Skip to main content

Posts

Showing posts from December, 2010

ஹாய்....31.12.2010!

வழக்கம் போல மற்றும் ஒரு நாள் தான் இது.......ஆனால் வருடத்தின் கடைசியாகிப் போனதால் வரும் அடுத்த வருடத்தை வரவேற்க தயாராய் இருக்கிறோம் எல்லோரும்..... புது வருசம், பழைய வருசம், நாள், கிழமை எல்லாமே மனிதன் உருவாக்கிக் கொண்டது. பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர 365 நாட்கள் ஆகிறது. ஒவ்வொரு சுற்றும் ஒரு வருடம். பூமி எப்போது சூரியனில் இருந்து தெறித்து விழுந்ததோ அன்றிலிருந்து வருடம் கணக்கிடப்பட்டிருக்காது அல்லவா...? நமது கணக்கீடுகளுக்கு முன்னும் பின்னும் வாழ்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. ' போன வருசம் .. செமடா மச்சி..வர்ற வருசம் அப்டியே இருக்கணும் ' ' போன வருசம் செம கடுப்புடா மாமா வர்ற வருசமாச்சும் ஒழுங்கா இருக்கணும் ' மாறி மாறி பேச்சுகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. வருடங்களையும் நாட்களையும் தாண்டி மனிதனை கட்டுப்படுத்தும் செயல்கள் இரண்டு.... ஒன்று.....அவனின் மனம் எந்த திசையில் வேலை செய்து செயல்கள் செய்கிறதோ அதன்படியும்,மற்றொன்று அவன் சார்ந்துள்ள சூழல் என்ன மாதிரி அனுபவங்களை அவனுக்கு கொடுக்கிறது என்பதை பொறுத்து பெரும்பாலும் ஒரு மனிதனின் வாழ்க்கை அமைந்து போகிறது. நல்ல வருடமாய் அமைவது

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந

அந்திம....ம்!

சுவாசம் தப்பப்போகும் நீண்ட இரவொன்றில் கலைதலாய் புரட்டுகிறேன் பழுப்பேறிய என் வாழ்வின் பக்கங்களை...படிந்திருக்கும் தூசுகள் தட்டி... வலிவாய், சப்தமாய் உடலின் முறுக்குகள் காட்டி... குறுக்காய் நெடுக்காய் யோசனைகளில் அலைந்து அலைந்து அகங்காரத்தில் காட்சி மாற்றம் ஆன நாட்கள் ஒரு போதும் சொல்லவில்லையே அந்திமத்தின் அவஸ்தைகள் பற்றி? கடவுள் உண்டு, இல்லை வாதிட்ட வாதங்கள் எல்லாம் நினைவுப் பகுதியில் செத்துப்போய் உயிர் இருக்குமோ போகுமோ என்ற ஒற்றைப் புள்ளியில் மல்லாந்து கிடக்கிறதே என் மூளை! செல்லரித்த புத்தகங்களும் செத்துப் போன தத்துவங்களும் பல்லிளித்து கிடக்கின்றன பரண்களின் உச்சியில்.... பகுத்தறிவு மூளைக்கோ இதுவரை தெரியவில்லை அடுத்த கணத்தின் என் ..... வாழ்வின் நகர்தல் பற்றி...! கனத்த இமைகளை ... கலவரமாய் மூடுகையில் எருமை வாகனத்தில்.. மீசைமுறுக்கி வருகிறான்...மதம் மனதில்.... ஏற்றி வைத்த அடாவாடி எமன்.... எரிப்பதிலும் புதைப்பதிலும் .. விவாதங்களாய் பேசி காத்திருக்கும் உறவுகளுக்குத் தெரியுமா விழித்திருக்கும் என் செவிகள் பற்றி.... செத்துக் கொண்டிருக்கின்ற.. என்னுள் செல்களும் திசுக்களும்.... வற்றிக் கொண்டிருக்கி

ஓசை....!

சற்று முன் மழை பெய்து நின்று போன ஒரு பின் மாலை வேளை அது. மழைக்காக ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்ற நான் பாதி நனைந்தும் நனையாமலும் என் கிராமத்துக்கான பேருந்து செல்லா ஒற்றையடிப்பாதையில் மெல்ல நடக்கிறேன். மரங்கள் எல்லாம் மழை வாங்கிய சந்தோசத்தைத் தன் இலைகளில் தேக்கிவைத்து என்னைக் கொஞ்சம் உலுக்கேன்; நான் ஒரு மழை பெய்கிறேன் என்று கொக்கி போட்டு இழுத்தன என்னை... சேறும் சகதியுமான என் ஊருக்கான வழி 50 வருடங்களாய் இப்படித்தான் இருப்பதாக ஊர் பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்..... மழை நின்று விட்டது. வெளியே போவோமா அல்லது வேண்டாமா என்ற சர்ச்சையில் மரங்களில் இருந்த காக்கைகளும் குருவிகளும் கிளிகளும் கூச்சலிட்டு விவாதித்துக் கொண்டிருந்ததற்குக் காரணம் இருட்டத் தொடங்கியிருந்ததுதான் என்பது எனக்கும் அவற்றுக்கும் நன்றாகவே தெரியும். புற்கள் எல்லாம் புதுமணப்பெண்ணாக மழைத்துளியை வாங்கிச் சிலிர்த்து வெட்கத்தோடு ஏதேதோ கதைகள் சொல்லிக் கொண்டிருந்தன.... மண்ணின் வாசம் எல்லாவற்றையும் தாண்டி என்னுள் அடாவடியாய் உள் நுழைந்ததோடு சுற்றியிருந்த தாவரங்களின் பச்சைப் பசுமையின் வாசமும் ஒரு மாதிரி உள் சென்று கிலேசத்தைக் கொடுத்த அந்

சுனாமி...!

உறங்கிக் கொண்டிருந்த நீ விழித்ததேன்...? உறக்கத்திலிருந்த எம்மைக் கவிழ்ந்திருந்த இமைகளோடு கவிழ்த்து நீ கொண்டு போனதும் ஏன்? வாழ்க்கையை உன்னில் கொடுத்து உன் காலடியில் கிடந்த பொழுதினில் எம்மீது காதல் கொண்டாயோ ஆழிப் பேரலையே... எம் உயிர் அழித்த ஆழப்பேரலையே.... எல்லாப் பொழுதுகளையும்... விடிய வைத்தது இயற்கை விடியலைக் கொன்றழித்து... யுகங்களாய்ப் பசிக்கவைத்திருந்த உன் வயிற்றின் பசியடக்கினாய்... எம்மின் உயிர் நசுக்கினாய்...! சாந்தமாய் நின்ற உன் கட்டவிழ்ந்த நொடியில்.. ஏன் அலையே எம்மிடம் சொல்லவில்லை ஏன் கடலே சைகைகள் செய்யவில்லை... உன்னில் உப்புச்சுவை குறைந்ததென்று எம்மவரின் கண்ணீரைக் கடன் கேட்டது எப்படி நியாயம் ஆகும்? வாழ்க்கையை வாரி வாரி..... வழங்கிவிட்டு வஞ்சகமின்றி.. மொத்தமாய் உயிர் குடித்தது யுத்தமரபில்லையே இயற்கையே எம் உயிர் அழித்த செயற்கையே...! கருப்பு தினத்தை எமக்கு... வழங்கிய கரிப்பு அரசனே... வாழ்வையும் சாவையும் பங்கிட்டுக் கொடுத்த வள்ளலே... இயற்கையின் இளவலே.... நீ யுத்தங்கள் செய்வதில்.. எமக்கு முரண்கள் இல்லை... ஒரு பகுத்தறிவோடு நீ ... பகலிலாவது வந்திருக்கலாமே...? கண்ணீரில் இருந்து கரிக்கும

சுவாசமே காதலாக....(தொகுப்பு:6)!

உன்னிடம் நானும் என்னிடம் நீயும் இதுவரை காதலை சொன்னதில்லை. காதல் என்ற வார்த்தைக்குள் சிக்காமல் உன்னோடு பழகத்தொடங்கி இன்றோடு மூன்றாண்டுகளைக் கடந்துவிட்டோம் என்ற நினைவின் பின்னணியில் வெளிப்பட்ட நீண்ட பெருமூச்சோடு....நடந்து கொண்டிருக்கிறேன்...ஒரு அதிகாலை ஆள் அரவமற்ற ஒற்றையடிப் பாதையில்..... இந்தக் கணம் வரை எந்த முரண்களும் இல்லாமல் நேசித்தலைப் பிரதானமாகக் கொண்டு நாம் சிரித்ததும் சிரிக்கையில் பேசியதும் பேசுகையில் கவிதை சொன்னதும் அதைக் காட்சிகளாய் வர்ணித்ததும் கைகட்டிக் கைக்கு எட்டாத் தொலைவுகளில் உடல் உரசா ஆனால் உள்ளம் உரசிய நடைகளில் எல்லாம் எதைப் பயின்றோம்? காதலா? இல்லை நட்பா இல்லை இந்த இரண்டும் தொலைந்து போன இடத்தில் முளைத்த புதிதான வேறு எதுவோவா? ஞானத்தின் உச்சம் பெண்களிடமிருந்து வருகையில் அதை அதீத வேகத்தில் ஓர் ஆண் வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்காக நான் வெகுகாலம் தவமிருந்தேன்... நீ தவம் கலைத்தாய் வரம் கொடுத்தாய்... தாகத்தில் பருகும் நீர் போல இருகரம் குவித்து மொத்த நீரையும் உள்வாங்கிக் கொள்வது போல சிந்தாமல் சிதறாமல் உன்னை என்னுள் நிறைத்துப் போட்டேன். நிறைந்து போனேன். ஒரு அடர்த்தியான அமிலம் போ

எது...?

சுழலும் நுரையில் அடித்துச் செல்லும் மனதோடு நகர்கிறது கவலைகள் அற்ற ஒரு கடும் காட்டாறு..! வெறித்த விழிகளில் தேங்கிக் கிடக்கும்.... கவலைகளில் நிறைந்திருக்கும் வாழ்க்கையை வேடிக்கையாய் பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும் ஒரு ஊர்குருவி! ஒரு காற்றோடு கூடிய நிறைவில் தலையசத்த மரத்தின் சந்தோசங்கள் சாரலாய் பரவி சப்தமாய் என்னுள் கேள்வி எழுப்புகின்றன் எங்கே தொலைகின்றன மானுட மகிழ்ச்சிகளென்று....? இசைக் கச்சேரியை சற்றுமுன் தொடங்கிய ஒரு பேடைக்குயிலின் கீதம் எங்கும் நிறைக்கிறது சந்தோசத்தின் அதிர்வுகளை கனமாய் கலைந்திருக்கும் மனதுக்குள் எப்போதும்.... அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ தப்பாமல் அழித்துப் போடுகின்றன வாழ்வின் அழகுகளை...! தேவா. S

ஆதி....!

ஆசைகள் அறுபட்டுப் போய்க் கிடக்கின்றன அதைத் தூண்டி விட்ட அகங்காரம் மரணித்து சில மணித்துளிகள் ஆகின்றன. வெற்று நினைவுகளோடு உக்கிரமாய் அமர்ந்த தியான உச்சத்தில் செத்தொழிந்தே போய்விட்டன உறவுகளும், உறவுகளில் கலந்திருக்கும் பொய்மையும், பொய்மையில் அடங்கியிருந்த மாயைகளின் ஆட்டங்களும்..... அகங்காரம் கொண்ட மனதினை சற்று முன் நேருக்கு நேராய் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில் என்னிடம் கேள்விகள் கேட்க சொல்லி தூண்டிய மனதிடம் கேள்விகள் கேட்க எத்தனித்த அந்த கணத்தில் உள்ளிருந்து ஒலித்த ஒரு குரல் சட்டென்று கேள்வி அறு....கேள்வியை அறி....என்று சொல்லாமல் சொல்லிய தருணத்தில் உற்று நோக்கிய பொழுதில்தான் மெல்ல மெல்ல கயமை மனம் கழண்டு விழ ஆரம்பித்தது...... உள் நோக்குதலை நிறுத்து புறம் நோக்கிப் பாய் என்று மாயக்கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்த மனதின் வலிமையினை எதிர்கொள்ளல் சிரமமாய்த்தான் இருந்தது.... மட்டறுக்க மறுத்தல் ஊறு விளைவிக்கும் என்று யாம் பயிற்றுவிக்கப்பட்டு இருந்தோம். ஜென்மங்களாய் எமக்குள் ஊறிக்கிடந்த உணர்வான நினைவுகள்..மட்டறுக்காமல் கேள்விகளை மீண்டும் மனதிடம் திருப்பத் தூண்ட... புறம் நோக்கி ஏன் பாய வேண்டு

காலம்...!

ஒரு வெற்று வானமும் சப்தங்களற்ற தனிமையும் ஒரு சில்லென்ற காற்றுக்குள் எனை நிறைத்துப் போட எதுவுமற்று எல்லா திசைகளிலும் அலைகிறேன் நான்! என்னுள் இருந்த… சித்தாந்தங்களின் சிதறலில் உயிர்த்துக் கொண்ட … உணர்வுகள் கொடுத்த சிறகுகள்.. தூக்கிச் செல்கின்றன..எட்டப்படாத… உயரங்களில் இருக்கும் ஏதோ ஒரு உண்மைக்கு…! சப்தங்கள் தொலைத்த கணத்தில்… சிலிர்த்தெழுந்த ஒரு… சிருங்கார நாதம் என்னுள் பற்றிப் பரவிய பொழுதில்… கரைந்தே போகிறேன்... காற்றின் திசைகளுக்குள்…! மெளனமாய் என்னுள் இருந்து பரவும் அதிர்வுகளோடு ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து செல்லும் எதார்த்தத்தில் நகரும் என் காலத்திற்கோ நிறமுமில்லை..குணமுமில்லை! தேவா. S

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா

ஹாய்....17.12.2010!

ஓராயிரம் நிகழ்வுகள் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுதில் அவ்வப்போது சடென் பிரேக் போட்டு வாழ்க்கையை நின்று நிதானித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு நிறுத்தம் தேவை இடை இடையே...அப்படிப் பட்ட நிறுத்தங்கள் ஒரு முறை நாம் எங்கிருந்து வந்தோம் என்றும் எங்கு நிற்கிறோம் என்று மெல்லிய உணர்தலை வலுவாகக் கொடுத்து ஒரு வித புரிதலை கொடுக்கத்தான் செய்கிறது. ஆனால் யாரும் நின்று நிதானிப்பதுதான் கிடையாது ஓட்டம்.. ஓட்டம்...ஓட்டமோ ஓட்டம். குறிப்பாக இந்த பதிவுலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் இந்த வருடத்தின் மார்ச்சு மாதவாக்கில் எழுத வந்தேன். எனக்காகவே எழுத ஆரம்பித்தேன் அல்லது எழுதிப் பார்த்தேன் இன்னும் அப்படித்தான் எனக்காகவே எழுதுகிறேன் மற்றும் எழுதிப்பார்க்கிறேன். இது எனக்குள் உள்ள விசயம் அது. அகத்தில் இருக்கும் விசயங்கள் எப்போதும் மாறுவது இல்லை. சிறுவயதில் உணரப்பட்ட அந்த உள்முனைப்பு எந்த மாற்றமுமின்றி அப்படியே இருக்கிறது. அது ஆடுவதில்லை அசைவதில்லை ஒரு வித ஸ்திரத்தன்மையோடு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு இருக்கிறது. அதற்குக் கவலைகள் இல்லை மேலும் கற்பனைகளும் இல்லை அசைவற்ற அந்தப் பெருஞ்சக்திதான் நம

புகை...!

ஒரு மழை நாளில் உதட்டில் பொருத்திய முதல் சிகரெட்டோடு உள்ளே பரவிய நிக்கோடின் துகள்கள் மூளையின் செல்களை கலைத்துப் போட்டிருந்தன...! பற்றியிழுக்கையில் பரவசமாய் உள்ளே சென்ற புகையினூடே உண்டான முதல் பரவசத்தில்... முரண்கள் பட்டுப் போயிருந்தன! உள்ளே பரவி சூடான நினைவுகளை தெளித்து விட்டு வெளியே பெய்த மழையை வேடிக்கையாய் பார்த்து சிரித்தது வெள்ளை சிகரெட்...! அழுந்த புகைத்தேனா இல்லை ஆழமாய் சுகித்தேனா என்றறியாமல் தடுமாறிய... வேளையில் எங்கிருந்து... எட்டிப் பார்த்தது உன் நினைவுகள்..? உள்ளிழுத்து வெளிவிட்டு வெளிவிட்டு உள்ளிழுத்து மொத்தாமாய் செத்துப் போயிருந்த நிக்கோடின் குச்சியின்.... மிச்சத்தில் புகைத்தலின்றி மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன் தனித்து கிடந்த என்னை வேடிக்கையாய் கேலி செய்து சிரித்தது.. வெளியே பெய்த மழை...! தேவா. S

கோணம்...!

சுற்றி எழுந்த சப்தங்களும் அடுப்பங்கறையில் இருந்து வந்த காபியின் வாசனையும்....திண்ணையில் பேப்பர் கசங்கலில் ஏற்பட்ட காகித சப்தங்களில் அப்பா நியூஸ் பேப்பர் வாசிக்கிறார் என்ற எதார்த்தமும், பக்கத்து வீட்டுக் கறவை 'ம்மாமாமமம...' என்று கத்தியதில் விடிந்தே விட்டது என்றும் தெரிந்து கொண்டான் மகேஷ். இன்றைக்குக் கடை சிக்கிரமே திறக்க வேண்டும் பக்கத்து மண்டபத்தில் கல்யாணம். நிறைய பேர்கள் வருவார்கள் போன் செய்ய....மனதுக்குள் கணக்கு போட்டபடி.... எழுந்த மகேஷ்.... கணக்குகள் போட்டபடியே அடி எடுத்து வைத்தான்.... வீட்டின் அளவுகள் அவனுக்கு அத்துபடி... அவன் படுக்கையில் இருந்து நேரே எழுந்து 5 அடிகள் எடுத்து வைத்து.. இடது புறம் திரும்பி நேரே போனால் சமையலறை..இப்போது காலை உணவின் வாசனை அவன் மூக்கை துளைத்தது... சமையலறை கடக்கையில் அம்மாவின் வளையல் சப்தம் துல்லியமாக கேட்டது பாத்திரங்கள் கழுவி எடுத்து வைக்கும் வேகத்திலேயே தெரிந்து விடும் அது அம்மாதான் என்று ...பற்றாக்குறைக்கு மஞ்சள் தேய்த்துக் குளித்து ஒரு வித மணம் வீசும்.....அவள் உடுத்தியிருக்கும் சேலையிலிருந்து வரும் வாசமும்... ஆதரவான குரலும்.. எப்போதும் ஒர

அதுவா....?

ஒரு முறை என்னைப் பார் என்னை உன் விழிகளால் விழுங்கு மெளனத்தால் அரவணை காதுகளுக்குள் கிசு கிசுப்பாய் காதல் மொழி பேசு... சில முத்தங்கள் மூலம் எனக்குள் காதலை பரவ விடு... சப்தமில்லாமல் சிரி... உனகானவன் நான் தான் என்ற உரிமையில்..என்னை முழுதுமாய் உடைத்துப் போடு! பற்றிப் பரவும் கொடியின் காதலில் லயித்துக் கிடக்கும் ஒரு மரம் போல ... உன் மொத்தக் காதலும் என்னை மூர்ச்சையாக்கிப் போனதில் உணர்வுகளின் சங்கமித்தில் இசைக்கும் கீதம்... என் உயிரின் மூலம் தொட்டு தடவுகிறது....! என் பெயர் சொல்லி ஓராயிரம் முறை அழைத்து உன் காதலை என் மீது தெளிக்கிறாய்.. நானோ பார்வைகள் தொலைத்து சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு மழை வாங்கும் நிலமாய்... மெளனித்துக் கிடக்கிறேன்..! காமத்தின் வேர்கள் அறுக்கப்பட்டதில் கிளைந்தெழுந்த விருட்சமாய் வெகுண்டெழுந்த அவதாரமாய் சுற்றுச் சூழல் மறந்து விசுவரூபத்தில் வியாபித்து நிற்கிறதே.. ஒன்று.... அதுதானே உன் விழிகளால் என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட பிரமாண்டக் காதல்..? தேவா. S

தேடல்....13.12.2010!

சில நாட்களாக ஆழமாக மனதிலே ஓடிக் கொண்டிருக்கும் விசயம் படைப்பு. எது படைப்பு? யார் படைக்கிறார். எல்லா துறைகளும் பயனாளர்கள் உண்டு நுட்ப அறிவியலார் உண்டு....ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்கும் பொது அறிவியலார் உண்டு. ஒரு விசயத்தை உள்வாங்கி தாக்கத்தை வெளிப்படித்தும் உணர்வியலாரும் உண்டு.. ஆனால்.... எங்கே ஒளிந்திருக்கிறான் ஒரு படைப்பாளி? நம்மைச் சுற்றி நிகழும் ஓராயிரம் விசயங்களை கிரகித்து எழுதிவிடலாம்...அரசியல், கலை, கல்வி, சமகால சமூக அவலங்கள்.... இன்னும் எவ்வளவோ ஆனால் ஒரு படைப்பு என்பது முற்றிலும் இதற்கு முன் இருந்தவைகளோடு ஒத்துப் போகாததாகவும் புதுமையான உணர்வுகளைக் கொடுப்பதாகவும் இருக்கிறது. படைப்புகள் எல்லாமே பழக்கப்பட்ட புலன் அறிவுகளுக்கு எப்போதும் எதிராகவே அல்லது புரிந்து கொள்ளப்படுவதற்கு ஏதுவாகவோ இருப்பது இல்லை. முதன் முதலாய் மூளைக்குள் ஏறும் எந்த செய்தியும் நமக்குப் பிடிபடுவதில்லை. அது... விளங்கிப் புரிந்து கொள்ளவேண்டியதாகவே இருக்கிறது. பார்க்காத ஒன்றை கேட்காத ஒன்றை விளங்குவதில் அல்லது விளக்குவதில் சிக்கல் ஏற்பட்டு போகிறது. இந்த சிக்கலில் பெரும்பாலும் மாட்டிக் கொண்டு தவிப்பது கடவுள்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

சுயம்...!

திக்குகளற்ற வெளியில் நினைவுகளற்ற சுகத்தில் விரவிக்கிடக்கும் ஆசைகளை கர்ண கொடூரமாய் தகர்க்கின்றன நிகழ்கால முரண்பாடுகள்...! உறவுக்குள் சிக்கியதில் பாசங்கள் என்ற பாசாங்கு விளங்கியதின் பின்னணியில் பறந்து குவியும் காகிதங்களின் பெயர்கள் பணமென்றறிந்தேன்...! சத்தியங்கள் பொசுக்கப்படும் ஒரு உலகத்தில்.. தர்மங்களின் நாயகனாய் என்னை வரித்துக் கொண்டதில் காயங்களுக்குள் அகப்பட்டு ஆழ்ந்து கிடக்கிறது என் ஆன்மா! எப்போதும் மேய்ப்பது போல இன்றும் மேய்த்து மேய்த்து களைத்துப் போயிருக்கிறேன்.. அடங்கா மனமென்னும்... மாயப் பிசாசை..! அடங்கும் பொழுதுகளில் ஆர்ப்பரிக்கும் மனிதக் கூட்டம் ஆழ்ந்துறங்கும் அர்த்த ராத்திரிகளில் சுடலையில் அமர்ந்த சிவனாய்... என்னை எரிக்கும் நித்திரைகள் எரித்து...எங்கோ ஒரு ஏகாந்தத்தில் இல்லாமல் இருக்கிறேன் நான்...! தேவா. S

படம்...!

படம் பார்க்கும் ஆர்வம் எல்லோருக்குமே இருக்கும்...சரி ட்ரெய்லரோட அவசியம் என்ன? ஒரு ஐடியா... என்ன செய்ய போறோம் எது பத்தி பேசப்போறோம்னு ஒரு பிரிவியூ அவ்ளோதான்...! கலாச்சாரம் (அப்பாடா....... தமிழ்ல எழுதியாச்சு..) பற்றி மொத்தமாக பேசுகிறோமா.. ? கலாச்சார குழப்பங்களைச் சாடுகிறோமா? இல்லை.. அதன் ஒரு பகுதியான வாழ்வியல் நெறிகளைப் பற்றி பேசுகிறோமா? என்ற ஒரு தெளிவின்றி தோட்டாக்கள் எம்மவர் மீது பாய்ந்துள்ளது முதற்கண் கண்டனத்துக்குள்ளாகிறது. மேலும் நமது சமுதாய குறைபாடுகளைச் சாடும் நம்மவர்களின் கண்கள் வேற்று சமுதாயத்தின் மீதும் ஆழமாக பதிந்திருக்கிறதா என்ற கேள்வியையும் பொதுவில் வைக்கிறேன். ஆழமாக என்ற பதத்தை யாம் உபயோகம் கொள்வதற்கு பின்னால் ஆழ்ந்த பொருள் உள்ளது எம் தோழர்காள்...... குறைபாடுகள் இல்லாத மனிதனோ, சமுதாயமோ, நாடோ இருக்கவே முடியாது என்பது திண்ணமான ஒன்று என்று கருத்தில் கொள்ளும் அதே சமயத்தில்..எமது சமுதாயமும் அதற்கு விதிவிலக்கன்று என்ற பிரபஞ்ச உண்மையை ஏற்றுக் கொள்வதில் எமக்கு எந்த வருத்தமோ அல்லது குற்ற உணர்ச்சியோ கிடையாது. நமக்குள் இருக்கும் குறைபாடுகள் அல்லது குறைபாடுகள் என்று நினைக்கப்படுபவ

தழல்...!

சுற்றி எழும் நெருப்பின் பொசுங்கலின் வீச்சம் காற்றில் பரவவிடுகிறது மனித மமதைகளை! தெறித்து விழுந்து... ஜுவாலைகளில் பொடிந்து காற்றில் கால்சியத்தையும் மெக்னீசியத்தையும் கலக்கிறது உருவங்களை கட்டிக்காத்த எலும்புக் கூட்டம்...! அக்னியின் ஒற்றைச் சீற்றம் அழைத்துப் போகிறது வெள்ளை மூளைகளை பஸ்பங்களின் படிமாணத்துக்குள்! சுருங்கிய தோல்கள் கழன்றனவா? இல்லை கருகினவா? அடையாளம் சொல்லக்கூட ஆளில்லாமல் காற்றில் எரிந்து போகின்றன மனித உடல்கள்...! எல்லாம் பொழிந்து நொறுங்கும் பிணமெரியும் அர்த்த ராத்திரிகள்...எல்லாம் எங்கே தொலைக்கின்றன மனித மனங்களை மட்டும்? தேவா. S

என் ஜன்னலில்...!

ஒரு ஜன்னல் ஓரத்து இரவு மழை...முன்னிரவா பின்னிரவா என்று கேட்கிறீர்களா.....? அது முன்னிரவுதான்! இரவு மழையும் மின்சாரமும் எப்போதும் நண்பர்கள் இல்லை...எங்கள் ஊரில்..மழை வரும் மின்சாரம் போகும் என்பது வழமையில் எமக்குப் பழகிப்போன ஒன்று..... வழமைக்கு ஒத்தாசையாக இதோ மின்சாரம் ஓடி ஒளிந்தே விட்டது....பின் கேட்கவா வேண்டும் அழையா விருந்தாளியாக வந்தே விட்டாள் இருள் மங்கை...! இவள் மிகப் புதிரானவள்.. இவளின் புதிர்கள் விளங்க வேண்டுமெனில் அவளோடு கலந்து அமர்ந்து விட வேண்டும்.. இதோ நானும்... சப்தமின்றி....சலமின்றி... நானும் இருளும்...பொறுமையாய் மெளனங்களைப் பரிமாறிக் கொண்டோம்...! ஜன்னல் கம்பியில் பட்டு சில மழைத்துளிகள் என் கன்னங்களில் முத்தமிட்டது...மெல்ல ஜன்னல் கம்பியை பற்றினேன்.. சிலீரென்று அந்த இரும்புக் கம்பி ஒரு ஏகாந்தத்தை உள்ளே பரவவிட்டதை யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்தேன் ஒரு மின்னல் வந்து பளீரென்று பார்த்துவிட்டுப் போனதை கண்டு சந்தோசத்தில் மோதி எகத்தாளமாய் சிரித்த மேகங்கள் அதை இடி என்று படித்து வைத்திருந்தது பழக்கப்பட்ட மனது..... என் வீட்டில் யாருமில்லை...ஒரு திருமணம்..உறவுகள் எல்லாம் ஒரு