Skip to main content

புறம்.....!


















ஒரு நிசப்தமான இரவில்
வெற்று வானமும் ஒற்றை நிலவும்
என் உயிர்தடவிய கணங்களை
எழுத நினைத்த நிமிடங்களில்
வந்தது உன் நினைவு...!

கலைந்து செல்லும் மேகங்களில்
மறைந்து நின்று கண் சிமிட்டுவது...
நீயென்று கணித்து முடித்த கணத்தில்...
கை கொட்டி சிரித்தது .... நட்சத்திரம்...!

உடல் ஊடுருவி அணைத்தது
நீதான் என்று உணர்ச்சிவயப்பட்ட நேரத்தில்
பரிகசித்து..பயணம் முடித்திருந்தது
நடு நிசியின் ஊதக் காற்று....

கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!


காதலில் தகிக்கும் எல்லோரும் 240 வால்ட் மின்சாரத்தை உடம்பில் ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்தான். ஒரு இரவின் வெறுமையில் ஒற்றை நிலவும் ...ஒரு நிலவுதான் யார் இல்லேன்னு சொன்னது...? காதல் தகிப்பில் ஒரு நிலவு என்பதே பெரிய சிலாகிப்பாக தெரிகிறது. காதல் வயப்படும் கணங்களில் எல்லாமே அர்த்தம் பொதிந்ததாயும் ஒரு வித குழந்தையை ஒத்த மனோ நிலையும் ஏற்படுவதுதான் அழகு.

ஒரு படத்துக்கு ட்ரெய்லர் மாதிரிதான்...ஆன்மிக உச்சத்துக்கான ட்ரெய்லர் காதல் அனுபவம். பெரும்பாலும் அதனை அன்னம் பிரிக்கும் பால் போல பிரித்து...உருவம் விலக்கி அருவத்தை உள்ளே வைத்து...அதாவது உணர்வுகளை உள்ளே படரவிட்டு....அதில் லயித்துக் கிடப்பது ஒரு அலாதியான அனுபவம். இந்த சந்தோசம் எங்கே இருந்து கிடைக்கிறது... நமக்குள்ளேதான்...ஆனால் அதற்கு ஒரு தூண்டு சக்தி....புறத்தில் தேவைப்படுகிறது....

பழக..பழக... புறத்தின் தொடர்பறுந்து..... நமக்குள் நாமே காதலோடு நிறைந்து கிடக்கும் ஆச்சர்யமும் நடக்கும்....அதற்கு..தேவை புரிதலுடன் கூடய பொறுமையான பயணம்.....!


தேவா. S




Photo Courtesy: Ms. Ramya Pilai
Article & image copy right @ http://maruthupaandi.blogspot.com

Comments

Chitra said…
////உருவம் விலக்கி அருவத்தை உள்ளே வைத்து...அதாவது உணர்வுகளை உள்ளே படரவிட்டு....அதில் லயித்துக் கிடப்பது ஒரு அலாதியான அனுபவம்.////


..... அனுபவம் பேசுதோ? ரைட்டு!!!
Chitra said…
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்

.... sweet!!!
கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!

//


அவளின் (அவர்களின்) நினைவுகளால் உறக்கம் தொலைத்ததொடு மட்டுமல்லாமல் உங்களையும் தொலைத்திருக்கிரீர்கள்..
Jey said…
இளமை திரும்புகிறது தேவாவுக்கு....:)
பழக..பழக... புறத்தின் தொடர்பறுந்து..... நமக்குள் நாமே காதலோடு நிறைந்து கிடக்கும் ஆச்சர்யமும் நடக்கும்....அதற்கு..தேவை புரிதலுடன் கூடய பொறுமையான பயணம்.....!

//


Nice lines
பழக..பழக... புறத்தின் தொடர்பறுந்து..... நமக்குள் நாமே காதலோடு நிறைந்து கிடக்கும் ஆச்சர்யமும் நடக்கும்....அதற்கு..தேவை புரிதலுடன் கூடய பொறுமையான பயணம்.....!

//


Nice lines
dheva said…
சித்ரா...@ அனுபம் எப்போ பேசியிருக்கு...கவிதைதான் எழுதுது...ஹா..ஹா..ஹா..!
dheva said…
ஜெய்...@ பங்காளி...எப்போ நமக்கு வயசாச்சு.....?
dheva said…
வெறும் பய தம்பிய பாருங்க..காதல்னா துள்ளி குதிகிறான்..வேற கட்டுரைனா...பம்முறான்....ஆமா எங்க ஏமியோட காதலனை காணோம்....?
Ramesh said…
உணர்வுகளில் லயித்துக்கிடப்பது...அருமையாக எழுதி இருக்கிறீர்கள் தேவா....
காதலி முகத்தை பார்த்து விட்டால், எதற்கு தனியாக ஒரு நிலவு. அது தேவையே இல்லையே! ;)
dheva said...

வெறும் பய தம்பிய பாருங்க..காதல்னா துள்ளி குதிகிறான்..வேற கட்டுரைனா...பம்முறான்....ஆமா எங்க ஏமியோட காதலனை காணோம்....?

//

நமக்கு இந்த காதல் மட்டும் தான் ஈசியா மண்டையில ஏறுது.. மத்ததெல்லாம் பம்முது..... இப்போ கூட பாருங்க மத்ததெல்லாம் பத்து தடவை படிச்சா கூட புரியமாட்டேங்குது.. இது ஒரு தடவை தான் பாத்தேன் பக்குன்னு ஒட்டிகிச்சு..
//கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!// எனக்கு மட்டும் இந்த மாதிரி கனவு வரவே மாட்டேங்குதே. காதலும் கண்ணாமூச்சியாட்டம் ஒன்னுதாண்ணே.
nis said…
நல்லா இருக்கிறது
//அதாவது உணர்வுகளை உள்ளே படரவிட்டு....அதில் லயித்துக் கிடப்பது ஒரு அலாதியான அனுபவம்// ரொம்ப சரிண்ணே.... சூப்பரா இருக்கும். கூடவே ஒரு பெருமூச்சும் சேர்ந்து வந்தா என்ன அர்த்தம்ணே
அடி மின்சார ரயிலே
உன்னோடு பயணிக்க ஊரார் ஆசைபட
ஒத்தையாக என்னோடு வந்தாய்

தண்டவாளத் தனிமையில்
தவழ்ந்தோடலாம்

தாக்குப் பிடிக்க நான் தயார்
தெறத்தோட நீ தயாரா ?


என்னடா ஜில்லு கவிதலாம் எழுதுற ???
சரி எதோ பீலிங்க்சுல கிறுக்கிட்டனோ :)

ஃபீலிங்கசை வர வழைத்த தேவா அண்ணனுக்கு நன்றி :)
//இந்த சந்தோசம் எங்கே இருந்து கிடைக்கிறது... நமக்குள்ளேதான்...ஆனால் அதற்கு ஒரு தூண்டு சக்தி....புறத்தில் தேவைப்படுகிறது....//

உண்மையான வார்த்தைகள்! அப்படியே ஓஷோவை நினைவு படுத்துகிறது உங்க வார்த்தை தேவா!


நண்பா! நீங்க நம்ப பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சுதே! எப்போ வர்றீங்க?

http://uravukaaran.blogspot.com/

புது பதிவுகளை போட்டிருக்கேன். வந்து பாருங்க!
sakthi said…
கலைந்து செல்லும் மேகங்களில்
மறைந்து நின்று கண் சிமிட்டுவது...
நீயென்று கணித்து முடித்த கணங்களில்
கை கொட்டி சிரித்தது .... நட்சத்திரம்...!


தேவா நல்ல வரிகள்
கோர்த்திருக்கும் விதம் அருமை
Unknown said…
Fantastic flow....
பத்மா said…
நிலவினால் உண்டாகும் மனக்கிளர்ச்சி எத்தனை யுகமானாலும் மாறாது .... நிலவு ஒரு catalyst ....
jey இளமை திரும்புகிறது தேவாவுக்கு....:)

jey@@@ பொய் சொன்னாலும் அளவோடு சொல்லணும்
அருமை பதிவு...
..... அனுபவம் பேசுதோ? ரைட்...!
Unknown said…
ரொம்ப நல்லாயிருக்குங்க..
உணர்வுகளச் சொல்றதுல உங்கள மிஞ்ச முடியுமா?
// காதல் வயப்படும் கணங்களில் எல்லாமே அர்த்தம் பொதிந்ததாயும் ஒரு வித குழந்தையை ஒத்த மனோ நிலையும் ஏற்படுவதுதான் அழகு.//
ஐயோ அத ஏன்னா கேக்குறீங்க .. அது ரொம்ப ரவுசு பண்ணுது .. ஆனா நல்லாத்தான் இருக்கு ..
Anonymous said…
ரொம்ப நாளாக உங்க பதிவை படித்துக் கொண்டு
இருக்கிறேன், இது வரை கருத்துரை இட்ட்து இல்லை...வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன்....
//காதலில் தகிக்கும் எல்லோரும் 240 வால்ட் மின்சாரத்தை உடம்பில் ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்தான்.//


லைவ்வா இல்ல நெகட்டிவ் மட்டுமா...ஹி..ஹி..
vinthaimanithan said…
காதலிச்சா இப்படியெல்லாம் நடக்கும்தான்...!
விஜய் said…
எப்படி அண்ணா இப்படி எல்லாம் எழுதுறீங்க ...போங்க...நிறையா கத்துக்கணும் உங்ககிட்ட..
சின்னதா ஒரு விசயத்த எடுத்துகிட்டு எப்படி எல்லாம் எழுதுறீங்க ...

//கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!//

ஐயோ என்ன வரிகள்....அண்ணா பின்னீட்டீங்க..சிலவற்றை கத்தி பாராட்டியே தீரனும், அந்த மாதிரி அருமையான பதிவு
//கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!//

இந்த காதல் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுலன்னா காலைப் பொழுது பிரகாசமாய் விடிந்திருக்கும். உண்மைதான் காதல் அகத்தில் பிரகாசம், புறத்தில் பரிகாசம்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த