Skip to main content

Posts

Showing posts from February, 2011

சுமை....!

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வித சூழ்நிலைகள் உருவாகி அதன் போக்கில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நகர்ந்து செல்லவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் வாழ்வென்றால் என்ன? நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியோடு தேடலில் இருப்பவர்கள் நிச்சயமாய் தொடர்ந்து நான் எழுதுவதை வாசிக்கிறார்கள். அதே நேரத்தில் தேடலில் இல்லாதவர்களும் புரிகிறதோ இல்லை புரியவில்லையோ...என் மீது கோபம் கொண்டாவது என்னதான் எழுதி இருக்கிறான் என்று விமர்சிக்க வேண்டியாயினும் வாசித்து விடத்தான் செய்கிறார்கள். பெரும்பாலும் மனம் மறுத்தாலும் ஆன்மா வாசிக்கத்தான் தூண்டும். இது கண்ணாடியில் நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் ஒரு பாங்கு ஆதலால்.... ஒரு வித கவனம் ஈர்க்கப்படுவதும் அதை மறுத்து மனம் வெளியே கூட்டிச் சென்று கேளிக்கைகளை வேடிக்கைப் பார் இங்கே ஒன்றுமில்லை என்று கட்டளைகள் போடுவதையும் நாம் அறியாமலில்லை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களின் மூலம் அடைய நினைப்பது ஒரு நிம்மதி நிலையை, இந்த நிம்மதியை வேண்டித்தான் மறைமுக ஓட்டமாக பொருளீட்டலும், புகழ் தேடலும், இன்ன பிற சுகங்களைத் தேடலும் தொடருகிறது. ப

மாயா....!

அது ஒரு நீண்ட கனவு நான் மீண்டெழுந்து பகலின் உச்சி தொட்ட பின்னும் நிஜமாய் தொடரும் ... அது ஒரு பொய்யா? இல்லை... பொய்யில் நான் கண்ட நிஜமா? என் உடல் எரியூட்டப்படுகிறது நானே பார்க்கிறேன்... உறவுகளின் கண்ணீர்கள் அவசர யுகத்தில் அனிச்சையாய் தோன்றி மனங்களின்.. எதார்த்த சூட்டில் பஸ்பமாகின்றன...! காற்று வேகமாக வீசுகிறது என் உடலின் பக்கங்களில் பற்றிப் பரவுகிறது தீ... ஒரு திருட்டுத்தனமான ருசித்தலில் சுகம் காணும் மனிதன்போல என்னை அரித்தே போடுகிறது அது...! வெறித்தபடி நான் பார்க்க.... உறவுகள் எல்லாம் போயே விட்டனர்... சம்பிரதாயச் சடங்குகளில்... அவர்களின் கவலையை குளப்பி அடுத்த நகர்விற்கு செல்லும்... பரபரப்பில் நகர்ந்தே போயின அந்த மானுட தலைகள்...! நான் எரிகிறேன்...நானே பார்க்கிறேன்... அதோ...என் கண்களைத்... தடவுகிறது காந்தல் தீ... காதலை மட்டுமா சுமந்தது அவை ஏதேதோ கனவுகளையும் தானே? தத்துவங்கள் சேமித்த மூளை தடுமாற்றமின்றி விருந்தாய்ப் போனது விறகிலிருந்து ஜனித்த அக்னிக்கு..! மணமறியும் குணமறிந்த நாசிகளும் ஓராயிரம் விவாதங்கள் புரிந்த நாவும் மறுபேச்சின்றி மண்டியிட்டு விட்டன ஜுவாலைகளின் நாக்குகளிடம்...! எரியும் எ

பிம்பம்....!

சொல்வதற்கு ஒன்றுமில்லை உன்னிடமும் என்னிடமும் கொட்டி இறைத்தாயிற்று நம் காதலை... உலக விருப்பங்களாய்! எனக்கு பிடித்ததெல்லாம் நீ சொன்னாய்... உனக்கு பிடித்ததெல்லாம் நான் சொன்னேன்... பரிமாற முடியாமல் நீ சுற்றிப் பரவவிட்ட காதலை பற்றிக் கொள்ள முடியாமல் பரவிக் கிடகிறேன் நிலவின் வெளிச்சம் போல.... தொடுவது போலத்தான் வருகிறாய்.. நானும் தொட்டு விடுவாய் .... என்றுதான் நினைக்கிறேன்... படாமல் தொடும் காற்றைப் போல ஸ்பரிசமாய் பரவிவிட்டு.... அருவமாய் மறைந்து போகிறாய்...! அடிக்கடி பேசிக் கொள்கிறோம்... ஏதோ கேட்கிறாய்... நானும் ஏதோ சொல்கிறேன்... ஒவ்வொரு முறையும்... காத்திருப்பதை காட்டிக் கொடுக்காமல் மெளனித்து நிற்கிற ஒன்றைத்தானே உலகம் காதல் என்கிறது....! இடமாய் நீ தலை அசைக்கும் போது வலமாய் நான் நகர்கிறேன்.... நீ வலமாய் தலையசைக்கும் போது நான் இடமாய் நகர்கிறேன்... ஆமாம் பல கருத்துக்களின் இசைவுகளில் நீ இடம் என்றால் நான் வலம்... நீ வலம் என்றால்... நான் இடம்... ஈர்ப்பின் விதிகள் புரியாததா என்ன? அது எப்போதும் எதிர்தானே.....? என் கூட்டம் உனக்கு பிடிக்காது... எனக்கோ உன் தனிமை பிடிக்காது.... கூட்டத்தை விட்டு நானும் தன

சும்மா....!

அது ஒரு மாலை நேரம். என்னோடு நான் மட்டுமிருந்தேன். என் உலகத் தொடர்புகள் எல்லாம் அறுத்தெறிந்து விட்டு வாரமெல்லாம் காத்திருந்து நான் சும்மா இருப்பதற்கென்றே நேரம் ஒதுக்கி அந்த அற்புத கணத்தை நான் நானாக இருந்து என் சுவாசத்தை ஆழமாய் ஊன்றி கவனித்து தளர்வான நிலையில் அமர்ந்திருந்தேன். பொதுவாக என்னுடைய அந்த தருணம் பற்றி வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரியுமாதலால் அவசரமான காரியங்களாக இருந்தால் மட்டுமே என்னை உலகுக்குள் இழுப்பார்கள். எனது 6 வேலை நாட்களிலும் என்னுள் ஏற்றி வைத்த புழுதிகளை கழுவிக் கரைய எனக்கு இப்படிப்பட்ட தனிமை அவசியமாகிறது என்பது யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. வழக்கப்படி வாரமெல்லாம் நான் காத்திருந்து ஆசையாய் என்னை நான் எதிர்கொள்ளும ஞாயிற்றுக் கிழமையின் மாலை எனக்கு எப்போதும் வரப்பிரசாதம்தான். வழக்கப்படி நான் அமர்ந்திருந்த அந்த ஒரு ஞாயிறின் 5 மணி மாலையில் என்னுடைய கை பேசி இடைவிடாது சிணுங்குவதாக கூறி என்னிடம் கொடுக்கப்பட்டது. அழைப்பில் ஒரு நெருங்கிய நண்பர் இருந்தார்....! ஏதோ அவசரம் என்று எண்ணி அழைப்பினை அனுமதிக்க காரணம் அவரின் 7வது அழைப்பாய் அது இருந்ததுதான். என்ன ஏதும் அவசரமா? என்ன

ஹாய்.....21.02.2011!

எல்லாமாய் இருக்கிறது வாழ்க்கை. இதை எல்லோரும் ஒத்துக் கொள்வீர்கள்தானே....? சில நேரம் மகிழ்ச்சியாய், சில நேரம் துக்கமாய், சில நேரம் கோபமாய்.. நவரசமும் சேர்ந்து அழகான ஒரு கலைவையா கிடைச்சு இருக்க விசயம்தான் வாழ்க்கை. எங்கேயோ போகப் போறோம் அப்டின்னு ஒரு த்ரில் இருந்துகிட்டே இருக்கும் பாருங்க மனசுக்குள்ள.. இன்னிக்கு இல்லேன்னா கூடா நாளைக்கு, நாளைக்கு இல்லேன்னா நாளான்னிக்கு ஏதாச்சும் பெருசா நடந்து நாம நிம்மதியா இருப்போம்னு ஒரு துடிப்பு இருந்துகிட்டே இருக்கும் பாருங்க... அதுதான் பிரபஞ்ச சூட்சுமம். ஆனா எதுவுமே பெருசா நடக்கலேன்னா கூடப் பரவாயில்லைங்க.. ஆனால் நிம்மதி இல்லேன்னா போச்சு....! இது பத்தி நிறைய பேரு பக்கம் பக்கமா பேசி இருப்பாங்க, நிறைய பேரு எழுதி இருப்பாங்க, அதைப் பத்தியே நாம பேசிட்டு இருக்க வேணாம்...! நிம்மதியின் அளவுகோல்தான் என்ன? நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கையுமே நாம முடிவு பண்ணி நாம செய்ஞ்சுக்கிற மாதிரி நினைச்சுக்கிறோம். அதுலயும் இந்த அட்டிடியூட் சரியான அளவில இல்லாதவங்க தங்களோட தலைதான் பெருசு அப்டீன்னு நினைச்சுக்கிறாங்க. நிம்மதின்றது காசு, பணம், புகழ் இது எல்லாம் தாண்டி...எந்த சமுதாயத்

ஜீவனே...!

மனதைக் கிழிக்கிறது நீ இல்லாத வெறுமை....! காதலையும் வாழ்க்கையையும் சரிபாதியாக்கிக் கொடுத்தவள் நீ......! திருமணம் முடிந்த முதல் நாள் இரவினை யார்தான் மறக்க முடியும்? நான் மட்டும் விதிவிலக்கா என்ன? கனவுகளோடு வாழ்க்கையை ஆரம்பித்த சராசரி கர்வங்கள் கொண்ட ஆண்மகன். கொஞ்சம் கவிதைப் பார்வையும், கற்பனையும் கூடுதல் கொண்டவனாதலால் என் எதிர்பார்ப்புகள் அதிகமானவைதான்..... முதல் நாள் இரவில் எல்லோருடைய கற்பனையும் வெவ்வேறாக இருக்குமோ என்னவோ தெரியாது. உன்னைச் சந்தித்த அந்த இரவு எனக்கு மிகவும் அடர்த்தியானதுதான். சம்பிரதாயங்களை எல்லாம் தூர எடுத்து எறிந்து விட்டு.. உன்னிடம் நான் பேச ஆரம்பித்த அந்த நொடி என்னை பார்வையால் விழுங்கத்தொடங்கியிருந்தாய்... ! கால ஓட்டத்தில் எத்தனையோ பெண்களை எதிர் கொண்டவன் நான், அவர்களின் கண்களோடு கதைகள் பேசியவன் நான்....ஆனால் முதன் முதலாய்க் காதலோடு சேர்த்து பாசத்தையும் குழைத்துப் பார்வையால் என்னை வாரி அணைத்தவள் நீதானே....? சராசரியாய்ப் போகவேண்டாம் அந்த இரவு என்ற என் எண்ணமும், திருமணத் தினத்தின் அலுப்பும் சில பேச்சுக்களோடு உன்னைத் தூங்க சொன்ன நான் உனக்கு முன்னதாகவே உறங்கிப் போனதற்குக்

வெற்று....!

சமகாலத்து நிகழ்வுகள் நம்மை புரட்டிப் போட்டுக் கொண்டுதானிருக்கின்றன. நிகழ்வுகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு ஒவ்வொரு அனுபவத்தின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு இன்னும் கூர்மையனா ஒரு பார்வையோடு நகர முற்படுகையில் எல்லாமே பார்க்கும் பார்வையாளனாக எல்லா சூழலுக்குள்ளும் விரும்பியோ விரும்பாமலோ சென்று வந்துதான் ஆகவேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. அறிவியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக நோக்கிக் கொண்டு நகரும் ஒரு மனோநிலையில் அறிவியலை விட ஆன்மீகம் என்னை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதற்கு காரணமில்லாமல் இல்லை. அறிவியல் எப்போதும் படைப்புகளைப் பற்றி ஆராய்கிறது. அதன் போக்கிலேயே தன்னை விரிவாக்கம் செய்து கொண்டு சரி, தவறு என்று ஒவ்வொரு முறையும் தனை சீர்திருத்ததிக் கொண்டு பயணிக்கிறது. விஞ்ஞானம் படைப்புகளையும் அவற்றின் நுட்பங்களையும், கூறுகளையும் அலசிப் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆனல் இதை எல்லாம் ஆராயும் விஞ்ஞானியும், விஞ்ஞான ரீதியாக எல்லாவற்றையும் நம்புவேன் என்று சொல்லும் மனிதர்களையும், ஏன் இவர்கள் இப்படி சிந்திகிறார்கள் அல்லது எது இவர்களை இப்படி சிந்திக்க வைக்கிறது என்று தெளிவான பார்வையை விஞ்ஞானம் நமக

தூசு....!

ஏனோ தெரியவில்லை...மனம் எங்கேயும் செல்லாமல் என்னை உற்று நோக்கிக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட தருணங்களில் நான் எப்போதும் நடுங்கிக் கொண்டேதான் இருப்பேன்... ! நானும் தப்பித்து அங்கும் இங்கும் என்று புத்தியை மாற்றி நகர வைக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை.....! எங்கே திருப்பினாலும் மீண்டும் திரும்பி என்னை உள்நோக்கி முறைக்கும் மனம் முழுக்க முழுக்க ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர முடிந்தது. உற்று நோக்கும் உக்கிரத்தில் நெற்றிக் கண்ணே திறந்து நான் பஸ்பமாகிவிடுவேனோ என்று கூட பயமாயிருக்கிறது. சுற்றி சுற்றி நகரும் வாழ்வில் பெருமைகளும் மமதைகளும் அவ்வபோது கொள்ளும் மனதை, என் செயல்களுக்கு எல்லாம்...நான் என்ற தனிப்பட்ட உருவம் தான் காரணம் என்று ஆர்ப்பரித்த புத்தியை, உள் முனைப்பு சொல்வதை கேட்காமல் அவ்வப்போது எதிர் பதில்கள் சொல்லி புறத்தில் காய்கள் நகர்த்தி செருப்படி வாங்கி சிதிலமடைந்து ஓய்ந்து கிடக்கும் என்னை எரிக்காமல் என்ன செய்யுமாம் என் உள் முனைப்பு... முழுதுமான ஒரு சரிபார்த்தல் துரித கதியில் நடந்து கொண்டிருக்கும் போது, தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டு பிடிக்கப்பட்ட ஓராயிரம் ஓட்டைகளை சரி செய்ய வே

இதுதானே...?

இரவுகளில் தொலைத்த உறக்கங்களின் அயற்சிகள் எல்லாம் எழுதிவைத்த உன் பெயரைத்தான் நான் காதலென்கிறேன்...! பொய்யாகக் கூட.. வார்த்தைகளில் நேசம் விலக்கா உன் அன்பில் ஒளிந்திருக்கும் உணர்வுகள் எனக்குக் கொடுத்த சிலிர்ப்பைத்தான் நான் காதலென்கிறேன்...! நிறையவே யோசித்து நான் எழுதும் நான்கைந்து... வரிகளில் நனைந்திருக்கும் என் உயிர் உரைக்கும்... ஓசைகளில் படிந்திருக்கும் நேசத்தைதான் நான் காதெல்ன்கிறேன்...! ஒரு மழை சாதரணமாகத்தான் பெய்து பூமி நனைக்கும்....ஆனால் அது எனக்காக பெய்ததென்று எது சொன்னதோ அதைத்தான்.. நான் காதல் என்கிறேன்..! இரவில் இமைகள் கவிழ்ந்து உறங்கும் பொழுதிலும் விடியலில் இமைகள் பிரித்து எழும் தருணங்களிலும்.... தப்பாமல் உன் முகம் அகத்தில் வருகிறதே... இதைத்தான்..இதைத்தான்... பெண்ணே நான் காதலென்கிறேன்...! தேவா. S

தேடல்....10.02.2011!

விக்னேஷ் அண்ணன் டைரக்டர் கார்வண்ணன் அங்கிள்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டர், நான் ஹோட்டலியர். எப்பவும் தியானம், ஆன்மிகம்னு விக்னேஷ் அண்ணன் ஒரு பக்கம். ஊர் சுத்தல், ஆட்டம், பாட்டம்னு நான் ஒரு பக்கம். இரண்டு பேரும் ஒன்னா தங்கியிருந்தது போரூர் மதானந்தபுரம் கீரீன் பார்க் அப்பார்ட்மெண்ட்ல....! டூட்டி முடிஞ்சு வீட்டுக்கு ஒரு நாள் பத்து மணிக்கு வந்து என்னோட சாவிய வச்சு வீட்டை திறந்து உள்ள போனா ஒரு பெட்ரூம் திறந்தும் இன்னொன்னு ஒருக்களிச்சு சாத்தியும் வச்சு இருந்துச்சு....யாரும் இருக்க மாதிரி தெரியலை.... மெல்ல பாதி திறந்து இருக்குற கதவை திறந்து உள்ள பாத்தா.. விக்னேஷ் அண்ணன்... பத்மானசனத்தில் அமர்ந்து தியானம் பண்ணிட்டு இருந்தாங்க....! எனக்கு டி.வி போடணும் உடனே...ஆன அண்ணனுக்கு தொந்தரவா இருக்குமோன்னு யோசிச்சுகிட்டெ ஹால்ல குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருந்தேன்..... 15 நிமிசம் ஆச்சு.... எனக்கு பொறுமையில்லை. வரட்டும் வெளிலன்னு கடுப்பா காத்துட்டு இருந்தேன். 20 நிமிசத்துல அண்ணன் வெளில வந்தாரு....கையில ஒரு சின்ன புத்தகத்தோட...! அவரை முறைச்சு பாத்துட்டே கேட்டேன்...என்ன பண்றீங்க... ? கொஞ்சம் கடுப்பா கேட்ட

நாச்சியா....!

ஏண்டா பொன்னப் பயலே........ஏண்டா பொம்பளப் புள்ளைய கூடவே வெளயாடுற பொம்பள சட்டி மாதிரி... இவ்ளோ கோபமா அப்பா கத்தி நான் பாத்தது இல்லை.......எனக்கு தூக்கி வாரிப்போட்டுருச்சு..... ! ஏண்டா ஆறாப்பு படிக்கிற கழுத எப்ப பாத்தாலும் என்னடா பொம்பளை புள்ளைக கூட...ம்ம்ம் .பயலுக கூட போய் விளையாடுடான்னு மறுபடியும் கத்துனாரு...! நான் காத பொத்திகிட்டே.... சொன்னேன் ஏப்பா எனக்கு பயலுக கூட வெளயாட பயமா இருக்குப்பா கூச்சமா இருக்குப்பான்னு சொல்லவும் என்னைய இழுத்துட்டு போயி சாத்து சாத்துனு சாத்திட்டாரு....! அதான்.. இப்ப அழுதுகிட்டு படுத்து இருக்கேன்....! முன்னாடி எல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க இப்பத்தான் என்னைய ரொம்ப அசிங்கபடுத்துறாக எனக்கும் என்ன நடக்குது எனக்குள்ளனு புரியவும் மாட்டேங்குது. மனசும் எப்பவும் திக்...திக்னு அடிச்சிக் கிட்டே இருக்கு. பள்ளிக்கூடத்துல கூட பயலுக பக்கதுல உக்காரயில ஒரு மாறி கூச்சமா இருக்கு. அவங்கள பாக்கும் போதே ஒரு கூச்சம் வருது...! ஒரு நாள் எங்க டீச்சர் கிட்ட சொன்னேன்....எனக்கு இங்க உக்கார பயமாருக்குன்னு....! அட லூசுப் பயலேன்னு திட்டிட்டு.. நீ என்ன ஒன்போதான்னு கேட்டாக....? ஒம்போது அப்

கிறுக்கல்....!

சப்தம் விரிப்பில் அவ்வப்போது விழுந்து கொண்டிருந்த நாணயங்களின் சப்தங்களில் ஒளிந்திருந்தது..தெருவோர பிச்சைக்காரனின் வாழ்க்கை..! *** மாயை அடிக்கடி தலைவாரும் எதிர் வீட்டு இளைஞன்... அடிக்கடி தாவணி மாற்றும் பக்கத்து வீட்டுப் பெண் ஒளிந்து கொண்டு.... பல்லிளிக்கும் பதின்மம்....! *** கோபம் சாவு வீட்டில் வரும் ஞானம் சண்டைகளின் போது எங்கே போய் தொலைகிறது? *** யுத்தி ஒரு டீக்கடை பெஞ்சும் தினத்தந்தி பேப்பரும்.... துக்குணூண்டு அரசியலும் டீக்கடை கல்லாவில் சில்லறையாய்! *** வேசம் சேரிகளுக்குள் வெள்ளைச் சட்டைகளின் கும்பிடுகளும் பல்லிளிப்புகளும் சொல்லாமல் சொல்லின நெருங்கி வரும் தேர்தலை! *** பக்தி எப்பவோ நேந்துகிட்டது... அடுப்பில் கொதிக்கும் ஆடு... சலமின்றி அய்யனாரும்.. பசியோடு உறவுகளும்..! *** நிதர்சனம் ஒரு பேருந்து கிளப்பிச் சென்ற புழுதி மறைந்த பொழுதில் கடந்து சென்ற... ஒரு மரண ஊர்வலம்... கலைந்து கிடக்கும் வாழ்வுக்கு மெளனமாய் சொல்லாமல்.. சொல்லிச் சென்றது ... ஏதோ...ஒரு பதிலை...! தேவா. S

அரசு ...!

நான் உன்னிடத்தில் இல்லை... நான் உனக்கானவனும் இல்லை... காற்றை யார் கட்டுப்படுத்த... கடலை யார் அள்ளிக் குடிக்க.... திக்கெட்டும் அலையும் தீயை குடிசைக்குள் அடைக்க முடியுமா? வேங்கைகள் எப்போதும் சமாதானம் பேசுவதில்லை போராளிகள் காதலென்ற போர்வையை எப்பொதும் போர்த்துவதில்லை..! எழுதி முடித்து விட்டு மொட்டை மாடிக்கு வந்தேன். மாலை நேரம் எப்போதும் ரம்யமானது. மொத்த பகலின் சூட்டையும் வாங்கிக் குடித்து விட்டுக் குளுமையான இரவினைப் பகிரப் போகும் பூமி சந்தோஷித்துப் புன்னகைக்கும் ஒரு அற்புதமான நேரம். நான் ஒரு கவிஞனாகவும், எழுத்தாளனாகவும், என்னை எப்போதும் நினைத்துக் கொள்வதே இல்லை. தோன்றும் போது எழுதும் எழுத்துக்களுக்கும், பகிரும் செய்திகளுக்கும் எனக்கும் எப்போதும் தொடர்புகள் இருப்பதாக நான் நினைப்பதே இல்லை. என்னுள் எழுவது எப்போதும் மனிதர்கள் இருக்கும் போதும், இரைச்சல்கள் மத்தியிலுமா வருகிறது? அல்ல..அல்ல அது எப்போதும் வெறுமையில் இருந்துதான் வருகிறது. அப்படிப்பட்ட வெறுமையான தருணங்களுக்காக நான் அல்லாடிப் போகும் அளவிற்கு என்னைச் சுற்றி கூட்டம் சேர்ந்து போய்விட்டதால் என் படைப்புகளுக்குத் தேவையான வெற்றிடத்தின் அடர்

ச்ச்சும்மா....!

எப்டி எப்டியோ ஓடிட்டு இருக்குற வாழ்க்கைல நகைச்சுவைன்ற ஒரு உணர்வு இல்லேன்னா... ரொம்ப போர் ஆயிடும் இல்லையா? சீரியஸா திங்க் பண்றதுக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு அவசியமாத்தான் இருக்கு. அது எப்டினு கேக்குறீங்களா... எப்பவுமே ஒரு விசயம் அதிகமாகும் போது அதற்கு நேர் எதிரான நினைவுகள் ரொமப் ஸ்ட்ராங் ஆகும். ரொம்ப சீரியசாவே இருக்கவங்கள பாத்தா காமெடியா இருக்கும் அது வேற கதை...? அப்போ அவுங்க எல்லாம் ரொம்ப நகைச்சுவை உணர்வு மேலானவர்களான்னு ஒரு கேள்வி வருதா... இந்த இடத்துல ஒரு ஸ்டாப் கொடுங்க.... சாரி அப்டி இருக்க முடியாதுங்க ஏன் தெரியுமா? இளகுவா இருக்குற இடத்துலதான் என்ன வேணா வரும்.. ! இறுகிப்போன நிலத்துல..? ம்ம்ஹூம் ஒண்ணுமே வராது.. ! எப்டி லாஜிக் ஒத்து வருதா? சரி எதோ பேச வந்து எங்கயோ போறது என்னோட பிரச்சினைதான் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க கொஞ்சம்.... நான் 9வது படிச்சப்போ ஒரு தமிழ் ஆசிரியர் இருந்தாங்க.....இருங்க....இருங்க பேரு நினைவுக்கு வரலை...ம்ம்ம்ம்ம் பட்டுக்கோட்டை பாய்ஸ் ஹை ஸ்கூல் தான்.. ம்ம்ம்.. யெஸ்.. நாகரத்தினம் சார்! எப்டி தெரியுமா கிளாஸ் நடத்துவாங்க.. ச்சும்மா சிரிச்சுட்டே இருப்போம்...ஆமாம். தமி