Skip to main content

Posts

Showing posts from July, 2013

தப்புத்தாளங்கள்...!

எதேச்சையாக சானல்களைத் திருப்பிக் கொண்டிருந்த போது ஜெயா டிவியில் தப்புத்தாளங்கள் படம் ஓடிக் கொண்டிருந்தது. ரொம்ப நாளுக்கு முன்னால் அந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு  சுத்தமாய் பிடிக்கவில்லை. அதுவும் ரஜினியை அழுது வடிந்து கொண்டு திரையில் பார்க்க எந்த ரஜினி ரசிகனுக்குத்தான் பிடிக்கும் சொல்லுங்கள்...? இப்போது பாதிக்கு மேல் படம் ஓடி இருந்தாலும் பரவாயில்லை என்று பாதியிலிருந்து படத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். வாழ்க்கைக்கு என்று ஒரு ஒழுங்கு கோட்பாட்டினை வரையறுத்து அந்த மாய நெறிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களை கெட்டவர்களாய் பார்க்கும் சமூக மாண்பினை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை. வாழ்க்கையைத் திரைப்படங்கள் பிரதிபலித்துக் காட்டும் அதே நேரத்தில் வாழ்க்கைக்கான நீதிகளையும் அவைபுகட்ட வேண்டும் என்ற நியதியைத்தான் தமிழ் சினிமா எப்போதும் வரையறுத்து வைத்திருக்கிறது. கதாநாயகனை நல்லவனாகக் காட்டவேண்டும் என்ற காரணத்திற்காகவே வில்லன் தரப்பு நியாயங்களை இயக்குனர்கள் ஒளித்து வைத்து விடுவார்கள். தமிழ் சினிமா ரசிகனின் மனப்பாங்கு கட்டுப்பாடுகளுக்குள் நிறுத்தி

ஆழிசூழ் உலகு...!

துரோகச் சாம்பல்கள் குவிந்து கிடக்கும் மயானத்திலிருந்து கேட்கும் அவலக் குரல்கள் அநீதிகளின் வெற்றியாயிருக்கலாம்...! நச்சினை விதைத்து ப்ரியங்களை அறுவடை செய்யும் நாடகங்களில் ராஜலங்கராம் செய்யப்படும் ஓநாய்கள் சிங்கங்களைப் போல கர்ஜித்து இடும் ஊளைகளுக்கு நடுவே எரியும் பிணத்தை தாலாட்டஒருவருமில்லை..! பால்குடிக்கும் முலைகளை அறுக்கும் குரோதப் பிசாசுகள் சொல்லிக் கொண்டிருக்கும் ஞானக்கதைகளை கேட்டபடியே சிலுவையிலறையப்படும் தேவனைக் கடவுள் என்றும் சொல்லக் கூடும், ஒருவேளை ஞாபகமாய் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தால்...! முள் கிரீடங்கள் சூட்டிக் கொண்டு வலம் வரும் சாத்தான்களுக்கு நடத்தப்படும் வழிபாடுகளில் சிரச்சேதம் செய்யப்படும் கடவுளர்களின் கடைசி ஆசைகள் கண்ணீராய் வழிந்தோடி நிறைந்த இடங்களெல்லாம் கரித்து நிறைந்து கிடக்கிறது.. ஆழிசூழ் இவ்வுலகு..! தேவா சுப்பையா...

யாருமற்ற பொழுதுகள்..!

தெரியாது என்ற வார்த்தையோடு நான் முடித்துக் கொண்டேன் என்று நினைக்கையில் ஏன் தெரியாது என்று எப்போதும் யாரோ தொடங்கி வைக்கிறார்கள் ஒரு வாழ்க்கையையோ அல்லது உரையாடலையோ...! அறியாத பக்கங்களை எல்லாம் நுனி மடக்கி யாராவது கொடுத்து வாசிக்கச் சொல்கையில் வேண்டாம் என்று... உதடு பிரிக்கும் முன்பே திணிக்கப்படுகின்றன விஷயக் குப்பைகள்..! எல்லாம் மறுத்து விசய ஞானங்கள் அறுத்து நச்சாய் நினைத்து ஒதுக்கி... மெல்ல சுருண்டு ஒடுங்கி ஜன்னலரோப் பேருந்தில் வேடிக்கைப் பார்க்கும் முகமற்ற பயணியாய் பயணிக்கவே எப்போதும் விரும்புகிறது மனது...! செய்திகளோடு வருபவர்களை எல்லாம் தூர நிறுத்தி திருப்பி அனுப்பி... புன்னைகையோடு வரும் மனிதர்களை மட்டும் சேர்த்து வார்த்தைகள் இல்லாமல் என்னோடு வாசம் செய்யுங்கள் என்ற கட்டளையை கண்களால் இட்டு மெளனத்தை பகிர்ந்து நகரும் என் இருட்டு பொழுதுகளில் வெளிச்சமில்லை என்று சொல்பவர்களுக்கு எப்படி  தெரியும்... இருளில் ஜனித்ததுதான் வெளிச்சமென்று...! தேவா சுப்பையா...

சிங்கம் 2 வோட நிறுத்திக்குங்க ப்ளீஸ்...!

வூட்டுக்குள்ள குடும்பத்துல இருக்க அம்புட்டுப் பேரையும் வச்சுப் பூட்டிப்புட்டு, துப்பாக்கியவும் விவேக்கிட்ட கொடுத்துப்புட்டு...தக்குணூன்டு சூர்யா இருபது முப்பது பேரை பிரிச்சு மேயுறாரு பாருங்க ச்சும்மா சொல்லக்கூடாது சூர்யா ரொம்பவே மெனக்கெட்டு இருக்காப்ல....! அதுலயும் பாருங்க உசரமான ஆளுகள அடிக்க எம்பி எம்பி அந்த தம்பி போடுற சண்டை க்ளாஸ்தான் போங்க....!  ஹலோ....ஹலோ....ஹலோ ஒக்க செகண்டு....படம் புடிக்கலேன்னா பாக்காம போகவேண்டியதுதானேன்னு கேக்குறீங்களா? டோரண்ல படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே படத்தை ரிலீஸ் பண்ணாம நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்துறேன் அப்புறமா..! காசு கொடுத்து பாத்த படத்துல லாஜிக் இருக்கோ இல்லையோ இரண்டே முக்கால் மணி நேரம் விறு விறுப்பா இருந்துச்சுன்னு சொல்லிட்டு விமர்சனம் எழுதி, படத்தை ஆகா ஓகோன்னு புகழ்ந்துட்டு இருக்காங்களே அவங்கள நிறுத்தச் சொல்லுங்க முதல்ல அப்புறம் நான் நிறுத்துறேன்... படம் என்ன கண்றாவியா இருந்தாலும் சரி குப்பைக் கதையா இருந்தாலும் சரி படத்துல வர்ற ஹீரோ காட்டுக் கத்தலா கத்தி தொடை தட்டி, கர்ஜிச்சு, நம்ம நாடி ந

ம்ருதுளா...!

நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையிலும் உன்னைப் போலவே ஒரு கதாநாயகியை படைத்திருக்கிறேன். அவளும் உன்னைப் போலவே நீ என்னை விட்டு எங்கோ இருப்பது போல அவள் காதலனை விட்டு எங்கோ வசிக்கிறாள். அவர்களின் காதல், திருமணம் என்னும் வழமைக்குள் நுழைந்து விடாமல் காதலாகவே தொடர்ந்து கொண்டிருந்ததை நான் எழுதிய பொழுதில் நம் வாழ்க்கையின் சாயலை நான் எழுதிக் கொண்டிருக்கிறேனா என்ற ஐயம் கூட எனக்கு வந்தது. பதின்மத்தின் குறு குறுப்பினை எல்லாம் ஒரு முழு நெல்லிகாயைப் போல வாயின் ஓரத்தில் அதக்கிச் சுவைத்துக் கொண்டு,    ஒரு மலையினில் படுத்துக் கிடக்கும் மேகத்தின் வசீகரத்தை ஒத்த அழகிய நினைவுகளை எழுத முடியமால் திணறிக் கொண்டிருக்கும் என் பேனாவை பார்த்தால்  எனக்கே பாவமாய்த்தானிருக்கிறது. உன் மீது நான் கொண்டிருந்தது மிருதுவான காமம் அது. காமம் என்றால் அது உடல் உரசும் காமம் இல்லை. மிருதுவான என்ற வார்த்தை வார்தைகளில் அழகானது. இருந்தும் இல்லாமல் இருக்கும் நயத்தை எடுத்துச் சொல்ல மிருதுவானது மிருதுவாய் பொருந்தும் என்பதால் மட்டும் எனக்கு இந்த வார்த்தை பிடித்து விடவில்லை. என் கதையி

வெந்து தணிந்தது காடு...!

சேதுக்கரையிலிருந்துதான் இராமர் ஈழத்துக்குப் பாலம் கட்டியதாகச் சொன்னார்கள். பிரம்மாண்டமான வங்காள விரிகுடா என் முன் விரிந்து கிடந்தது. சேதுக்கரையின் கடல் நீல நிறம் கிடையாது. கருமையும் நீலமும் நிறைந்த ஒரு ரகசியங்கள் நிறைந்த நிறம் அது. நெரிசல் அதிகம் இல்லாமல் ஓரளவு அமைதியைக் தாங்கிக் கிடந்த அந்த இடத்தில் திவசம் கொடுப்பதில் இருந்து கருமாதி காரியங்கள் வரை எல்லாம் ஏதோ ஒரு அவசர கதியில் நடந்து கொண்டிருந்தன. ஈர வேட்டியுடன் வெற்றுடம்புடன் முழுதும் மழிக்கப்பட்ட தலையோடு கடற்கரை மண்ணில் நானும் என் இரு தம்பிகளும் அமர்ந்திர்ந்தோம். காலை பத்து மணி வெயிலை கட்டுப்படுத்தி கொண்டிருந்த மேகக்கூட்டங்களை நிமிர்ந்து பார்த்தேன். கடற்காற்று ஈர உடம்பில் பட்டு சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது. பிரபஞ்ச ரகசியங்களைத் தன்னுள் தேக்கிக் கொண்டு ஆழ் கடலும் நீலவானமும் எங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆமாம்.. அது சேதுக்கரை என்னும் கடற்கரை கிராமம். அங்கிருந்த்துதான் இராமர் ஈழத்துக்கு சென்று இராவணனோடு போரிட பாலம் கட்டினாராம். நாங்கள் எங்கள் தந்தையின் 16 ஆம் நாள் காரியத்துக்காக கடந்த ஜூ