Skip to main content

Posts

Showing posts from June, 2010

என் தாயே....என் தமிழே...!

யாம் பிறந்து விழுந்த பொழுதினில் எம்மில் இருந்து தெரித்து விழுந்த ஒலியாய் வெளிப்பட்ட தாயே.....என் தமிழே...! மானிடரின் சப்தங்கள் மட்டுமே மொழியாய் போன ஒரு உலகத்தில் எம்மின் உணர்வுகளை எல்லாம் வெளிக் கொணர சப்தமாய் வெளிப்பட்டு உன்னை மொழியென்றும் எம் தாயென்றும் தமிழென்றும் கொண்டோம். உலகம் மொழியறியா காலத்தில் கவிசெய்தோம் நாம். இயல், இசை, நாடகம் என்று உன்னில் எத்தனை எத்தனை வித்தைகள் செய்தோம். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த எம்மிடம் சப்தம் இருந்ததால், சப்தமென்ற தமிழிருந்தால் வலியையும், சந்தோசத்தையும், துக்கத்தையும், சரியான பாகத்தில் எம்மால் வெளிக்கொணர இயன்றதால் மானிடரின் உணர்வு விளங்கும் தெளிந்த நிலையை எய்தினோம். ஒப்பற்ற ஒரு இனமாய் உலகுக்கு அறிமுகமானோம்! காலங்கள் தோறும் மனிதர்கள் வந்தனர். உம்மை கற்றுத் தெளிந்து தம்மை புலவர் என்று தாமெ தம்மையே விளித்துக் கொண்டனர். உன்னைக் கொண்டு கவிசெய்தனர், புதினம் செய்தனர், பாடல் செய்தனர் இசை செய்தனர். உன்னைக்கொண்டு ஒரு வாழ்வு உம்மால் ஒரு வாழ்வு...என்று காலங்கள் தோறும் நீ வளர்த்திருக்கிறாய் மனிதர்களை. எத்துனை சுவை கொண்டவள் நீ....அடுக்குத் தொடராய், இரட்டைக் கிளவி

மெல்ல திறக்கட்டும் மனது...!

பயணம் யாரோ புல்லாங்குழல் வாசிக்கிறார்கள்..... இந்த முறையும் தவறாமல் ...காற்றில்.. தன்னை கரைத்துக் கொண்டு... பயணத்தை தொடர்கிறது... மெல்லிய....கீதம்...! * * * கவிதை மெல்ல நகரும்... ஒரு ஆற்றின் ஓரத்தில்.. சப்தமின்றி..நீரில் சாய்ந்து.... கவிதை செய்கிறது ஓற்றை நாணல்! *** குளிர் காத்திருகிறேன்... மீண்டும் ஒரு குளிர்காலத்திற்கு.... கனத்த ஆடைகளைப்... போட்டெரித்து....... வெற்றுடம்போடு.. குளிரினைக் கட்டி அணைத்து... நேசம் கொள்ள! *** கூடல் அமைதியாய் புணர்ந்து... பிரியும்..இந்த வண்டுகளுக்காகவே... நான் பூவாக... பிறக்க வேண்டும்... ஒருமுறையாவது! *** மொழி ஏன் இன்று வரை... புரியவில்லை.. இரைச்சலுக்கு... மெளனத்தின் மொழி..மட்டும்! *** காதல் உனக்கென்று... என்ன வேண்டும்... கற்பனையாய் கேட்டேன்.. ஒரு மழை பெய்தால் போதும் எதார்த்தமாய் நீ சொன்னாய்..... சாரலாய்...என் நெஞ்சுக்குள்... பெய்தது... நீ கேட்ட மழை...! *** சுதந்திரம் ஒரு காட்டு மலராய்... இருப்பதில்தான்.. எவ்வளவு சுகம்... மலர்ந்தாலும்..காய்ந்தாலும்... கருத்து சொல்ல யாருமில்லை...! *** தோல்வி உன் ஒவ்வொரு... மெளனத்திற்கும்... எதிர் கவிதை எழுத... அந்த தருணத

ஆன்மாவின்....பயணம்!

என்னை யாரும் தேடாதீர்கள் பத்து நாளில் நானே திரும்பி வருவேன் பயம் வேண்டாம் என்று எழுதி கடிதத்தை டி.வி பெட்டிக்கு அருகே வைக்கும் போது மணி..2.00 அதிகாலை. உறவுகள் எல்லாம் அடுத்த நாளை எதிர்கொள்ளப்போகும் அயர்ச்சியான ஒரு தூக்கத்திலிருந்த போது...என்னுடைய தோள்பையுடன் மெல்ல கதவு திறந்து வெளி வரண்டா திறந்து மெயின் காம்போண்ட் தாண்ட்டி... வெறுமனே... அடிமேல் அடி வைத்து நடந்து கொண்டிருந்தேன். நிசப்தம் அறிய வேண்டுமென்றால் அதிகாலையில் எழுங்கள்...! அதிகாலையில் எழுவது எல்லா வகையிலும் நல்லது என்றுதான் எல்லா சமயங்களும் (மதம்னு எழுத பிடிக்காமதான் எழுதுறேன்...வேற அர்த்தம் எடுத்துக்காதீங்க) அதிகாலை எழுதலை ஒவ்வொரு காரணம் சொல்லி வற்புறுத்தி வந்திருக்கிறது. அறிவியல் அதிகாலையில் ஆக்ஸிஜன் ததும்பி எங்கும் பிராணன் (ஆக்சிஜன் தன) நிறைந்திருக்கும் என்றும் சொல்கிறது. இது எல்லாம் கடந்து...அந்த ஒரு அமைதி பின் ட்ராப் சைலன்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வோமே...அந்த ஒரு நிசப்தம் உங்களோடு மெளன மொழியில் ஏதேதோ பேசி உங்களை மகிழ்விக்கும், கிச்சு கிச்சு மூட்டும் (யாரெல்லாம் அதிகாலைக்கு நண்பர்களோ அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் சந்தேகம் இர

ப்ளாச்சுலன்னா..ப்ளாச்சுல...!

ப்ளாச்சுலன்னா..ப்லாச்சுலன்னா தேனு மாதிரி இனிக்குமுன்னா..யாக்கா வாங்கி டேஸ்ட் பாருங்கக்கா...பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் பேருந்துகள் சில மணிகள் நின்று கிளம்பும் . சில பேருந்துகள் நிலையம் உள்ளே வந்து ஒரு சுற்று சுற்றி சில நிமிடத்திலேயே சென்று விடும். அந்த பேருந்து நிலையத்தில் மாற்றுப் பேருந்துக்காக ஒரு உச்சி 12 மணி கோடை வெயிலின் உக்கிரத்தை தாங்கியபடி நான் அமர்ந்திருந்தேன் . காத்திருந்த பொழுதில் என் பார்வை அடிக்கடி தடுக்கி விழுந்தது இந்தச் சிறுவனின் மீது. எனது கண்ணேட்டதில் 10 தாண்டியிருக்காது வயது. கருத்த தேகமும், படிய வாரின தலையும்...பட்டனுக்கு மாற்றாய் ஊக்கு போட்டு மூடியிருந்த சட்டையும், ஊதா நிற வெளுத்த கால் சட்டையும்..அவனின் குடும்பத்தின் பின்புலத்தை மெதுவாய் போதித்தன. பம்பரமாய் வியாபரம் செய்வதும், கூடவே விற்கும் சக வியாபரிகளை விட தன்னை முன்னிறுத்தி தன்னுடைய பலாச்சுளைகளை விற்க பட்ட பிரயத்தனமும் அவனின் பொருளாதார தேவையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தின. சிலர் வாங்கினர்.... சிலர் வாங்கி பணம் கொடுத்து சில்லறை வாங்கும் முன் பேருந்துகள் நகரத் தொடங்கின...! பையன் ஓடோடி சென்று சில்லறை

கவனியுங்கள்....புரிந்துகொள்வீர்கள்...!

ஒவ்வொரு நாளும் பூங்கொத்துகளோடு காத்திருக்கிறது வாழ்க்கை..பாவம் மனிதன் நல்ல மனோ நிலையில் இருந்தால் அதை வாங்கிக் கொண்டு...சிரிக்கிறான். வேறு ஏதோ தாக்கத்தில் இருந்தால் திரும்பி கூட பார்க்காமால் சென்று விடுகிறான்......ஆனால் வாழ்க்கையோ நித்தம் காத்திருக்கிறது பூங்கொத்துக்களுடன். நாளை (21.06.2010) முதல் ஒரு வார காலத்திற்கு வலைச்சரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்கும் வாய்ப்பினை மரியாதைக்குரிய ஐயா சீனா அவர்கள் எனக்கு அளித்துள்ளார்கள். வலைச்சரத்தில் தொகுக்கும் நேரங்களில் என்னுடைய வலைப்பூவிலும் இடுகைகள் இட முயற்சிக்கிறேன். இரண்டு நாளாய்..புத்தரின் தம்மபதத்தை புரட்டிக்கொண்டு இருக்கிறேன். ஒரே ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு நடுவே...இப்படி புத்தகம் படிக்கும் நேரங்களில் மெல்ல நமக்க்குள்ளேயே தொலைந்து போவது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த ருசியினை அனுபவித்தவர்களுக்கு நான் சொல்வதின் சாரம் விளங்கும். மற்றவர்களுக்கு வார்த்தை அளவிலேயே நின்று போகும். ''கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது " இரண்டு நாட்களாய் திரும்ப திரும்ப என் நினைவுக்கு வரும் வாக்கியமாக மேலே சொன்ன வாக்

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும

காசி.....பதிவுத் தொடர்...முடிவு!

படைக்கப்பட்டது முதல் சுழன்று கொண்டிருக்கும் பூமியும், பழக்கப்பட்டதின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் மனித மனமும் நிற்கும் கணத்தில்தான்.....எல்லா ரகசியங்களும் தெரியவரும். ஒரு நாள் பூமி நிற்கும் அல்லது நொறுங்கும் அல்லது..கரைந்து போகும்.....! மனித மனமும் கூட.. நீங்கள் தீர்மானித்தால் இந்தக் கணமே..... காசி அண்ணணின் மிரட்டல் தொடருகிறது...... இதுவரை இனி.... கடவுள் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் காசி அண்ணனின் மிரட்டலும் எனக்குள் ஏற்பட்ட பயமும்...அந்த மார்கழி குளிரிலும் எனக்கு வியர்த்ததும் எழுத்துகளுக்குள் வராமல் முரண்டு பிடிக்கின்றன...! ஆனால் யோசித்தேன்... எதற்கு கடவுள் இருக்க வேண்டும்......ம்ம்ம்ம்ம்...பட்டென்று சொன்னேன்... "நம்மள எல்லாம் காப்பாத்துறதுக்குண்ணே....அப்புறம்...கெட்டவங்கள அழிக்கிறதுக்குண்ணே...." உன்னை எத்தனை தடவை காப்பாத்தி இருக்கார்? எத்தன தடவை நீ கடவுள்தான் காப்பாத்தினார்னு உணர்ந்து இருக்க? கெட்டவங்கள அழிக்கன்னா இருக்குற கெட்டவங்கள எல்லாம் ஏன் இன்னும் கடவுள் அழிக்கல? அடுத்தடுத்த கேள்விகளில் திணறிய என்னை மேலும் பேசவிட வில்லை காசி அண்ணன்..... வடக்கு தெருவில இருக

காசி.....!

வீடுகளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது...வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கடையில் சாமான் வாங்கிக் கொடுப்பது என்பது தொடங்கி ஒவ்வொருவரின் அன்றாடத் தேவைகளுக்கு எல்லோரும் கூப்பிடும் பெயர் காசி. எப்பவும் மொட்டை அடித்து விடுவார் அதானல் பாதி வளர்ந்த நிலையிலேயே இருக்கும் அவரது தலை முடி பல சமயத்தில் அதுவே பெயராயும் போனதுண்டு. அரைக்கை வெள்ளை பனியனும் ஒரு மாதிரி பெண்கள் நொண்டி விளையாடும் போது அள்ளி சொருகிக் கொள்வது போல் கட்டப்பட ஒரு லுங்கியும் நெற்றி நிறைய பூசிய திரு நீரும் காசி அண்ணனின் அடையாளங்கள்....! டேய்.. காசி...! ஏய்....லூசு....! காசிண்ணே....! எலேய்..கிறுக்கு..மொட்டண்ணே.....இது அவ்வப்போது மக்கள் தங்களின் வசதிக்கேற்ப கூப்பிடும் பெயர்கள். வேலை செய்யாமல் காசு வாங்க மாட்டார். அதிகம் பேசுவதுமில்லை... ரோட்டில் போகும் காசி அண்னனை அலுவலகத்தில் பணி செய்பவர்கள் முதல் தெருவில் குப்பைக் கூட்டும் தொழிலாளி வரை எல்லோரும் கிண்டல் செய்யும் போது அப்படி...அவரின் சீற்றமும் கோபமும் கடுமையாய் இருக்கும்...யாரையும் திரும்பிக் கூட பார்க்காத காசி அண்ணனை ஏன் இவர்கள் வம்பிக்கிழுக்க வேண்டும் என்று எனக்கு புரிவதில்லை ஆன

மெளனம்....!

என்ன எழுதுவது என்று தெரியவில்லை. எதுவுமே தோன்றாமல் மனம் ஒரு மழைக்குப் பின் துடைத்து வைத்த வானம் போல இருக்கிறது. ஒரு மாதிரியான அவஸ்தை நெஞ்சில் இருக்கிறது....ஆனால் மூச்சு சீராய் இருக்கிறது. உடலின் எடை கூட இருப்பது போல தெரியவில்லை.மெளனமாய் இருக்க ஏறக்குறைய முயற்சிக்கிறேன். இந்த கணத்தை நீட்டித்துகொண்டு இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது. கேள்விகள் அற்றுப்போவதும், எண்ணமில்லாமல் இருப்பதும் ஒரு வரப்பிரசாதம். எல்லா கேள்விகளுக்கும் எப்படி பதில்கள் இருக்கின்றனவோ... அதேபோல அந்த பதில்களை உடைத்துப் போடவும் வேறு சில கருத்துக்களும் நிச்சயமாய் இருக்கின்றன. அதனால் கருத்துக்களின் பின் செல்லாமல் கருத்துக்களை விட்டு தள்ளி இருப்பது ஒரு சுகமான அனுபவமாயிருக்கிறது, ஆரம்பத்தில் பழக்கப்பாடாத மனது.... இதன் சூட்சுமத்தை உணர்ந்த பின் ஒரு ஓரமாய் ஒதுங்கி நல்ல பிள்ளை போல வேடிக்கைப் பார்க்கிறது. காட்சிகளுக்குள் சிக்காமல், தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளாமல், வேடிக்கை பார்ப்பது என்பது ஒரு அலாதியான விசயம்தான். சிலர் நினைக்கிறார்கள் கேள்விகள் கேட்டு பதில் கிடைக்கும் என்று ஆனால் பதில்கள் எல்லாம் பொய்யாய் மாறும

சாதியே....உன்னை வெறுக்கிறேன்....பதிவுத் தொடர் II !

நித்தம் நகர்ந்து கொண்டிருக்கிறது....வாழ்க்கை! மறுத்துக்கொண்டும், ஆதரித்துக் கொண்டும்..விமர்சித்துக் கொண்டும்...கொண்டாடிக் கொண்டும் நகர்ந்து கொண்டிருக்கிறது மானுடம். ஒவ்வொரு மூளையும் ஒவ்வொரு சித்தாந்தத்தை பிடித்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய சித்தாந்தத்துக்கு முரண் பட்டவர்களை பைத்தியம் என்று ஒவ்வொருவறும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்....உண்மையில் எந்த சித்தாந்தமும் இல்லை என்று உணர்ந்தவர்கள் இவர்களை விட்டு தள்ளி இருக்கவே ஆசைப்படுகிறார்கள். சாதி... .ஒரு பெருங்கொடிய... நோய்....! வாருங்கள் தோழர்களே....பேசாப் பொருளை பேசத் துணிவோம்! இதுவரை... இனி.... பேருந்தினுள் என் தோள் தொட்டு திருப்பியவர் என்னைக் கும்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்.....! நெகிழ்ச்சியோடு "அண்ணே....காமாட்சி அண்ணே.... நல்லாயிருக்கிங்களா என்று அவரை கேட்டவுடன் " அப்பு நீங்க.. மணி ஆத்தா (என் அம்மா) மயந்தானே (மகன்)? செல்லம் ஐயா தங்கச்சி மயன்....என்று கேட்ட 55 வயது காமாட்சி அண்ணன் சலவைத் தொழில் செய்பவர். நின்று கொண்டிருந்த காமாட்சி அண்ணன் நீண்ட போரட்டத்துக்கும் என்னுடைய கடுமையான வலியுறுத்த

பிரபஞ்ச புதிர்....!

எதை எழுதினாலும் உனக்கான கவிதையாய்... மாற்றும் என் பேனாவுக்கும்... எப்போதும் உனை நோக்கியே... பாயும் என் நினைவுகளுக்கும் புரிவதில்லை நான் தான் எஜமானனென்று.... ஒரு மழைக்காய் ... நீ குடை விரித்தாய்..... சந்தோசத்தில் சிரித்தது... மறைந்திருந்த சூரியன் எப்போது .... நீ கோலமிட வருவாய் என... காத்திருக்கிறோம்... நானும் ..உன் வீட்டு வாசலும்! உனக்கு வியர்க்கும் போது... எனக்கு கோபம் வரும்... உன் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் வியர்வையின் மீது! ஒரு முறை ... நீ.. அச்சச்சோ என்று சொன்னாய்... ஒராயிரம் முறை.. சொல்லிப்பார்த்தேன் நான்! ஒரு முறை கூட உன் அழகு அதில் இல்லை! கடைக்கண்ணால்.. என்னை பார்க்கும்... ஒவ்வொரு கணங்களும் யுகங்களாய்தான் நீண்டால்தான் என்ன? களுக் கென்று... நீ சிரித்தாய்... கிழே விழுந்த..சில்லறையாய்.. சிதறிப் போனேன் நான்...! நீ...உறங்கும் போது... உன்னைக் காணவேண்டும்.. என்ற ஆசையில்... இரவு முழுதும்... உறங்கவில்லை நான்! அது ஒரு பெளர்ணமி இரவு.. முதன் முதலாய்.... இரவில் உனைப் பார்த்தது.... திடுக்கிட்டே... போனேன்... ஒரு இரவுக்கு எப்படி... இரு நிலவென்று...! என்னவோ சொல்ல... உன்னருகில் வந்தேன்... "ம

சுட்டதை சுட்டேங்க.... அவ்ளோதான்!

ஊரெல்லாம் சுற்றிப் பறந்த அந்த காகத்திற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. அந்த நாளின் வெயில் கூட ரொம்ப அதிகம் மாலை 3 மணி வரை சுற்றி சுற்றி களைத்த காகம் துவண்டு எந்த நேரம் வேண்டுமானாலும் மயங்கி விழும் என்ற நிலை. பசி....அவ்வளவு கொடுமையானது! எப்போதும் உங்களுடன் நான் இருக்கிறேன் என்பதை நினைவு கூறுங்கள் என்றுதான் சுவாசிக்கும் ஒரு நிகழ்வு நமக்குள் நிகழ்கிறது. மூச்சை இழுத்து வெளியே விடும் போது எல்லாம் புற சக்கி ஒன்று நமது இயக்கத்துக்கு தேவை என்பதை எல்லா ஜீவராசிகளும் உணர வேண்டும். இதற்கு இறை கொடுத்துள்ள ஒரு ரிமைண்டர்தான்...சுவாசம். மிகைப்பட்ட பேர்கள் இதை நினைப்பதில்லை...! தூக்கம் ஒரு ரிமைன்டர்... தூங்காவிட்டால் பைத்தியம் பிடிக்கும்..உறக்கத்திலும் ஓய்விலும் மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைப்பதால்தான் ஒரு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கிறது. அது போல....கடவுள் வைத்த மிகப்பெரிய ரிமைன்டர்...பசி....! பசி வந்தால் பத்தும் பறந்து போகும்...ஆனால் பறக்கும் இந்த காகத்திற்கோ பசியால் பறக்கவே முடியாமல் தள்ளாடித் தள்ளாடிப் போய் வந்து ஒரு கூரை வீட்டு வாசலின் ஓரமாய் அடுக்கி வைத்திருந்த சுள்ளிகளின் மீது வந்து விழுந்தது என்

விபத்து....!

தொலைபேசியின் தொடர்ச்சியான சிணுங்களில் சமையலறையில் மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்தவள் அப்போதுதான் மணி எத்தனை என்று பார்த்தாள். காலை பதினொரு மணிக்கு யாரு இப்படி விடாம போன் அடிகிறது என்று அலுத்தவளாய்.....ரீசீவரை எடுத்து....." ஹலோ... நான் சுமதி பேசுறேன்....என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு கேட்டவளுக்கு தலை சுத்தாத குறையாகிவிட்டது. மூச்சு திணறிய படி.... வந்த அழுகையை அடக்கிக் கொண்டு...சரிங்க.... நான் இப்பவே புறப்பட்டு வர்றேன்...எந்த ஆஸ்பிட்டல் சொன்னீங்க....என்று குறித்துக் கொண்டு... போனை தடாலென்று வைத்தவள் ' ஓ ' வென்று அழத்தொடங்கினாள் அந்த 27 வயது சுமதி. திருமணமான இந்த 6 வருடத்தில் எவ்வளவு அன்யோன்யம் எவ்வளவு புரிதல். பல நேரங்களில் இவனைப் போல் கணவன் கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சுமதி நினைக்கும் அளவிற்கு அத்தனை அன்பு. காலையில் அலுவலகம் செல்லும் போது எவ்வளவு துள்ளலாக சென்றான் முரளி...இப்போது பைக் ஆக்ஸிடெண்ட் ஆகி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பகுதியில் இருக்கிறான் என்றால் எப்படி தாங்குவாள் சுமதி. இரண்டு தெரு தள்ளி இருந்த முரளியின் அம்மா, அப்பா, தம்பி மூன்று பேரும் வீட

மறந்து போன பயணங்கள்...!

சரியாக எப்போது என்று சொல்லமுடியாத காலம் கடந்த நிலை அது...! என்னாலேயே நான் என்னவாயிருக்கிறேன் என்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் இருந்தேன்..அது எப்படி என்றும் விவரிக்க முடியவில்லை ஆனால் ஒப்பீடு சொல்ல முடியும்.... நகரும் காற்று போல ...சக்தியாய் இருந்தேன்... நெருப்பில் சூடு மறைந்திருப்பது போல.... காற்றில் பறந்து அலையாய் வந்து காதில் விழுகிறதே வார்த்தைகள்..அது போல...! வாசிக்கும் போது ஒரு புரிதல் ஏற்படுகிறதே அது போல... அது போலத்தான் ஆனால் அதுவல்ல. உடல் விட்டு நான் நகர்ந்து வந்தது புரிந்ததது ஆனால் காலம் எவ்வளவு என்று சொல்லத்தெரியவில்லை அல்லது அது காலமில்லா இடம் அதனால் கணித்துப்பார்க்கவே தோணவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் உடல் சம்பந்தமான நினைவுகள் இருந்தது அதுவும் விட்டுப் போகும் நிலையில் அதாவது கண்ணாடியை மறைத்திருக்கும் பனி இளஞ்சூட்டில் பாதி கலைந்து பாதி நீராய் வடிந்து வெறுமையாக கண்ணாடியை காட்ட எத்தனிக்குமே அதுமாதிரி....கலங்கலாய்.. மங்கலாய் ஏதேதோ நினைவுகள்.உடல் சார்ந்த உறவுகள் எல்லாம் சுற்றி நின்று கலங்கிக் கொண்டிருந்ததும் எனக்குள் ஏதோ நிகழ்ந்து நெஞ்சில் வலி ஏற்பட்டதும் மட்டும் நினைவில

விழித்துக் கொண்டோரெல்லாம்....பிழைத்துக் கொண்டார்....!

ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன்...(படிப்பினைக்காகத்தான் நடந்த கதையா இல்லையா என்று கேட்டு ட்ராக் மாற்றி விட்டு விடாதீர்கள்....ஹா..ஹா..ஹா) நாராதர் ஒருமுறை திருமாலிடம் சென்று எம் பெருமானே மாயை என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார் அப்போது திருமால் அமைதியாக சொன்னார் சொல்ல முடியாது விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அப்போது நாரதரும் பெருமானும் பேசிக் கொண்டே போய்கொண்டு இருந்திருக்கிறார்கள். நாரதருக்கு தாகம் ஏற்பட்டிருக்கிறது..திருமால் கூறியிருக்கிறார் கீழே போய்... ஏதாவது ஒரு இடத்தில் நீர் அருந்தி விட்டு வா நான் கொஞ்ச நேரம் தியானத்தில் இருக்கிறேன் என்று. நாரதரும் கீழே இறங்கிப் போய் ..தண்ணீர் தேடி அலைந்து ஒரு இடத்தில் ஒரு சிறிய நீரோடையை கண்டிருக்கிறார். நீர் அருந்தி விட்டு திரும்பி பார்க்க ஒரு அழகான பெண் நின்று கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். உடனே அவள் மீது காதல் கொள்ள, அந்த பெண்ணும் நாரதர் மீது காதல் கொள்ள...இருவரும் அந்த பெண்ணின் சம்மதத்தோடு மணமும் புரிந்து கொண்டுவிட்டனர். அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு பரிசாக மூன்று குழந்தைகளும் பெற்றனர். நாரதரும் ஒரு இன்பமான இல்லற வாழ்க்கையில் திளைத்து ம

விசமிகளின் வில்லத்தனம்...தமிழிஷ் கவனிக்குமா...?

அன்பான வாசகர்களே... நான் துபாயில் இருந்து பதிவிடுவது அனைவருக்குமே தெரியும். தாயகத்தை விட்டு பாலை மண்ணிற்கு பொருளீட்டும் பொருட்டு வந்த எமக்கு இந்த தமிழ் இணையங்களும், வலைப்பூக்களும் தான் ஆதரவு. ஒரு சாதாரண பதிவரான நான் இன்று காலை பதிவிட்ட சாதியே உன்னை வெறுக்கிறேன் என்ற கட்டுரை தமிழிசில் இருந்து தூக்கப்பட்டு விட்டது....காரணம் அறிய வேண்டி... தமிழிசை துலாவியபோது...அவர்கள் கொடுத்துள்ள காரணங்கள் அறிந்த நான் பின் வரும் கேள்வியோடு இருக்கிறேன்.....யாரவது 1) உங்களின் வலைப்பூ பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே உங்களின் இடுகைக்கு பல்வேறு திருட்டுத்தனமாக நிறைய ஐ.டிகள் மூலம் வாக்களித்தால் உங்களின் இடுகை தமிழிசை விட்டுத் தூக்கப்படும். என்னுடைய கேள்வி இது தான் என்னுடைய வாசகர்கள் 32 பேர் வாக்களித்தும் யாரோ விசமத்தனம் செய்ததற்காக இடுகையை தூக்கியது எந்த விதத்தில் நியாயம்? இது என்னுடைய குரல் மட்டுமல்ல....இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள் சார்பகவு இந்த கோரிக்கையை தமிழிசுக்கு வைக்கிறேன். இதற்கான தனிப்பட்ட மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன். இதனால் நல்ல பதிவுகள் மக்களைச் சென்றடையாமல் யாரோ சிலர் இந்த வலைத்தளத்தை கண்ட்ரோல் செ

சாதியே.....உன்னை வெறுக்கிறேன்....!

தேடலின்(01.06.2010) நீட்சியாக கடந்த பதிவினை இடும்படி ஆகிவிட்டது ஆனால் அந்த பதிவுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களும் அடுத்த கியரை போட்டு எங்கேயோ தூக்கி செல்ல முயன்றது. மீண்டும் மீண்டும் ஒரே களத்தை சுற்றிவர எனக்கு விருப்பமில்லை மேலும் தேடலுக்கான சுவிட்ச் போட்டாயிற்று இனி தமக்கான தீர்வை அவரவரின் அனுபவத்திற்கு ஏற்ப அவரே தீர்மானிக்கட்டும். அறிவே மிகச் செறிந்த ஆசான் வழிகாட்டி....திறந்த மனத்தோடு இருப்பவர்களுக்கு புது புது விசயங்கள் நாளும் கிடைக்கும். சரி.........அடுத்த களத்திற்கு நகர்வோம்....! கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம் சித்தி வீட்டில் நடந்த ஒரு விசேசத்திற்கு வந்துவிட்டு பக்கதில் 6 கிலோ மீட்டரில் இருக்கும் அம்மாவின் சொந்த ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறிய எனக்கு நெரிசலில் மூச்சு முட்டியது. கிராமப்புறங்களில் இயங்கும் டவுன் பஸ் என்று சொல்லக்கூடிய பேருந்துகளில் பயணம் செய்வது கொஞ்சம் எரிச்சல்தான் இருந்தாலும் அதன் அனுபவம் அலாதியானது. காளையார்கோவில் சந்தைக்கு வந்தவர்கள் எல்லாம் கருவாட்டையும்...மீனையும் பைகளில் வைத்துக் கொண்டு ஏறியதில் பேருந்து முழுதும் நல்ல வாசனை..(பிடிக்காதவங்களுக்குதானே அ

அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.........! கலக்கல் பின்னூட்டங்களின் அணிவகுப்பு....!

கடந்த தேடலுக்கு வந்த பின்னூட்டங்களை அப்படியே விட்டு விட்டு போவதற்கு பொறுப்புணர்ச்சி கொன்ட என் ஆன்மா சம்மதிக்கவில்லை. இரவு முழுதும் நடந்த விவாதத்தில் ஆன்மாவின் அந்த உள்ளுணர்ச்சியின் வழிகாட்டுதலுக்கு நான் பணிந்ததின் விளைவு இப்பதிவு.... நமது செயல்களின் விளைவு ஒரு மரணத்தோடு நின்று விடுமா? இல்லை மரணித்தபின்னும் தொடருமா....எதிர்விளைவு எப்படியிருக்கும் என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் பல தரப்பட்ட கருத்துக்களை வைத்த...எமது தோழர்கள் அனைவரும் இந்த வலை உலகத்தை ஒரு மிகச் சிறந்த கருத்துக் களமாக்க வேண்டும் என்ற ஒரு பேரவா கொண்டவர்களாக பார்க்க முடிகிறது. அருமையான கருத்துக்கள், விவாதங்கள்... நெஞ்சை உருக்கும் காதல் கவிதைகள், உலகை உலுக்கும் முற்போக்கு சிந்தனைகள்....விழிப்புணர்வூட்டும் ஆன்மீகத்தொடர்கள், சாட்டையடி கொடுக்கும் அரசியல் விமர்சனங்கள் என்று பயணிக்க வேண்டிய களம்....அரசியல்வாதிகளின் அறிக்கைப் போராக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது....! நல்ல படைப்பாளிகள் சிந்தனைவாதிகள் எல்லாம் கூடி...இந்த போக்கை மாற்றும் துரித நடவடிக்கையில் இறங்கி...அறிவுசார் களமாக மாற்ற வேண்டும். கூட்டணி சேரா நண்பர்கள் மற்றும் தம்பிகளின்