Skip to main content

Posts

Showing posts from September, 2013

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 6

இதுவரை.... பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 இனி... பூர்ணா தலை முடியைச் சரி செய்த படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.... அவள் பார்வை எனக்குள் ஊடுருவி ஏதேதோ இம்சைகள் செய்தது... சொல்லு பூர்ணா............மீண்டும் அவள் மெளனம் கலைத்தேன்... இனக்கவர்ச்சின்னு சொல்லிக்கிற வயச ரெண்டு பேரும் தாண்டிட்டோம். கடைசி நிமிசம் வரைக்கும் காமம் வேணும்னு ரெண்டு பேருமே நினைக்கல... அவள் இடை மறித்தாள்...அதான் சொல்லிட்டேனே முகில்... இது நடந்தது அல்ல... நிகழ்ந்தது.  ஒரு கவிதை எப்போது ஜனிக்குமென்று கணித்து எழுதினால்... அது எப்படி கவிதையாயிருக்கும் எழுதியவன் எப்படி  கவிஞனாய் இருப்பான்...? டேய்.. நிறைய யோசிக்காதடா....பசிக்குது...ஏதாச்சும் இருக்கா...? இல்லை செய்யணுமா.... கொஞ்சம் சாப்டுட்டு நிறைய நடக்கலாம் நிறைய பேசலாம்...! அவளைப் பார்த்து புன்னகைத்தேன். பூர்ணா.. எனக்கு கொஞ்சம் கெல்ப் பண்ணு...வா என்று அவளை அழைத்தேன். மதியம் இரண்டரை என்று கடிகாரம் சொன்ன போது மனதைப் போலவே வயிறும் நிறைந்திருந்தது எங்களுக்கு... நாளைக்கு கால

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 5

இதுவரை... பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 இனி... என்னைப் பாத்தா உனக்கு ஏதாச்சும் தோணுதா..? கேட்டாள்.... என்ன சொல்வது..என்று நான் உள்ளுக்குள் தடுமாறிக் கொண்டிருந்தேன்.....கொடைக்கானல் மிரட்டத் தொடங்கி இருந்தது.... ஒண்ணும் தோணலை...அவளிடம் நிதானமாய் சொன்னேன். நீ ஒரு ஆண். நான் ஒரு பெண்..எதாச்சும் நடந்துடும்னு பயப்டுறியா..? இல்லை பயப்படல....சலனமில்லாமல் சொன்னேன். இந்தத் தனிமை ஏதாச்சும் பண்ணச் சொல்லுமா நம்மளை...முகில்?....கேட்டாள். என்ன பண்ணிடும்...ஒண்ணும் பண்ணாது...நமக்குத்தான் புரிதல் இருக்கு,  தெளிவு இருக்கு...ஆனா கட்டுப்பாடுகள் கிடையாதுன்னு நினைக்கிறேன்.... அப்புறம் ஏன் கை கட்டி பவ்யமா என் எதிர்த்தாப்ல உட்காந்து இருக்க....?  என் பக்கத்துல வந்து உட்காரலாமே...? ஏதோ ஒரு பயம்தான உன்ன அப்டி உட்காரச் சொல்லுது..... இல்லையா....முகில்...? பயம் இல்ல.. எனக்கு என்ன பயம்...நாம விழிப்புணர்வோடதானே இருக்கோம்...! காற்றில் ஆடாத ஒரு தீபம் மாதிரியான தெளிவுதானே இது.. அப்போ வந்து என் பக்கத்துல உட்கார முடியுமா உன்னால....? வொய் நாட்....அவள்

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 4

இதுவரை... பாகம் 1 பாகம் 2 பாகம் 3 இனி.... சிரித்துக் கொண்டே கேட்ட பூர்ணாவின் ஊதாக்கலரில் சிறு பூக்கள் சிதறிக் கிடந்த வெள்ளை நிறச் சுடிதார் அவளுக்கு கூடுதல் வசீகரம் கொடுக்க...அவள் உள்ளே வருவதற்கு முன் நான் மறைக்க நினைத்த மது பாட்டில்கள் எங்கே இருக்கின்றன..வரவேற்பரையிலா..ப்ரிட்ஜிலா இல்லை கிச்சனிலா..புத்திக்குள் கணக்குப் போட்டபடியே..யோசித்துக் கொண்டிருந்தேன்... நோ.. நோ.. வாங்க.. வாங்க.. வழிந்த படியே வீட்டுக்குள் அவளை அழைத்தேன்..! மது அருந்துதல் எப்போதுமே ஒழுக்க நெறிமுறைகளுக்கு எதிராய்த்தான் பார்க்கப்படுகிறது. மது அருந்தி விட்டு குடித்தேன் அதனால் இப்படி ஆனது, அப்படி ஆனது என்று சொல்லி தப்பித்துக் கொள்ளும் கோழை மனிதர்களின் விழிப்புணர்வில்லாத தன்மையால் குடி குடியை கெடுக்கவும் செய்தது. புரிந்து தெளிந்து அளவாய் அருந்துகையில் மது மிகப்பெரிய சந்தோசமாகிறது. அறிதலும் புரிதலும் இருந்தால் வாழ்க்கையே சுகம்தானே...அதுதானே இங்கே இல்லாமல் இருக்கிறது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா... பிரிட்ஜில்தான் இருக்கிறது. பெரு மூச்சு விட்டபடியே... ஒரு பத்து நிமிடம் கொடுத்தால் பிரஷ் அப் ஆகிட்டு

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 3

இதுவரை... பாகம் 1 பாகம் 2 இனி... அது ஒண்ணும் பிரச்சினை இல்லை முகில்...பார்க்கலாம்...நாளைக்கு காலையில  வர்றேன்... ஐ வில்  நாட் கோ வித் மை ப்ரண்ட்ஸ்...அங்க நான் உங்களை கூப்டப்ப பின்னால் இருந்த்துச்சே அதுதானே உங்க வீடு....நீங்க வீடு விட்டு வெளியில வரும் போதே நான் தூரத்துல பார்த்தேன்.... இப்போ கிளம்புறேன்...... கை அசைத்தபடியே ஓடியவளை பார்த்துக் கொண்டிருந்தேன் அவள் போகும் வரை... பெண்கள் எப்போதும் ஒரு விசயத்தை முடிவு செய்ய ஆண்களைப் போல பல்வேறு தரப்பட்ட ஆலோசனைகளைக் கேட்பது கிடையாது. அவர்களுக்கு விசாரித்து அறிதல் என்னும் ஒரு விசயம் பற்றி அதிகம் தெரியவே தெரியாது. இயல்பாகவே பெண்களின் உள்ளுணர்வு பிரபஞ்சத்தின் ஆதி உணர்வோடு முடிச்சிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு உடல் எடுக்கும் ஆன்மா பெண்ணாய் பிறக்கவேண்டும் எனில் பூர்வஜென்மத்தில் இருக்கும் பக்குவ நிலையைப் பொறுத்தே அந்த நிகழ்வு நிகழ முடியும். ஆன்மாவில் ஆண் பெண் கிடையாது ஆனால் ஒரு பெண்ணின் உடலுக்குள் ஆன்மா நுழைய வேண்டுமெனில் நிறைய சகிப்புத்தன்மைகள் கொண்ட பூர்வ ஜென்ம அனுபவங்கள் அதற்கு அவசியமாகிறது. இயல்பிலேயே

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 2

இதுவரை... இனி.... ஹலோ...எக்ஸ் க்யூஸ் மீ....ஹலோ சார்.... எனக்கு வெகு பக்கத்தில் மூச்சிறைக்க அழைத்த அந்தப் பெண்ணை திரும்பிப் பார்த்த நொடியில் ஸ்தம்பித்தேன்....! யார் வரைந்து வைத்த ஓவியம் இது... கால் முளைத்து நடந்து வருகிறது...? கவிதையொன்று காற்றில் ஒரு பட்டாம் பூச்சியென பறந்து வருகிறது... என்று யோசித்த படியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.....பூர்ணா...பிரண்ட்ஸ் கூட வந்தேன் வழி மாறிட்டேன்....தனியா வந்தேனா கொஞ்சம் பயந்துட்டேன்...அதான் உங்களை டக்குனு கூப்ட்டேன்..... மனம் மயக்கும் ஒரு இசையொன்று புத்திக்குள் பரவி எண்ணத்தை கிளர்ச்சியூட்டி ஒரு ஏகாந்த உலக்குக்கு கூட்டிச் செல்லுமே... அப்படியான உணர்வு நிலைக்கு பயணித்துக் கொண்டிருக்கையில்...ஹலோ...சார்....அவள் என் கனவு கலைத்தாள்...! சொல்லுங்க பூர்ணா...நோ..இஸ்யூஸ்...நான் உங்களை பக்கத்துல மெயின் ரோட்ல கொண்டு விடுறேன்.  நான் சும்மாதான் நடந்துட்டு இருக்கேன்.... தேங்க் யூ சார்...? என்ன தனியா வந்து இருக்கீங்களா இல்லை பேமிலி கூடயா...? இல்லை ப்ரண்ஸ் கூடயா... என் முகம் பார்த்து பேசினாள். எனக்கு  

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 1

இந்த தடவை கொடைக்கானல்  வருவதற்கு ஐந்து வருடம் ஆகி விட்டது. ஐந்து வருடத்திற்குள் ஏதேதோ நிகழ்வுகள் நிகழ்ந்தேறி விட்டன..! பெருமூச்சு விட்டபடி மெதுவாய் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். " தாஜ்மகாலின் காதிலே ராம காதை ஓதுவோம்..." என்று ராஜா சார் காருக்குள் ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார். துரத்தும் வாழ்க்கையை தொலைவில் நிற்க வைத்து விட்டு, சமப்பட்ட  பூமியை விட்டு மலையேறும் அனுபவம் அலாதியானது. சூட்டில் எப்போதும் சுருங்கிக் கிடக்கும் புத்தி மெல்ல மெல்ல மலர்ச்சியடைய புலன்கள் எல்லாம் புதுக்கவிதை வாசிக்கத் தொடங்கி விடுகின்றன. காட்டுக்குள் உயர்ந்த மரங்கள் பச்சை பசேலென்று இருப்பதைப் பார்க்கும் போதே உச்சத்தை எட்டிப் பிடிப்பதற்கு முன்பான காமத்தை ஒத்த உணர்வொன்று புத்திக்குள் கால் உதைத்து தக திமி...தா....தக... தகதமிதா.. தகதிமி தா...என்று ஜதி சொல்ல ஆரம்பித்தது. உடல் தாங்கும் குளிர் அழகானது. அதாவது அச்சச்சோ குளிர் அடிக்கிறதே என்று சொல்லி கத்திக் கொண்டே தாங்கிக் கொள்ளும் குளிர். டேய்...வலிக்குதுடா என்று சொல்லிக் கொண்டே உதட்டைக் கவ்வும் காதலனை சேர்த்து அணைத்துக் கொள்ளும் காதலி போல இந்தக் குளிர

வருத்தப்படாத வாலிபர் சங்கம்...!

சிவகார்த்திகேயன் மாதிரி நடிகர்கள் வேற ஒரு தளத்துக்கு தமிழ் சினிமாவ கொண்டு சேர்க்கப் போறது என்னமோ கண்டிப்பா நிஜம். காம்பியரிங் செய்யும் போது சின்னத்திரையவே கலக்கு கலக்குன்னு கலக்கிட்டு இருந்த புயல் பெரிய திரைய சும்மா விடுமா என்ன..?! அதே வேகம் அதே எனர்ஜியோட அவர் அடிச்சிருக்க அடுத்த சிக்ஸர்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். எந்த சத்தமும் இல்லாம எது தனக்கு வருமோ அதை வச்சு ஆரம்ப காட்சியில இருந்து படம் முடியுறவரைக்கும் பட்டைய கிளப்பி இருக்கார். தமிழ் சினிமாவுல இது வரை மையப்படுத்தி வச்சிருந்த அந்த மாஸ் ஹிரோ பில்டப் இனிமே ஒண்ணும் வொர்க் ஆகாது  போல. எம்.ஜி.ஆரோட காலத்துல உச்ச கட்டத்துக்கு போன இந்த நடிகன கடவுளா பாக்குற மரபு, அந்த மாயபிம்பம் ரஜினி கமலுக்கு அப்புறமா உடைஞ்சு சரிஞ்சு விழ ஆரம்பிச்சு ரொம்ப காலமாச்சு. கைய சுண்டிக்கிட்டு பஞ்ச் டயலாக் பேசுற பில்டப்ஸ் எல்லாம் இனிமே வியாபாரம் ஆகாது. திரையப் பாத்து தலைவா அப்டீன்னு தமிழ் ரசிகன் தொண்ட வலிக்க கத்திக் கத்தி கொழு மோர் காச்சி குடிச்சதுதான் மிச்சம். இன்னும் சொல்லப் போனா தமிழ்நாட்ல அரசியல்வாதிகள்ன்ற பேர்ல மகாராஜாக்களும் மகாராணிகளும் அரியணை

நித்ய கன்னியே... கண்ணம்மா...!

இறக்கி வைக்க முடியாத சுகங்களை எல்லாம் சுமந்து செல்லும் வழிப்போக்கனாய் பயணித்துக் கொண்டிருக்கிறது என் நினைவுகள். காவியங்கள் என்று தம்மை இயம்பிக் கொள்பவைகள் எல்லாம் அழுத்தமான வலிகளையே காலங்களாய் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன. வலிகளோடு கூடிய தனிமையின் சுகம்தான் ஆதி பிரபஞ்சமாய் இருந்திருக்குமோ..? உறக்கத்தின் போது காணும் கனவுகள் எப்போதுமே நமது கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. உணர்வோடு காணும் கனவுகள் எப்போதுமே அலாதியானவை...அவற்றுக்கு யாதொரு கட்டுப்பாடுகளும் கிடையாது. ஒரு அழகிய பாடலை கேட்டு ரசிக்கையில் சப்தத்தை ஏற்றி இறக்கி வைத்துக் கொள்வது போல, ஒரு விருப்ப ஓவியத்தை வரையும் போது நமது இஷ்டப்படி கோடுகளை நீட்டி மடக்கி நகர்வது போல, யாருமற்ற சாலையில் அதிகாலையில் வாகனத்தில் ராஜாசாரின் துணையோடு புரண்டு படுத்து எழும் அதிகாலையை எதிர் கொள்வது போல, உணர்வோடு கால் உதைத்து எழும் நினைவுகளின் முதுகு தட்டி ஒரு புரவியில் பயணிக்கும் சுகத்தோடு கனவுகளை நாம் முடுக்கி விட்டுக் கொள்ள முடியும். எப்போதும் நிஜம் கொடுமையானது. அது பல கோரங்களை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு வெளியே அஷ்ட கோணலாய் நடித்துக் கொண்