Skip to main content

Posts

Showing posts from October, 2014

கத்தி...!

அட்டகாசமாய் தொடங்கும் படத்தின் ஆரம்பத்திலேயே நமக்குப் பரபரப்புத் தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு காட்சியையும் எப்படி பரபரவென்று திரி பற்றிக் கொண்டு செல்வது போலவே கொண்டு செல்வது என்பதில் முருகதாஸ் கில்லாடி. முழுக்க முழுக்க லாஜிக்கை சினிமாவில் கொண்டு வர முடியாது என்றாலும் அதே திரைப்படத்தில் செவுட்டில் அடித்தாற் போல பகிரப்படும் கருத்துகள் திரைப்படத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாய்க் கருதி நகரும் தமிழ் ரசிகப் பெருமக்களின் வாழ்க்கையில் மிகப் பிரம்மாண்டமாகவே பிரதிபலிக்கவும் செய்கிறது.  கத்தியைப் பொறுத்தவரையில் முருகதாஸ் அண்ட் விஜய் கேங்க் கையிலெடுத்திருக்கும் பிரச்சினை தமிழ்நாட்டிலிருக்கும் எல்லா சாமானிய தமிழர்களுக்கும் தெரிந்த ஒரு பிரச்சினைதான். கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான பணமும் அதற்கு அதிகாரவர்க்கம் வலது கையாய் இருந்து செய்யும் உதவிகளும் அதில் சாமானியன் நசுங்கி செத்துக் கொண்டிருப்பதும் நமது தெருவில், நமது ஊரில் நமது மாவட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்தாம். இதைப்பற்றி எல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லி போராட எத்தனையோ சமூக நல குழுக்கள் நம்மிடையே இருக்கவும்தான் செ

பூங்காற்று புதிரானது...!

மூன்றாம் பிறை படத்தை எத்தனையாவது தடவை பார்த்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்த முறை பார்த்து முடித்த பின்புதான் எனக்கு அந்த விசயம் விளங்கியது. ஆர்க்கிமிடிஸ் குளித்துக் கொண்டிருந்த போது எழுந்து ஓடிய  அதே பரவசத்திற்குள் விழுந்திருந்தேன். அந்தப் படம் பார்த்து இதற்கு முன்பெல்லாம்  முடிக்கும் போது அந்தப் படம் அதோடு முடிந்து போய்விடும். இப்போது மூன்றாம் பிறை பார்த்து முடித்த போதுதான் நிஜத்தில் அந்தப்படம் ஆரம்பிப்பது போலத் தோன்றியது எனக்கு. என்ன யோசித்திருப்பார் இந்த பாலுமகேந்திரா அல்லது என்ன சொல்ல முயன்றிருப்பார் என்று லேசாக எனக்குப் பிடிபட ஒரு வழுக்கு நிலத்தில் நிற்க முடியாமல் சறுக்கிச் செல்வதைப் போல எங்கோ இழுத்துச் சென்றது அந்த உணர்வுகள் என்னை. இப்படியெல்லாம் ஒரு பெண்ணிடம் ஆத்மார்த்தமாய் இருந்து விட்டு  திடீரென்று அவளுக்கு குணமாகிவிட்டது என்று இவனை மறந்து போய் யார் என்றே தெரியாமல் போய்விட்டால் என்ன ஆவான் அந்த மனிதன்? அதுவும் காதலை காதலாகவே நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருந்த ஒரு காதலன் அவன். அவன் மகளின் மீது வாஞ்சையோடு இருக்கும் ஒரு தகப்பனின் உணர்வுகளை அல்லவா கொண்டிருந

வண்ணக் கனவுகள்...!

எப்போதெல்லாம் உடம்பு கொஞ்சம் எடை கூடுகிறதோ அப்போதெல்லாம் உடனே உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்வேன். தினசரி ஓடுவது வழக்கம்தான் என்றாலும் டேஸ்ட் டங்க் எனப்படும் சுவைக்கு உண்ணும் பழக்கம் மட்டும் என்னை விட்டு போவேனா என்கிறது. ஒரு டின் முறுக்கை என் முன்னால் வைத்தாலும் பேசிக் கொண்டே எல்லாவற்றையும் முடித்து விடுவேன். முறுக்கு என்று சொன்ன உடனேயே தீபாவளி நினைவுக்கு வருகிறது எனக்கு. தீபாவளிக்கு இரண்டு வாரத்துக்கு முன்பாகவே முறுக்கு சுடுவதற்கான எல்லா வேலைகளும் வீட்டில் ஆரம்பித்திருக்கும். மாவு அரைத்து வருவது, எண்ணெய் வாங்கி வைப்பது என்று அம்மா பம்பரமாய் இயங்க ஆரம்பித்திருப்பாள். அம்மாவுக்குத் தெரியும் எனக்கும் என் தம்பிகளுக்கும் சும்மா ஐம்பது முறுக்கோ அல்லது நூறு முறுக்கோ சுட்டால் பத்தாது என்று....! மளிகைக்கடையில் இருந்து பிரிட்டானியா பிஸ்கெட் காலி டின் ஆறு ஏழு வாங்கி வந்து உள்ளே பேப்பர் போட்டு சுட்ட முறுக்கை எல்லாம் அதில் ஸ்டோர் செய்து வைத்து விடுவோம். முறுக்கு, சீடை, லட்டு, சமோசோ, ரவா உருண்டை, அதிரசம் எல்லாம் தீபாவளி முடிந்தும் பல மாதங்கள் வீட்டில் இருக்கும். டிவி பார்க்கும் போதும், புத்

எதுவாய் இருந்தாய் நீ...?!

அந்த நதிக்கரையில் யாருமில்லை என்றுதான் வெகு நேரம் நான் நின்றிருந்தேன். ஆமாம் அது அந்தி நேரம்தான். வழக்கப்படி அந்தி நேரம் ஏதோ ஒரு செய்தியை மெளனமாய் பகிர்ந்து கொண்டே நகர்ந்து கொண்டிருந்தது. பலவீனப்பட்ட பகல், வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் இரவு இவையிரண்டுக்கும் இடையே.... நகர்ந்து கொண்டிருந்த நதியை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன் நான். கரையோர நாணலொன்று நதிக்குள் வளைந்து  மெதுவாய் தடவி ஏதோ எழுத முயன்று கொண்டிருந்தது. பறவைகள் எல்லாம் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. வானத்தில் மிதந்து கொண்டிருந்த மேகங்களை பார்த்த போது யாரோ ஒரு தேர்ந்த ஓவியன் மனமற்ற நிலையில் வரைந்திருப்பானோ என்று தோன்றியது எனக்கு.... சிறு சிறு நீர்ப்பூச்சிகள் நதியில் பாடிக் கொண்டே மிதந்து கொண்டிருந்தன. எதற்காகவாவது காத்திருக்கிறாயா என்று அந்தி வேளையில் தலை சீவி பொட்டு வைத்து தலை பின்னலை சரி செய்த படி கேட்குமொரு இளம் பெண்ணாய் எட்டிப் பார்த்து கேள்வி கேட்ட நிலாவிடம் உன்னைத்தான் காதலிக்கிறேன்... உனக்காகவே காத்திருக்கிறேன் என்று நான் சொல்ல நினைத்தது அதற்கு தெரிந்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அருகருகே இருந்தோம் நா

கதவு திறக்குமா ...?!

அதிக நேரம் பேஸ்புக்கில் நேரம் செலவிடக் கூட வேண்டாம், வெறுமனே அதில் வரும் நிலைத்தகவல்களை பார்த்துக் கொண்டே இருந்தாலே நமக்குள் இருக்கும் மொழியும், கற்பனைத் திறனும், விவரித்துப் பார்த்து சிலாகிக்கும் இயல்பும் சிதைந்து போய்விடுகிறது. எழுதிக் கொண்டிருப்பதற்கு வசதியான தளம்தான் பேஸ்புக் என்றாலும் அது எழுத்தாளர்களுக்கான தளம் கிடையாது. அன்றாட செளக்கியங்களையும், தினசரி நிகழ்வுகளைப் பற்றிய பார்வைகளையும் எல்லோரும் கொட்டி வைக்கும் ஒரு பெருந்தொட்டி அது. தும்மினால், இருமினால் எழுதி அஞ்சல் செய்ய வசதியான ஒரு இடம் என்பதாலேயே.... வரைமுறை இல்லாத வார்த்தைகளை வாசிக்க வேண்டிய ஒரு சங்கடம் ஏற்பட்டுப் போகிறது. வலைப்பூக்களை பேஸ்புக் வீழ்த்தியது. பேஸ்புக் வருவதற்கு முன்னால் வலைப்பக்கங்கள் எனப்படும் ப்ளாக்ஸ்தான் சமூக தொடர்பு ஊடகமாய் இருந்து வந்தது. 2010, 2011ல் எல்லாம் வலைப்பக்கங்கள் எல்லா தரப்பினர்களாலும் பிரம்மாண்டமாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கோலேச்சிக் கொண்டிருந்தது. யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று நவீனம் செய்து கொடுத்திருந்த ஒரு வசதியினை நிறைய பேர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஒரு கட்டத்தில் வெறும