலிங்கம் எப்போதும் போல மெளனமாயிருந்தது. அந்த கோயில் மிகப்பழமையானது அல்ல. மிக புதியதும் அல்ல. மத்திம காலத்தில் அது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மனது சொன்னது. பழைய மதுக்கூர் சுற்றிலும் வயல்கள் நிறைந்த அழகிய கிராமம். வேளாண்மை செய்து வாழும் மக்கள் நிறைந்த ஊர். இயற்கையோடு தொடர்பில் இருந்து இருந்து மிகப்பெரிய பக்குவ நிலைக்கு வந்திருக்கும் மக்கள் நிறைந்த இடம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை  வாழ்க்கையின் நிலையாமையை எளிதாக போதித்து விடுகிறது. மழை பெய்ய வேண்டும், ஆற்றில் தண்ணீர் வரவேண்டும், இன்ன பிற காலச் சூழல்கள் பொருந்தி வரவேண்டும், பல மனிதர்களின் கூட்டு உழைப்பு வேண்டும். ஆமாம் விவசாயம் மனித வாழ்வின் சூட்சுமத்தை மனித தொடர்புகளின் அவசியத்தை, விட்டுக் கொடுத்தலின் தாத்பரி

அந்திமக் கனவுகள்...!

உன்னை சந்தித்த நாளும் கிழமையும் எனக்கு ஞாபமில்லை என் சித்திரமே..ஆனால் முதல் சந்திப்பிலேயே என்னை ஐ லவ் யூ என்று தட்டச்சு செய்ய வைத்த உன் காதலை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எத்தனையோ அபத்தங்களை தருவித்திருக்கும் இணையத் தாய் நம்மைப் போன்ற காதல் குழந்தைகளையும் பெற்று தான் போட்டிருக்கிறாள். முகமறியாமல் அகம் அறிந்து காதல் கணைகளை வீசிக்கொள்ளும் ஒரு அற்புத அனுவத்தை ஒரு காலத்தில் கடிதங்களும், பின்பு தொலைபேசிகளும், தற்போது இணையமும் செய்து கொண்டிருக்கின்றன. ஏதோ ஒன்றைத் தேடி நான் வலைவீசிக் கொண்டிருக்கையில் என் வலைக்குள் விழுந்த மீன்கள் உன்னுடைய எழுத்துக்கள். முதன் முதலாய் உன் கவிதை வரிகளை எதேச்சையாய் பார்த்த நான் திணறித்தான் போய்விட்டேன்.  யோசித்த படியே நான் அவற்றை வாசிக்க வாசிக்க அவற்றை நான் சுவாசிக்கத் தொடங்கி இருந்தேன். உன் கவிதைப் புத்தகத்தில் கவிதையை நான் பார்க்கவில்லை வார்த்தைகளாய் துடித்துக் கொண்டிருந்த என் இதயத்தை நான் பார்த்தேன். எதார்த்தமாக என் இணைப்பில் வந்த நீ எனக்கு எல்லாமாகிப் போன கதையை காதலின் வெற்றி என்பதா இல்லை நாம் காதலை வென்றோம் என்பதா? முதல் இணைய உரையாடலில் ந

ராஜா ராணி....!

இரண்டு கனத்த ப்ளாஷ் பேக்குகள் ஒரு மையக்கதை. ராஜாவாகவும் ராணியாகவும் என்னை கற்பனை செய்து பார்த்துக் கொண்டே படம் பார்த்தேன், முழுத் திரைப்படத்தையும்  அலுப்பு வராத வகையில் ஜஸ்ட் லைக் தட் காட்சிப்படுத்திக் காட்டி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஒரு மழையில் நனைவது போன்ற காட்சிகளின் தொகுப்பு. என்னதான் காமெடி காட்சிகளில் நாம் சிரித்தாலும் மீண்டும் நம்மை ஒரு மென் சோகத்துக்குள் கொண்டு வந்து விடும் திரைக்கதை என்று... லயித்துப் போய் பார்த்து முடித்தேன் ராஜா ராணியை...ஆங்காங்கே தென்பட்ட சில சொதப்பல்களை சகித்தபடியே மென் சோகம் என்பதை எப்படி வார்த்தைப்படுத்த என்று எனக்கு தெரியவில்லை.  சுகத்தை கொடுக்கும் வலிகளை மென்சோகம் என்று சொல்லலாம். இரண்டு தோற்றுப் போன காதல்களை பதியம் போட்டுக் கொண்ட ஒரு ரோஜா செடியில் மெல்லிய மொட்டொன்று அரும்பி அது இதழ்களை விரிக்கும் அழகினை விழிவிரிய பார்க்கும் சுகம் அலாதியானது. நயன்தாரா படபடக்கும் பட்டாம்பூச்சியாய் பரபரக்கும் போதும் சரி, ஜெய்க்காக  ரிஜிஸ்தர் ஆபிசில் காலையிலிருந்து மாலை வரை காத்திருக்கும் மென்மையிலும் சரி, தன் அப்பாவான சத்யராஜ் சொல்வதைக் கேட்டு நடு