Skip to main content

Posts

Showing posts from April, 2014

காலம் வரைந்த கலைஞன் - ரெம்ப்ராண்ட்!

மேலே இருக்கும் ரெம்ப்ராண்ட்டின் ஓவியத்தை மெர்சியிடம் மார்க் கிராஸ் காட்டுகிறார். மார்க் கிராஸ் ஒரு ஓவியரும் கூடத்தான், ஓவியரும் கூடத்தான் என்று சொல்லும் போதே அவர் வேறு எதுவாகவோ இருக்கவேண்டும் தானே...?! ஆமாம் அவர் களிமண்ணால் சிற்பங்கள் செய்யும் சிற்பியும் கூட. அந்த பாத்திரத்தில் நடித்தவருக்கு குறைந்தபட்சம் 70 வயதாவது இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. கொஞ்சம் ஐன்ஸ்டீனின் சாயல்வேறு அவருக்கு. அவர் பெண்களை மட்டுமே படமாக வரைந்து கொண்டு பின் களிமண்ணால் செதுக்கி செதுக்கி சிற்பம் செய்வார். பெண் என்றால் ஏதோ ஒரு பெண்ணின் சிலையாய் அது இருந்து விடமுடியாது. நிர்வாண மாடலாய் ஒரு பெண்ணை நிற்க வைத்து முதலில் பெண்ணின் உடலை வரைந்து கொண்டு பின் அந்தப் பெண்ணை கொண்டு அவர் சிலையும் செய்தாக வேண்டும். நிர்வாணம் என்ற சொல் வெறுமனே விஷமற்ற பாம்பைப் போன்றது ஆனால் பெண்ணின் நிர்வாணம் என்பது கலை என்னும் விஷம் நிரம்பிய நாகத்தைப் போன்றது. அது அழகு. அதுவே விஷம். பெண்ணின் உடல், அதன் வளைவு நெளிவுகள், அந்த  உடலில் இருக்கும் சூட்சும குறிப்புகள், மேடு பள்ளங்கள் என்று காமம் என்ற சொல்லை ஒரு உளி எடுத்து செதுக்கி

கலையாத கனவுகள் - 3

இதுவரை கலையாத கனவுகள் - 1 கலையாத கனவுகள் - 2 இனி... என்ன செய்வதென்று தெரியவில்லை செல்வத்திற்கு அவசரம் அவசரமாய் தன் அலுவலகம் நோக்கி ஓடினான். கேஷியர் ராமலிங்கத்திடம் செய்தியைச் சொல்லி கதறி அழுதான். அதே நேரத்தில் பேருந்தில் அடிபட்டவர்களை எல்லாம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து கொண்டிருப்பதாக அவர்களுக்கு செய்தி கிடைத்தது. பதறியபடியே அரசு மருத்துவமனைக்கு ஓடினான் செல்வம். ஏங்க ராஜ்கலா பஸ் ஆக்ஸிடெண்ட் கேஸ் எல்லாம் எங்க வச்சு இருக்காங்க...? தொண்டை கம்மியது செல்வத்திற்கு.... அதோ அந்த பக்கம் போங்க சார்... லெப்ட்ல திரும்பி.... நேரா போங்க அங்க பெரிய வார்டு இருக்கு அங்கதான் கொண்டு வந்து போட்டு இருக்காங்க... இன்னொரு வேன்ல மிச்ச இருக்க ஆளுங்கள கொண்டு வர்றாங்க சார்..... ஸ்பாட் அவுட் எப்டியும் பத்து பதினைஞ்சு பேராவது இருப்பாங்கன்னு சொல்லிக்கிறாங்க....  ப்ரண்ட் டயர் பர்ஸ்ட் ஆகி இருக்கும் போல வண்டிய இழுத்துக் கொண்டு போய் வயக்காட்ல தள்ளி கவுத்துருச்சு சார்....! முன்னாடி உக்காந்து இருந்த நிறைய பொம்பளைங்க மேல டீசல் கொட்டி உடம்பெல்லாம் வெந்து போய் கிடக்கா

காமம் கொள்(ல்)...!

கடும் குளிரில் கூசிப்போய் உடலை ஒடுக்கிக் கொள்வதை போல இருக்கிறது இந்த கூடலின் உச்சம். தியானத்தில் அமரும் போதும் இப்படித்தான். திடமான ஒரு கருங்கல்லாய் முதலில் அமர்ந்திருப்பேன். மெல்ல மெல்ல ஒவ்வொரு அடுக்காய் உடைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு அடுக்கும் உடைந்து விழ கொஞ்ச நேரமாவது ஆகும். அது எப்போது என்று தெரியாது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும் தடிமன் எல்லாம் படிப்படியாக உடையாமல் ஒரு கட்டிடத்தை வெடிவைத்து தகர்த்தால் எப்படி சடாரென சாயும் அப்படி சாயும். அதாவது சீட்டுகட்டு சாய்வதைப் போல ஆனால் அதன் மென்மையோடு அல்ல.... உடைந்து எல்லாம் விழுந்த பின்பு கூட இப்படித்தான் கூடலின் உச்சத்தில் ஏங்கிப் போய் உடல் துடிக்க குளிரில் கூசி ஒடுங்கும் உடம்பாய் நடு நடுங்கி தொண்டை அடைபட்டு கேவிக் கேவி அழத்தோன்றும். காமம் அழகானது என்று நான் சொல்லும் போதே வக்கிர பாம்புகள் பலரின் புத்தியில் நெளியத்தொடங்கி இருக்கும். இப்படித்தான் அது. அதன் இயல்பு இதுதான் என்று எழுத்துக்கள் மூச்சு வாங்கிக் கொண்டே ஒரு அனுபவத்தை இறக்கி வைக்கும் போது நான் இறக்கி வைத்த சுமையில் என்ன இருக்கிறது என்று பார்க்காமல் ஒவ்வொரு மூளையும் தத்தம

கலையாத கனவுகள் - 2

இதுவரை.... இனி..... எம்.ஜி.ஆர்க்கு அப்புறம் இப்படி கட்சி ரெண்டா உடையும்னு நினைச்சுக்கூட பாக்கல கேஷியர் சார்...? எப்பேர்பட்ட சகாப்தன் உயிரோட இருக்க வரைக்கும் ஒண்ணும் செய்ய முடியலையே...... அவர் செத்துப் போன ஒரே வருசத்துல கட்சி பிரிஞ்சு போயி இப்டி அடிச்சுக்கிட்டு நாறுறாங்க....... எம்.ஜி.ஆர் இல்லைன்னு ஆகிப் போச்சு.. இனி கலைஞர்தான் இப்போதைக்கு ஆள் சி.எம் போஸ்ட்டுக்கு... செல்வம் கேசியர் ராமலிங்கத்திடம் பேசிய படியே கோப்புகளை மேய்ந்து கொண்டிருந்தான்.  என்ன ஓய்....கவர்மெண்ட் எம்ப்ளாயி அரசியல் பேசுறீர்....? தமிழ்நாட்டு மக்களை எல்லாம் நம்ப முடியாது ஓய்....இப்பத்தானே கலைஞர் சீட்ல ஏறி உக்காந்து இருக்கார் அடுத்த எலக்சன்குள்ள ஜானகி அம்மாவும், ஜெயலலிதாவும் ஒண்ணா சேந்துட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்...... அரசியலை விடுங்காணும்... ஒங்க வொய்ஃபும் பையனும் ஜவுளி எடுக்க வர்றான்னு சொன்னீரே.... எத்தன மணிக்கு பஸ் வருது...? உம்ம வீட்டுக்கு ஆப்போஸிட்லதானே மதுக்கூர் யூனியன் ஆஃபீஸ் இருக்கு.. ஒரு போன் பண்ணி வாட்ச்மேன் கண்ணுச்சாமிய ஒரு எட்டு வீட்ல பாத்துட்டு வரச் சொல்லுங்காணும்... இல்லை சார்

கலையாத கனவுகள் - 1

மணியைப் பார்த்தான் செல்வம்.. மூன்றரை ஆக இன்னும் பத்து நிமிடம் இருந்தது. நாலே முக்காலுக்கு மதுக்கூர்  வந்துச்சுன்னா பஸ்ஸ்டாண்ட் போய் அப்புறம் ஊரை விட்டு கிளம்ப எப்டியும் ஒரு அஞ்சு அஞ்சே காலாச்சும் ஆயிடும். அஞ்சே காலுக்கு மதுக்கூரை விட்டுக் கிளம்பினுச்சுன்னா படப்பைக்காடு, கண்டியங்காடு, வேப்பங்குளம் பண்ணை, தளிக்கோட்டை பாலத்துக்கு ஒரு அஞ்சே முக்காலுக்கு வந்து சேரும். முத்துப்பேட்டையில இருந்து வர்ற வண்டி பெருமகளூர் போறவரைக்கும் கூட்டம் அதிகமாத்தான் இருக்கும். எப்டிப் பார்த்தாலும் ஒரு ஆறு இல்ல ஆறே காலுக்கு பட்டுக்கோட்டை மைனர் பில்டிங்கிட்ட வந்துடும் சீக்கிரம் வேலைய முடிக்கணும்..... யோசித்தபடியே பைல்களுக்குள் மூழ்கிக்கிடந்த செல்வம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கணக்கர். மனைவியையும் மகனையும் தீபாவளிக்கு ஜவுளி எடுக்க நாலேமுக்கால் பேருந்து ராஜ்கலாவில் வரச்சொல்லியிருந்தவர் சீக்கிரம் வேலையை முடிக்க பரபரத்துக் கொண்டிருந்தார். மதுக்கூர் தஞ்சாவூர் மாவட்டத்திலிருக்கும் ஒரு பேரூராட்சி. மதுக்கூர் ஜனத்தின் எல்லா தேவைகளையும் பெரும்பாலும் தீர்த்து வைப்பது பட்டுக்கோட்டைதான். இப்போதெல்லாம் பட்டுக்கோட்ட