Skip to main content

Posts

Showing posts from January, 2013

வில்லங்கமாகும் விஸ்வரூபம் ரிலீஸ்...?!!!!!

சென்சார் போர்டு அனுமதி கொடுத்த ஒரு திரைப்படத்தை கமல்ஹாசன் ஒரு தனிப்பட்ட பிரிவினருக்கு போட்டுக்காட்டி இருக்கத் தேவையில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும்,  தமிழக அரசு முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கோடு இந்த விசயத்தில் மூக்கை நுழைத்து தங்களின் வாக்கு வங்கியை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றிருக்கும் ஒரு கேவல அரசியலும் விசுவரூபம் படத்தின் தற்காலிக தடையின் மூலம் அரங்கேறி இருக்கிறது. ஜனநாயக வலிவு கொண்ட இந்த தேசத்தின் கட்டமைப்புகள்  தனிமனிதர்களாலோ, அல்லது ஏதோ தனிப்பட்ட பிரிவுகளாலோ, மத, சாதீய அமைப்புகளாலோ அரசியல் ரீதியாக நிர்ப்பந்திக்கப்பட்டு தகர்த்தெறியப்படுமே ஆனால்.. அது இந்த தேசத்தின் உள் கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அத்தனை இந்திய பிரஜைகளுக்கும் விடப்பட்ட சவாலாகவே கருதப்படவேண்டும். விசுவரூபம் படத்தின் கதை இன்னது என்று முழுமையாக நாம் அறியாவிட்டாலும் ஓரளவிற்கு ஊகங்களின் அடிப்படையில் இப்படியாய் இந்த மக்களைப் பற்றி எடுத்திருக்கிறார் என்று நம்மால் அனுமானிக்க முடியும். ஆப்கானிஸ்தானத்தில் நடந்த தாலீபன்களின் ஆட்சியில் எல்லாம் சுகமாய் அந்த த

சிவா...THE WARRIOR - II

முதல் பகுதியை வாசிக்க இங்கே அழுத்தவும் SHOT II பிணங்களெரியும் இராத்திரிகளில், ஏகாந்த தனிமைகளிள், எண்ணங்களற்று இருக்கும் போது உள்ளுக்குள் ஏதேதோ எண்ணங்கள் அலையலையாய் மோதிச் செல்லும்... என்னோடு எனக்காய் வாழும் இந்த குளிர் மலை தேசத்து மக்களும், வெவ்வேறு இனமாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு என்னோடு சண்டையிடும் மக்களும், இந்த பூமிப்பந்தில் பரவி வாழும் இன்ன பிற எல்லா மனிதர்களும், எல்லா ஜீவராசிகளும், மரங்களும், கொடிகளும், மலைகளும், கடல்களும்...நான் சலனப்பட, சலனப்பட.. உருவாகின... எல்லாமே என்னுரு....எனக்கெதற்கு ஒரு தனி உரு...? எனக்கு உருவுமில்லை குருவுமில்லை...! உக்கிர கோபத்தில் சுடுகாடு அதிர நான் ஆடியிருக்கிறேன். ஒரு பாதம் தூக்கி இன்னொரு பாதம் அழுத்தி.....தகிட தகிட தத்தத்தரிகிட தரிகிட தத்தோம்...தகிட தகிட தகிட...எனது டமருகம் அதிர, அதிர அடித்துக் கொண்டே ஆடியிருக்கிறேன். நான் பிரபஞ்சம் எனது அசைவு உயிர்கள்... எண்ணம் நின்று போக, நான் மெளனத்தை காலங்களை நிறுத்தி சுகிக்கத் தொடங்கி இருந்தேன். இது ஒரு கூடல். உடல் ஈடுபடாத கூடல். மெ

சிவா...THE WARRIOR - I

SHOT - 1 அந்த நடைபாதையில் நான் நடந்து கொண்டிருந்தேன். மெலுகன்களின் தேசம் நாகரீகமாய் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டிருப்பது இந்த மலை தேசத்தவனுக்கு பிரமிப்பாகத்தான் இன்னமும் இருக்கிறது. பனி உருகும் கையிலாய மலையையும் அதனைச் சுற்றியும் என் கால்கள் பதியாத இடமே இல்லை. மானசரவர் ஏரியின் குளுமையில் முரட்டுத் தன்மையாய் நான் ஊறிப்போய் கிடந்திருக்கிறேன். என்னைத் தேடி ஏன் மெலுகன்கள் வரவேண்டும்..? என்ற கேள்வி எனக்குள் இன்னமும் இருக்கிறது.... முரட்டுத்தனமான ஒரு சண்டையிடும் வாழ்க்கைக்கு நடுவே நான் வாழ்ந்தவன் என்பதற்கு சாட்சியாய் உடம்பு முழுதும் படுத்துக் கிடக்கின்றன தழும்புகள். பகீரதிகளும், இன்ன பிற இனக்குழுக்களும் இலட்சியமின்றி என்னை வெற்றி கொள்வதயே தங்களின் லட்சியமாகக் கொண்டு.. என்னையும் என் இனமக்களையும் எப்போதும் அச்சுறுத்துவதும் அவர்களின் சங்கை அறுத்து நானும் என் மக்களும் விரட்டுவதும் வழமையாகிப் போக மெலுகன்களின் சேனாதிபதி நந்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க என் இன மக்களோடு மெலுகன்களின் தேசத்திற்குள் வந்து விட்டேன். நந்தியையும் மெலுகன்களையும் நான்

பேச்சி.....!

அடிக்கடி பல சிந்தனைகளோடு அலுவலகத்தின் முதன்மை நிலைக்கதவை எல்லோருமே கடந்து செல்வதுண்டு. நானும் அப்படித்தான். வழி நெடுகிலும் இருக்கும் போக்குவரத்து நெரிசல் பற்றிய எரிச்சலோடு எட்டு மணிக்கு அலுவலகத்தை நெருங்கும் போது அசுர கதியில் கதவைத் திறந்து சென்று இருக்கையில் அமர்ந்து அன்றாடத்தில் மூழ்குவதும், வேலை நிமித்தமாய் வெளியில் செல்லும் போது செல்லும் இலக்கு, அங்கே செய்ய வேண்டிய வேலைகள் என்று மனம் எப்போதும் எங்கோ குவிந்து கிடக்க கதவைத் திறந்து கொண்டு போயும் வந்துமிருக்கிறேன். நான் மட்டுமில்லை என் அலுவலகத்திலிருக்கும் எல்லோருமே இப்படித்தான். மனிதன் இயந்திரமாகிப் போனதின் விளைவுகளை பளீர் நீல வானம் பல முறை பேசி சிரித்திருக்கலாம். என் வீட்டு தோட்டத்திலிருக்கும் செடிகள் மானுடரின் மிருக சிந்தனைகளை பற்றி பழங்கால மனிதர்களோடு எங்களை ஒப்பிட்டுப் நகைத்திருக்கலாம். விவசாயத்தை தொலைந்து போகச் செய்த நவீனத்தின் விசம் தடவிய கோர நாவின் கடுமையை நகரத்தின் நடுவே அலைந்து தெரியும் பசுக்களும், எருதுகளும் விரக்தியாய் விழிகளால்  பரிமாறிக் கொண்டிருக்கலாம்...! சிறு பிராயத்தில் எல்லாம் எனக்கு

நீதானே என் பொன் வசந்தம்...!

சின்ன வயசுப் பசங்க எல்லாம் அடிதடி சண்டைன்னு படம் எடுக்க வந்துட்டதால, கிழவனுங்க எல்லாம் காதலை பத்தி படம் எடுக்க வந்து கொல்றாங்கன்ற ரேஞ்சுக்கு நம் ஆல் டைம் இளைஞர் சாரு மாமா அவரோட தளத்துல கீசி (அதாங்க எழுதின்னு அர்த்தம்...!!!!) இருந்தத பாத்ததுக்கு அப்புறமாதான் நான் நீதானே என் பொன்வசந்தம் படத்தப்  பார்த்தேன்றது எல்லாம் இருக்கட்டும்.... சாரு மாமா மட்டுமில்ல, நிறைய சீனியர் பிரகஸ்பதிகளுக்குமே இந்தப்படம் பிடிக்கலைன்றத நான் அங்க அங்க மேஞ்சுட்டு இருக்கும் போது இணையத்துல வாசிச்சு தெரிஞ்சுகிட்டேன். சாரு மாமா படம் பிடிக்கலேன்னு சொல்லிட்டு கதாநாயகிய அவரோட ஸ்வீட்டி, செல்லம்ன்ற ரேஞ்சுக்கு எழுதி இருந்தத பாத்துட்டு அவருக்கு ஏன் ஒரு பொம்பளப் புள்ள நேரத்தே காலத்தே பொறந்து இருந்திருக்க கூடாது...? மனுசன் கொஞ்சமாச்சும் அடங்கி இருப்பாரேன்னு எனக்குள்ள சட்டுன்னு தோணிச்சு... அதாவது சாரு மாமா மாதிரி ஆளுங்க அடுத்த ஐயாயிரம் வருசம் கழிச்சு பொறக்கப் போற மாடர்ன் டுபாக்கூர் டண்டணக்க மனுசங்களுக்காக இப்பவே புரியாத கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வச்சுக்கிட்டு, என் படைப்ப எல்

சர்ச்சைகளின் நாயகன் கமல்....!

சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்வது ஒன்றும் கமலுக்குப் புதிது அல்ல. அவர் வாழ்க்கையை மெளனமாய் புரட்டிப் பார்த்தால் அவர் உலகநாயகனோ இல்லையோ ஆனால் சர்ச்சைகளின் நாயகன் என்பது தெளிவாய் புரியும். அறிவு ஜீவியாய் நாம் இருக்கலாம் ஆனால் இந்த சமூகத்தினூடே எப்படி நகர்ந்து செல்வது என்ற சூட்சுமமும் தெரிந்திருக்க வேண்டும். ஆகச்சிறந்த படைப்பாளியாய் இருக்கும் கமலின் பிரச்சினை இந்த சமூகத்தின் மனோநிலை என்ன என்று தெரிந்து கொள்ளாமல் நகர்ந்து கொண்டே இருப்பதுதான். மேடை நாடக பாரம்பரியத்திலிருந்து சினிமாவை எட்டிப் பிடித்திருந்த சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் நடிப்பு என்பது நாடக கலாச்சாரத்தை ஒட்டியே மெலெழும்பி நின்றது. பாடல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படங்கள் கலாச்சாரம் மெல்ல மெல்ல உடைந்து வசன அடிப்படையிலான திரைச் சிற்பங்களாக மாறியதும் காலத்தின் கட்டாயமாகிப் போனது. அப்போதெல்லாம் சிவாஜி திரையில் அழும் போது அடா.. அடா. என்ன நடிப்புடா இது...!!!! என்று திரையில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொண்டு காட்சிகளுக்கு வெளியே நின்றுதான் தமிழ் திரைப்பட ரசிகர்கள் கூட்டம் விசிலடித்தது. கட்டபொம்மன்

என்னப்பன் அல்லவா.. என் தாயும் அல்லவா!

இறக்க முடியாத சிலுவைகளை காலம் சுமக்கச் சொல்லிக் கொடுத்திருக்கும் தூரங்களே தொலைவாய் இருக்கும் போது மீண்டும் மீண்டும் சிலுவைகள் வழி நடுகிலும் எனக்காய் காத்தும் கிடக்கின்றன தோளில் ஏறுவதற்கு. இந்த வழியை எனக்குக் கொடுத்திருக்கும் காலம் என்னை வெகு தொலைவில் கூட்டிச் சென்று ஒரு நாள் சிலுவையில் அறையலாம். எனது பாவங்களுக்கு மீட்பராய் இருந்து ஆன்மா காத்தருளவும் கூட செய்யலாம். கருவி நான். கர்த்தாவை அடையாளம் காணவேண்டி வாழ்க்கையை துறக்க விரும்பும், அடையாளங்களை அழித்துக் கொள்ள விரும்பும் பெரும் யாக்கைகள் கொண்ட மனிதன் நான். சுயநலக் குதிரையின் மீதேறிக் கொண்டு கடிவாளம் சுழற்றி வாழ்க்கையை கடந்து விடத்துடிக்கும் மானுட சமுத்திரத்தின் புள்ளி நான். மூலப்பிரகிருதி மங்கிப் போய் தன்னை மறந்து வடித்துக் கொண்ட ஆகிருதி நான். எழுதி, எழுதி என் எண்ணக் குப்பைகளை இறைத்து செல்கையில் அதற்காய் அங்கீகாரம் தேடும் மூடன் நான். சமூகத்தின் சட்ட திட்ட நெரிசல்களுக்குள் சிக்கிக் கொண்டு உறவுகள் அழைக்கும் பெயரை என் மீது ஏற்றிக் கொண்ட அடையாளமற்ற வஸ்து நான். வாழ்க்கை நகர்விற்காய் பொருள் சேர் என்று கற்பித்துச் செ