Skip to main content

யாரோ...!























எழுத வேண்டிய தொடர்களின் தொடர்ச்சியை சிந்தித்துக் கொண்டிருக்கும் மூளையை சமகாலத்தில் எழும் எண்ணஙகள் ஆக்கிரமித்து தொடர்ந்து விழுங்கிக் கொண்டே இருக்கிறது. ஏதோ எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் விசைப்பலகையை தட்டத் தொடங்கினால் ஏதோ ஒன்று வருகிறது. திட்டமிடாத எழுத்துக்கள் வெகுதுல்லியமாய் தெறித்து விழும் வீச்சை நானும் பின் தொடர வேண்டியதாயிருக்கிறது.

திட்டமிட்டு செய்வோம் பல சூழ்நிலைகளில் ஆனால் என்ன நடக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தி ஒரு காரணி சார்ந்தது அல்ல....அது பல விசயங்கள் சார்ந்தது ஆனால் நிகழும் நிகழ்வுக்கெல்லாம் மனித மூளை ஒரே ஒரு காரணத்தை தேடும் போதுதான் ஏமாற்றமும் கோபமும் மனிதனை ஆக்கிரமிக்கின்றன.

சக மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு கூட ஏதோ ஒரு வகையான எதிர்மறையான அவர்களின் எண்ணங்கள் காரணமாகின்றன். இந்த எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுவதற்கு அவர்களின் புரிதலில் இருக்கும் கோளாறும், முறையற்ற செயல்களால் மற்றவர்களால் அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளும் காரணமாகிப் போகின்றன.

புரிதலில் இருக்கும் கோளாறு வளர்ப்பிலும், வளரும் போது ஏற்படும் அல்லது தாக்கம் கொடுக்கும் புறச்சூழலும் காரணமாகிறது. முறையற்ற செயல்களால் தீங்கு ஏற்படுவதற்கு யாரோ தன்னுடைய சுய நலத்துக்காக செய்யும் அநீதிகளும் காரணமாகின்றன.

நம்மில் பல பேருக்கு தவறு என்றால் ஒரு சில செயல் சார்ந்த விசயங்கள் மட்டுமே நினைவுப்புள்ளியிலிருந்து வெளிப்பட்டு இது சரி இது தவறு என்ற ஒரு தீர்மானிப்புக்கு வந்து விடுகிறார்கள் ஆனால் அறியாமல் செய்யும் ஓராயிரம் விசயங்கள் சக மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணராமலேயே எண்ணங்களாலேயே கொன்று குவித்துக் கொண்டு இருக்கிறோம் ஒராயிரம் மனிதர்களின் உணர்வுகளை.

எப்படிப் பார்த்தாலும் சக மனிதனின் சுயத்தை தொடும் அவரது சொந்த விசயங்களை ஆராயும் ஒரு தன்மை பெரும்பாலும் நமது சமுதாயத்தில் இருப்பது மறுப்பதற்கில்லை. எதிர்த்த வீட்டுக்காரனுக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் யாரோ ஒரு தூரத்து சொந்தக்காரனுக்கும் பயந்து பயந்து தன்னுடைய வாழ்க்கையை வாழாமல் உணர்வுகளை புதைத்து வாழ்பவர்கள் ஏராளம்.

காரணம் ஊர் என்ன சொல்லுமோ என்ற பயம். ஊரில் உள்ள 90 முட்டாள்கள் ஒரு விசயத்தை ஆதரித்து அதை அரங்கேற்றினால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியது என்றும் 10 பேர் நல்ல விசயம் சொன்னால் அது தவறு என்ற ஒரு பொது புத்தி நம்மிடையே இருக்கிறது. பொது புத்தி என்றால் நமது மனதை நாமே ஏமாற்றி மிகைப்பட்டவர்கள் சொல்வது சரியாயிருக்கும் என்று நம்புவது.

" எல்லோரும் சொல்வது சரியா? இல்லை எது சரியோ அது சரியா? "

இந்த கேள்வியை ஒவ்வொரு கணத்திலும் கேட்கும் போது நாம் பார்க்கும் எந்த ஒரு செயலிலும் இருக்கும் ஒரு அறியாமை தெளிவாக தெரியும். எனது உறவுக்காரர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார். நாங்கள் எல்லாம் மதிய உணவருந்தி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். என்னுடைய மனைவி குழந்தை பற்றியெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார் அந்த உறவுக்காரர். அப்போது அம்மாவின் முகத்தை நான் பார்த்த போது சற்றே வாடி இருந்தது. என்ன விசயம் என்றே புரியவில்லை. வந்த விருந்தினரும் இரவு தங்கி விட்டு மறு நாள் காலையில் காபி, டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பி போய் விட்டார்.

நான் ஊருக்கு வந்திருந்த அந்த ஒரு மாத விடுமுறையில் அம்மாவின் முகம் வாடியிருந்ததை அப்போதுதான் கவனித்தேன்." என்னாச்சும்மா?..." அம்மாவிடம் தனியே அழைத்து கேட்டேன்....! அம்மா சொன்னார்கள்..அது ஒண்ணும் இல்லைப்பா... நீ தனியே எங்களை எல்லாம் விட்டுவிட்டு உன் மனைவி குடும்பம் என்று சென்னையிலேயே செட்டில் ஆக போறியாப்பா? வெளிநாட்டில் இருந்து கொண்டே தனியா செட்டில் ஆவதற்கு எல்லாம் செய்றீயாமே? அம்மாவின் கேள்வியில் பதறிய நான்...? என்னாச்சும்மா ஏன் இப்படி கேக்குறீங்க....

இல்லப்பா அந்த மாமா வந்துட்டுப் போனார்ல அவர் சொன்னாரு....ஊர்ல ஒரு உறவினர் திருமணத்திற்கு போன பொது எல்லோரும் பேசிக்கிட்டாங்களாம் அவர் கேட்டுட்டு வந்து சொன்னாரு...என்று சொன்னார்கள். ஹேய்...வாட் இஸ் திஸ்....அது எப்படி என்னுடன் என் வாழ்க்கையின் திட்டமிடலில் நேரடி சம்பந்தம் இல்லாத யாரோ...ஹூ த ஹெல் இஸ் தட்? எனக்கு வந்த கோபம் டெலிபோன் காலாய் மாறி பாதி வழியில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த உறவினரை தொடர்பில் கொண்டு வந்தது.

என்ன மாமா? அம்மாகிட்ட என்ன சொன்னீங்க...?அவர் விலாவாரியாக சொன்னார்...சுப்பிரமணியன் மகளுக்கு கல்யாணம் வச்சிருந்தான்ல அங்க பேசிக்கிட்டாகப்பு.... நாந்தேன் அக்காகிட்ட (எங்க அம்மா) ஒண்ணும் உங்ககிட்ட கேக்க வேணாம்னுல சொன்னேன்...என் கோபம் உச்சத்திற்கே சென்றது...எதுக்கு ஒரு செய்திய சொல்லணும் அப்புறம் கேக்க வேணாம்னு சொல்லணும்.....ஏன் இந்த பொழைப்பு என்று மனதினுள் நினைத்ததை வெளிக்காட்டாமல்...ஏன் மாமா யாரு சொன்னது இப்படின்னு பொறுமையாய் கேட்டேன்....எனது மனதில் இதைச் சொன்னவர் யார் என்றறியும் ஆர்வமும் அம்மாவின் மனதை தெளிவாக்க வேண்டிய வேகமும் இருந்தது....

மாமா சொன்னார்... " அங்கன தான் பேசிக்கிட்டாகப்புன்னு...மீண்டும் சொன்னர். திரும்ப யாரு மாமன்னு கேட்டதற்கு....இன்னாருன்னு தெரியலப்பு...ஒரு கூட்டத்துல பேசிக்கிட்டு இருந்தத கேட்டேன். அம்புட்டுதேன்..என்று ஏதோ சாதாரணமாக சொல்ல அதற்கு மேல் எனக்கு அந்த விசயத்தில் அதீத ஆர்வம் இல்லை. இது வம்பு பேச்சு (gossip) என்று புரிந்து கொண்டேன்.

பின் அம்மாவிற்கு புரிய வைத்தேன்....இப்படி யாரோ சொல்வதை கேட்டு நாம் தீர்மானங்களை எடுத்தால் நமது சொந்த வாழ்க்கை அல்லவா தப்பிப்போகிறது.
அதன் பிறகு எல்லாம் சுமுகமானது எனது வீட்டில் அதை விட்டு விடுவோம் இப்போ...

ஆனால்....

இந்த யாரோக்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருப்பார்கள். தேவையில்லாமல் அவர்களை அனுமதிப்பதை விட்டு விட்டு மனதளவில் என் வாழ்க்கை நான் வாழ்கிறேன் என்ற எண்ணத்தோடு எப்போது பார்த்தாலும் அடுத்தவரையே உற்று நோக்காமல் நமது வாழ்க்கையை நாமே வாழ வேண்டும். என் சட்டையை முதலில் வெளுத்துக்கொள்கிறேன்.... என்ற எண்ணத்தோடு வாழ்ந்து பிறரின் சட்டைகள் கரையாயிருக்கிறது என்று சொல்வதற்கான நமது தகுதிகள் என்னவென்று ஆராய்ந்து வாழ்தல்தானே சுகம்?

இப்போ தெரியுதா...ஒரு பிரச்சினைக்கு ஒரு காரணம் இல்லை பாஸ்... ஏகப்பட்ட காரணிகள் இருக்கு.....குறைந்த பட்சம் நாம் ஒரு காரணியாய் இருந்து ஏதேனும் பிரச்சினையின் பகுதியாய் இருப்பதை விட.......நமது வாழ்க்கையை நமக்கு பிடித்த மாதிரி வாழலாமே ....?

யாரோ சொல்லும் தேவையில்லாத நம்மைப் பற்றிய விமர்சனங்களை குப்பையில் தூக்கிப் போடுங்கள். உண்மையான கருத்தை சொல்ல மனிதர்கள் நேரே பெயரோடு நேர்த்தியாய் வருவார்கள் அவர்களை கவனித்தால் போதும்,

வாழ்வின் சந்தோசங்கள் எல்லாம் பெரிய பெரிய விசயங்களில் இல்லை....அவை சின்ன சின்ன விசயங்களில் ஒளிந்து கொண்டு காத்திருக்கின்றன நம்மை சந்தோசப்படுத்த, நாம்தான் கவனிப்பதில்லை......!



தேவா. S

Comments

/// யாரோ சொல்வதை கேட்டு நாம் தீர்மானங்களை எடுத்தால் நமது சொந்த வாழ்க்கை அல்லவா தப்பிப்போகிறது.///

அருமையான வரிகள்! எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு!

அப்புறம் தேவா! ஏன் என் கடை பக்கம் உங்களை காணோம். புது பதிவுகளை எழுதி இருக்கேன். வந்து பாத்து உங்க கருத்தை சொல்லுங்க.

பதிவுக்கு ஓட்டு போட்டாச்சு!
jothi said…
//இந்த யாரோக்கள் எல்லோரு வாழ்க்கையிலும் இருப்பார்கள். தேவையில்லாமல் அவர்களை அனுமதிப்பதை விட்டு விட்டு மனதளவில் என் வாழ்க்கை நான் வாழ்கிறேன் என்ற எண்ணத்தோடு எப்போ பார்த்தாலும் அடுத்தவரையே உற்று நோக்காமல் நமது வாழ்க்கையை நாமே வாழ வேண்டும்.//

உண்மைதான் நண்பரே ,நம்முடைய வாழ்கையை நாம் தான் தீர்மானிக்கவேண்டும் .நம்மை சுற்றி இருப்பவர்க்களிடம் வாழ்கையை விட்டுவிடக்கூடாது .நல்லபகிர்வு நம்வாழ்க்கை நம்முடையதே...
விஜய் said…
நீங்க சொல்லி இருக்குறது தான் உண்மை தான் அண்ணா, அந்த யாரோக்கள் ஒவ்வொருத்தரோட வாழ்க்கைல இருக்காங்க, சில யாரோக்கள் உதவியாய், ஊக்கமாய் இருக்கிறர்கள் , சில யாரோக்கள் எதையோ தேடுகிறார்கள், அது நிம்மதியாய், சந்தோசமாய் இருக்கலாம், என்னை பொறுத்தவரை இந்த யாரோக்களை தவிர்க்க முடியாது, ஆனான் அவர்களின் எண்ணங்களை கொஞ்சம் யோசித்தால் வெல்லலாம்...

அருமையான பதிவுங்க அண்ணா
நாம் வாழ நினைக்கும் வாழ்க்கையை எத்தனைபேரால் வாழ முடிகிறாது.இங்கு நம் வாழ்க்கைய சூழ்நிலைகள் தான் காரணியாக இருந்து தீர்மாணிக்கின்றது. //யாரோ சொல்லும் தேவையில்லாத நம்மைப் பற்றிய விமர்சனங்களை குப்பையில் தூக்கிப் போடுங்கள். உண்மையான கருத்தை சொல்ல மனிதர்கள் நேரே பெயரோடு நேர்த்தியாய் வருவார்கள் அவர்களை கவனித்தால் போதும்,// இங்கே இருக்கின்றது வாழ்க்கைக்கான சந்தோசமாக வாழ்வதற்கான வழி.
ஹேமா said…
ஓ...இந்த யாரோக்களால் வாழ்வின் திசையே மாறிப்போகிறது சிலசமயங்களில் !
//முறையற்ற செயல்களால் தீங்கு ஏற்படுவதற்கு யாரோ தன்னுடைய சுய நலத்துக்காக செய்யும் அநீதிகளும் காரணமாகின்றன.///
நிச்சயமாக சுயநலத்திற்காக செய்யப்படும் செயல்களால் சில அநீதிகள் நடக்கத்தான் செய்கிறது..
//பொது புத்தி என்றால் நமது மனதை நாமே ஏமாற்றி மிகைப்பட்டவர்கள் சொல்வது சரியாயிருக்கும் என்று நம்புவது.//
இதுதான் பொது புத்தியா ..?
//. என் சட்டையை முதலில் வெளுத்துக்கொள்கிறேன்.//
இந்த மாற்றம் தான் வரவேண்டியது. முதலில் தமது தவறுகளைப் பார்க்காமல் அடுத்தவர் தவறுகளைப் பார்ப்பது .. அழகாக சொல்லிட்டீங்க அண்ணா ..!
Unknown said…
அப்ப நீங்க சென்னையில் செட்டில் ஆகலையா?
VELU.G said…
//இந்த யாரோக்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருப்பார்கள். தேவையில்லாமல் அவர்களை அனுமதிப்பதை விட்டு விட்டு மனதளவில் என் வாழ்க்கை நான் வாழ்கிறேன் என்ற எண்ணத்தோடு எப்போது பார்த்தாலும் அடுத்தவரையே உற்று நோக்காமல் நமது வாழ்க்கையை நாமே வாழ வேண்டும்
//

உண்மை தான் தேவா

நல்ல பகிர்வு
dheva said…
கே. ஆர்.பி. செந்தில்....@ ஹா.. ஹா...ஹா...

நல்லா மாட்டிக்கிட்டேனே...என்ன சொல்றது... வரும்ம்ம்ம்ம்....ஆனா வராதுன்ற மாதிரி...

சென்னைலதான்....ஆனா அப்பா அம்மவையும் கூட்டிக்கிட்டு....!


நல்லா போட்டின்ங்க செந்தில்.... நங்கூரத்த....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
///வாழ்வின் சந்தோசங்கள் எல்லாம் பெரிய பெரிய விசயங்களில் இல்லை....அவை சின்ன சின்ன விசயங்களில் ஒளிந்து கொண்டு காத்திருக்கின்றன நம்மை சந்தோசப்படுத்த, நாம்தான் கவனிப்பதில்லை......!/// - super
Unknown said…
//வாழ்வின் சந்தோசங்கள் எல்லாம் பெரிய பெரிய விசயங்களில் இல்லை....அவை சின்ன சின்ன விசயங்களில் ஒளிந்து கொண்டு காத்திருக்கின்றன//

அருமையான வரிகள்
sakthi said…
எல்லோரும் சொல்வது சரியா? இல்லை எது சரியோ அது சரியா? "

இந்த கேள்வியை ஒவ்வொரு கணத்திலும் கேட்கும் போது நாம் பார்க்கும் எந்த ஒரு செயலிலும் இருக்கும் ஒரு அறியாமை தெளிவாக தெரியும்

ஆம் உண்மை தான் தேவ்


நல்ல பகிர்வு
உண்மை நிலையை சொல்லி இருக்கீங்க பிரதர்.
அருமையாக சொன்னீர்கள் அண்ணா... இன்று பெரும்பாலானோர் தனக்கு என்ன தேவை, தனக்கு என்ன பிடிக்கும் என்று பார்ப்பதில்லை... காரணம்.. அடுத்தவர்களை பார்த்து வாழ ஆரம்பித்தது தான்... நான் இதை வாங்கினால் அவன் என்ன சொல்வானோ.. இதை நான் செய்தால் பக்கத்து வீட்டு காரன் என்ன சொல்வான் என்று அடுத்தவனுக்காக.. தான் சின்ன சின்ன சந்தோசங்களையும் இழந்து கொண்டிருக்கிறார்கள்....
// உண்மையான கருத்தை சொல்ல மனிதர்கள் நேரே பெயரோடு நேர்த்தியாய் வருவார்கள் அவர்களை
கவனித்தால் போதும் //

உண்மையான கருத்தை சொல்ல மனிதர்கள் நேரே ஜீன்ஸ், போட்டு நேர்த்தியாய் வருவார்கள் அவர்களை
கவனித்தால் போதும்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
Mohamed Faaique said…
இப்படி எல்லா ஊரிலும் இருப்பர். தேவையில்லாத பிரச்சனையை கிளப்பி விட்டு அவர்கள் போய் விடுவர். இங்கு முழுக்குடும்பமும் நடு ரோட்டில் கிடக்கும்...
Kousalya Raj said…
//எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுவதற்கு அவர்களின் புரிதலில் இருக்கும் கோளாறும், முறையற்ற செயல்களால் மற்றவர்களால் அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளும் காரணமாகிப் போகின்றன.//

ம்..இப்படியும் இருக்கலாம்...!

நல்ல பகிர்வு.
Jey said…
நீளமா பதிவிழுதுரதுலயும் போட்டியா... ஞாயிட்டுகிழமை லீவுதான் படிச்சி பிண்ட்டம்...ஒட்டு இப்ப...:)
க ரா said…
நீங்க சொல்லிருக்கற மாதிரி நிரைய மனுசங்கள பார்த்து எரிச்சலடஞ்சிருக்கேன் நிரைய தடவ.. என்னத்த சொல்ல...
//யாரோ சொல்லும் தேவையில்லாத நம்மைப் பற்றிய விமர்சனங்களை குப்பையில் தூக்கிப் போடுங்கள்.//

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமுன்னு அறிஞர் அண்ணா சொன்னார்

நீங்க என்னா சொல்றீங்னா..????

நா இப்ப எந்த அண்ணா சொல்வதை கேக்க
நானே ஒரு குழப்ப வாதி இப்ப நீங்க வேற குழப்புனா என்னாகிறது மண்டை காயுது ஒரு சர்பத் பிளீஸ்
//ஏதோ எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் விசைப்பலகையை தட்டத் தொடங்கினால் ஏதோ ஒன்று வருகிறது.//

தேவாண்ணா எங்களை விட்டுடுங்க நாங்க பாவம் ..!! ஒரு கொலை செஞ்ச ( தற்கொலைக்கு தூண்டுற ) பாவம் எதுக்கு உங்களுக்கு
@@@Jey

நீளமா பதிவிழுதுரதுலயும் போட்டியா... ஞாயிட்டுகிழமை லீவுதான் படிச்சி பிண்ட்டம்...ஒட்டு இப்ப...:) //

யோவ் மாக்கான் , அன்னைக்கு பெரியாஸ்பத்திரி லீவு .இன்னைக்கே படிச்சி தொலை..ஹி..ஹி..
/////யாரோ சொல்லும் தேவையில்லாத நம்மைப் பற்றிய விமர்சனங்களை குப்பையில் தூக்கிப் போடுங்கள். உண்மையான கருத்தை சொல்ல மனிதர்கள் நேரே பெயரோடு நேர்த்தியாய் வருவார்கள் அவர்களை கவனித்தால் போதும்,
///////////

முகவரி இல்லாத விமர்சனங்கள் குப்பை தொட்டிக்குள்தான் இருக்கவேண்டுமே தவிர சிறந்த பதிவுகளுக்குப் பின் மறுமொழியாக இல்லை . வாழ்த்துக்கள் தேவா .
Jazeela said…
அமீரகத்தின் மற்றுமொரு பதிவர் என்பதில் பெரும் மகிழ்ச்சி. சமீபத்தில் நடந்த அமீரகப் பதிவர்கள் இஃப்தார் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கலாம். அமீரகப் பதிவர்களுடன் தொடர்பில்லாததால் நிகழ்ச்சி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன். இனி வரும் காலங்களில் அமீரகப் பதிவர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்பிக்கவும். தொடர்பிலிருங்கள். அமீரகப் பதிவர்கள் குழுமத்திலும் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
மாப்பு... இந்த கொசுங்க தொல்லை தாங்க முடியலை மாப்பு. இந்த "யாரோ" க்களுக்கு எப்புடி மருந்தடிக்கிறது?

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த