Skip to main content

எது...?



சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!

வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!

ஒரு காற்றோடு கூடிய
நிறைவில் தலையசத்த
மரத்தின் சந்தோசங்கள்
சாரலாய் பரவி சப்தமாய்
என்னுள் கேள்வி எழுப்புகின்றன்
எங்கே தொலைகின்றன மானுட
மகிழ்ச்சிகளென்று....?

இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை

கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!



தேவா. S

Comments

எந்த ஒரு விசயத்திலும் ரொம்ப எதிர்பார்ப்பது தப்பு தாங்க ........எனக்கு புரிஞ்சது இவ்வளவு தான் ............
//vadai .?//
போடா தம்பி கிறிஸ்துமஸ் வருது இல்ல வீட்டுல போய் கேக் சாப்பிடு
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

வாழ்வின் பல தருணங்களில் இதை நான் உணர்ந்திருக்கிறேன்!
/சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!///

அருமை..
//வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!///

குருவியின் கதை சூப்பர்.
ஒரு காற்றோடு கூடிய
நிறைவில் தலையசத்த
மரத்தின் சந்தோசங்கள்
சாரலாய் பரவி சப்தமாய்
என்னுள் கேள்வி எழுப்புகின்றன்
எங்கே தொலைகின்றன மானுட
மகிழ்ச்சிகளென்று....?//

கலக்கல்
//இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை///

நல்ல இசை விமர்சனம்
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!///

வாழ்க்கை தத்துவம்
/////கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!/////

அருமை மாப்ஸ்.....அழிக்க அழிக்க வரையனும், அதான் வாழ்க்கையின் இயல்பு........!
மனதின் சோகத்தையும்... அதை மாற்றும் விதத்தையும் அருமையா சொல்லி இருக்கீங்க
உங்க தமிழ் வாத்தியார் யார்ன்னு சொன்னா நம்ம தமிழ் சேனல் காம்பியர் பொண்ணுங்கள டியூசன் அனுப்பலாம்...ஹி ஹி ஒரு சமூக சேவையா நினைச்சு சொல்லுங்க...

தயவுசெஞ்சு ரிப்ளை தமிழ்-ல போடுங்க, இல்லைன்னா எனக்கு புரியாது.
அருண் பிரசாத் said...
மனதின் சோகத்தையும்... அதை மாற்றும் விதத்தையும் அருமையா சொல்லி இருக்கீங்க
///////////////////////

இப்போ தெரிஞ்சு போச்சுய்யா, இவர் இப்பிடி எழுதுறதுக்கு யார் காரணம்ன்னு...

அய்ய்ய்ய்ய்யய்ய்யய்யோ தொல்லை தாங்க முடியலப்பா :)
வினோ said…
எதிர்பார்ப்புகள் எப்பவும் ஏமாற்றம் தரும்... அதில் சோகம் வாழும்...

அழகுகளை தேடியே வாழ்க்கை பயணம்...
dheva said…
மனிதர்களே..............

'ஒன்றுமில்லை.......அலட்டிக்காதீங்க............எங்கேயும் போய் நீங்கள் சேரப் போவது இல்லை நிதானமா வாழுங்க '

இதுதான் கவிதையின் கரு.
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

கனமான வரிகள் தேவா.
இதே மாதிரி நான் ஒரு கவிதை ட்ரை பண்ண போறேன் ;P
சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!//

நல்ல வரிகள்!
வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!//

குருவியாய்ப் பறக்க மனம் விரும்புகிறது!
இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை//

அழகு!
கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

எதிபார்ப்புகள்தான் கவலையின் அடிப்படை, நன்கு முடித்துள்ளீர்!
கடைசி ஐந்து வரிகள் சூப்பர்..
தேர்ந்தெடுத்த வார்த்தைகள்... superb
aavee said…
நல்ல நடை. இயற்கையை வார்த்தைகளில் விவரிப்பது அவ்வளவு எளிதல்ல. மிக இயல்பாய் கையாண்டிருக்கிறீர்கள்
ஹேமா said…
வாழ்வுக்கு மீறிய எதிர்பார்ப்பே மானுட சந்தோஷங்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது.
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு நினைத்தால்...!
Anonymous said…
வாழ்வின் அழகுகளை அப்போதே ரசித்திருங்கள் மீண்டும் வருவதற்கு நீங்களோ அவைகளோ காத்திருக்காது! சரிதானே அண்ணே?
Arun Prasath said…
நான் என்ன சொல்ல எல்லாம் நம்ம மக்களே சொல்லிடாங்க
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

மிக இயல்பாய் கையாண்டிருக்கிறீர்கள்.
உண்மைலேயே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .

சொல்லப்போனா இந்த கவிதை எனக்கு புரிஞ்சிருக்கு ..



///கனமாய் கலைந்திருக்கும்

மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!///

ரொம்ப ரொம்ப அருமையான வரிகள் ..!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...