Skip to main content

Posts

Showing posts from January, 2011

ஓடம்...!

அது ஒரு நடு நிசி என்று தெரிந்தேதான் எழுந்தேன். சப்தங்களற்ற அந்த தருணத்தில் என்ன நிகழ்கிறது இந்த பூமியில் என்றறிய நான் கொண்டிருந்த பெருங் கனவினை பெரும்பாலும் தூக்கம்தான் ஜெயித்திருக்கிறது. இன்று நான் தூக்கத்தை புறமுதுகிட்டு ஓடச்செய்து....கான்கிரீட் தடுப்புகளுக்க்குள் இருந்து வெளி நோக்கி வந்தேன் என்று சொல்வது சரியான வார்த்தையாய் இருக்காது...உண்மையில் பாய்ந்தேன். எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த பொழுதில் நான் எப்போதும் அமரும் நதிக்கரை என்ன செய்து கொண்டிருக்கும் என்று காணும் ஆசை துளிர்க்க கால்கள் அனிச்சையாய் நடக்கத் தொடங்கியிருந்தன.... சில் வண்டுகளின் சப்தமும், சில்லென்ற காற்றும் ஒன்றாய் என்னைச் சூழ எப்போதும் போல நிலவு மேகங்களுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கையில் பக்கத்து தெருவில் நாய் மட்டும் ஏனோ ஊளையிட்டுக் கொண்டிருந்தது. பேயை கண்டால் நாய் ஊளையிடுமாமே? உண்மையா?மனது கேட்ட கேள்வியை புத்தி ஆராய்ந்து கொண்டிருக்கையில் மனமே மீண்டும் ஒரு பதிலைச்சொன்னது... ஆமாம் பேய் இருக்குமென்று.....ஆராய்ச்சியை நிறுத்திய மூளை உடல் முழுதும் பயத்தை பரவவிட்டு மீண்டும் மனமே சொன்னது திரும்ப வீட்டுக்கு சென்று விடு என்று

எது தீர்வு.....????

கொதிக்கும் இரத்தத்தோடு தமது உறவுகள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அதுவும் அநீதி என்று தெரிந்தே நெரிக்கப்பட்ட குரல்வளைகளோடு பிதுங்கிய விழிகளோடு சப்தங்கள் எழுப்பக்கூட திரணிகளற்று கிடப்பது.... என்பது நமக்குவழமையாகிப்போய்விட்டது. சகிப்புத்தன்மையையும் விருந்தோம்பலையும் ஜீன்களோடு சேர்த்து கொடுத்துவிட்டுப் போன நமது மூதாதையர்கள் வீரத்தையும்தான் கொடுத்து சென்றிருக்கிறார்கள் என்பதை எப்படி மறந்தீர் தோழர்காள்? ஒவ்வொரு ஐந்து வருடமும் தேர்தல் வரும் கும்பல் கும்பலாய் கொள்ளைக்காரர்கள் கொடி பிடித்துக் கொண்டு வீடுகள்தோறும் வந்து வாக்குகள் சேகரிப்பார்கள். மான ரோசமுள்ள தமிழனும் கொடிபிடித்து, கூச்சலிட்டு தன்னை தொண்டனென்றும் அபிமானியென்றும் உடல் மண்ணுக்கென்றும், உயிர் தன் தன்மானத் தலைவனுக்கென்றும் கொடி பிடித்து கத்தி தானே எல்லாமுமாய் நினைத்து ஒரு குவார்ட்டர் பிராந்தியிலும், கோழி பிரியாணியிலும் தனது உச்ச பட்ச சந்தோசத்தை எட்டி விடுவான் அல்லது கொடுக்கும் பணத்தை நன்றியுணர்ச்சியோடு வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு விசுவாசத்தை வாக்குகளாக்கும் போது தனக்கே ஒரு சவக்குழியை வெட்டி தானே ஒரு ஐந்து வருடங்கள

சுடர்....!

மிருகத்தின் வக்கிரத்தினைப் புத்தியில் தேக்கிவைத்து அதைப் பார்வைகளுக்குள் கொண்டு வந்து வக்கிரப்பார்வைகளைப் பொதுவினில் விதைத்துக் கற்பிதங்கள் கொள்ளும் கேவலப் புருசர்களை அழிக்க இன்றே எனக்கோர் வரம் கொடு இறைவா? முரண்பட்ட சமுதாயமே நீ செத்துப் போ! ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவில் காமம் என்ற உணர்வைக் கலந்து நோக்கும் கயமையும், கயமைவாதிகளும் என் முன் வர துணிகரம் கொள்ளாதீர், சற்றே ஓடி ஒளியும் அல்லது யாரையேனும் தேடிப் பதுங்கும் இல்லையேல் இக்கணமே நீவீர் இருந்த தடம் அறியாமல் எரித்து விடும் வல்லமை எம்மிடம் உண்டு. நீவீர் ஜீவித்தீர் என்ற சுவடுகளின்றி உமது சாம்பல்கள் காற்றிலே கரைக்கப்படும். எங்கே ஆரம்பித்தது இந்த மனித முரண்...? பாலினம் என்பது பிள்ளைகள் பெறுவதற்கு மட்டுமென்ற காமக்கேவலம்......? திருமண பந்தம் என்ற ஒன்று விதிக்கப்பட்ட தேசத்தில் , கணவனை விடுத்து மாற்று ஆணுடன் பேசினாலே அது தவறு? கற்கும் பொழுதில் நண்பனாய் ஒரு ஆண் இருந்தால் அதுவும் தவறு? சகோதரனாய் யாரேனும் பாசத்துடன் இருந்தால் அதுவும் தவறு? எங்கே போகிறாய் சமுதாயமே? மன்னிகவும் சமுதாயம் என்ற வார்த்தைக்கு வேறுபதம் கொள்கிறேன்? எங்கே போகிறாய் கேவலமே.

ஹாய்......25.01.2011!

காலங்கள் நகர, நகர அனுபவம் என்பது சேர்ந்து ஒரு வித புத்தி முதிர்ச்சியை கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது. ஒரு வித கூர்மையான உள்முனைப்போடு வாழ்க்கை நகரும் போது இன்பம், துன்பம் எல்லாமே சேர்த்து வைத்து பார்க்கும் ஒரு பக்குவம் கை கூடி விடுகிறது. எது நடந்தாலும் அது ஒரு வித காரணமாய்த்தான் நிகழ்கிறது மற்றும் ஒரு காரணத்தினால் நிகழ்கிறது என்பது வேறு ஒன்றும் இல்லை என்று மட்டுப்பட்ட் அறிவு சொன்னாலும், என்ன செய்து விடும் வாழ்க்கை நம்மை? என்ற கேள்வி எழுந்து அதற்கு பதிலாய்.... ஒன்றுமில்லை..ஒன்றும் செய்து விடாது என்று தோன்றுகிறது. ஆனால் நமது தனிப்பட்ட சாதக பாதகங்களை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நன்றென்றும் தீதென்றும் கணித்து விடுகிறோம். வளர வளர நாம் பெறும் விசயங்களை விட இழக்கும் விசயங்கள்தான் அதிகம் ஆனால் இழத்தல் என்று நாம் சொல்வது புதிதாய் வேறு ஒன்றைப் பெறுதல் என்ற கோணத்தில் பார்க்கும் போது அங்கே புதுமையான மனோ நிலை வந்து விடுகிறது. மனம் என்ற வஸ்தாகத்தான் பெரும்பாலும் நாமாக இருக்கிறோம். இந்த மனதுக்கு பெரும்பாலும் புதிய விசயங்கள் கண்டு பயம்தான் ஏற்படுகிறது. அது எப்போதும் பழகிப் போன விசயங்களையே சுற்றிச் சுற

அய்யனாரே...!

பள்ளியோடத்துக்கு போய்ட்றேம்மோவ் ..... தோளில் பைக்கட்ட மாட்டிக்கிட்டி பள்ளியோடத்துக்கு போற நாளு என்னிக்கி மாறுமோ ? பெரிய பள்ளியோடத்துல படிக்கிற பயலுவ எல்லாம் ரெண்டு நோட்டு புத்தவம்தான் கொண்டு போறானுவ ... இவனுவள பாத்துபுட்டு ஒரு நா நானும் ரெண்டு நோட்டை கொண்டுகிட்டு போனதுக்கு .... அந்த கணக்கு வாத்தி முருயேசன் மொத்து மொத்துனு மொத்திபுட்டான் . மனசுக்குள் பேசிக் கொண்டே வீட்ட விட்டு நடந்து கொன்டிருந்தவனை பாசுகரு பாசுகருன்னுன்னு பயலுவ எல்லோம் கூப்பிடுவானுவோ ஆனா அவனுக்கு அவன ரசினியாந்துன்னு சொல்லிகிறதுதலலதான் சந்தோசம் . ஏம்பி .... எங்காளு எப்டி அடிப்பாரு தெரியுமுல்ல எந்த கமினட்டியும் எங்க ஆளுகிட்ட வரமுடியதுல்லன்னு சொல்லிகிட்டு ரசினிக்கு கொடி புடிக்கிற பயவுள்ள அதே நேரத்துல கமலதாசன காலிப்பயன்னும் சொல்லி சண்ட போடும் . ஏலேய் ... ஏன்டா அப்புடி சொல்றன்னு கேட்டா ஆமாம் காலிப்பயதான அவன் எப்ப பாத்தாலும் காதலிச்சுகிட்டே இருப்பான் எங்காளு மாறி சண்டையெல்லாம் போட வருமான்னு நம்மளையே திருப்பி கிட்டு கேப்பான் .... எட்டாவது

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் IV

PREVIEW சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த நான்காவது பாகத்திலும் தொடர்கிறது... திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது. உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....! பாகம் I பாகம் II பாகம் III இனி... நன்றாக விடிந்தே விட்டது.. உச்சிப் பொழுதை நெருங்கிக் கொண்டிருந்தது அந்த பகல்..! என் வீடு என்னை மும்முரமாய் தேடும் என்பதை அறிந்தே இருக்கிறேன். ஆனால் என் மனைவியிடம் அந்த கடிதம் சிக்கிய நொடியில் இருந்து ஒரு புரிதல் நிச்சயமாய் அவளிடம் இருக்கும், அவள் பதட்டப்படமாட்டாள். என்னை சரியான அளவில் அவள் புரிந்து வைத்திருப்பது ஒரு வரப்பிரசாதம்தான்

காற்றினிலே.....!

மொத்தமாய் தேக்கி வைத்திருக்கிறேன்.. உன்னிடம் சொல்லாமல் என்னுள் அலைந்து கொண்டிருக்கும் காதலை.. இப்போதோ எப்போதோ...சொல்லியேவிடுவேன் என்ற தீர்மானங்களை எல்லாம் தின்று செரித்துவிட்டு நகரும்... நிமிடங்களின் நகர்தலோடு கூட்டு சேர்ந்து துடிப்பினை அதிகரிக்கிறது என் இதயம்...! ஒரு வேளை நீ வரலாம்... என் காதலை கூட நான் சொல்லலாம்... அதை நீ மறுக்கவும் கூட செய்யலாம்... கொடுத்தலும் பெறுதலும் தாண்டிய உணர்வுக்ளின் சங்கமத்தில்... நிறைந்திருக்கும் நிரந்தர.... காதலை யார்தான் அறிவார்? *** மறுத்தலுக்கும் சேர்த்தலுக்கும்... மத்திமத்தில் கிளைத்த உணர்வுகளின்... வெளிப்பாடாய் ஜனித்திருக்கிறது... எனக்குள் ஒரு காதல்! காமம் கடந்த பொழுதுகளில்... விழித்தெழுந்த காதலின் சுவடுகள்... தப்பாமல் பதித்திருக்கின்றன.. தன்னின் தடங்களை என் இதயம் முழுதும்! இன்றோ... என்றோ... மரிக்கப் போகும் வாழ்வில்மறக்க முடியாத காதலை.... எங்கே கொண்டு செல்லும்...என் ஞாபகங்கள்? *** ஆச்சர்யமாய் கேட்டாய் உனக்கு கவிதை எழுத தெரியுமா? என்று நான் சாதரணமாய் கேட்டேன்.. கவிதையே உனக்கு ஆச்சர்யப்படத் தெரியுமா? என்று... *** எப்படி வேண்டுமானலும் என்னை அழை... ஆனால்

கேள்வி...?

தன்னை உணர்ந்த ஞானிகள் என்று சொல்பவர்கள் அதாவது ஞானமடைந்தவர்கள் (கௌதம புத்தர் முதல் கொண்டு இன்று இருக்கும் ஜக்கி வாசுதேவ் வரைக்கும்) மக்களை நல்வழிபடுத்த வேண்டும் என்று கிளம்பிவிடுகிறார்களே?. தன்னை உணர்ந்தவனுக்கு இங்கே என்ன வேலை. எதற்காக மக்களை திருத்துகிறேன் என்று கிளம்புகிறார்கள். புத்தரிடம் இருந்து கிளம்பிய யாரும் ஒரு ராமசாமியாகவோ, குப்புசாமியாக(அவர்கள் அவர்களாக) ஞானமடைவதில்லை. எல்லோரும் புத்தராக வேண்டும். எல்லோருக்கும் யார் குருவோ அவர்கள் மாதிரியே ஆகவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். நான் அவர்களின் சீடன் என்று சொல்லி பெருமைப்படுகிறார்கள், அவர்கள் சொல்வதை கிரகித்து அதை தத்துவமாக வைத்து அதையே வாழ்க்கையாகவும் கொள்கிறார்கள். இதுதான் தன்னை உணர்தலா?. இப்படி ஒரு கூட்டத்தை வைத்திருக்கத்தான் இவர்கள் தன்னை உணர்ந்தார்களா?. தன்னை உணர்ந்த ஞானிகள் மக்களை விட்டு விலகி செல்லமாட்டார்களா? - வேலு வேலு உங்கள் கேள்வியின் கூர்மை என்னை ஆழமாகவே பயணிக்கவைத்தது.. இதற்கு பதிலை கருத்த்துப் படிவத்திலேயே கூட நான் போட்டிருக்கலாம் ஆனால்.... இதை ஒரு பதிவாக இட்டால் இன்னும் சிலருக்கு போய்ச்சேருமே என்று என் உள்முனைப