Skip to main content

Posts

Showing posts from May, 2014

கடவுள் இல்லாதவர்தான்....!

திடீரென்று படத்தின் பெயர் மனதில் தோன்றியதாகவும், உடனே இயக்குனர் சுந்தர். சியைக் கூப்பிட்டு நாம ஒரு படம் பண்றோம் படத்தோட பேர் அருணாச்சலம் என்று சொல்லி முடித்த கையோடு இசையைமைப்பாளர் தேவாவையும் அழைத்து இந்த விசயத்தைக் கூறினாராம் சூப்பர் ஸ்டார். கதை எதுவுமே முடிவாகவில்லையாம் அப்போது, அதனால்தான் படத்தில் வந்த பஞ்ச் டயலாக்கை கூட "ஆண்டவன் சொல்றான் இந்த அருணாச்சலம் செய்றான் " என்று கூட வைத்தார்களாம். அதாவது எதுவுமே மனிதர்கள் முடிவு பண்ணாமல் கடவுள் முடிவு பண்ணியதாம். நிஜத்தில் இந்த உள்ளுக்குள் தோன்றும் விசயங்களை ஆண்டவன் தான் தீர்மானிக்கிறாரா? என்ற ஒரு கேள்வி எனக்குள் வெகுநாளாய் இருந்து கொண்டிருப்பதற்கு காரணம் இதே போன்று எழுத்துச் சித்தர் பாலகுமாரனும் கூறுவதுதான். அவரும் கூட நான் எழுதுவது எல்லாம் எனக்குள் ஸ்பூரித்தது என்று அடிக்கடி சொல்வார்.  கடவுள் என்னை வழிநடத்துகிறார், எல்லாம் கடவுள் கிருபை, நான் ஆன்மீகத் தேடலில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் ஏதோ ஒரு கிறக்கம் நிறைந்த சுகம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்தக் கட்டுரை நாத்திகம் பேசி ஆத்திகத்தை அமுக்கவோ அல்லது ஆத்திக

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு....!

ஜோடிப்பொருத்தமும், வார்த்தை விளையாட்டும் சன்டிவி ஆரம்பித்த காலத்தில் வெகு பிரபலமான நிகழ்ச்சிகளாய் இருந்தன. எம்.ஜே. ரெகோ ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சியையும், ஆனந்த கீதன் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியையும் தொகுத்தளித்துக் கொண்டிருந்தனர். இவர்களோடு சேர்ந்து ஈ. மாலா,  ரமேஷ் பிரபா மற்றும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை தொகுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த ரபி பெர்னார்ட் எல்லாம் செயற்கைக்கோள் தொலைக்காட்சியின் அந்த நாளைய ஹீரோக்கள். சன் டிவியின் தமிழ் மாலை வீடுகள் தோறும் தோரணங்கள் கட்டிக் கொண்டிருந்த அந்தக் காலங்களில் தூர்தர்சனின் பட்டிமன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போய்க் கிடந்த தமிழகம் உற்சாக போதையில் மெல்ல தள்ளாடிக் கொண்டிருந்தது. விவாத  நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டிகள்  போன்ற சுவாரஸ்யங்களின் மீது ஏறி நின்று வருடக்கணக்கில் கோலேச்சியது விசுவின் அரட்டை அரங்கம் மட்டுமே.  எட்டு எட்டு பேராய் நான்கு அணிகள், அணிக்கு ஒரு தலைப்பு, அந்த தலைப்பை ஒட்டி  பங்கேற்பாளர்கள் பேச விசு அவர்களை குறுக்கீடு செய்து கேள்விகள் கேட்பார், கோபப்படுவார், வருத்தப்படுவார், திடீரென்று எமோச

கோச்சடையான் – இது பொம்மை படம் இல்லை.. .செம்ம படம்!

திருடனுக்கு தேள் கொட்டியது போல முழித்துக் கொண்டிருக்கிறார்கள் கோச்சடையானைப் பற்றி விமர்சனம் செய்த கொக்குகள். இந்திய சினிமா வரலாற்றில்… ஏன் உலக சினிமா வரலாற்றில் சலனப் பதிவாக்கத்தில் உருவாக்கம் செய்யப்பட்ட அனிமேஷன் காட்சி வடிவாக தனது ஆதர்ச நாயகனைப் பார்த்த மாத்திரத்தில் திரையரங்கம் அதிர்ந்து நொறுங்கி இருக்குமா என்பது சந்தேகமே….!!!!!!! செளந்தர்யா அஸ்வின் ரஜினி மகளென்றுதான் இதுநாள் வரையில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் கோச்சடையான் பார்த்த பின்புதான் தெரிந்தது செளந்தர்யாவும் எங்களைப் போன்ற ஒரு ரஜினி பைத்தியம் என்று! திரையில் மனிதப் பிம்பங்களை நேரடியாக பார்த்துப் பழகிப் போயிருந்த  கண்களுக்கு படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்கு புதிய திரைவடிவம் கொஞ்சம் பயிற்சி கொடுப்பது என்னவோ உண்மைதான் என்றாலும்… சூப்பர்ஸ்டார் குதிரையிலிருந்து குதித்து நடந்து வரும் காட்சியில் மெல்ல மெல்ல திரைக்குள் குவியத் தொடங்கும் நமது மனது ரஜினியின் காந்தக் குரலைக் கேட்கத் தொடங்கும் அந்தக் கணத்திலிருந்து கதைக்குள் தொபுக்கடீர் என்று விழுந்து மொத்தமாய் கரைந்து போயே விடுகிறது! அதன் பிறகு கோச்சடையானி

பிடிபடாததின் ரகசியம்...!

திருவள்ளுவர் பேருந்தில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும். இருக்கையில் அமர்ந்தபடியே உறங்குவது எனக்கு கடினமாயிருந்தது. எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தபடியால் நடைபாதையில் ஒரு விரிப்பை விரித்து என்னை அம்மா படுக்கச் சொன்னாள். நான் ஒருக்களித்து படுத்திருந்தேன். கீழே வேகமாய் சாலை ஓடிக் கொண்டிருப்பது போல தோன்றியதாலும், வண்டியின் சப்தம் காதுக்கு வெகு சமீபமாய் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று கேட்டதாலும் என்னால் உறங்க முடியவில்லை. உறங்கினேனா இல்லையா என்று யோசிக்கும் படியான ஒரு உறக்கம் அது. உறங்கிய மாதிரியும் தெரிந்தது உறங்காத மாதிரியும் தெரிந்தது. உண்மை என்று எதைச் சொல்கிறோம் நாம்? எதை நாம் நம்புகிறோமோ அதைத்தானே..? நான் சென்னை வந்து இறங்கியது உண்மையாய் இருக்குமா என்ற பயம் மெலிதாய் என்னை தொற்றிக் கொண்டதற்கு காரணம் உண்டு. காரணம் அன்று இரவு நான் பேருந்திற்குள் நடைபாதையில் படுத்திருந்த போது  அதிலிருந்த ஒரு ஓட்டையின் வழியாக ஒரு காட்டிற்குள் விழுந்து விட்டேன். விழுந்த வேகத்தில் உருண்டு சாலை ஓரமாக இருந்த புதருக்குள் விழுந்து, தூக்கம் தெளியாமலேயே இன்னமும் ந

கோச்சடையான்....ஒரு பிரம்மாண்டத்தின் வருகை...!

ஆடிப்போய் கிடக்கிறது தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை. இந்திய சினிமாவோ இன்னும் வரப்போகும் காலத்திலும் அசைக்க முடியாமல் உலாவப்போகிறதே இந்த உருவம் என்று அதிர்ந்து போய் கிடக்கிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தங்களைத் தாங்களே அழைத்துச் சப்புக் கொட்டிக் கொண்டிருந்த நாயகர்கள் எல்லாம் பேயறைந்தது போல நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள் இப்போது. காரணம் ரஜினி என்ற பிம்பம் முதுமை என்னும் காலச் சக்கரத்திற்குள் கரைந்து போய்விடும் என்று மனப்பால் குடித்தவர்களுக்கெல்லாம் நவீனத்தின் உதவியோடு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டாரின் புதல்வி செளந்தர்யா அஸ்வின்.....                                     ....கோச்சடையான்...... இது ஒன்றும் பத்தோடு பதினோராவதாக வரும் ஒரு தமிழ் சினிமாப்படம் கிடையாது. மோஷன் கேப்சரிங் என்பது உயரிய தொழில்நுட்பத்தை வைத்து குறிப்பிட்ட நடிக நடிகையர்களின் உடல் சலனத்தை துல்லியமாய் பதிவு செய்து அதை கணிணிப் படுத்தி விரும்பியபடி ஒப்பனையிட்டு, விரும்பிய இடத்தை எல்லாம் கற்பனையாய் வடித்தெடுத்து அதில் ரத்தமும் சதையுமாய் அவர்களை உலாவவிடுவது, கோச்சடையான் அப்படித்தான் ஒவ்வொரு ப்ரே

அது அப்படித்தான்...!

அது அப்படித்தான். அதிகம் அலட்டிக் கொள்ளாது. வியாக்கியானங்கள் பேசி தன்னை புகழ்ந்து கொள்ளாது. சோகமாய் தலை சாயும் போது அதுவே தோள் கொடுக்கும். கீழே விழும் போது மடி கொடுக்கும். ஆதரவாய் எப்போதும் கரம் பற்றிக் கொள்ளும், பற்றும். கவிதையாய் பேசிக் கொண்டு உரைநடையாய் வாழும் மனிதர்களுக்கு நடுவே பேச வார்த்தைகளின்றி அது மெளனமாய் நடந்து கொண்டிருக்கும். அடிக்கடி உணர்ச்சிவசப்படும். கோபத்தில் ஊரையே தீக்கிரையாக்கும். நேசித்து நேசித்து பிரளயம் உண்டாக்கும். பிடிக்கும் என்று சொல்லும். பிடிக்காது என்றும் முகம் திருப்பிக் கொள்ளும். பட்டாம் பூச்சியாய் எப்போதும் பட படக்கும், அந்த படப்டப்பினை கண்டும் மகிழும். அதற்கு தேவைகளென்று ஒன்றுமே கிடையாது. ஒரு கோப்பை தேநீரோடு ஆகாயத்தை வேடிக்கப் பார்த்தபடியே கண் சிமிட்டும், மழை பெய்யும் பொழுதினில் வேண்டுமென்றே குடை மறந்து நடை பயில வா என்று அழைக்கும். பேசிக் கொள்ள உலகமே அதனிடம் இருக்கும். பேசாமல் இருக்கவும் அதே உலகம் அதனிடம் இருக்கும். நெகிழ்ச்சியாய் உச்சிமுகந்து, ஆழமாய் நெற்றி வழி தன் அன்பினை செலுத்தும், வாங்கியும் கொள்ளும். கவிதை எழுதுகிறேன் என்று ஏதேதோ எழுதி

கனவுகள் விற்பனைக்கு...!

என் நினைவுகளை என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ? தூரத்தில் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஒன்றும் சொல்வதில்லையா உன்னிடம்? நிலவற்ற கருமை நிற வானத்தில் மூழ்கிக் கிடக்கையில் அந்த பெருமெளனம் எதை நினைவு படுத்தியது உனக்கு...? ஏதோ ஒரு பாடல் கொண்டு வந்து கொட்டும் ஞாபகங்களுக்கு கூடவா ஒன்றும் தெரியாது...? யாரிடம் பேசுகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் இப்படி வெறுமனே பேசுவது பிடித்திருந்தது. இந்த வனத்திற்குள் நான் வந்து வெகுநாளாகிவிட்டது...! நான் வந்தமர்ந்த மலைமுகட்டிலிருக்கும் இந்தப் பெரு மரத்தின் அடியில் என்னைச் சுற்றி புற்கள் வளர்ந்தும் விட்டன. காலம் வேகமாய் நகர்ந்து கொண்டிருப்பதாய் தூரத்து வானத்தின் நீலத்தில் நீந்திக் கொண்டிருந்த ஒற்றை மேகம் என்னிடம் ஒரு மழலையாய் சொல்ல முயன்று கொண்டிருந்தது. ரோம் நகரம் அழிந்து போய் அதே வேகத்தில் மீண்டெழுந்து கொண்டதாம். கிரேக்கத் தத்துவ ஞானிகளை எல்லாம் புதைத்த இடங்களில் இப்போது தொழிற்சாலைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்... பிரமீடுகளுக்குள் படுத்துக் கிடக்கும் ராஜாக்கள் மட்டும் தங்கள் உறக்கத்தை யாரும் கெடுத்து விடக்கூடாது என்பதில் வ

காதல் சுகமானது....!

இப்போதும் கூட அப்படியேதானிருக்கிறது காதல்....! எதுவோ வேண்டுமென்ற ஆசைகளை எல்லாம் காலம் பக்குவக் கத்திகளை வைத்து வெட்டி எறிந்த பின்பும் இன்னமும் நம்மை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டிருப்பது எது என்று யோசித்துப் பார்க்கையில் இன்னும் அழுத்தமாய், ஆழமாய் காதல் என்றால் என்னவென்று புரிகிறது. எத்தனை எழுதினாலும் அலுத்துப் போகாத காதல் இருக்கும் போது வாழ்க்கை என்ன செய்து விடும் நம்மை...? ஏகாந்தக் கனவுகளுக்கு என்ன பெயர் இடுவது? எதையும் எதிர்பார்க்காத நேசத்தை எப்படி எழுதுவது? கடைசியாய் நாம் ஒன்றாய் அமர்ந்திருந்த அந்த மாலைக்குத்தான் எவ்வளவு பொறுமை இருந்திருக்க வேண்டும் தேன்மொழி...? எதுவுமே பேசிக்கொள்ளாத கனத்த நிமிடங்களைச் சுமந்து கொண்டு எப்படித்தான் நகர்ந்திருக்கும் அன்றைக்கு காலம்...? காதலியைப் பெறும் போது காதல் பரபரப்பான உற்சாகத்துக்கு நடுவே வலுவிழந்ததாய் போனாலும் காதலியை இழக்கும் தருணத்தில் அது ஒரு தாயாய் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தத்தான் செய்கிறது. திருமணத்துக்காக காதலித்துக் கொள்ளும் சமூக நடைமுறையில் காதலிப்பதற்காக காதலிக்கச் சொல்லிக் கொடுத்த காதலோடு தான் நான் இன்னமும் வசித்துக் கொண்ட