Skip to main content

Posts

Showing posts from August, 2010

பொய்மை....!

பார்வைகளின் பரிணாம மாற்றத்தில் பரிமாறிக் கொண்ட மின்சார ஒத்தடங்களின் ஓரங்களில் தேங்கி நின்ற காமம்... உடைப்பட்ட கணத்தில் தகிப்புகளுக்கிடையேயான... முடிவுறா யுத்தங்களின்... மூர்க்கத்தில்..கொடுத்து எடுத்து எடுத்து கொடுத்து... எல்லாம் தொலையும் உச்சத்தில் கரைந்து போன நிமிடங்களில் அழுந்தி தள்ளப்பட்ட... காலமில்லா பெருவெளியில் மிதந்து..மிதந்து போக்கிடம் மறைந்து...பொய்மை அழிந்த திருப்தியின் வேர்களில் மெளனாமாய் மூழ்கி இருக்கையில் ஆண் என்ன? பெண் என்ன? ஜனித்ததெல்லாம் அறிந்த.. சூட்சுமத்தின் சுவடுகள்.. வேண்டுமென்றே ஒளிக்கப்பட்டு புலன்கள் அறியா கோடுகளில் பிரிந்து கொண்டு...இடும் சட்டங்களின் பின்புலத்தில் கேளியாய் ஒளிந்திருக்கின்றன.. பொய்மையின் சித்திரங்கள்... மெளனமாய் கோடுகளை அழிக்கும் காமமோ பொழுதுகளை அழித்து விட்டு பெரும்பாலும் மலர்கிறது... அர்த்தமற்ற ஜாமங்களில்...! விளக்கம் வேண்டுமென்று தோணவில்லை....ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. ஆன்மாவில் ஆண் என்றும் பெண் என்றும் தனித் தனி இல்லை. தேவா. S

ஒலி....!

விரிந்து பரந்து இருக்கும் வானம்.... நுரைத்து நுரைத்து அலைகள் வீசும் கடல்.....கண்ணுக்கெட்டிய தூரம் விரியும் நிலம்....ஒரு புள்ளியாய் நான்......! எல்லா பிரமாண்டத்தையும் எனைச் சுற்றி வைத்துக் கொண்டு துரும்பாய் நான் நீந்திக் கொண்டிருக்கிறேன். வாழ்வாற்றில் எட்டும் வரை எட்டி எதை எதையோ பேசி புலம்பி அடித்து செல்லும் கால வெள்ளத்தில் காட்சி மாற்றத்தில் நேற்று பேசியது இன்று மறைந்து இன்று பேசுவது நாளை மறைந்து ஒரு வித தாள கதியில் நடக்கிறது எல்லாம். எல்லாம் நிறுத்திப் பார்த்தாலும் ஏதோ ஒரு சப்தம்... நிசப்தத்திலும் கூட ஒரு வித சப்தம்....சப்தம் ஒலி. காற்று ஆக்ரோசமாக கடந்து செல்லும்போது ஒரு ஒலி ஊ....ஊ...ஊ என்று ...., மழை அடித்து பெய்யும்போது ஒரு ஒலி...., இதயம் துடிக்கும் ஓசை ஒரு ஒலி..., எங்கிருந்து பிறக்கிறது இந்த சப்தம்...? மனித காதுகளுக்கு கேட்கும் ஒலியின் அளவு 20HZ க்கும் 20000 HZக்கும் இடையேதான். எல்லாம் புரிந்து விட்டது என்று கூறும் மனிதர்களால் மேலே சொன்ன அளவிற்கு அப்பால் உள்ள ஒலிகள் கேட்காது. நாம் உணர்ந்தவைக்கும் அப்பால் இந்த பிரபஞ்சமே இருக்கிறது...இந்த பிரபஞ்சத்தில்....20000 HZ க்கும் மேலும் 20க்க

புறம்.....!

ஒரு நிசப்தமான இரவில் வெற்று வானமும் ஒற்றை நிலவும் என் உயிர்தடவிய கணங்களை எழுத நினைத்த நிமிடங்களில் வந்தது உன் நினைவு...! கலைந்து செல்லும் மேகங்களில் மறைந்து நின்று கண் சிமிட்டுவது... நீயென்று கணித்து முடித்த கணத்தில்... கை கொட்டி சிரித்தது .... நட்சத்திரம்...! உடல் ஊடுருவி அணைத்தது நீதான் என்று உணர்ச்சிவயப்பட்ட நேரத்தில் பரிகசித்து..பயணம் முடித்திருந்தது நடு நிசியின் ஊதக் காற்று.... கிறக்கத்தில் கண்மூடினால்... நீ வருவதும்....கண் திறந்தால் நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில் வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில் பரவிக்கிடந்த கருமையை விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று நினைத்து முடித்த மாத்திரத்தில் பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....! காதலில் தகிக்கும் எல்லோரும் 240 வால்ட் மின்சாரத்தை உடம்பில் ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்தான். ஒரு இரவின் வெறுமையில் ஒற்றை நிலவும் ...ஒரு நிலவுதான் யார் இல்லேன்னு சொன்னது...? காதல் தகிப்பில் ஒரு நிலவு என்பதே பெரிய சிலாகிப்பாக தெரிகிறது. காதல் வயப்படும் கணங்களில் எல்லாமே அர்த்தம் பொதிந்ததாயும் ஒரு வித குழந்தையை ஒத்த மனோ நிலையும் ஏற்படுவதுதான் அழகு. ஒரு படத்துக்கு ட்ரெய்ல

நேசிப்பு...!

காதல் என்ற வார்த்தை சரியானதுதான் என்றாலும் அதை கடைசிவரை நான் உபோயோகிக்கப் போவதில்லை. ஏனென்றால் அந்த வார்த்தையோடு தொடர்பு பட்டு ஏகப்பட்ட அத்து மீறல்களும் அசிங்கங்களும் நடந்தேறியாகி விட்டது நமது சமுதாயத்தில். காதல் என்ற வார்த்தைக்கு பின்னால் கிளைத்து வரும் காமம் என்ற வார்த்தையும் அதிலிருந்து தோன்றும் ஓராயிரம் எண்ணங்களையும் மட்டறுக்கவே நான் உபோயோகம் கொள்ளப் போகும் வார்த்தை " நேசித்தல் " கருங்கல் போன்ற திடமான நேசிப்பு, மலரின் மென்மை போன்ற நேசிப்பு, காற்றில் பரவும் சுகந்தம் போன்ற நேசிப்பு, சப்தமின்றி வார்த்தையின்றி மெளனத்தில் கரைந்த நேசிப்பு என்று பல தரமாய் இருந்தாலும் பெரும்பாலும் என்ன நிகழ்கிறது? எதிர்பார்த்தலில் நேசிப்பவரின் உணர்வுகளை கொன்று விட்டுதான் தொடங்குகிறது நேசிப்புகள் என்று நாம் உபோயோகம் கொள்ளும் பதம். தாய், தந்தை, மகன், மகள், மனைவி, நண்பன், கடவுள், எல்லாம் நேசிப்பிலும் எதிர்பார்ப்புகள் டன் டன்னாக இருப்பது மறுப்பதற்கில்லை. எதிர்ப்பார்ப்பு மனித இயற்கை ஆனால் நமது நேசிப்புகள் நேசிப்பவரை காயப்படுத்துமெனில் அது எப்படி நேசிப்பாகும்...? இரயில் பயணம் போலதான் மொத்த வாழ்க்கை. நள

தேடல்.....25.08.2010!

திணறடிக்கும் அன்றாடம், பொருள் ஈட்டும் பொருட்டு ஓட்டம்.....என்று நின்று நிதானிக்க முடியாத காலச்சக்கரத்தின் சுழற்சியில் ஒவ்வொரு இரவிலும் இமைகள் கண்ணயரும் முன்பு ஒரு ஏக்கப்பெருமூச்சு வருகிறதே...? என்ன இது வாழ்க்கை? ஏன் எல்லாம்? என்ன நிகழும் நாளை என்று கணிக்கமுடியாமல் கண்ணயர்ந்து போகிறோம். கண்ணயரும் எல்லோருக்கும் தெரியாது நாளை கட்டாயம் நாம் விழிப்போம் என்று.....இப்படிப்பட்ட நம்மைப் பற்றியே உத்தரவாதம் கொள்ள முடியாமல் கழியும் நாட்களையும் மூளையையும் வைத்துக் கொண்டுதான் திட்டமிடுகிறோம் அடுத்த தலை முறைக்கும் சேர்த்து. அறியாமை என்று தெரிந்தே மனிதன் ஆணவம் கொள்வதின் நுனி எங்கே இருக்கிறது? எத்தனை புத்தகங்கள் படித்தாலும், எவ்வளவுதான் அனுபவம் இருந்தாலும் பக்குவப்பட்டு விட்டோம் என்று சொன்னாலும் கோபத்தின் வேரறுக்க முடியாமல் ஆணவம் வெளிப்பட்டு விடுகிறதே....? சம காலத்தில்தான் பக்குவப்பட்டு இருக்கிறோம்....ஆனால் பக்குவப்படாமல் இருக்கும் போது தேடித் தேடி சேர்த்த எண்ணங்களும் கற்றுக் கொண்ட கற்பிதங்களும் என்னவாகும்? மறையாதன்றோ...? மூளையின் செயல்பாடும் அதன் நினைவுப் பகுதியும் செயல்படும் விதமும் அப்படி...ஒருமுறை

அட....!

தாம்பரத்திலிருந்து நந்தனம் நோக்கி நான் திரும்பிக் கொண்டிருந்த சென்னை மாநகரின் ஒரு பரபரப்பு மாலை. சந்தித்து விட்டு வந்த கம்பெனி கொடுத்த நம்பிக்கையில் அடுத்த வாரம் வரப்போகும் கெஸ்ட்ஸால் நான் வேலை செய்யும் 4 நட்சத்திர ஹோட்டல் ரூம்ஸ் எல்லாம் 15 நாள் தொடர்ந்து சோல்ட் அவுட் ஆகும்...எம்.டியின் தொலைபேசி பாரட்டு என்று ஒருவித குதுகலிப்பில்...இருந்தேன் நான். வேகமாய் அடித்து என் தலை கலைத்துப் போட்டு கொஞ்சலாய் காதல் மொழி பேசிய காற்றோடு உறவாடிக் கொண்டு...மெல்ல ஆக்ஸிலேட்டரை முறுக்கியதில் என் பைக் பறந்த போது நேரம் மாலை 5. தாம்பரம்...சானிடோரியம்.....குரோம்பேட்டை......தாண்டி....பல்லாவரம் தொடுவதற்கு முன்னால் எனது இடப் பக்கமாக முளைக்க ஆரம்பித்து இருந்த கையேந்தி பவன் வண்டிகள் இரவு வியாபரத்துக்கான முஸ்தீபுகளிலும், சுண்டல் வண்டிகளின் சுறு சுறுப்பிலும், மாலை நேர வீடு திரும்பலில் மகிழ்ச்சியாயிருந்த மனிதர்களும் பள்ளி விட்டு வீடு திரும்புகளும் பிள்ளைகள், ஆட்ட்டோகளின் அவசரம், பைக், பேருந்துகள் என்று மதிய வெயிலில் களைத்து போயிருந்த சென்னை நகரம் மாலைக் குளுமையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு ஒயின் ஷாப

இறை....!

ஒரு மெளனத்தின்....உச்சத்தில் எல்லாம் உடைந்து... எல்லைகள் கரைந்து... விடையற்ற கேள்விகளின் மரித்தலில் ஜனிக்கும் பதில்களில்... நான் இருப்பேன்...! நகர்ந்து நகர்ந்து... தூரமாய் இடைவெளி...பெருகும் பொழுதுகளில்.. நான் மறைந்துவிட்டேன் என்று எண்ணும் நினைவுகளின் ஓரத்தில் மறையாமல் மறைந்திருக்கும் உருவமற்ற எனது இயல்புகள்...! இழத்தலின் அருகாமையிலிருக்கும் பெறுதலின் வீச்சுக்களில்... கரைந்து போன நினைவுகளை ஒன்று கூட்டி ஆராய்ந்ததின் எச்சத்தின் எல்லா பக்கத்திலும் நான்..! இருத்தலும் இல்லாமையும்... சேர்ந்து ஆடும் நாடகத்தின் உச்சத்தில் நான் நீ அது இதுவென்று எதுவுமில்லா உருவத்தில் எல்லா நினைவுகளும் சங்கமிக்கும் நிமிடத்தில் தோன்றும் அருவத்தில் அழிந்து போகும் வஸ்துகளில் அழியாமல் கரைந்திருப்பேன் நான்! கட்டிய வேசங்களின்... அரிதார பூச்சுக்களின் தடிமனுக்குள்... தவித்து தவித்து என்னின் சுயம் காணும் முயற்சிகளில் தோற்று தோற்று... ஜெயிக்கும் ஜென்மாந்திர கனவுகளில் மீண்டும் மீண்டும் ஜனிப்பித்தலில் சூன்யத்தை தழுவும் ஆசைகளின் விளிம்புகளில் ஏகந்த கனவுளில் ஒளிந்திருப்பேன் நான்..! உணரமுடியா மர்மங்களின்... ஆதி முடிச்சிலும்...

வெளி...!

தேடலின் உச்சத்தில்... மரித்துப் போன எண்ணங்களால்... திடமழிந்த உடலோடு.. கட்டற்ற திசையில்.. வெட்டவெளி வாசத்தில்.... நிகழும் என் பயணத்தின் காலமெற்ற வெளியினில்..... அது இது என்று...சுட்டியுணரப்படா... பொருளற்ற பொருளாய்.... பரவிக் கிடந்த கிறக்கத்தை... வாங்கிக் கொள்ள மனமின்றி..... கிறக்கத்தில் ...கிறக்கமாகி.. எங்கும் விரவியிருந்த... என்னின் விஸ்தாரிப்புகளில் நடந்து கொண்டிருந்தது ஒரு ராஜ்யம்...! எல்லாமான ஒரு இயக்கத்தில் எதுவுமற்ற நகர்வுகளில்... ஊடுருவிக் கிடந்த உணர்வற்ற..... உணர்வுகளின் மிச்சத்தில் மொய்த்துக் கிடந்த பிரியங்களில் ஒளிந்து கிடந்தது.... உடலாய் நான் தேடி அலைந்த.... காதலின் படிமங்கள்....! சட்டென எல்லாம் கலைத்து... என்னை இழுத்துப் போட்ட... பூமியில் அலறிக் கொண்டிருந்த... அலாரம் அடைத்து... குளியலறைக்குள் நுழைந்த... காலையின்அவசரத்தில்... ஆரம்பித்தது மற்றுமொரு... நாளின் சராசரி பரபரப்பு.....! விளக்கம் 1: எண்ணங்கள் ஒழிந்து நான் என்ற அகங்காரம் ஒடுங்கிய பின்பு உடல் என்பது வெறும் வெற்றுச் சக்கைதான். எல்லாம் கழிந்த நிலையில் உடலென்று ஒன்று இருந்தாலும் ஒன்றுதான் இல்லை என்றாலும் ஒன்றுதான். உடலும்

யாரோ...!

எழுத வேண்டிய தொடர்களின் தொடர்ச்சியை சிந்தித்துக் கொண்டிருக்கும் மூளையை சமகாலத்தில் எழும் எண்ணஙகள் ஆக்கிரமித்து தொடர்ந்து விழுங்கிக் கொண்டே இருக்கிறது. ஏதோ எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் விசைப்பலகையை தட்டத் தொடங்கினால் ஏதோ ஒன்று வருகிறது. திட்டமிடாத எழுத்துக்கள் வெகுதுல்லியமாய் தெறித்து விழும் வீச்சை நானும் பின் தொடர வேண்டியதாயிருக்கிறது. திட்டமிட்டு செய்வோம் பல சூழ்நிலைகளில் ஆனால் என்ன நடக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தி ஒரு காரணி சார்ந்தது அல்ல....அது பல விசயங்கள் சார்ந்தது ஆனால் நிகழும் நிகழ்வுக்கெல்லாம் மனித மூளை ஒரே ஒரு காரணத்தை தேடும் போதுதான் ஏமாற்றமும் கோபமும் மனிதனை ஆக்கிரமிக்கின்றன. சக மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு கூட ஏதோ ஒரு வகையான எதிர்மறையான அவர்களின் எண்ணங்கள் காரணமாகின்றன். இந்த எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுவதற்கு அவர்களின் புரிதலில் இருக்கும் கோளாறும், முறையற்ற செயல்களால் மற்றவர்களால் அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளும் காரணமாகிப் போகின்றன. புரிதலில் இருக்கும் கோளாறு வளர்ப்பிலும், வளரும் போது ஏற்படும் அல்லது தாக்கம் கொடுக்கும் புறச்சூழலும் காரணமாகிறது. முறையற்ற செயல்களா

ஆறு...!

ஒரு கலைக்கப்பட்ட உறக்கத்தின்... எச்சத்தில்மிதந்து கொண்டிருந்த... கனவில் கடக்கப்படாத ஆற்றின்.. தூரத்தை அளந்து....அளந்து மொத்தமாய் விழித்ததில்... மரித்துப் போனது சொச்ச உறக்கமும்! வெறுமையில் கிளைத்த எண்ணங்களில்... நிறைந்து இருந்தது கடந்து போயிருந்த நாளில் நாம் தொலைத்த காதல்....! வேண்டமென்று நீ சொன்னதும்... அது சரிதானென்று என் மனது சொன்னதும்... ஒன்றாய் சங்கமித்த நொடிகளில்... உடைந்து போனது கண்ணாடி காதல்...! விளக்க முடியாத உணர்வாய்... பிரிதலில் பீறிட்டு கிளம்பிய காதலின் உணர்வுகள் பிம்பங்களற்று பிழிந்தெடுத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு காதலை எனக்குள்...ஊற்றியதில் மிரட்சியாய் எங்கோ வெறித்த... என் நினைவுகளோடு நகர்ந்து கொண்டிருந்தது அந்த கெட்டியான இரவு....! பெற்றாலும்,இழந்தாலும் தொடரும்... காதலின் அவஸ்தைகளை புறம்தள்ளி... மீண்டும் தொடர நினைத்த உறக்கத்தில்.. வரப்போகும் ...ஏதோ ஒரு கனவில்... மீண்டும் வரவழைக்க நினைத்தேன்... நான் கடக்க முடியாத ஆற்றின்..தூரங்களை...! ஒரு கனவில் பொய்த்தது... மறு கனவில் ஜெயிப்பதில் மறைந்திருக்கும் வாழ்வியல் சூட்சுமத்தை கற்றுக் கொடுக்கும் ஆசையில்... காத்திருந்த நித்திரையொடு..

ஆட்டம்...!

சுற்றி சுற்றி வரும் ஒரு ராட்டினத்தின் பக்கவாட்டு காட்சிகள் மாறுவது போல இருந்தாலும் ஏற்கனெவே வந்த காட்சிகள்தான் எல்லாம். ஆட்கள் தவணை முறையில் சுற்றுவதாலும் பல வித எண்ணங்களை கொண்டு சுற்றியுள்ள பொருட்களை பார்ப்பதாலும் பார்ப்பவனின் எண்ணத்திற்கு ஏற்றபடி காட்சிகளில் இருந்து விளக்கங்களும் அது பற்றிய விஸ்தாரிப்புகளும் மாறி மாறி பார்ப்பவனின் மனதை ஆக்கிரமித்து, ஆச்சர்யம், கோபம், துக்கம், சிரிப்பு, காமம், காதல் என்று பலவிதமான உணர்வுகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. தோன்றும் உணர்வெல்லாம் காணும் பொருளில் இருந்துதான் என்ற மாயையிலும், தான் கண்ட ஆச்சர்யமே மிகப்பெரிய அதிசயம் என்றும் ஒரு வித மமதையில் ஒரு வித ஆளுமை கொண்ட எண்ணங்களைப் பரப்பி இன்னும் திடமாகி ஏதோ எல்லாம் தெரிந்து விட்டதைப் போல எப்போதும் ஒரு தலைக் கனத்தை கொடுக்கிறது மனது. ஆட்டத்தின் ஓட்டம் இடைவிடாமல் புதிது புதிதாய் வேசமிட்டு ஏற்கனவே ஏறியவர்கள் ஏறுவதும், ஏற்கனவே சுற்றியதை மறந்துவிட்டு மீண்டும் மிண்டும் சுற்றுவதுமாக மீண்டும் மீண்டும் எல்லா உணர்ச்சிகளையும் காட்டிக் கொண்டு செய்த செயலையே திருப்பி திருப்பி செய்து கொண்டு நடக்கும் இந்த ஆட்டம் எப்போ

விலாசம்....!

வற்றிப் போன விவசாயம்... காய்ந்து கிடக்கும் நிலங்களின்.. கண்ணீரில் மரித்துக் கிடக்கும்... மனிதர்களின் நூற்றாண்டு கலாச்சாரம்! எப்போதும் போல கூவும்... அந்த ஒற்றைக்குயிலின் ஒப்பாரியில் ஒளிந்து கிடக்கும் மனிதர்களின் சோகம்... கிராமங்களில் தொலைத்த வாழ்க்கையை மீட்டெடுக்கும் ஆசையில்... நகரம் நோக்கி நகரும் மனிதர்களின் நகரல்களில் மேலும் மேலும் நிறைக்கப்படும் வெறுமை! வழக்குகள் ஏதுமின்றி வறுமையோடு முட்டு திண்ணைகளில் கடந்த கால பஞ்சாயத்துகளை... கனவுகாணும் வெள்ளை மீசைகள்! பயில வழியில்லாதா வேளாண்மையை கணிணி கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் காண்வென்ட்டுக்கு செல்லும் குழந்தைகள்... வறண்டுதான் கொண்டிருக்கிறது கிராமங்கள்.. வருங்காலத்து மியூசியங்களில்... இடம் பெறும் பெரு முயற்சியோடு! ஒரு வரலாற்று பிழையை சமகாலத்தில் காணும் தலைமுறையாக நாமிருப்பது ஒரு வருத்தம் தோய்ந்த செய்திதான்.....! என்னவெல்லாம் செய்து கிராமங்களை காப்பாற்றுவது அல்லது என்னவெல்லாம் செய்து மனித கட்டமைப்பை சுத்திகரிப்பது என்று விளங்க முடியாத அளவிற்கு சிக்குப் பிடித்துப்போய் கிராமங்களின் சுயதன்மை அழிய எத்தனித்திருக்கிறது. நாகரீக வளர்ச்சி என்ற

அம்மா...!

சுற்றிலும் இருந்த கூட்டத்தின் கரகோசம் விண்ணை பிளந்து கொண்டிருந்தது. அந்த பந்தை வீசுபவனுக்கு எந்த வித பதட்டமும் இல்லை ஏனென்றால் எல்லோருக்கும் அவன் தான் பந்தை வீசிக்கொண்டு இருக்கிறான் எனக்கான முறை இது....இன்னும் ஒரு ரன் எடுத்தால் 100........! பந்தை தேய்த்து அவன் ஓடி வரப்போகிறான் இந்த பந்தில் கிடைக்கும் ஒரு ரன் எனது 99தை 100ஆக மாற்றும் என்று எனக்கும் தெரியும்.சுற்றிலும் இருக்கும் கூட்டத்தின் எண்ணம் தெரியவில்லை, சிலர் 100 எடுக்க வேண்டும் என்றும் சிலர் எடுக்க கூடாது என்று எண்ணுவதாகவே எனக்குப் பட்டது ஆனால் பதட்டத்தில் எனது இதயம் இடமாறி துடித்தது என்னவோ உண்மை...அந்த ஒரு நொடி...பந்து வீசப்படுவதற்கு ஒரு வினாடி ஏதோ ஒரு நினைவு என் மூளையில் சிக்க.... என்னுடைய மட்டையை தூக்கி காற்றில் எரிந்து விட்டு......கயிறறுத்த கன்றாய், கட்டுக்குள் சிக்காத காற்றாய் கூட்டம் விட்டு, போட்டி விட்டு, ஆட்டம் விட்டு களம் விட்டு......ஓடிக் கொண்டிருக்கிறேன்..... அம்மா...மா....மா....மா......எனது சப்தத்தில் சுற்றியுள்ள கூட்டத்தின் சப்தம் அறுபட்டு கேள்விக்குறியாய் எல்லாம் நின்று போகிறது...எண்ண அலைகள் மைதானத்தை விட்டு வெளியேற

நான் யார்....?

உடலல்லன்; உயிரல்லன்; பெயரல்லன்; பதவியல்லன்; உறவல்லன்; எல்லாம் நேதி செய்த பின் எஞ்சியிருக்கும் எல்லாமான ஏகத்தின் வடிவம் நான்....! யாரோ கொளுத்திய பட்டாசு வெடிக்கட்டும் எனது வலையிலும்...அழைப்பு கொடுத்த நண்பர் எல்.கே, அதை வழிமொழிந்த தம்பி செளந்தர் மற்றும் தோழி கெளசல்யாவிற்கு...இந்த பதிவு சமர்ப்பணம். 1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்? தேவா. S 2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன? தேவேந்திரன் என்பதான் முழுப்பெயர் என்றாலும், தேவேந்தர், தேவன் என்று அலுவலகத்தில் அழைத்தாலும், தேவா என்று என் நண்பர்கள் அழைத்தது நிலைத்து விட்டது. இப்போது தேவா என்று எல்லோருமே கூப்பிட்டாலும்.... " அப்பு " என்று என் அக்காவும் அம்மாவும் கூப்பிடும் பேர்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் " அப்பா " என்று என் மகள் அழைக்கும் தருணங்களில்தான் என் இருப்பை உணர்கிறேன். 3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி? சுற்றி நடக்கும் முரண்பாடுகளையும், அநீதிகளையும் பார்த்து நெஞ்சு குமுறி உடனே கண் கலங்கிவிடும் டைப் நான். அப்படிப்பட்

ஒளி....!

ஜென்மங்களாய் சுமந்து திரியும் குப்பைகளை கழித்தெறிய வேண்டி மீண்டும் மீண்டும் அந்த குப்பைகளின் வாசனைகள் துரத்த ஜனித்து, மரணித்து, ஜனித்து மரணித்து இடைவிடாமல் ஆடிக் கொண்டிருக்கும் ஆட்டத்தின் இறுதி என்னவென்றறியாமல் மூன்று வேளை உண்டு, குடித்து, அலங்கார உடைகள் உடுத்தி, ஆயிரம் பொய்கள் சொல்லி, உறவுகள் கூட்டி, கூடி, பிணி சேர்க்கும் உடல் போற்றி, இன்னதென்று இதற்கென்று அறியாத செயல்கள் செய்து...செல்லும் வாழ்வின் ஓட்டத்தின் ஒரு தினத்தில் எங்கோ ஒரு மின்னல் வெட்ட மூளை செயலற்று நின்று இதுவெல்லாம் எதற்கு? என்று கேள்வி கேட்ட தினத்தில் .....புரிந்தது எல்லாம் அர்த்தமற்றது என்று.... ஒரு விசயத்தை விட வேண்டுமெனில் அதை விடுவதற்கான செயல்கள் செய்யவேண்டும். இது லெளகீக கணக்கு ஆனால் பிறப்பறுக்கும் இந்த பிரபஞ்ச கணக்கிற்கோ....முயற்சிகள் அற்று செயல் மறந்து கருத்துக்களை துப்பிவிட்டு காத்திருக்கவே வேண்டும். விதிமுறைகளுக்குள் சிக்கிக் கொண்டு வீசும் காற்றும், சுற்றும் பூமியும் மட்டுப்பட்ட மனிதனின் எண்ணத்திற்கேற்ப இருக்கவேண்டுக் என்று சிந்திக்கும் மூளைகள் எல்லைகளை உடைக்க அறிந்தும் உடைக்காமல் இருப்பதிலேயே அற்ப சுகம் கண்டு வ

தேடல்....05.08.2010!

கூட்ட நெரிசல் இல்லாத பழமையான பெரிய கோவிலின் ஒரு மூலையில் கண்களை மூடி அமர்ந்திருந்தேன்....! சுற்றும் முற்றும் அவ்வப்போது கடந்து செல்லும் ஓரிரு காலடித்தடங்களுக்குச் சொந்தமான முகங்கள் என்னை உற்று நோக்குமோ என்று ஒரு நிமிடம் கண்விழித்து பார்க்கத் தூண்டிய மனதினை அடக்கி மீண்டும் என்னுள் கவனத்தை செலுத்தினேன்..... மிகப்பழைமையான யாரோ ஒரு மன்னன் கட்டிய கோவில் அது என்று புத்தகத்தில் படித்தபின் நேரே வந்து ஒரு மூலையில் அமர்ந்துவிட்டேன்..இப்போது அந்த மன்னன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தான்...ஓ....பாண்டியரே...இவ்வளவு பெரிய கோவில் ஏன் கட்டினீர்....கடவுள் பிரமாண்டமனவன் என்று எடுத்தியம்பவோ? இல்லை சிற்பக்கலையில் இருந்த விருப்பமோ இல்லை உமது அந்தப்புரத்து தேவியரிடம் உமது பராக்கிரமத்தை காட்டும் யுத்தியோ இல்லை காலம் கடந்தும் உம்மை சிந்தையில் வைத்து மக்கள் புகழ வேண்டும் என்று நினித்தீரோ, இல்லை உமக்கு இறை மீது பிடிப்பு அதிகமோ? ஆமாம் அதுவென்ன மன்னர்களெல்லாம் பெரும்பாலும் சிவனுக்கே கோவில் கட்டியிருக்கிறீர்? கற்பனைகள் செய்த மன்னனை கண்முன் கொண்டுவந்த மனம் புறத்தில் யாரோ ஒருவர் தேவாரம் ஓத மன்னனை பட்டென்று விட்

சீத்தாங்கல்...!

கொஞ்ச நேரம் தத்துவங்களையும், விவாதங்களையும், ஆராய்ச்சிகளையும், எல்லா வியாக்கியனங்களையும் விட்டுவிடப் போகிறேன்.....ஆமாம் இந்த கட்டுரையில் கருத்து தேடாதீர்கள், இந்த கட்டுரையில் கடவுளையும் தேடாதீர்கள்!எதுவுமற்று ஒரு நாள் வெறுமனே... நமக்கு பிடித்த செயலைச் செய்வோம் சரியா? அதாவது குளத்தில் பானை ஓட்டை சில்லாக்கி எறிவோமே, அதை "சீத்தாங்கல்" என்று சொல்வோம். எறிந்த அந்த ஒட்டு சில்லு தண்ணீரின் மீது தட்டி தட்டி குதித்து குதித்து போய் ஒரு இடத்தில் தண்ணீருக்குள் மூழும்ம்...அந்த செயலில் அர்த்தம் இல்லை ஆனால் அது தத்தி தத்தி போவதை பார்ப்பதில் ஒரு மலர்ச்சி மகிழ்ச்சி இருக்கும்.. அப்படி ஒரு சீத்தாங்கல்தான் இந்தக் கட்டுரை.... என்னிடம் ஏன் ரஜினியைப் பிடிக்கிறது என்று கேட்டு விடாதீர்கள்...? ரஜினியால் என்ன பலன் ரஜினி? ஒரு சுய நலவாதி என்று ஆயிரம் உதாரணம் காட்டி விடாதீர்கள்....என்னைப் போல ஆட்கள் இருப்பதால்தான் தமிழ் நாடு உருப்படவில்லை என்று சொல்லி விடாதீர்கள்....ஏனென்றால்.... ஏன் ரஜினியைப் பிடிக்கும் என்று என்னால் பட்டியலிட முடியாது...காரணம் எனக்கே தெரியாது. ரஜினி பிடிக்கும்...அவ்ளோதான்....எனக்குள் தோன

கனவு காணுங்கள்....!

எந்த கணமும் தாக்குதல் நடத்தப்படலாம்,உடலின் எங்கே வேண்டுமனாலும் அம்புகள் தைக்கலாம், எதிரியின் வாள் வீச்சில் எப்போது வேண்டுமானாலும் கழுத்தறு படலாம், உறக்கத்தையும் பசியையும், உறவுகளையும் கடந்து...இரவையும், பகலையும், வெயிலையும் குளிரையும் பொருட்படுத்தாது எந்நேரமும் வாள் வீசிக் கொண்டு இருப்பவன் தான் போராளி..... கூச்சலுக்கும்,அலறலுக்கும் சுற்றி கிடக்கும் பிணங்களுக்கும் நடுவே..இருப்பவனுக்குத் தெரிவதெல்லாம் ஒன்றேதான் லட்சியம்....! தம்முடைய சோர்வு தமது சகாக்களுக்கு வந்துவிடக் கூடாது என்று எப்போதும் தன்னை முன்னிறுத்தி.....முன்னேறி.. முன்னேறி தனது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் சுற்றியுள்ள தோழர்களுக்கு பரவச் செய்கிறானே...அவனின் புத்தியில் வேறு என்ன இருந்து விடப் போகிறது....? கொள்கையும் லட்சியமும்தானே? வாள்களின் வீச்சு.. கேட்டு… கேட்டு மரத்துப் போயின எமது செவிகள்! சோர்ந்து போன எதிரிகளின் யுத்திகள் எல்லாம்... எம்மை அழிக்கு உ பாயம் அறியாது... கலங்கச் செய்கின்றன..புத்திகளை! பட்ட இடமெல்லாம்... பரவும் நெருப்பினை தோட்டாக்களும் அம்புகளும் வாள்களும்... என்னதான் செய்ய முடியும்? ஒன்று நீர் நெருப்பாய் மாற வேண

புல் தானாகவே வளருகிறது....!

எழுத ஆரம்பிப்பதெல்லாம் உணர்வு நிலையில் இருந்து வருவதாலும் அதற்காக கற்பனைக்குதிரையை நான் தட்டிவிட வேண்டும் என்ற அவசியமின்மையாலும் மேலும் மிகைப்பட்ட நிகழ்வுகளின படிப்பினைகளை பகிரவேண்டும் என்ற ஆசையினாலும் பெரும்பாலும் ஒரு கட்டுரை, ஒரு கருத்து என்று தேங்கிக் கிடக்கும் நீரைப் போல என்னால் இருக்க முடிவதில்லை மாறக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆற்றினைப் போல என் தேடல் போய்க்கொண்டே இருக்கிறது. " புல் தானாகவே வளர்கிறது...? என்று ஒரு ஓஷோவின் புத்தகத்தை மேய்ந்து கொண்டிருந்த பொழுது மேல் மனது என்னிடம் புத்தகத்தை உடனே மூடச்சொன்னது. ஏன் என்ற கேள்விக்கு உடனடி பதிலாக புல் தானாகவே தான் வளரும்..இதில் என்ன பெரிய கருத்து இருக்கிறது? என்று என்னை திருப்பிக்கேட்டது மனது. புத்தகத்தை மூடி விட்டு அதன் அட்டைப்படத்தை பார்த்து கொண்டே இருந்தேன்.... "புல் தானாகவே வளருகிறது " தலைப்போடு சேர்ந்து அட்டை காற்றில் ஆடியது. புல் தானாக வளருவதில் என்ன இருக்கிறது? ஆச்சர்யம்....? புல்லின் செயல்பாட்டை புறக்காரணிகள் நேரடியாக மாற்ற இயலுமா? ? கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தால் நீர் வரத்து இன்றி புல் கருகத் தொடங்கும்....வெயி