Skip to main content

Posts

Showing posts from August, 2013

எழுத்துக்களில் புன்னகைப்பவன்..!

நீயும் நானும் யாரோவாகிப் போயிருந்த ஒரு உச்சி நேரத்தில் என்  சாலையின் முன் எதிர்ப்படுகிறாய் நீ... வார்த்தைகளை விழுங்கிக் கொண்ட ஒரு ஆழ் மெளனம் ஒன்று ஞாபகங்களைக் கிளறி எடுத்து என்னை பின்னோக்கி இழுத்து கதைகள் பேசி நம் கடந்த காலங்களை ஒவ்வொன்றாய் என் முன் கடைவிரித்துப் பார்க்கிறது... ஏதாவது சொல்ல வேண்டும் என்ற.. ஆசைகளை எல்லாம் தின்று கொண்டிருக்கும் இயலாமை குற்ற உணர்ச்சியோடு எழுப்பும் என் காலடி சப்தங்களை எதிர் கொள்ள முடியாமல் தவித்து நடக்கிறேன் நான்.... எத்தனையோ முறை ஊடுருவிப் பார்த்து எனக்கான காதலில் நான் மிதந்து கிடந்த உன் விழிகள் என்னிடம் இன்று உயிர் இல்லை என்று பகிர்ந்த செய்தியை உன் இமைகள் மெளனமாய் ஆமோதிக்க.... இதோ என்னை கடந்து செல்கிறாய் நீ.... புன்னகையாவது நீ செய்திருக்கலாம்... என்ற நினைவுகளோடு புன்னகைக்க முடியாத என் கனவுகளை இதோ... கவிதையாக்கி என் எழுத்துக்களிலாவது புன்னகைக்கலாமா என்று முயன்று கொண்டிருக்கிறேன்... நான்...! தேவா சுப்பையா...

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

யுகங்களின் நாயகன்...கிருஷ்ணா...!

இந்துக்களுக்கு எப்போதுமே கிருஷ்ணா ஒரு வசீகரமான கடவுள்தான். சராசரி மனிதனின் எல்லா குணங்களையும் உள்ளடக்கிய ஒரு தெய்வாம்சம் பொருந்திய கேரக்டரை வேறு மதங்கள் இதுவரையிலும் படைத்திருக்கவில்லைதான். எல்லா மதத்திலும் கடவுள் கற்பிதங்களும், இறைத் தூதர்களும் சராசரி மனித வாழ்க்கையிலிருந்து விலகி நின்று கொண்டு நான் இப்போது என்ன சொல்ல வருகிறேன் என்றால் என்று கட்டளைகளைத்தான் பிறப்பித்து இருக்கிறார்கள். கிருஷ்ணரை இறைத்தூதர் என்றும் கூட சிலர் சொல்வதுண்டு. அவர் இறைத்தன்மையை பிரதிபலித்த ஒரு ஆன்மா என்று வேறு சில கருத்தியல் கோட்பாடுகள் வரையறுப்பதும் உண்டு. இந்து மதம் தனது சமூகத்திற்கு கிருஷ்ணரை இறைவனின் அவதாரம் என்றுதான் கூறுகிறது. சிதறிக்கிடந்த சிந்து சமவெளி நாகரீகத்தின் தொகுப்பாகத்தான் இந்து மதம் என்னும் ஒரு மாய பிம்பம் எழுந்து நிற்கிறது என்றாலும் இன்றைக்கு இந்தியா முழுதும் இருக்கும் இந்துக்களுக்கு கிருஷ்ணா ஒரு மிகப்பெரிய வசீகரம்தான். ஒரு பிரம்மாண்ட ஹீரோவுக்குரிய எல்லா வித குணாதிசயங்களோடுதான் கிருஷ்ணாவின் காதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிறந்த உடனேயே அ

செங்காத்து வீசும் காடு....!

மானம் மப்பா இருக்கு மாப்ளே....மழை பெய்ஞ்சுதுன்னா தேவலாமப்பு.....வெதச்சு வச்சது எல்லாம் கண்ண முழிச்சு எந்திரிச்சுக்கிடுமப்பு...துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டேன். குப்புத்தேவருக்கு எப்பவுமே கிறுத்துருவந்தேன்..இன்னமும் வெள்ளாமைய நம்பிக்கிட்டு நீ அது கூடயே மாரடிச்சுகிட்டு இரு பெரியப்புன்னு அவன் கேலி பேசுனத கண்டுக்காம நான் இந்தாப்பு காசுன்னு டீக்கு காசக் கொடுத்து புட்டு எந்திருச்சு வந்துட்டேன். மண்ணோடயே கெடந்தவைங்கதான் எங்க பாட்டன் பூட்டன் அம்புட்டு பேரும். வெள்ளாமை செய்றவைங்கன்னா அம்புட்டு மவுசு மருவாதை இருந்த காலம் மலையேறிப் போச்சு, இப்ப எல்லாம்...நம்மூரு வயலுக்குள்ள எல்லாம் காரு கண்ணி வந்து போகுது. அம்புட்டு நிலத்தையும் பிளாட்டுப் போட்டு செண்டு 50,000ம்னு வித்துப்புட்டு ஊருசனம் பூரா டவுனுக்குப் போயிருச்சுக.... என்னைய மாறி இன்னமும் வெள்ளாம காடுன்னு கட்டிப் புடிச்சுக்கிட்டு கடக்குற சனம் கொஞ்சப் பேருதேன்....! வெவசாயம் பாத்த செனம் வெவரங்கெட்டுப் போயி என்ன என்னமோ வேலை செஞ்சு சம்பாரிக்குதுக....! யாருமே வெள்ளாம செய்யாம போயிட்டா எல்லாரும் எப்புடிப்பு சா

வானம் எனக்கொரு போதிமரம்...!

அடையாளங்கள் அழிந்து போன ஒரு வழிப்போக்கனாய் பெரும்பாலும் ஒன்றுமில்லாததற்குள் கிடந்தேன். மழை நின்று போயிருந்த அந்த மாலை மீண்டுமொரு கனத்த மழையைக் கொண்டு வரவும் கூடும். எதுவமற்று அந்த மரத்தடியில் நான் லயித்துக் கிடந்தது போலத்தான் சித்தார்த்தனுமொரு நாள் போதியின் வேர்களுக்கு நடுவே கிளர்ந்தெழுந்த மனோநிலையில் கிறங்கிக் கிடந்திருக்க வேண்டும். மழையை தேக்கி வைத்துக் கொண்டு காற்றின் அசைவுகளுக்கு எல்லாம் நம்மை ஆசிர்வதிக்கும் மரங்களை நான் தேவதைகள் என்றுதான் கூறுவேன். ஒவ்வொரு முறை காற்று சில்லிட்டு வீசும் போதும் நீரை என் மீது தெளித்து விளையாடிய மரங்களை எனக்கு அழகான பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. அழகு என்ற சொல்லுக்கு வரையறைகள் கொடுக்க நான் விரும்பவில்லை. இது இதுதான் அழகு என்ற கோட்பாடுகளை உலகம் செதுக்கிக் கொண்டே இருக்கிறது இன்னமும். கிளியோபாட்ராவை அழகு என்று வர்ணிக்கும் இலக்கியங்களும் வரலாற்று நாவுகளும் இன்று உலகம் முழுதும் பரவிக் கிடந்தாலும் அவள் அழகாய் இருந்தாளா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியவன் எனக்கு நான் மட்டுமே. அழகான என்ற சொல் எப்

தம்பியுடையான்....!

தம்பிங்க பொறந்தப்ப எனக்கு ஆறு வயசு இருக்கும். காலையில எழுந்தப்ப உங்களுக்குத் தம்பி பாப்பா பொறந்து இருக்குன்னு எதிர்வீட்டு வைதேகி அக்கா சொன்னாங்க. அம்மா, அப்பா ரெண்டு பேரும் இல்லாம நானும் அக்காவும் படுத்து இருந்து இருக்கோம் துணைக்கு வைதேகி அக்கா இருந்து இருக்காங்க. ஒரு ஏழு மணி போல இருக்கும் அப்பா வந்தாங்க...டேய் உனக்குத் தம்பி பொறந்து இருக்காண்டான்னு சொன்னப்ப...எனக்கும் அக்காவுக்கும் ரொம்ப சந்தோசமாயிடுச்சு...! கடையில இருந்து அப்பா டீ வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க.. குடிச்சுட்டு...கிளம்பி.. நடக்குற தூரத்துல இருந்த கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு  போனோம். வெள்ளை  பெயிண்ட்ல சுவர சுத்தி பச்சை கலர் பார்டர் அடிச்சு அது மேல சிவப்பு கலர்ல பார்டர் கொடுத்து ஆஸ்பத்திரி ஒரு மாதிரியா மிரட்சியாத்தான் இருக்கும் அப்போ எல்லாம். உள்ள நுழையும் போதே அடிக்கிற மருந்து வாசனைகளை எல்லாம் கடந்து உள்ள போகும் போதே வேற ஏதோ ஒரு உலகத்துக்குள்ள வந்து இருக்க மாதிரி தோணும். அதுவும் எனக்கு ஆஸ்பத்திரில இருக்க டாக்டர்ஸ விட நர்சுங்க, கம்பவுன்டர்கள கண்டா ரொம்பவே பயம்.  அதட்டிக்கிட்டு ஒரு  மாதிரி

மொழியற்றவனின் பாடல்....!

கலவிக்கென்று யாதொரு வரைமுறையும் இல்லை. இது இப்படித்தான் என்றொரு படிப்பு வாசனையோடு எந்த ஒரு பெண்ணையும் அணுகுமிடம் ரொம்பவே செயற்கையானது. மழை பெய்து கொண்டிருந்த அந்த இரவு வேளையில் என் கண்ணாடி ஜன்னலின் வழியே வழிந்து கொண்டிருந்த மழை கவிதையாய்த் தெரிவதும் வாழ்க்கையின் கண்ணீராய் தெரிவதும் எந்த மனோநிலையில் நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது. விடியலில் எழும் பறவைக்கென்று என்ன இலக்கு இருக்க முடியும்..? திரும்பிய திசைகள் எல்லாம் அதற்கான வழிகள் திறந்து கிடக்கின்றன. அமர்ந்த இடமெல்லாம் அவற்றுக்கு வசிப்பிடமாய் ஆகிப்போக்கும்... இடுப்பில் கை கொடுத்து அணைத்து அவளை கால்களால் இறுக்கியபடியே நான் அந்த மழை பெய்யும் இரவினைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். பின்னிரவு வரை சல்லாபித்துக் கிடந்து, இடவலம், மேல் கீழ் என்று உடல் முறுக்கி, மூச்சிறைக்க ஏதோ ஒன்றைத் தேடி அடையும் பிரயாசையுடன் உடல்கள் உரசிக்கொள்ளும் கலவி ஒன்றை நீட்டித்து நீட்டித்து....உடலும் மனமும் போதும், போதும் என்று கெஞ்ச முழுதுமாய் உச்சம் தொடச்செய்து பின் மலைமுகட்டில் சரியும் ஒரு முரட்டுக் குதிரையாய், கழுத்து மடங்கி, வாய்

போதும்..." தலைவா "....போதும்..!

ஏதாவது ஒரு காட்சியாவது புதுசா இருந்துச்சுன்னு சொன்னா ஏதோ படத்தை பத்தி கொஞ்சாமாச்சும் நாம பேசலாம். டைரக்டர் விஜயும், நடிகர் விஜயும் சேர்ந்து மிஸ்ரி புரடக்சன் தலையில மண்ண அள்ளிக் கொட்டுன கதைய என்னத்த நாம பேசிக்கிட்டு...!  நிறைய கருப்புப் பணம் வச்சு இருக்கவங்க காச காலி பண்ண இப்டி படம் கிடம் எடுப்பாய்ங்களோன்னு கூட ஒரு டவுட்டு..எனக்கு.  இதுல என்ன கொடுமைன்னா எப்பவும் ஏதாவது ஒரு படத்தை பத்தி நான் எழுதறதுக்கு முன்னாடியே நிறைய பேர் விமர்சனம் எழுதி படத்தோட கதை என்னானு எல்லோருக்கும் முன்னாடியே தெரிஞ்சு இருக்கும். சோ... நான் எனக்கு படம் பாத்தப்ப ஏற்பட்ட உணர்வுகளை மட்டும் பதிவு செஞ்சுட்டு போய்கிட்டே இருப்பேன். தலைவா படத்தைப் பொறுத்த வரைக்கும் சிக்கல் எனக்கு வேற மாதிரி இருக்கு. அதாவது ஊர்ல இன்னும் படம் ரிலீஸ் ஆகலை அதனால படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே படத்தைப் பார்த்துட்டு விமர்சனம் பண்ற ரொட்டீன் கடமையுணர்ச்சிக் கொண்டவர்கள் படத்தைப் பத்தி எதுவும் இன்னும் எழுதவும் இல்ல.. நாம வழக்கப்படி படத்தை பார்த்த நம்ம உணர்வுகளைப் பதிவு செஞ்சுட்டுப் போகணும்னுனா இப்போ நாலு

அன்புள்ள அப்பாவிற்கு...

Taken @ குருக்கத்தி அன்புள்ள அப்பாவிற்கு, தேவா எழுதிக்கொள்வது... செல்வ சிரஞ்சீவி ராஜ ராஜஸ்ஸ்ரீ அருமை மகன் சுப்பையாவிற்கு என்றுதான் தாத்தா உங்களுக்கு எழுதும் கடிதங்களைத் தொடங்கி  இருப்பார்கள்.  நீங்கள் தாத்தாவிற்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் மரியாதைக்குரிய மகாகனம் பொருந்திய ராஜராஜஸ்ஸ்ரீ தகப்பனார் அவர்களுக்கு சுப்பையா எழுதிக் கொள்வது யாதெனில் என்று தொடங்குவீர்கள்.  என் வார்த்தைகள் அன்புள்ள அப்பா என்ற எட்டு எழுத்துகளுக்குள்ளும் நாம் தலைமுறைக் காதலை, அன்பை நேசத்தை தாங்கி வருவதாக நான் உங்களிடம் பல முறை கூறி இருக்கிறேன்...இப்போதும் அப்படித்தான்... நிற்க....!!!! நலமா அப்பா? நாங்கள் நலமாயிருக்க முடியாது என்பதை தாங்கள் அறிவீர்கள். நீங்கள் இல்லாமல் எப்படி அப்பா நாங்கள் நலமாயிருக்க முடியும்? எல்லாமாய் இருந்த உங்களை ஒரே ஒரு கணத்தில் வாழ்க்கை எங்களை விட்டுப் பிரித்து விடும் என்று கற்பனைக் கூட செய்து பாத்திருக்கவில்லை அப்பா. உங்களுக்கு நீண்ட நெடிய ஆயுளையும், நிலையான செல்வத்தையும் கொடுக்க வேண்டிதான் எங்களின் பிரார்த்தனைகள் எல்லாம் இருந