Skip to main content

Posts

Showing posts from October, 2012

ராஜாவின் கனடா இசைக்கச்சேரியும்...மட்டுப்பட்ட மனித பார்வைகளும்..!

கட்டுக்கடங்கா காட்டாறு அவன். திக்குகளின்றி சுற்றித் திரியும் காற்று அவன். பற்றி, பற்றி பற்றிக் கொள்பவரை எல்லாம் தீயாய் மாற்றும் பெரு அக்னி அவன். கணிதக் கூட்டுக்களைக் கொண்ட கட்டுப்பட்ட நிலையைக் கொண்ட மட்டுப்பட்ட மனிதனில்லை அவன். எல்லோரும் சாதாரணமாய் சுவாசிக்க. அவன் சுவாசம் எங்களுக்கு ஸ்வரமாகிப் போனது. வார்த்தைகளைக் கடந்த பெரும் மெளனத்தை சுமந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்திலிருந்து அதை பிழிந்தெடுத்து இசையாக்கிக் கோர்த்துக் கொடுக்கும் பிரம்மா அவன்.... அவன், அவன் என்று விளிப்பதாலேயே அவன்  ஒன்றும் அவன் இல்லை. அவன், அவள், அது, இது, என்று சுட்டியுணரமுடியாத பேரியக்கத்தின் இசை வெளிப்பாடு அவன். 1970களுக்குப் பிறகு பிறந்த பிள்ளைகளை எல்லாம் யார் யாரோ பெண்கள் பெற்றெடுத்து தாயென்று அறிவித்துக் கொண்டாலும் அத்தனை பிள்ளைகளையும் அவன் இசைதான்  தாலாட்டியது. கர்நாடக சங்கீத பாரம்பரியத்துக்குள் பாடல்கள் சாமானியனுக்கு எட்டாக்கனியாய் இருந்த போதும் சரி, அதே இசை தபேலாக்களுக்குள் நின்று கதைகள் பேசிய போதும் சரி, சங்கீதம் என்பது நமக்கு அன்னியமாய்த்தான் இருந்தது. அவன்..... ஆர்மோனியப் பெட்ட

இது எனது முறை....!

அப்போது யாருமற்று நான் நின்றேன். வலித்த போது என் கண்களே கலங்கியது. உலகம் தள்ளி நின்று கொண்ட போது நான் தனித்து நிற்க கற்றுக் கொண்டேன். தொடர்ச்சியான துரோகங்கள் எனக்கு இரணங்களைக் கொடுத்தாலும் அவை தழும்புகளாய் மாறி எனக்கு அனுபவமாகிப் போனது. அழுது, அழுது கண்ணீர் வற்றிப்போன போது என் கண்கள் பள பளக்கத் தொடங்கி இருந்தன. எல்லோரையும் காப்பாற்றும் கடவுளைப் போன்றவன் நான். கொடுக்கும் வரை கொண்டாடி, கொடுக்க முடியாவிட்டால் நீ எல்லாம் என்ன மானங்கெட்ட கடவுள் என்று  சீண்டிப்பார்க்கும்  உன்னத நிலையை எனக்கும் கொடுத்துப் பார்த்தான் சக மானுடன். நான் தனித்து இருந்தேன். அப்போது என் கவலைகள் எனக்குத் துணையாயிருந்தது. என் உணர்வுகளும், கொஞ்சம் வார்த்தைகளும் எனக்கு உற்சாகத்தை அவ்வப்போது கொடுக்க ஏதேதோ எழுதத் தொடங்கி இருந்தேன். நடை பயிலும் பிள்ளையாய் தத்தித் தத்தி எழுத்துக்களில் நான் நடக்க, நடக்க அந்த நடை எனக்குப் பிடித்துப்  போனது. எழுதவேண்டும் என்று நினைத்த போதெல்லாம் ஏதோ ஒரு வலி என்னிடம் இருந்தது. எனக்கு வலித்த போது எல்லாம் எழுதினேன். மேய்ப்பனாய் மாறிவிடுவேன் என்ற கனவிலேயே நான் ஆட்டுக்குட்டியாய் ஆகிப் போக,

இசையோடு இசையாக...தொகுப்பு 8!

ஓடி வந்து உன்னைச் சந்திக்க தேக்கி வைத்திருக்கும் ஆசைகள்தான் எத்தனை எத்தனை...!!! என் வாழ்க்கையின் சொர்க்க நிமிடங்கள் எல்லாம் உன் நினைவுகளால்தான் நிரம்பிப் போயிருக்கிறது. காதலைச் சொல்ல வார்த்தைகள் தேவையில்லை என்று நான் என் விழிகளால் உனக்கு சொன்ன செய்தியை வாங்கிக் கொண்டு புன்னகைத்த உன் விழிகளை விட ஒப்பற்ற கவிதையொன்றை இது வரையில் நான்  வாசித்திருக்கவில்லை. ப்ரியங்களைச் சுமந்த ஒரு கவிதை ஒன்றை உனக்காக எழுதிவிடத் துடிக்கும் என்  உணர்வுகள் எல்லாம் தோல்வியில் உன் முன் மண்டியிட்டு உன் பாதங்களை முத்தமிட்டு மெளனத்தையே கவிதையாக உன் பாதங்களில் சமர்ப்பிக்கின்றன. உடலைத் தொலைத்து விட்டு உணர்வுகளோடு வாழும் வாழ்க்கை ஒன்றை உன்னோடு வாழ்ந்து தொலைப்பதில் இருக்கும் செல்லமான அவஸ்தையை எப்படி நான் வர்த்தைகளுக்குள் கொண்டு வருவது.....? எதுவுமே பேசாமல் உன் விழிகளைப் பார்த்துக் கொண்டே நான் அடைந்த பரவச நிலையை எப்படி மொழி பெயர்ப்பது? காதலென்ற அற்புத  உணர்வை ஒரு சிற்பியாய் நான் செதுக்குகையில் கிடைக்கும் அற்புத சிலையை ஒத்த வார்த்தைக் கோர்வைகள் எல்லாம் மிக சாதாரணமானவை

நானும் ஓர் கனவோ....?!

பேனாவைத் திறந்து காகிதத்தை நெருங்கும் வரையில் எந்த தளத்திற்குள் எண்ணங்கள் சீறிப்பாயும் என்ற ஒரு  உறுதியில்லை. எப்படிப் பார்த்தாலும் எழுத்துக்கள் எல்லாம் ஏதோ ஒரு அவஸ்தையின் வெளிப்பாடுகள்தான். அவஸ்தைகளை வலிகளுக்கும், சோகத்துக்கும் கொடுத்துப்பார்க்கும் பொது புத்திகள் சந்தோசமும் ஒரு அவஸ்தைதான் என்பதை நம்ப மறுக்கும். எழுதுவதற்கு எப்போதும் கட்டுப்பாடுகளை நான் வைத்துக் கொள்வது இல்லை. வெறுமையான வானத்தின் கட்டற்ற சுதந்திரத்தை திட உடம்பிற்குள் நின்று பொறாமையாய் எதிர்கொள்கையில் புத்திக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஓராயிரம் இனிய பொன் நிலாக்கள் உதயமாகவும் செய்யும். ஒரு கடற்கரை ஓரத்து மாலை வேளையை உடை கலைத்து, உடல் தழுவி, உள்ளம் நிறைத்துவிளையாடும் காற்றாகவும், கால்கள் பதிய நடந்து பார்க்கும் விரிந்து பரந்த மணலாயும், கடலென்னும் கவிதை மேலெழும்பி பின் கீழ் சென்று கரை மோதி மோதி விளையாடும் காம விளையாட்டை கண்களால் பருகியும்தான் அனுபவிக்க வேண்டும். கட்டுப்பாடுகள் கவலையுற்ற புத்திகள் செரித்துப் போட்ட அபத்த  அனர்த்தங்கள்.  அ ன ர்த்தங்களே அபத்தமானதுதானே...?!!!! சீறிப்பா

தாளமிங்கு தப்பவில்லை...யார் மீதும் தப்பு இல்லை!

சில விசயங்களை உள்ளுக்குள் அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறேன். பேரமைதிக்குள் விழுந்து கிடந்த அந்த காலமற்ற பொழுதையே எண்ணி மனம் ஏங்கிப் போய் அன்றாடங்களில் பேசவும், மற்றவர்கள் பேசுவதைக் கேட்கவும் குறைத்துக் கொள்ளச் சொல்கிறது. விவரிக்க முடியாத புலன்களைக் கடந்த ஒரு விசயத்திற்குள் நான் ஏனோ, தானோ என்று சென்று விழுந்து விட்டேன். சப்தமில்லை, குணம் இல்லை, நிறம் இல்லை, பொருட்கள் என்று எதுவுமே இல்லை. உணர்வு மட்டுமே எஞ்சி இருக்க, கிடந்து பார்த்த அந்த பெரும் அனுபவத்தை விட்டு வெளியே வர சுத்தமாய் பிடிக்கவில்லை. தேவையின் அடிப்படையில் இங்கே யாரும் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதே இல்லை. சொல்ல வந்த செய்தியையும், கேட்க வேண்டிய செய்தியையும் விட்டு விட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு எப்படி ஒட்டி வாழ்வது  என்பதுதான் இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் பயிற்சி. எதுவுமே இங்கே சிறப்பு இல்லை என்று தெரிந்த பின்னால் மூச்சுக்கு முன்னூறு தடவை தொடை தட்டி கொக்கரித்து நான் செய்தேன், நான் செய்தேன் என்று புஜபலம் காட்டும் ஒரு வாழ்க்கை ஏளனத்துக்குரியதா இல்லையா? மனித மனத்தை சீரமைத்து ஒரு வழித் தடத்துக்

என் கவிதை... மூச்சு... இசை!

ப்ரியங்களை சுமந்த உன் கடிதத்தினை ஒரு குழந்தையை ஏந்தி வரும் தாதியாய் என்னிடம் சேர்ப்பித்து சென்ற தபால்காரனின் மீது பெருங்கருணை ஒன்று பிறந்தது. உன் கையெழுத்தில் என் முகவரியை உறையின் மேல் பக்கத்தில் எழுதியிருந்த உனக்கு, நீதான் என் முகவரி என்பதும் தெரியும். விலாசங்கள் எல்லாம் வாழ்க்கையின் தற்காலிகப் பக்கங்களை குறிப்பிடுபவை. நீ எழுதி அனுப்பிய கடிதம், நீ எனக்கு தூரமாய் இருப்பதைப் போல போலியாய்க் காட்டினாலும் என்னுள்ளே எனக்கு மிக அருகே நீ இருக்கிறாய். வாஞ்சையோடு காதலை உன் பேனாவுக்குள் நிரப்பித்தான் என் பெயரை முகவரிக்காக நீ எழுதி இருக்கவேண்டும். எழுதியவரின் ஆசையை வாசிப்பவன் உள்வாங்கிக் கொள்ளத்தான் செய்வான். வெறுமனே ஆசை என்றில்லாமல் நீ ஆசை, ஆசையாய் என் பெயரை அழுத்தம் திருத்தமாய் எழுதி மீதி இருக்கும் எழுத்துக்களில் காதலை ஊர்வலப்படுத்தி இருந்தாய். முகவரியின் கடைசி வரியை நீ எழுதி முடித்திருக்கையில் ஒரு பதட்டம் ஒன்று பளீச்சென்று உனக்குள் வந்து போனதை கொஞ்சம் கோணலாய் கலைந்து போயிருந்த அந்த எழுத்துக்கள் எனக்குச் சொன்னது. அனுப்புனர் பகுதியில் அக்கறையில்லாமல் சிதறிக்கிடந்த உன் பெயர் உனக்கு ம

பட்டம் தர தேடுகின்றேன்... எங்கே அந்த நாயகன்?

பல காரணங்களுக்காக அக்டோபர் மாதத்தை எனக்குப் பிடிக்கும். அதிகம் குளிராமல், நச நசவென்று தூறாமல், அழுத்தமாய் சூடில்லாமல்  ஒரு மாதிரி இதமாய் இருப்பதாலோ இல்லை அக்டோபர் ஒண்ணு அக்காவின் பிறந்த நாள், அக்டோபர் ஏழு என்னுடைய பிறந்த நாள் என்று கொண்டாட்டத்தை சிறுவயதிலேயே திணித்து விட்டதாலோ என்னவோ அக்டோபர் என்னை அதிகம் வசிகரீக்கும். தட்டில் மிட்டாய் பாக்கெட்டை பிரித்துக் கொட்டி, புதுச்சட்டை, விபூதி, சந்தனம் எல்லாம் அணிந்து, கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை எடுத்து சட்டை மேல் போட்டுக் கொண்டு நாங்கள் குடி இருந்த தெருவில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று.... " மாமி இன்னைக்கு எனக்குப் பிறந்த நாளு......மிட்டாய் எடுத்துக்கோங்க, அண்ணா சாக்லேட் எடுத்துக்கோங்க, டேய்........பாபு எடுத்துக்கடா...., அக்கா இன்னைக்கு எனக்கு பிறந்த நாளேய்...." என்று உற்சாகமாய் நடந்து நிறைய ஆசிர்வாதங்களோடு, எல்லோரும் அன்பை பொழிந்து அன்பளிப்பு கொடுக்கும் அந்த நாளை யாருக்குத்தான் பிடிக்காது...?  வாழ்க்கையின் மிக முக்கியமான தேவை என்ன தெரியுமா?  பணம்......என்றுதானே நினைக்கிறீர்கள், அதுதான் இல்லை. வாழ்க்கையின் மி

பிராப்ள பதிவர்....பப்பு...!!!!!

சுத்தி நடந்துட்டு இருக்க விசயத்தை பத்தி ஏதோ அபிப்ராயத்தை சொல்லாம போய்ட்டோம்னா நம்ம தலை வெடிச்சே போயிடும்ன்ற மாதிரி தோண ஆரம்பிச்சுடுச்சு.... டாக்டர்... திணறிக் கொண்டே பப்பு பேச ஆரம்பித்து இருந்தான்.... பொங்கி பொங்கி என்னைய மட்டும் தனியா வச்சுட்டு மிச்சம் இருக்குற உலகத்தையே காறித்துப்ப தோணுற எனக்கு ஒரு ட்ராபிக் சிக்னல்ல கரெக்ட்டா லைன்ல நிக்க துப்பு இல்லீங்க...! ரெயில்வே ஸ்டேஸன்ல ட்ரெயின்ல இருந்து இறங்கி பிளாட்பார்ம தாண்டி வெளியில வர்றதுக்குள்ள பஞ்சப் பரதேசிங்க பிச்சைக் கேட்டு தொல்லைப் பண்றத பாத்துட்டே வந்தாலும் யாராச்சும் ஒரு முடியாத வயசானவங்களுக்கு பத்து ஒத்த ரூபாய  கொடுக்க வக்கு இல்லாத நான்.... பொதுவா ஊர்ல எங்க்யாச்சும் ஒரு பிரச்சினை நடந்து அதுகு ஒரு நடிகனோ இல்லை அரசியல்வாதியோ ஏதாச்சும் உதவி பண்ணலேன்னா அவுங்கள பாத்து ஏண்டா எச்சக்கலைங்களா? ஏன் வூட்டு காச...நல்லா கவுனிங்க டாக்டர்.. ஏன் வூட்டு காச... எச்சத் தின்னு பெரிய நடிகனாவும், அரசியல்வாதியாவும் ஆன டுபாக்கூருங்களா.....இந்த இந்தப் பிரச்சினைக்கு இன்னாடா செஞ்சு நீங்க கழட்டுனீங்கன்னு... கம்ப்யூ