Skip to main content

எது...?



சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!

வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!

ஒரு காற்றோடு கூடிய
நிறைவில் தலையசத்த
மரத்தின் சந்தோசங்கள்
சாரலாய் பரவி சப்தமாய்
என்னுள் கேள்வி எழுப்புகின்றன்
எங்கே தொலைகின்றன மானுட
மகிழ்ச்சிகளென்று....?

இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை

கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!



தேவா. S

Comments

எந்த ஒரு விசயத்திலும் ரொம்ப எதிர்பார்ப்பது தப்பு தாங்க ........எனக்கு புரிஞ்சது இவ்வளவு தான் ............
//vadai .?//
போடா தம்பி கிறிஸ்துமஸ் வருது இல்ல வீட்டுல போய் கேக் சாப்பிடு
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

வாழ்வின் பல தருணங்களில் இதை நான் உணர்ந்திருக்கிறேன்!
/சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!///

அருமை..
//வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!///

குருவியின் கதை சூப்பர்.
ஒரு காற்றோடு கூடிய
நிறைவில் தலையசத்த
மரத்தின் சந்தோசங்கள்
சாரலாய் பரவி சப்தமாய்
என்னுள் கேள்வி எழுப்புகின்றன்
எங்கே தொலைகின்றன மானுட
மகிழ்ச்சிகளென்று....?//

கலக்கல்
//இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை///

நல்ல இசை விமர்சனம்
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!///

வாழ்க்கை தத்துவம்
/////கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!/////

அருமை மாப்ஸ்.....அழிக்க அழிக்க வரையனும், அதான் வாழ்க்கையின் இயல்பு........!
மனதின் சோகத்தையும்... அதை மாற்றும் விதத்தையும் அருமையா சொல்லி இருக்கீங்க
உங்க தமிழ் வாத்தியார் யார்ன்னு சொன்னா நம்ம தமிழ் சேனல் காம்பியர் பொண்ணுங்கள டியூசன் அனுப்பலாம்...ஹி ஹி ஒரு சமூக சேவையா நினைச்சு சொல்லுங்க...

தயவுசெஞ்சு ரிப்ளை தமிழ்-ல போடுங்க, இல்லைன்னா எனக்கு புரியாது.
அருண் பிரசாத் said...
மனதின் சோகத்தையும்... அதை மாற்றும் விதத்தையும் அருமையா சொல்லி இருக்கீங்க
///////////////////////

இப்போ தெரிஞ்சு போச்சுய்யா, இவர் இப்பிடி எழுதுறதுக்கு யார் காரணம்ன்னு...

அய்ய்ய்ய்ய்யய்ய்யய்யோ தொல்லை தாங்க முடியலப்பா :)
வினோ said…
எதிர்பார்ப்புகள் எப்பவும் ஏமாற்றம் தரும்... அதில் சோகம் வாழும்...

அழகுகளை தேடியே வாழ்க்கை பயணம்...
dheva said…
மனிதர்களே..............

'ஒன்றுமில்லை.......அலட்டிக்காதீங்க............எங்கேயும் போய் நீங்கள் சேரப் போவது இல்லை நிதானமா வாழுங்க '

இதுதான் கவிதையின் கரு.
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

கனமான வரிகள் தேவா.
இதே மாதிரி நான் ஒரு கவிதை ட்ரை பண்ண போறேன் ;P
சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!//

நல்ல வரிகள்!
வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!//

குருவியாய்ப் பறக்க மனம் விரும்புகிறது!
இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை//

அழகு!
கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

எதிபார்ப்புகள்தான் கவலையின் அடிப்படை, நன்கு முடித்துள்ளீர்!
கடைசி ஐந்து வரிகள் சூப்பர்..
தேர்ந்தெடுத்த வார்த்தைகள்... superb
aavee said…
நல்ல நடை. இயற்கையை வார்த்தைகளில் விவரிப்பது அவ்வளவு எளிதல்ல. மிக இயல்பாய் கையாண்டிருக்கிறீர்கள்
ஹேமா said…
வாழ்வுக்கு மீறிய எதிர்பார்ப்பே மானுட சந்தோஷங்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது.
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு நினைத்தால்...!
Anonymous said…
வாழ்வின் அழகுகளை அப்போதே ரசித்திருங்கள் மீண்டும் வருவதற்கு நீங்களோ அவைகளோ காத்திருக்காது! சரிதானே அண்ணே?
Arun Prasath said…
நான் என்ன சொல்ல எல்லாம் நம்ம மக்களே சொல்லிடாங்க
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

மிக இயல்பாய் கையாண்டிருக்கிறீர்கள்.
உண்மைலேயே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .

சொல்லப்போனா இந்த கவிதை எனக்கு புரிஞ்சிருக்கு ..



///கனமாய் கலைந்திருக்கும்

மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!///

ரொம்ப ரொம்ப அருமையான வரிகள் ..!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த